search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reception"

    • 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.
    • ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள் குறித்தும் ஆவலுடன் கேட்டறிந்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27-ந்தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.

    ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.

    சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு நிறுவன நிர்வாக இயக்குனர்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31-ந் தேதி சந்தித்து பேசினார்.

    இதன் காரணமாக 2500 கோடி ரூபாய் முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்த நிறுவனம் முன்வந்துள்ளது.

    இதேபோல் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாட்டின் சாலை கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இது தவிர மேட்ரிட் நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி பல்வேறு நிறுவனங்களின் அதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார்.

    ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கட்சி பணிகள் குறித்தும் ஆவலுடன் கேட்டறிந்தார். தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து தொகுதி நிலவரம் பற்றி கேட்டறிந்து வருவதால் காணொலியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (புதன்கிழமை) சென்னை திரும்புகிறார்.

    7-ந்தேதி காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

    தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்துக்கு சென்று வரவேற்க முடிவு செய்து உள்ளனர்.

    • தி.மு.க. இளைஞரணியின் இருசக்கர வாகன பேரணி நடந்து வருகிறது.
    • தி.மு.க. கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவரும், வள்ளுவர் மண்டலத்தின் தென்மண்டல ஒருங்கிணைப் பாளருமான ஆர்.கே.கே.கார்த்திக் தலைமையில் வந்த தி.மு.க இளைஞரணி இருசக்கர வாகன பேரணியை வடக்கு நகர் தி.மு.க சார்பில் வடக்கு நகர் செயலாளரும்,நகர சபை தலைவருமான, ஆர்.கே.கார்மேகம் தலைமையில் தி.மு.கவினர் வரவேற்றனர்.

    தி.மு.க இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. இதைெயாட்டி இளைஞர் அணி மாநில மாநாட்டை ஒட்டி இருசக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.தமிழகம் முழுவதும் இந்த இருசக்கர வாகன பேரணி செல்லும் நிலையில் நேற்று ராமநாதபுரம் வருகை தந்தது.

    ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு வருகை தந்த இருசக்கர வாகன பேரணிக்கு வடக்கு நகர் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.முன்ன தாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, கலைஞ ரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து பேரணியில் கலந்து கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வடக்கு நகர் தி.மு.க. சார்பில் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கவுரவித்தனர்.

    இந்த நிகழ்வில் ராமநாத புரம் நகர் மன்ற துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம்,கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான்,மாவட்ட பொறி யாளர் அணி துணை அமைப்பாளர் பொறியாளர் கா.மருதுபாண்டி,கீழக்கரை இளைஞரணி துணை அமைப்பாளர் எபன்,உட்பட ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க நிர்வாகிகள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் தி.மு.க. ரைடர்ஸ் வாகன பேரணிக்கு எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மாநில உரிமை மீட்புக்கான 2-வது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    ராஜபாளையம்

    தி.மு.க இளைஞர் அணி சார்பில் மாநில உரிமை மீட்புக்கான 2-வது மாநில மாநாடு சேலத்தில் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் விதமாக, கடந்த 15-ந் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை ரைடர்ஸ் வாகன பேரணியை இளைஞரணி செலயாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் 188 இரு சக்கர வாகனங்கள் அணிவகுத்து சென்றன.

    ராஜபாளையம் தொகு திக்கு வந்தடைந்த வாகன பேரணிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்எம்.குமார் முன்னிலையில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி சொக்க நாதன் புத்தூர் விலக்கில் பேர ணிக்கு பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ராஜபாளையம் வழியாக புதுப்பட்டி விலக்கு வரையில் சென்று இருசக்கர வாகனங்களை இயக்கி பேரணியை வழி அனுப்பி வைத்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணி கண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, இளங்கோவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் மிசா நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி கலெக்டர் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் என திரளாக பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்தி பனூர்-மருச்சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் எம்.எல்.ஏ.க்கள் செ. முருகேசன் (பரமக்குடி), காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் (ராமநாதபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்றார்.

    முன்னதாக இந்த முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி மதுரையிலிருந்து ராமநாதபு ரம் மாவட்டத்திற்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் நுழைவு பகுதியான மருச் சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை வரவேற்கப்பட்டதுடன் முத் தமிழ்த்தேர் அலங்கார ஊர் தியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞரின் திருவுரு வச்சிலைக்கு கலெக்டர் பா. விஷ்ணு சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் முருகேசன், காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் வனத்துறையின் மூலம் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 மரக்கன்றுகள் நடும் பணி யினை கலெக்டர் விஷ்ணுசந் திரன் மற்றும் எம்.எல். ஏ.க்கள் நடவு செய்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலைஞர் நூற் றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பேனா வழங்கினர்.

