search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "performance"

    • விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
    • நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் மாநில அரசு சார்பில் திரைப்பட நகர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இங்குள்ள பிலிம் சிட்டியில் அமைந்துள்ள ஸ்டூடியோவில் நேற்று பேஷன்ஷோ நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில் ஏராளமான மாடல் அழகிகள் விதவிதமான ஆடை அணிந்து 'ரேம்ப்வாக்' வந்தனர்.

    24 வயதான வன்சிகா சோப்ரா என்ற மாடல் அழகி ரேம்ப்வாக் சென்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த இரும்பு தூண் ஒன்று மேலிருந்து சரிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் வன்சிகா சோப்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    மின் விளக்குகளுக்காக அந்த இரும்புதூண் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக அந்த தூண் மேலிருந்து சரிந்து விழுந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் பாபிராஜ் என்ற வாலிபர் காயம் அடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து பேஷன் ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், பேஷன்ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஏற்பாட்டாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர். 

    • தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத வட்டார வரியை ரத்து செய்ய வேண்டும்.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் எம்.ஓ. சாகுல் ஹமீது, இணைச் செயலாளர் தாமஸ், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் பேசினர்.

    கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நடிகர்-நடிகைகளின் சம்பள உயர்வால் தமிழ் படங்களின் விலை அபரி தமாக உயர்ந்துள்ளது. எனவே சம்பளத்தை குறைக்க வேண்டும்.

    திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டிருக்கும் 8 சதவீத வட்டார வரி விதிப்பு முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.

    திரையரங்கு உரிமையாளர்கள்-விநியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்து கூட்டு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தொழில்துறை அமைச்சராக பொறுப்பே ற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.
    • அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    நாகப்பட்டினம்:

    நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியி ருப்பதாவது, தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நண்பர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாழ்த்துகள்.

    கடந்த 2 ஆண்டுகளாக சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவில் அவர் தலைமையில் பயணித்ததில் அவரது செயல் திறனையும், கருத்தியல் உறுதியையும் கண்டு வியந்தேன். டெல்டா பகுதிக்கு அமைச்சர் இல்லையே என்ற குறை நீங்கியது.

    பின்தங்கி யுள்ள நாகப்ப ட்டினம் மாவட்ட த்திற்கு அதிக தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தர அவர் பாடுபடு வார் என்று நம்புகிறேன். அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

    • அதிராம்பட்டினத்தில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.
    • சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.

    அதிராம்பட்டினம்:

    கடல்பசு தினத்தை முன்னிட்டு பான் செக்கர்ஸ் பப்ளிக் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் மற்றும் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

    இந்த ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்வை பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் தொடக்கி வைத்தார்.அதிராம்பட்டினத்தில் இருந்து தொடர்ந்து 15 கிலோமீட்டர் மேலாக நடைபெற்ற இந்த உலக சாதனை ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்வில் 7 மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர் .இந்த ஸ்கேட்டிங் அதிராம்பட்டினம் சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.

    • வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் மகளிர் தின விழா நடந்தது.
    • விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடந்தது. மகளிர் திட்ட மாவட்ட இயக்குநர் காளிதாஸ் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் கார்த்திக், உதவி திட்ட அலுவலர்கள் வெள்ளைபாண்டிமரியாள் முன்னிலை வகித்தனர். பொறுப்பாளர் ரம்யா வரவேற்றார். மகளிர் சுய உதவி குழுவினரின் விழிப்புணர்வு நாடகம், கவிதை, பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி கவுன்சிலர்கள் நல்லம்மாள், கார்த்திகா ராணி,சரசு, பூமிநாதன், ஜெயகாந்தன்,மீனா, சூர்யா, பிரியதர்ஷினி, பஞ்சவர்ணம், வெங்கடேசுவரி, குருநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமுதாய ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, சமூகவள பயிற்றுநர் குமாரி, செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பொறுப்பாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • கீழடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைநிகழ்ச்சியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கீழடியில் உலகதரம் வாய்ந்த சுமார் ரூ.18.43 கோடி செலவில் அமைக்கப்பட்ட அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது.

    இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தனது செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டார்.

    முன்னதாக கீழடி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் நிகழ்ச்சியில் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிவகங்கை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    கீழடி கிராமத்துக்கு செல்லும் வழியில் கிராமிய பாடல்கள் பாடியும், கரகம் ஆடியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், மாவட்ட துணை செயலாளர்- திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை முன்னாள் எம்.எல்.ஏ.- நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, இளையான்குடி முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜிமுதீன், மானாமதுரை ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் வழக்கறிஞர் அண்ணாதுரை, நகராட்சி, யூனியன் துணைத் தலைவர்கள் பாலசுந்தரம், முத்துசாமி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. தொண்டர்கள், கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.

    • நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.
    • ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா நாளை முதல் 14-ந் தேதி வரை நீலகிரி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடக்கிறது.

    தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்க உள்ளது. இந்த புத்தக திருவிழாவில் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

    நாளை காலை 10 மணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் நீலகிரி முதலாவது புத்தக திருவிழாவை தொடக்கி வைக்கின்றனர்.

    தொடர்ந்து ஊட்டி 200 லட்சினையயும் வெளியிட்டு பேசுகின்றனர்.

