search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rahul"

    • ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தொகுதிகளாக கருதப்படுகின்றன.

    ரேபரேலி தொகுதியில் இருந்து சோனியா தேர்வு செய்யப்பட்டு வந்தார். தற்போது அவர் மேல்சபை எம்.பி. ஆகிவிட்டதால் அந்த தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையே ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளியானது. கடந்த முறை ராகுல் அமேதி தொகுதியில் ஸ்மிருதிஇரானியிடம் தோல்வியை தழுவினார். வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அவர் எம்.பி.யாக முடிந்தது.

    இந்த தடவையும் அவர் வயநாடு தொகுதியில் களம் இறங்கி உள்ளார். நேற்று அந்த தொகுதியில் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில் அவர் அமேதியிலும் போட்டியிடுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமேதியில் ராகுலையும், ரேபரேலியில் பிரியங்காவையும் களம் இறக்குவது பற்றி காங்கிரஸ் தேர்தல் மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    அமேதி, ரேபரேலி தொகுதி நிலவரம் பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ராகுல் மற்றும் பிரியங்காவை இந்த தொகுதிகளில் போட்டியிட வைக்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் கருத்து தெரிவித்தனர்.

    இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.
    • இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை மீட்கும் முக்கிய முகமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருதப்பட்டார்.

    ஆனால் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரியங்காவின் செல்வாக்கு உத்தரபிரதே சத்தில் குறைய தொடங்கியது.

    காங்கிரசை தூக்கி நிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அவருக்கு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. அதோடு உத்தரபிரதேசம் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. எனினும் அமேதியில் இருந்து தொடர்ந்து 3 முறை எம்.பி.யான ராகுல் அங்கு தோற்கும் நிலை ஏற்பட்டது.

    சோனியா காந்தியால் மட்டும் தனது ரேபரேலி தொகுதியை தக்க வைக்க முடிந்தது. இந்த நிலையில் பிரியங்கா மீண்டும் உத்தர பிரதேசம் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளார். இந்த முறை அவரை ரேபரேலியில் களம் இறக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ரேபரேலி தொகுதி எம்.பி.யாக இருந்த சோனியா, தற்போது பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாகிவிட்டார். இத னால் பிரியங்காவை ரேபரேலியில் போட்டியிட வைக்க காங்கிரஸ் விரும்புகிறது.

    இளம் வயது முதல் பிரியங்காவின் உதவியாளராக இருக்கும் கே.எல்.சர்மாவிடம் ரேபரேலி தேர்தல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே இங்கு பிரியங்கா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையே அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியால் தோற்கடிக்கப்பட்ட ராகுல்காந்தி, அங்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கான அடிப்படை வேலைகளை காங்கிரசுக்காக ஒரு தனியார் நிறுவனம் அமேதியில் செய்து வருகிறது. இதன் அறிக்கையை பொறுத்து அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து ராகுல் முடிவு செய்வார்.

    உத்தரபிரதேசத்தில் கடந்த மாதம் நடைபெற்ற ராகுலின் யாத்திரையில் அமேதி முக்கிய இடம் பிடித்தது. எனினும் கடந்த முறையை போல் அவர் போட்டியிடும் 2 தொகுதிகளில் ஒன்றாகவே அமேதி இருக்க வாய்ப்பு உள்ளது.

    உத்தரபிரதேசத்தின் 80 பாராளுமன்ற தொகுதி களில் 17 தொகுதிகளை பெற்று சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. அமேதி தேர்தல் அமைப்பாளராக ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தேவானந்த மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 17 தொகுதிகளில் அமேதியும், ரேபரேலியும் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

    • 5 மாநில தேர்தல்களை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன
    • 4 காங்கிரஸ் முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி வகுப்பினர் என்றார் ராகுல்

    அடுத்த வருடம் இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்தலில் வெல்ல இந்திய தேசிய காங்கிரஸை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்ட "இந்தியா கூட்டணி" தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, இந்தியாவில் வரும் நவம்பர் இறுதிக்குள் தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்று, இந்திய தேர்தல் ஆணையம், இத்தேர்தலுக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 5 அன்று வெளியிடப்படும்.

    இந்த 5 மாநில தேர்தல்களிலும், அடுத்த வருட அகில இந்திய தேர்தலிலும் வெற்றி காண அரசியல் கட்சிகள் மும்முரமாக உள்ளன.