    விழாவையொட்டி நாதஸ்வர நிகழ்ச்சி, சிலம் பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பின்னர் முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி ராமநாதபுரத்திற்கு வருகை தந்து ஏராளமான பொது மக்கள் அலங்கார ஊர்தியி னையும் அதன் உள்ளே உள்ள டாக்டர் கலைஞரின் திருவுருவச் சிலையையும் பார்வையிட்டு சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பர மக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட வனஅலுவலர் எஸ்.ஹேம லதா, பரமக்குடி நகர் மன் றத்தலைவர் சேது கருணா நிதி, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.–கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்த லைவர் கே.டி.பிரபாகரன்,

    ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாபதி, பரமக்குடி வட்டாட்சியர் ரவி, அச்சுந் தன்வயல் ஊராட்சி மன்றத்த லைவர் சசிகலா அவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த வரவேற்பை திட்டமிட்டு மறைக்க முயன்றவர்களுக்கு தோல்வியடைந்து விட்டார்கள்.
    • ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

    மதுரை

    மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் கூறி யதாவது:-

    தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டி ருக்கிற தெய்வீக திரு மகனாரின் குரு பூஜையில், அ.தி.மு.க. பொதுசெயலா ளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற போது வரலாறு காணாத வரவேற்போடு, ஒட்டுமொத்த தேவர் தொண்டர்களும், குறிப்பாக தாய்மார்களும் அவரை வரவேற்ற காட்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஷமி கள் சிலர், தெய்வீக திருமக னார் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயற்சி செய்தனர்.

    அந்த சுயநலவாதி களிடம் இருந்து, அவர் ஒரு சுதந்திர போராட்டத் தலைவர், தேசிய தலைவர், சர்வ சமய, சர்வ ஜாதி என அனைத்து பிரிவிற்கும் சொந்தமானவர் என்பதை நிரூபித்துக் காட்டு கின்ற வகையில், அந்த புண்ணிய பூமியில் அஞ்சாத மன உறுதியோடு, உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என தேவருக்கு மரியாதை செலுத்தி னார். எடப்பாடி பழனிசாமி.

    மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு 80 கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்ற பாதையில் பொதுமக்கள் எல்லாம் அவரை வரவேற்றதை திட்டமிட்டு மறைத்து விட்டு, சில கயவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாங்கிய கூலிக்கு கூவியர்கள் இதில் தோல்வியடைந்து விட்டார்கள்.

    தேவர் சில பேருக்கு மட்டுமே சொந்தம் என்று குறுகிய வட்டத்தில், அவரது புகழை ஒரு கூண்டுக்குள்ளே அடக்க நினைக்கிறார்கள், அதையெல்லாம் தகர்த்து எறிந்து அவரின் புகழ், தியாக வரலாறு, சர்வ மதம் சர்வ ஜாதிகளுக்கும் பாடு பட்டவர் என்பதை இன்றைக்கு மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

    எல்லோரும் வரவேற்ற புண்ணிய பூமி இன்றைக்கு சமீபகாலமாக சில கயவர்கள், அரசியலில் முகவரி அற்றவர்கள், அரசியலில் காணாமல் போனவர்கள் தேவரின் கவசத்தை முக மூடியாக அணிந்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு தேடுவது குற்றமல்ல, ஆனால் பிறரை இழிவுபடுத்த வேண்டும், சிலரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.

    பசும்பொன் பூமிக்கு வருகை தந்து வெற்றி கொடி பறக்க விட்டு, தேவரின் புகழை எட்டுதிக்கும் எடுத்துச் சென்று இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள் ளார்.

    எடப்பாடி பழனிசாமி வருகை ஒரு வரலாற்று வருகையாக தென் மாவட்ட மக்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர்-செங் கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து இன்று முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.

    இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

    லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதி யில் அமர்ந்து பயணிப்ப தும், வாகனங்களில் சரக்கு களை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வ தும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.

    சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ் பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங் கோட்டை விரைவு ரெயில் கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    அதேபோல் இன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், நாளை

    (2-ந்தேதி) செங்கோட்டை யில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆகியவற்றில் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் முதல் முறையாக மின்சார என்ஜினுடன் வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ராஜபாளையம் ெரயில் பயனாளர் சங்கம் சார்பில் ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ரெயில் என்ஜினுக்கு மாலை, அலங்காரங்கள் செய்யப்பட்டு ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் என்ஜின் ஆய்வாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    • தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பிற்ப டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வரும் 30-ம் தேதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.இந்த விழாவில் தி.மு.க தலைவரும், முதல்-அமைச்ச ருமான மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வருகை தர உள்ளார். முதல்வரை வரவேற்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் இரு வண்ண கொடியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பெருமளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தர ராஜன்,மாநில தீர்மா னக்குழு துணைத்தலைவர் திவாகரன், மாநில விவசாய அணி துணை ெசயலாளரும், முது குளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல், மாநில, மாவட்ட, நகர், பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது
    • விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி பேரூராட்சியில் கண்ணைக் கவரும் விதத்தில் கோழிக்கொண்டைப் பூக்கள் காட்சியளிக்கிறது. பொதுவாக கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா வண்ணங்களில் பூக்கும். ஆனால் சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது. வாசமில்லாத மலர் என்றாலும் கண்ணைக் கவரும் இதன் அழகு மற்றும் 8 நாட்கள் வரை வாடாத தன்மை ஆகியவையே இந்த பூக்களை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகிறது.

