என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சி- அகமதாபாத் ரெயிலுக்கு தஞ்சாவூரில் வரவேற்பு
- அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக அகமதாபாத்துக்கு சென்று அடையும்.
- அதிகாலை திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 6.30 மணிக்கு தஞ்சாவூர் ரெயில் நிலையம் வந்தது.
தஞ்சாவூர்:
அகமதாபாத்- திருச்சி இடையே வாராந்திர ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் இந்த ரெயில் சேவை தொடங்கியது.
அதாவது வாரந்தோறும் வியாழக்கிழமையில் காலை 9.30 மணிக்கு அகமதாபாத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா, சென்னை, சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.15 மணிக்கு சென்று அடையும்.
மறுமார்க்கத்தில் ஞாயிற்றுகிழமை அதிகாலை 5.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், சென்னை வழியாக மறுநாள் இரவு 9.15 மணிக்கு அகமதாபாத்துக்கு சென்று அடையும்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்க திருச்சியில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 6.30 மணிக்க தஞ்சாவூர் ரெயில் நிலையம் வந்தது.
ஒரிரு நிமிடங்கள் இந்த ரெயில் நின்றது.
அப்போது காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர்ரெயில்ஓட்டு னருக்க சால்வை அணிவிக்க ப்பட்டுகவுரவிக்கப்பட்டார்.
பயணிகளுக்குஇனிப்பு வழங்கி கொண்டாட ப்பட்டது.
இது குறித்து செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் கூறும்போது;-
அகமதாபாத்- திருச்சி இடையே இயக்கப்படும் வாராந்திர ரெயிலை வரவேற்கிறோம்.
இந்த ரெயிலில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது.
எனவே வாராந்திர ரெயிலை தினமும் இயக்கும் ரெயிலாக மாற்ற வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் வழக்கறி ஞர்கள் உமர்முக்தார், பைசல் அகமது, கண்ணன், பேராசிரியர்கள் திருமேணி, செல்வகணேசன் மற்றும் காஜாமொய்தீன், கூத்தூர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்