    இப்பின்னணியில் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடியது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் காரிய கமிட்டி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பிற்கு முழு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளது. ஏழைகளை முன்னேற்ற சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு முன்னேற்ற பாதையாக அமையும். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இக்கணக்கெடுப்பை நடத்தும் திறன் படைத்தவரல்ல. காங்கிரஸின் 4 முதலமைச்சர்களில் 3 பேர் ஓபிசி (OBC) எனப்படும் இதர பிற்படுத்தபட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள 10 முதலமைச்சர்களில் ஒருவர் மட்டுமே ஓபிசி வகுப்பை சேர்ந்தவர். பிரதமர் ஓபிசி மக்களின் நலன்களுக்காக உழைக்கவில்லை. அவர்களின் கவனத்தை முக்கிய பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் முயற்சியில்தான் ஈடுபடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில், அம்மாநிலத்தில் 36 சதவீதம் பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் 27 சதவீதம் என்றும் பொதுப்பட்டியலில் 15 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.

    • போராட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடக்கிறது.
    • காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் காரசாரமாக மோதிக் கொள்வது வாடிக்கையானதுதான்.

    அந்த வகையில் 5 மாநிலங்களில் தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவும், காங்கிரசும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது 'எக்ஸ்' தளத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை போஸ்டராக வெளியிட்டு அதில் 'மிகப்பெரிய பொய்யர்' என குறிப்பிட்டிருந்தது. மேலும் ஜூம்லா பாய் என்றும் விரைவில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பார்க்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு பதிலடியாக பா.ஜனதா சார்பில் ராகுல் படத்தை 10 தலைகளுடன் வெளியிட்டு ராவணன் என்று குறிப்பிட்டனர். இந்த இரு படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக பா.ஜனதாவுக்கு எதிராக போராட்டம் நடத்த காங்கிரஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டது. உடனடியாக அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜனதா அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

    சென்னையில் தி.நகரில் பா.ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடக்கிறது.

    காங்கிரஸ் போராட்ட அறிவிப்பால் பா.ஜனதா அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-
    • இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் தலைவரும், 3 ஆயிரத்து 570 கி.மீ. பாத யாத்திரையை கன்னியகுமாரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்டு வரும் இளம் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சித் தேர்தல் அதிகாரியும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஹிபி ஈடன் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஒரு குற்றவாளி தன் குற்றத்தை ஒருபோதும் ஒப்புக் கொண்டதில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்குதாரரகளாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவன பங்குகளை இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். 

    இந்த விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 

    ராகுல் காந்தி இன்றும், சோனியா காந்தி வரும் 8 ஆம் தேதியும் ஆஜராகும்படி அந்த சம்மனில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, 1942 இல் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடங்க ப்பட்டபோது ஆங்கிலேயர்கள் அதை அடக்க முயன்றனர். தற்போதும் மோடி அரசும் அதையே செய்கிறது, இதற்காக மத்திய அமலாக்கத்துறையை அது தவறாக பயன்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் குற்றச்சாட்டிற்காக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்துள்ளார்.  ஒரு குற்றவாளி தனது குற்றத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். 

    ஒரு குற்றவாளி தன்னை ஒரு குற்றவாளி அல்லது நேர்மையற்றவர் என்று ஏற்றுக்கொள்வதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று நட்டா தெரிவித்தார்.

    இந்த விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதை நீதிமன்றம் கவனித்து வருகிறது என்றும், உங்கள் மீது குற்றப்பத்திரிக்கை உள்ளது என்றால், நீதிமன்றத்திற்கு சென்று அதை எதிர்கொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்


    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி தொகுதியுடன் கேரளாவின் வயநாடு தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இத்தொகுதியின் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டபோது ஆரம்பத்தில் இருந்தே ராகுல்காந்தி அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 

    இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்டு கூட்டணி வேட்பாளர் பி.பி.சுனிரை விட 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

    பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் இங்கு போட்டியிட்ட துஷார் வெள்ளாப்பள்ளி 78 ஆயிரத்து 816 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். ராகுல் காந்தி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான அமேதியில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.

    அமேதி மக்கள் கைவிட்டாலும் தன்மீது அன்புவைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 7, 8 தேதிகளில் வயநாடு தொகுதிக்கு செல்கிறார். இதற்கான அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மலையாளத்தில் பதிவிட்டுள்ளார்.

    தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல்முறையாக வயநாடு தொகுதிக்கு வரும் ராகுல் காந்தியை சிறப்பான முறையில் வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளில் காங்கிரசார் ஈடுபட்டு வருகின்றனர்.
    முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    நேருவின் நினைவு தினத்தையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார்.




    குஜராத்தின் சூரத் நகரில் வணிக வளாகத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
    புதுடெல்லி:

    குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இன்று மாலை அந்த வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கோச்சிங் சென்டரில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் 18 குழந்தைகள் சிக்கி பலியாகினர்.