    இந்த கோழிக்கொ ண்டைப் பூக்களை மாலையில் வைத்துக் கட்டும் போது ரோஜாப்பூக்களின் தோற்றத்தைத் தருகிறது. இதனாலே இந்த பூக்களுக்கு எல்லா சீசனிலும் வரவேற்பு உள்ளது. பண்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரேவிதமான பயிர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும். இதனால் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இவை மழைக்காலம், கோடைக் காலம், குளிர் காலம் என எல்லா பருவங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

    • பரமக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    பரமக்குடியில் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்று தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இமானு வேல்சேகரன் நினை விடத்தில் அஞ்சலி செலுத்து கின்றனர்.

    அஞ்சலி செலுத்த வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான செயற்குழு ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வரவேற்று பேசினார். இதில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மரிச்சிகட்டியில் இருந்து பரமக்குடி வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். இதில் பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் செய்ய வேண்டும். அதே போல் இளைஞரணி மாநில மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, பரமக்குடி நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, வக்கீல் பூமிநாதன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வாசு தேவன், ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, அண்ணா மலை, மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் வக்கீல் கருணாநிதி, வக்கீல் கள் கதிரவன், குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சண்.சம்பத்குமார், சத்தி யேந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், பகுத்தறிவு பாசறை பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், விவசாய அணி அமைப்பாளர் அய்ய னார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், கவுன்சிலர் நதியா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
    • அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருச்சி:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்கிறார்.

    முதல் நாள் நிகழ்வாக நாளை (25-ந் தேதி) திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அதன் பின்னர் பிற்பகல் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறை வாரியாக ஆய்வு செய்கிறார்.

    2-வது நாள் 26-ந் தேதி ( சனிக்கிழமை) காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 27-ந் தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

    அவருக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வேண்டும்.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர் மணிமாறன் பேசினார்.

    திருமங்கலம்

    மதுரையில் நாளை மறுநாள் (ஜூலை 15-ந் தேதி) பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை திறப்பு விழா நடைபெறு–கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகத் தினை திறந்து வைக்கிறார். மதுரை வரும் முதல்வரை வரவேற்பது தொடர்பாக திருமங்கலம் தி.மு.க. அலுவலகத்தில் நேற்று தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை–பெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    முதல்வர் வரவேற்பில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அதிகளவில் வந்து முதலிடத் தினை பிடிக்கவேண்டும். இன்னும் 30 ஆண்டுகள் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி–தான் நடைபெறும் அந்தள–விற்கு பல்வேறு நலத்திட்டங் களை முதல்வர் செய்து வருகிறார். கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் சால்வை, வேட்டி, பொன்னாடையை கட்சியினர் தவிர்த்து முத–ல் வருக்கு புத்தங்களை தர–வேண்டும்.

    நாம் தரும் புத்தகங்கள் நூலகத்தில் இடம் பிடித்து பொதுமக்களுக்கு பயன் தரும். மேலும் முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க–வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையை அறி–வித்துள்ள தமிழக முதல் வருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை–வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங் கம், துணை செயலாளர் லதா அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, தங்கபாண்டி, ஆலம்பட்டி சண்முகம், ராமமூர்த்தி, மதன்குமார், நகர செயலா–ளர்கள் ஸ்ரீதர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா–முத்துக்குமார், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், திருமங்கலம் நகர துணை–செயலாளர் செல்வம், பொருளாளர் சின்னசாமி நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கொல்லிமலை செங்கரையில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது.
    • இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செங்கரை யில், அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள விடுதிக்கு சமையல் செய்திட 6 பணி யாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலி கமாக நியமிக்கப்பட உள்ளனர்.

    சமையல் கலை தெரிந்த பழங்குடியினர் இனத்தி லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது உச்ச வரம்பு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    சமையலர் (ஆண்) 2 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயிரம் வீதம் வழங்கப்ப டும். உதவி சமையலர் (பெண்) 3 பணியிடங்க ளுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 12 ஆயி ரம் வீதம் வழங்கப்படும். துப்புரவா ளர் (ஆண், பெண்) 1 பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியம் ரூ. 5,200 வழங்கப்படும்.

    இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை, வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் கொல்லிமலை, தாலுகா அலுவலகத்தில் உள்ள, பழங்குடியினர் நல திட்ட அலுவலகம் அல்லது செங்கரை, ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு வந்துசேருமாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ×