என் மலர்
நீங்கள் தேடியது "Sonia"
முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நேருவின் நினைவு தினத்தையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
நேருவின் நினைவு தினத்தையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார்.
Prime Minister Narendra Modi: Tributes to Pandit #JawaharlalNehru Ji on his death anniversary. We remember his contributions to our nation. (file pic) pic.twitter.com/VIpE1uK9h3
— ANI (@ANI) May 27, 2019
ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.
புவனேசுவரம்:
ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.
அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் மற்றும் காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில தலைவர்கள் என 40 பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அங்கு தேர்தல் பிரசாரத்துக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை மாநில காங்கிரஸ் வெளியிட்டது.
அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மன்மோகன்சிங், அசாருதீன், சித்து, ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட், குஷ்பு, நக்மா, விஜயசாந்தி, ராஜ்பப்பர் மற்றும் காங்கிரஸ் முதல்-மந்திரிகள், மாநில தலைவர்கள் என 40 பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
மேகதாது அணை பிரச்சினையில் சோனியா, ராகுலை குறை கூறிய தமிழிசைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #MekedatuDam
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி மூலம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
ஆய்வு செய்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தது தவறு. இதை கண்டித்து தமிழக சட்டசபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கு போய் சோனியா சொல்ல வேண்டியதுதானே. ராகுல் சொல்ல வேண்டியது தானே என்று தமிழிசை சொல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது.
கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. முல்லை பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா? கர்நாடகத்தில் பா.ஜனதாவும் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். எனவே, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவார்கள்.
இதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசுதானே. அதை விட்டுவிட்டு கட்சிகள் மீது குறை சொல்வது விதண்டாவாதம்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். இப்போது பழைய கதைகளை பேசி பயன் இல்லை. எடப்பாடி அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு, மேகதாது பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு திறம்பட நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலத்தினார்கள். ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாட்டில் துறைமுகம் பகுதி த.மா.கா. நிர்வாகி திருமலை தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் எஸ்.சி.துறை தலைவர் செல்வ பெருந்தகை, தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்சீவி, சொர்ணா சேதுராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம்பாட்சா, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகர், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிராங்ளின் பிரகாஷ், மயிலை தரணி, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன், ஓட்டேரி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், மலேசியா பாண்டியன், ஊட்டி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. #Thirunavukkarasar #MekedatuDam
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி மூலம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
ஆய்வு செய்வதற்கு மோடி அரசு அனுமதி அளித்தது தவறு. இதை கண்டித்து தமிழக சட்டசபையில் இன்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அங்கு போய் சோனியா சொல்ல வேண்டியதுதானே. ராகுல் சொல்ல வேண்டியது தானே என்று தமிழிசை சொல்வது சிறுபிள்ளைதனமாக உள்ளது.
கேரளாவில் கம்யூனிஸ்டும், காங்கிரசும்தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. முல்லை பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டதா? கர்நாடகத்தில் பா.ஜனதாவும் ஆட்சியில் இருந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிக்கு வரும் கட்சிகள் அந்த மாநிலத்தின் பிரதிநிதிகளாகத்தான் இருப்பார்கள். எனவே, அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவார்கள்.
