என் மலர்
நீங்கள் தேடியது "காங்கிரஸ்"
- சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது.
- பா.ஜ.க தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கர்நாடகாவில் வேறு நிலைபாட்டிலும் உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் இன்று திண்டுக்கல், தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வாக்குச்சாவடி வட்டார, நகர, நிர்வாகிகளின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மோடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளதாக பெருமைப்பட்டு கொள்கிறார். பாராளுமன்றத்தில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் தொகுதி வரையறை முடிந்த பிறகுதான் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தி பேசும் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க சூழ்ச்சி செய்கிறது. மேலும் தனக்கு வாக்குவங்கி குறைவாக உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் திட்டம் வகுத்துள்ளது.
தனக்கு சாதகமான மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சியை இந்தியா கூட்டணி கண்டிக்கிறது. மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதில் காங்கிரசுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க தனது ஆட்சியின் நிறைவு காலத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி அதன்மூலம் வாக்குகளை பெற முடியுமா என திட்டம் வகுத்துள்ளது.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தொகுதி மறுவரையறை செய்ய முடியாது. அதனால்தான் 33 சதவீத இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். வருகிற பாராளுமன்ற தேர்தலை அதிபர் தேர்தல் போல நடத்த மோடி முயன்று வருகிறார்.
காவிரி பிரச்சனையை பொறுத்தவரையில் ஆணையமும், உச்சநீதிமன்றமும் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது. வறட்சியான காலகட்டங்களிலும், வெள்ள காலகட்டத்திலும் தமிழகத்திற்கு வழங்கவேண்டிய தண்ணீரை பங்கீடு செய்து வழங்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கர்நாடக அரசு இதனை பின்பற்றவில்லை. காவிரி நீர் பிரச்சனையில் நாங்கள் தமிழக அரசின் நிலைபாட்டிலேயே உள்ளோம்.
ஆனால் பா.ஜ.க தமிழகத்தில் ஒரு நிலைபாட்டிலும், கர்நாடகாவில் வேறு நிலைபாட்டிலும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
- நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும்.
பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கடந்த திங்கள் கிழமை (செப்டம்பர் 18) துவங்கி வெள்ளி கிழமை (செப்டம்பர் 22) வரை என மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று மூன்றாவது நாள் முழுக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ராகுல் காந்தி மசோதாவை ஆதரித்து பேசியுள்ளார். மேலும், இந்த மசோதா முழுமை பெறாமல் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

இகு குறித்து பேசும் போது, "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நான் ஆதரவளிக்கிறேன். இது நம் நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும். அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், பல்வேறு வழிகளில் அவர்கள் திறமை மிக்கவர்கள்."
"ஆனால், என் பார்வையில் இந்த மசோதா ஒருவிதத்தில் முழுமை பெறாமல் உள்ளது. எனக்கு ஓ.பி.சி. பிரிவை சார்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாதது முழுமை பெறாத ஒன்றாகவே இருக்கிறது. மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ள 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவை சேர்ந்தவர்கள். இந்த சமூக பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால், இந்த மசோதா முழுமையற்றதாக இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளார்.
- 2029-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் என தகவல்
- உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய 3-வது நாள் முழுவதும் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மக்களவை தொடங்கியதும், பாராளுமன்றத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
அப்போது அவர் "காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'' என்றார்.
- காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது.
- இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதில் தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப்பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். வருகிற 21-ந்தேதி திண்டுக்கல், தேனி, அடுத்த மாதம் 1-ந்தேதி திருவள்ளூர், 8-ந்தேதி தென்காசி, விருதுநகர், 14-ந்தேதி கன்னியாகுமரி, 28-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது.
காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும்.
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை.
இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.
- மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது,
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியானது.
இதையடுத்து, நடப்பு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரிலே இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மசோதா கொண்டுவரப் போவதை எதிர்பார்க்கிறோம். இது காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
- அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டது.
- சாதிவாரியாக சரியான கணக்குகள் இல்லை.
சென்னை:
நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
இதையடுத்து தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெ டுப்பை வலியுறுத்தி காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்துகிறது.
இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உயர் வகுப்பினருக்கு மட்டுமே கிடைத்து வந்த நிலையில் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சுதந்திரத்துக்கு முன்பே காந்தி வலியுறுத்தினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பெருந்தலைவர் காமராஜர், பெரியார் ஆகியோர் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்கள். இது பற்றி அப்போதைய பிரதமர் நேருவிடமும் வலியுறுத்தினார்கள்.
நியாயத்தை உணர்ந்த நேருவும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் தேவைப்பட்டது. அந்த சட்ட திருத்தத்தை நேரு கொண்டு வந்தார். இதுவே இந்திய அரசியல் சட்டத்தில் நடந்த முதல் திருத்தம்.
ஆனால் சாதி வாரியாக சரியான கணக்குகள் இல்லை. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. இது நடத்தப்பட்டால் ஒவ்வொரு சமூகத்துக்கும் ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சரியான இட ஒதுக்கீடு கிடைக்கும். எந்த சமூகத்துக்கும் பாரபட்சம் இருக்காது.