    இந்நிலையில், சூரத் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 குழந்தைகள் பலியானதற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.
    காங்கிரஸ் கட்சிக்கு 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்காதபட்சத்தில் ஆட்சி அமைக்க ராகுல் உரிமை கோர மாட்டார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமானால், பாராளுமன்றத்தில் உள்ள 543 இடங்களில் 272 இடங்கள் வேண்டும்

    2014-ம் ஆண்டு 282 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. இந்த தடவை அந்த கட்சிக்கு 200 இடங்களுக்குள்தான் வெற்றி கிடைக்கும் என்று அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    அதுபோல கடந்த தேர்தலில் 44 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை சுமார் 100 இடங்களே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 272க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்காதபட்சத்தில் ஆட்சி அமைக்க ராகுல் உரிமை கோர மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர். 2004, 2009-ம் ஆண்டுகளில் காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் சில கட்சிகள் ஆதரவுடன் மன்மோகன்சிங் பிரதமராகி ஆட்சி நடத்தினார்.

    அப்படி பிரதமர் ஆக ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 272 இடங்களுக்கு மேல் கிடைக்காவிட்டால், ராகுல் காங்கிரஸ் சார்பில் எந்த முயற்சியையும் செய்ய மாட்டார் என்று தெரிய வந்துள்ளது.

    நேரு, இந்திரா, ராஜீவ் போன்று பெரும்பான்மை பலத்துடன் மட்டுமே ஆட்சியில் அமர ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.


    அதே சமயத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் ராகுல் ஈடுபடுவார் என்பது உறுதியாகி உள்ளது. அதற்காக மாநில கட்சித் தலைவர்கள் யாராவது ஒருவர் ஒருமித்த முடிவுடன் பிரதமராக முன் வந்தால் அவரை ராகுல் ஏற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது.

    கர்நாடகாவில் நிறைய எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையிலும் 32 எம்.எல்ஏ.க்கள் மட்டுமே வைத்துள்ள குமாரசாமியை முதல்-மந்திரியாக ஏற்றுக் கொண்டது போல 30 எம்.பி.க்களே வைத்திருந்தாலும் மாநில கட்சித் தலைவரை பிரதமராக ஏற்க ராகுல் தயாராகி வருகிறார்.

    272 இடங்களில் வெற்றி கிடைக்காது என்பதை ராகுல் உணர்ந்து இருப்பதால் 3-வது அணி அமைக்கும் முயற்சியை சிலர் மேற்கொண்டிருப்பதை அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார். அதோடு பாரதிய ஜனதாவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளிலும் ராகுல் ஓசையின்றி ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக அவர் ஏ.கே. அந்தோணி, அசோக் கெலாட், ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி இருக்கிறார். அவர்கள் மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், நவீன்பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருடன் இப்போதே தொடர்பை ஏற்படுத்தி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பா.ஜனதா ஆட்சி அமைவதைத் தடுக்க எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்களை ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    காங்கிரஸ் என்றால் பொய் என்றும், ரபேல் என்றால் ராகுலின் தோல்வி என்றும் தெரிவிட்டதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். #PrakashJavadekar #RahulGandhi #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் பற்றி தனது பிரசாரத்துக்காக ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தது குறித்து பா.ஜனதா தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறும்போது, “இது ராகுல் காந்தியின் நம்பகத்தன்மைக்கு கிடைத்த அடி. பொதுவாழ்வில் மக்கள் சில நேரங்களில் உண்மையற்றதை சொல்வார்கள். ஆனால் அதையே திரும்பத் திரும்ப சொல்வது தான் வருத்தத்திற்குரியது. காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியின் தலைவர் பொய்யை மட்டுமே நம்பியுள்ளார் என்பது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது” என்றார்.

    மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளதுடன், தான் கூறியது பொய் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். காங்கிரஸ் என்றால் பொய் என்றும், ரபேல் என்றால் ராகுலின் தோல்வி என்றும் அர்த்தமாகிறது” என்று கூறினார்.

    வழக்கு தொடுத்த மீனாட்சி லேகி எம்.பி. கூறும்போது, “ராகுல் காந்தி சொன்னது பொய் என்பது வெளியானதில் எனக்கு திருப்தி. ஆனாலும் இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார்.  #PrakashJavadekar #RahulGandhi #RafaleDeal
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பீகார் மாநில துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். #RahulGandhi #SushilKumarModi
    பாட்னா:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சுஷில் குமார் மோடி, பாட்னாவில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    ராகுல் காந்தி கடந்த 13-ந் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் பேசுகையில், “மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்கள்” என்றார். இதன்மூலம், சமூகத்தில் எனது நற்பெயரை களங்கப்படுத்தி விட்டார். இது ஒரு குற்றச்செயல். ஆகவே, அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டும். அதன்மூலம், வழக்கின் முடிவில் அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #RahulGandhi #SushilKumarModi 
    ×