இதை தீர்த்து வைக்க வேண்டியது மத்திய அரசுதானே. அதை விட்டுவிட்டு கட்சிகள் மீது குறை சொல்வது விதண்டாவாதம்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லை என்பது உண்மைதான். இப்போது பழைய கதைகளை பேசி பயன் இல்லை. எடப்பாடி அரசு அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு, மேகதாது பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை திறமையான வழக்கறிஞர்களை கொண்டு திறம்பட நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவ படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் மலர் அஞ்சலி செலத்தினார்கள். ஓ.பி.சி. பிரிவு மாநில தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாட்டில் துறைமுகம் பகுதி த.மா.கா. நிர்வாகி திருமலை தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் எஸ்.சி.துறை தலைவர் செல்வ பெருந்தகை, தணிகாசலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சிரஞ்சீவி, சொர்ணா சேதுராமன், சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லாம்பாட்சா, மாவட்ட தலைவர்கள் ரூபி மனோகரன், சிவராஜ சேகர், வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பிராங்ளின் பிரகாஷ், மயிலை தரணி, துறைமுகம் ரவிராஜ், திருவான்மியூர் மனோகரன், பி.வி.தமிழ்செல்வன், ஓட்டேரி தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைதொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், மலேசியா பாண்டியன், ஊட்டி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில், இன்று மாலை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. #Thirunavukkarasar #MekedatuDam
உலக பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் இறுதிப்போட்டியை எட்டினார். #WorldBoxing #Sonia
10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், வடகொரியாவின் ஜோ சன் வாவை எதிர்கொண்டார். மூன்று ரவுண்ட் கொண்ட இந்த ஆட்டத்தில் இருவரும் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினர். முதல் இரண்டு ரவுண்டில் இருவரும் சரிசம ஆதிக்கம் செலுத்தியது போன்றே தெரிந்தது. 3-வது ரவுண்டில் தொடக்கத்தில் தற்காப்பு பாணியை கையாண்ட சோனியா கடைசி கட்டத்தில் எதிராளிக்கு சில குத்துகளை விட்டு, நடுவர்களின் கவனத்தை ஈர்த்தார்.
முடிவில் 5-0 என்ற கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 30-27) சோனியா சாஹல் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
அரியானாவைச் சேர்ந்த 21 வயது சோனியா சாஹல் கூறுகையில், ‘இறுதிசுற்றுக்கு வருவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அதுவும் குறைந்த வயதிலேயே இந்த நிலையை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரைஇறுதியை பொறுத்தவரை கடைசி ரவுண்டில் ஆதிக்கத்தை நிலைநாட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். அதனால் எனது ஆட்ட பாணியை உடனடியாக மாற்றிக்கொண்டு, வேகத்தை மேலும் தீவிரப்படுத்தி, வெற்றியை வசப்படுத்தினேன். எனது இறுதிப்போட்டிக்குரிய எதிராளி, கடுமையான குத்துகளை விடக்கூடியவர். அதற்கு ஏற்ப நான் தயாராக வேண்டியது அவசியம். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் தங்கப்பதக்கம் வெல்ல விரும்புகிறேன்’ என்றார்.
மற்றொரு அரைஇறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் (64 கிலோ பிரிவு), சீனாவின் டான் டோவுடன் கோதாவில் இறங்கினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த சிம்ரன்ஜித் கவுர், எதிராளியை பின்நோக்கி ஓடும் வகையில் விடாமல் தாக்குதல் தொடுத்தார். ஆனாலும் ஏதுவான இடைவெளியில் சிம்ரன்ஜித் கவுரின் முகத்தில் டான் டோ சில குத்துகளை விட்டு, ஆட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றினார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் சிம்ரன்ஜித் கவுர் 1-4 என்ற கணக்கில் (27-30, 30-27, 27-30, 27-30, 28-29) தோற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றார். உலக போட்டியில் சிம்ரன்ஜித் கவுர் பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
இன்று (சனிக்கிழமை) மாலை இறுதிப்போட்டிகள் நடக்கின்றன. 6-வது தங்கப்பதக்கத்துக்கு குறி வைத்துள்ள இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொள்கிறார். சோனியா சாஹல் தனது இறுதி சுற்றில் ஜெர்மனியின் வானெர் கேப்ரியலியுடன் மல்லுகட்டுகிறார். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #WorldBoxing #Sonia
முடிவில் 5-0 என்ற கணக்கில் (30-27, 30-27, 30-27, 29-28, 30-27) சோனியா சாஹல் வெற்றி பெற்று முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவருக்கு குறைந்தது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
அரியானாவைச் சேர்ந்த 21 வயது சோனியா சாஹல் கூறுகையில், ‘இறுதிசுற்றுக்கு வருவேன் என்று கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அதுவும் குறைந்த வயதிலேயே இந்த நிலையை எட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரைஇறுதியை பொறுத்தவரை கடைசி ரவுண்டில் ஆதிக்கத்தை நிலைநாட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பயிற்சியாளர்கள் அறிவுறுத்தினர். அதனால் எனது ஆட்ட பாணியை உடனடியாக மாற்றிக்கொண்டு, வேகத்தை மேலும் தீவிரப்படுத்தி, வெற்றியை வசப்படுத்தினேன். எனது இறுதிப்போட்டிக்குரிய எதிராளி, கடுமையான குத்துகளை விடக்கூடியவர். அதற்கு ஏற்ப நான் தயாராக வேண்டியது அவசியம். உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் தங்கப்பதக்கம் வெல்ல விரும்புகிறேன்’ என்றார்.
