search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi protest"

    • டெல்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய விவசாய சங்க தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர்.

    சோழவந்தான்

    டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர். இதற்கு விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க மாநில கவுரவத் தலைவர் எம்.பி. ராமன் கிராமத்திற்கு திரும்பினார். அவரை முதலைக்குளம் கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வரவேற்றனர். இதில் திருமங்கலம் பாசன கால்வாய் உறுப்பினர்கள் ஜெயக்குமார், சிவஅறிவழகன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் முனியாண்டி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராமன், கிளைச்செயலாளர் தவமணி, தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மூக்கன், தொழிலதிபர் பால்பாண்டி, ஊராட்சி செயலாளர் பாண்டி, காங்கிரஸ் நிர்வாகி செல்லசாமி, விவசாயிகள் பால்சாமி, பாண்டி, ஒச்சு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதிய கிசான் சங்கம் சார்பில் டெல்லியில் வருகிற 19-ந்தேதி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருச்சியில் நிர்வாகிகள் தெரிவித்தனர்
    • மத்திய பா.ஜ.க. அரசு விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். இயற்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க வேண்டும்

    திருச்சி:

    பாரதிய கிசான் சங்க அகில பாரத துணைத் தலைவர் பெருமாள் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:

    மத்திய பா.ஜ.க. அரசு விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். இயற்கை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க வேண்டும். உழவர் சம்மான் நிதி, பி.எம். கிசான் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்.

    பயிர் காப்பீட்டு திட்டம் எல்.ஐ.சி. மாதிரி தனிப்பட்ட விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மறு சீரமைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 19-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்பாட்டம் செய்ய இருக்கிறோம்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதிலிருந்து சுமார் 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தையொட்டி இந்த போராட்டத்தை நாங்கள் நடத்த உள்ளோம்.

    தென்னிந்தியாவிலிருந்து சுமார் 10,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின்போது மாநில செயலாளர் வீரசேகரன், நிர்வாகிகள் குமார், வைத்தியநாதன், அன்பழகன், பெருமாள், கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்த போலீசாரின் தடுப்புகளை சில தொண்டர்கள் உடைத்தனர்.
    • மேலும் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது. அது கொளுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை எழுந்தது.

    டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தலைவர்களும், தொண்டர்களும் செல்ல முடியாதபடி போலீசார் தடுப்புகளை வைத்து இருந்தனர். ஆனால் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.

    அவர்கள் அலுவலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் அனுமதிக்க மறுத்தனர். இதனால் சத்தீஷ்கர் முதல்- மந்திரி பூமேஷ் பாகேல், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்த போலீசாரின் தடுப்புகளை சில தொண்டர்கள் உடைத்தனர். மேலும் டயர்களுக்கு தீ வைக்கப்பட்டது. அது கொளுந்து விட்டு எரிந்ததால் கரும்புகை எழுந்தது.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்ற போது மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசாரை காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

    புதுவையில் இருந்து கவர்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பாராளுமன்றம் முன்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். #Kiranbedi #Narayanasamy
    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னர் கிரண்பேடி தனக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் இருப்பதாக கூறி நிர்வாக பணிகளில் தலையிட்டு வருகிறார்.

    இதன் காரணமாக முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டனர். புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க அதிகாரம் உள்ளது.

    கடந்த காலங்களில் மாநில அரசின் சிபாரிசின் பேரில் மத்திய அரசு அவர்களை நியமித்தது. ஆனால் இந்த தடவை மாநில அரசு பரிந்துரை இல்லாமலேயே மத்திய அரசு நேரடியாக பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்தது.

    இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டும் நியமனம் செல்லும் என்று தீர்ப்பை உறுதி செய்தது.

    இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் வக்கீல் கே.கே. வேணுகோபால் கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். அவர் கூறும்போது, புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அந்த மாநிலம் மத்திய அரசின் சொத்து. எனவே அங்கு எந்த நியமனத்தையும் மத்திய அரசு செய்ய முடியும் என்று கூறினார். அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டது.

    மேலும், சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மான ஓட்டெடுப்பிலும், பட்ஜெட் ஓட்டெடுப்பிலும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் ஓட்டு போடலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    3 எம்.எல்.ஏ.க்கள் நியமன விவகாரம் புதுவை அரசியலில் புதிய குழப்பங்களை உருவாக்கி உள்ளது.

    புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மெஜாரிட்டியுடன் ஆட்சி நடத்தினாலும், நியமன எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டால் ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது. இதன் மூலம் புதுவையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

    மேலும், புதுவை மத்திய அரசின் சொத்து என்று கூறப்பட்ட விவகாரத்தில் புதுவையின் தனித்தன்மை பாதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளும் கூறிவருகின்றன.

     முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    இது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி அனைத்து கட்சி கூட்டத்தை நேற்று கூட்டினார். இதில் எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகியவை பங்கேற்கவில்லை.

    தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    * 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இது ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும், மக்களாட்சி அமைப்புக்கும் பாதகமானதாகும்.

    * இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வது. அதில் புதுவை அரசும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து மாநில உரிமையை காப்பது.

    * புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தொடர்ந்து போராடுவது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. ஆனால் கொல்லைப்புறம் வழியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்தது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயல் ஆகும். இது ஜனநாயகத்திற்கு முரண்பாடானது.

    இந்த கருத்தை அனைத்து கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தில் ஏகமனதாக பதிவு செய்துள்ளார்கள்.

    3 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நானும், எம்.எல்.ஏ.க்களும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம்.

    மத்திய அரசு புதுவை மாநிலத்தை வஞ்சித்து வருகிறது. நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு மாநில அந்தஸ்து தான் ஒரே வழி என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் முன்மொழிந்திருக்கிறார்கள்.


    கவர்னர் கிரண்பேடி அரசு நிர்வாகத்தில் தலையிட்டு 2 ஆண்டுகளாக மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார்.

    எனவே அவர் புதுவையில் இருந்து வெளியேற வேண்டும். அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்தும், புதுவைக்கு எதிராக மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்க்கும் வகையிலும் பாராளுமன்றம் முன்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

    இவ்வாறு புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.  #Kiranbedi #Narayanasamy
    ×