இதை வலியுறுத்தி மற்ற கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் ஓ.பி.சி. அணியின் தலைவர் டி.ஏ.நவீன் ஏற்பாடு செய்து வருகிறார்.
இந்த கூட்டம் வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை)ஸ்ரீ காமராஜர் அரங்கில் நடக்கிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. எண்ணம் வேறு விதமாக உள்ளது.
- இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் 40-க்கு 40 என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணிக்குள் தொகுதி பங்கீடுகள் திரைமறைவில் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தற்போது கைவசம் இருக்கும் 9 தொகுதிகளையும் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டுகிறது.
அதே நேரம் தற்போதைய எம்.பி.க்கள் அனைவரும் எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் தி.மு.க. எண்ணம் வேறு விதமாக உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் 40-க்கு 40 என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
அதற்கு ஏற்றவாறு தொகுதியின் நிலைமை, கட்சியின் செல்வாக்கு, எந்த வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு என்பதை தீர ஆராய்ந்தே தொகுதி ஒதுக்க வேண்டும். எனவே தொகுதி மாறலாம், குறையலாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இது காங்கிரஸ் நிர்வாகிகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஆனாலும் நம்பிக்கை தளரவில்லை. எல்லாம் மேலிருப்பவர்கள் பார்த்து கொள்வார்கள் என்கிறார்கள் நம்பிக்கையுடன். அதாவது டெல்லி தலைமை பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள். நம்பிக்கை பலித்தால் சரிதான்.
- ராகுல் காந்தியின் பாத யாத்திரையை போதுமான அளவில் காட்டவில்லை என காங். விமர்சனம்
- காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை
இந்தியா கூட்டணி 14 தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னேற்றம் காண வேண்டும் என்றால், ராகுல் காந்தியைத்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சம்பித் பத்ரா கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சி, அதன் சொந்த நலனுக்காக உண்மையிலேயே யாரையாவது புறக்கணிக்க வேண்டும் என்று நினைத்தால், அவருடைய பெயர் ராகுல் காந்தி. உங்களுடைய தலைவருக்கு வலிமை இல்லை. நீங்கள் யாரையெல்லாம் புறக்கணிப்பீர்கள்?. புறக்கணித்து, முன்னேற வேண்டும் என்று நினைத்தால், உங்களுடைய தலைவரை புறக்கணியுங்கள்.
இந்தியாவில் எதிர்க்கட்சிகளால் தாக்கப்படாத அமைப்புகளே இல்லை. நீதிமன்றம், தேர்தல் கமிஷன் என அனைத்து அமைப்புகள் மேலும் தாக்குதல். காங்கிரஸ் கட்சி அன்பை பற்றி பேசுகிறார்கள். ஆனால் வெறுப்பை வீசுகிறார்கள். ஹிட் லிஸ்ட் பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டு, தாக்கப்படுவார்கள். அவர்கள் காப்பாற்றப்படமாட்டார்கள்.
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.
- நாளை எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியின் 106-வது பிறந்தநாள்.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை மரியாதை செலுத்தப்படுகிறது.
சென்னை :
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராஜரின் முதல் அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கிண்டி, ஹால்டா சந்திப்பு அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உ.பலராமன் தலைமையில் பொன். கிருஷ்ணமூர்த்தி, கே. சிரஞ்சீவி, எம்.பி.ரஞ்சன்குமார், இராம.சுகந்தன், அருள் அன்பரசு, முத்தழகன், வழக்கறிஞர் தாமோதரன், தளபதி எஸ்.பாஸ்கர், விருகை பட்டாபி, எஸ்.எம். குமார், ஆர். சுந்தரமூர்த்தி, ஆர்.ஜி.பகத்சிங், பிரபுதாஸ், அக்ராவரம் கே.பாஸ்கர், ஒ.வி.ஆர். ரஞ்ஜித் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தான் சிறப்பாக செயல்படும் அவமதிப்பு காரியத்தில் பிரதமர் மோடி மீண்டும் ஈடுபட்டுள்ளார்.
- எதிர்க்கட்சிகளை வசைபாட அரசு நிகழ்ச்சியை பயன்படுத்துபவர்தான் அதை சொல்கிறார்.
புதுடெல்லி:
மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியா' கூட்டணி கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
அதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தான் சிறப்பாக செயல்படும் அவமதிப்பு காரியத்தில் பிரதமர் மோடி மீண்டும் ஈடுபட்டுள்ளார். 'இந்தியா' கூட்டணி கட்சிகளை ஆணவ கட்சிகள் என்று கூறியுள்ளார்.
அதை சொல்வது யார் என்று பாருங்கள். எதிர்க்கட்சிகளை வசைபாட அரசு நிகழ்ச்சியை பயன்படுத்துபவர்தான் அதை சொல்கிறார். அவர் அளவுக்கு கீழே இறங்கி, தேசிய ஜனநாயக கூட்டணியை 'கவுதம் அதானி என்.டி.ஏ.' (ஜி.ஏ. என்.டி.ஏ.) என்று நாங்களும் அழைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.