மற்றொரு அரைஇறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் (64 கிலோ பிரிவு), சீனாவின் டான் டோவுடன் கோதாவில் இறங்கினார். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த சிம்ரன்ஜித் கவுர், எதிராளியை பின்நோக்கி ஓடும் வகையில் விடாமல் தாக்குதல் தொடுத்தார். ஆனாலும் ஏதுவான இடைவெளியில் சிம்ரன்ஜித் கவுரின் முகத்தில் டான் டோ சில குத்துகளை விட்டு, ஆட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றினார். பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் சிம்ரன்ஜித் கவுர் 1-4 என்ற கணக்கில் (27-30, 30-27, 27-30, 27-30, 28-29) தோற்று வெண்கலப்பதக்கத்தை பெற்றார். உலக போட்டியில் சிம்ரன்ஜித் கவுர் பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.
இன்று (சனிக்கிழமை) மாலை இறுதிப்போட்டிகள் நடக்கின்றன. 6-வது தங்கப்பதக்கத்துக்கு குறி வைத்துள்ள இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொள்கிறார். சோனியா சாஹல் தனது இறுதி சுற்றில் ஜெர்மனியின் வானெர் கேப்ரியலியுடன் மல்லுகட்டுகிறார். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #WorldBoxing #Sonia
பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சோனியா சாஹல், பிங்கி ராணி, சிம்ரன்ஜித் கவுர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள். சவீட்டி பூரா தோல்வி கண்டு வெளியேறினார். #WorldBoxing #Championship #Sonia #Pinki #Simranjeet
புதுடெல்லி:
10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், 2014-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் நடுவர்கள் முடிவின் படி 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில் சர்ச்சை ஏற்பட்டது. தோல்வி கண்ட ஸ்டானிமிரா பெட்ரோவா கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்கள் ஊழல் செய்து விட்டனர். இது நியாயமான முடிவு அல்ல’ என்று குற்றம்சாட்டினார். முன்னதாக போட்டி நடுவர் சோனியா சாஹல் வெற்றி பெற்றதாக அறிவித்த போது ஸ்டானிமிரா பெட்ரோவா சிரித்தபடி ஆள்காட்டி விரலை உயர்த்தி அதிருப்தி தெரிவித்தார். ‘நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியாயமான முடிவு தான்’ என்று சோனியா சாஹல் தெரிவித்தார்.
51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை அலிசி எபோனி ஜோன்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதேபோல் 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் மெகன் ரிட்டை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
75 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடா வோஜ்சிக்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். சரிதா தேவிக்கு (60 கிலோ) அடுத்து தோல்வி கண்டு வெளியேறிய 2-வது இந்திய வீராங்கனை சவீட்டி பூரா ஆவார்.
10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல், 2014-ம் ஆண்டு உலக போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பல்கேரியா வீராங்கனை ஸ்டானிமிரா பெட்ரோவாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் நடுவர்கள் முடிவின் படி 3-2 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டியின் முடிவில் சர்ச்சை ஏற்பட்டது. தோல்வி கண்ட ஸ்டானிமிரா பெட்ரோவா கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்கள் ஊழல் செய்து விட்டனர். இது நியாயமான முடிவு அல்ல’ என்று குற்றம்சாட்டினார். முன்னதாக போட்டி நடுவர் சோனியா சாஹல் வெற்றி பெற்றதாக அறிவித்த போது ஸ்டானிமிரா பெட்ரோவா சிரித்தபடி ஆள்காட்டி விரலை உயர்த்தி அதிருப்தி தெரிவித்தார். ‘நான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியாயமான முடிவு தான்’ என்று சோனியா சாஹல் தெரிவித்தார்.
