search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pandit Jawaharlal Nehru"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டின் எதிர்காலம் குழந்தைகளிடம் உள்ளதாக பண்டிட் நேரு நம்பினார்
    • 1955ல் நேரு, குழந்தைகள் திரைப்பட சங்கத்தை உருவாக்கினார்

    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிட் ஜவகர்லால் நேரு. 1889 நவம்பர் 14ல் பிறந்த நேரு, 1964 மே 27 அன்று பதவியில் உள்ள போதே மறைந்தார்.

    மறைந்த பிரதமர் நேரு, தனது வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் நலன் மீது பெரிதும் அக்கறை கொண்டிருந்தார். குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் உரிமைகள் ஆகியவற்றில்தான் ஒரு சமூகத்தின் அடித்தளமும், ஒரு நாட்டின் எதிர்காலமும் உள்ளதாக தீவிரமாக நம்பியவர் நேரு. தனது ஓய்வு நேரத்தை குழந்தைகளுடன் செலவிடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    தனது பதவி காலத்தில் 1955ல், குழந்தைகளின் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குழந்தைகள் திரைப்பட சங்கத்தை (Children's Film Society) அமைத்தார்.

    ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த தினமான நவம்பர் 14, இந்தியாவில் "தேசிய குழந்தைகள் தினம்" (National Children's Day) என கொண்டாடப்படுகிறது.

    இன்று, நாடெங்கிலும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அது மட்டுமின்றி, குழந்தைகளின் நலன், உரிமை மற்றும் திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் விளையாட்டுகள் நடத்தப்படும்.

    "குழந்தைகள் நமது பொக்கிஷம் மட்டுமல்ல, நமது எதிர்காலமும் கூட. நாம், குழந்தைகளின் களங்கமற்ற அன்பையும் எல்லையற்ற ஆற்றலையும் கொண்டாடுவோம். குழந்தைகள் தின வாழ்த்துக்கள்" என குழந்தைகள் தினம் குறித்து மத்திய கல்வி இயக்குனரகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

    முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 55-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    நேருவின் நினைவு தினத்தையொட்டி, சாந்திவன் பகுதியில் உள்ள நேரு நினைவிடத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத்தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நம் நாட்டிற்காக முன்னாள் பிரதமர் நேரு அளித்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது’ என்று தெரிவித்துள்ளார்.




    ×