51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பிங்கி ராணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனை அலிசி எபோனி ஜோன்சை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். இதேபோல் 64 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் மெகன் ரிட்டை வீழ்த்தி கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.
75 கிலோ எடைப்பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சவீட்டி பூரா 0-5 என்ற கணக்கில் போலந்து வீராங்கனை எல்சிபெடா வோஜ்சிக்கிடம் தோல்வி கண்டு வெளியேறினார். சரிதா தேவிக்கு (60 கிலோ) அடுத்து தோல்வி கண்டு வெளியேறிய 2-வது இந்திய வீராங்கனை சவீட்டி பூரா ஆவார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #IndiraGandhi #RahulGandhi #SoniaGandhi #Congress
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் மற்றும் மாநில கமிட்டி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. #IndiraGandhi #RahulGandhi #SoniaGandhi #Congress
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் மற்றும் மாநில கமிட்டி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. #IndiraGandhi #RahulGandhi #SoniaGandhi #Congress
நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை விவகாரத்தில் பழைய வருமான வரி கணக்கை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து சோனியா, ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுக்களை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
புதுடெல்லி:
அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் துவக்கப்பட்டது.
மொத்தம் 1057 பங்குதாரர்களை கொண்ட இந்த நிறுவனத்தின் ரூ.90 லட்சம் முதலீட்டில் ரூ.89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணமாகும்.
பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய்க்குமேல் பெறுமானமுள்ள அசையா சொத்துக்கள் உண்டு.
இந்த நிறுவனத்திற்கு உதவி செய்வதாக கூறி காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மோதிலால் வோரா மற்றும் பலர்.
2010-ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் ஆகியோருக்கும் உரிய பங்காகும்.
காங்கிரஸ் கட்சி யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய ரூ. 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்தது.
அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ.50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி பெறுமானமுள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ. 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு கைமாறியது.
தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க, தனது பங்குதாரர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல் AJL நிறுவனம் மேற்கண்ட பணத்தை பங்கு முதலீடாக மாற்றியது.
இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது.
ரூ. 2000 கோடி பெறுமானமுள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் வெறும் ரூ. 50 லட்சம் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்த பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி இதுதொடர்பாக 2012-ம் வருடம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி டெல்லி ஐகோர்ட்டில் சோனியா சார்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகி விட்டது. இந்நிலையில், சொத்து கைமாறியதில் ஏற்பட்ட பண மோசடிகளை கண்டுபிடிப்பதற்காக அமலாக்க பிரிவு விசாரணையை துவக்கியது.

கடந்த 2011-12 நிதியாண்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸ் ஆகியோரின் வருமானம் தொடர்பான கணக்கு விபரங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த மேற்கண்டவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதற்கு தடை விதிக்ககோரி டெல்லி ஐகோர்ட்டில் இவர்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மூவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோரை கொண்ட அமர்வு இன்று உத்தரவிட்டது. #NationalHerald #SoniaITcase #RahulITcase
கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியை சந்தித்து மந்திரிசபை அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #JDS_Cong_Alliance #Kumaraswamy
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கும் இடம் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மந்திரிசபை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து குமாரசாமி விவாதித்தார்.
அப்போது, எந்தெந்த துறைகளை காங்கிரசுக்கு ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 40 நிமிட சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த குமாரசாமி, “கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உடன் மந்திரி சபை தொடர்பாக விவாதிக்க ராகுல் அனுமதி அளித்துள்ளார். உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை நடத்தி முடிவுகளை இறுதி செய்வார்” என தெரிவித்தார்.
நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவுக்கு இருவரும் வருவதாக உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.