    பப்பாசி குமரன் பதிப்பகத்தின் தலைவர் வயிரவன் அறிமுக உரையாற்றுகிறார். திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பங்கேற்று பேச உள்ளார்.

    மாலை 3 மணி முதல் 5 மணி வரை மாநில திட்டக்குழு உறுப்பினர் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜின் நாட்டி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    6-ந் தேதி எழுத்தாளர் இமயத்தின் வாழ்க்கைதான் இலக்கியம் சிறப்புரை, பழங்குடியினர் மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சியும், பாபு நிஸாவின் கரோக்கி இன்னிசை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

    7-ந் தேதி திரைப்பட பாடல் ஆசிரியர் யுகபாரதியின் சிறப்புரையும், பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 8-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமாரின் மழைத்துளிகள் சொல்லி சென்ற கதை குறித்து பேசுகிறார். இதுதவிர பெண்களுக்கு பெரிதும் மனநிறைவு தருவது குடும்ப பொறுப்பே, சமுதாய பொறுப்பே என்ற தலைமையில் பட்டிமன்றமும் நடக்கிறது.

    9-ந் தேதி வரலாற்று நாவல் ஆசிரியர் ஸ்ரீமதி வரலாற்று புதினங்கள் வற்றாத புதையல்கள் குறித்து பேசுகிறார். மணிஹட்டி சிவாவின் படுகா நடனமும் நடக்கிறது. 10-ந் தேதி சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பூனையும், பாற்கடலும் குறித்து பேசுகிறார்.

    தொடர்ந்து அனைத்து நாட்களிலும் எழுத்தாளர்கள் உள்பட பல துறைகளில் சாதித் தவர்கள் பங் கேற்று சிறப்புரை யாற்றுகிறார்கள். கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    14-ந் தேதி நிறைவு விழா நடக்கிறது.

    இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    நாளை முதல் 14-ந் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு புத்தக கண்காட்சி தொடங்குகிறது.

    11 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, 1 மணிக்கு பட்டிமன்றங்கள் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

    • பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் உருவசிலை.
    • விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான் தட்சிணபண்டரிபுரமாக போற்றப்படுகிறது. இங்கு விஸ்வ வித்யாலயா பாடசாலை செயல்படுகிறது.

    இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயில்கின்றனர்.

    கோயில் மற்றும் பாடசாலை வளாகத்தில் வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது திரு உருவம் பிரதிஷ்டை செய்து திறப்பு விழா நடந்தது.

    சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சதர் குத்துவிளக்கேற்றினார். பைபரால் செய்யப்பட்ட 20 அடி உயரம் 8 அடி அகலம் கொண்ட சுவாமி விவேகானந்தர் முழு திருவுருவ சிலையை தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    அம்மன் பேட்டை ராமகிருஷ்ணா ஆசிரமம் ஸ்ரீமத் சுவாமி சொரூபானந்தா மகராஜ் சுவாமி விவேகானந்தரின் லட்சியம் குறித்து பேசினார்.

    கும்பகோணம் ஸ்ரீராமகிருஷ்ண விவேகானந்தா டிரஸ்ட் செயலாளர் வெங்கட்ராமன் தொடக்க உரையாற்றினார்.

    இதில் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், பா.ஜ.க மாவட்ட தலைவர் சதீஷ்குமார், திருவிடைமருதூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அசோக்குமார், பா.ஜ.க மூத்த நிர்வாகி அண்ணாமலை, நகர பொருளாளர் வேதம் முரளி, வர்த்தக சங்க ஒருங்கிணைப்பாளர் சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விட்டல் ருக்மணி விஸ்வ வித்யாலயா மாணவர்களின் சார்பில் விவேகானந்தரின் வரலாற்றை நினைவு கூறும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

    நிர்வாக பொறுப்பாளர் பஞ்சாபிகேசன் நன்றி கூறினார்.

    • சிறப்பாக பணி புரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான நவம்பர் மாதத்திற்கான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை நடந்தது.

    இதில் சிறப்பாக பணி யாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் லோகநாதனுக்கு 2-ம் பரிசும், முன்னாள் ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் சீனிவாசனுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி)சாத்தூர் தனி வட்டாட்சியர்நா.சீதா லட்சுமிக்கு முதல் பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் சாந்திக்கு 2-ம் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் சிவக்குமாருக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவண க்குமாருக்கு முதல்பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி க்கு 2-ம் பரிசும், காரியா பட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி க்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்ட த்துணை ஆய்வாளர் மாரிமுத்துக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்டத்துணை ஆய்வாளர் கார்த்தி கேயனுக்கு 2-ம் பரிசும், சிவகாசி வட்டத்துணை ஆய்வாளர் சுப்புராஜாவுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார் ஆய்வாளர் சுரேசுக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்ட சார் ஆய்வாளர் கணேசன், ராஜபாளையம் வட்ட குறுவட்ட அளவர் ராஜீவ்காந்தி ஆகியோருக்கு 2-ம் பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டிசெல்வி, சாத்தூர் வட்ட குறுவட்ட அளவர் ராதா ருக்குமணி ஆகியோருக்கு 3-ம் பரிசும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம், சத்திரிய சேனா சேவகம், சர்வதேச கேரளா கட்டை விளையாட்டு சம்மேளனம் இணைந்து சர்வதேச கர்லா கட்டை தினம் கொண்டாடப்பட்டது.
    • இந்த சாதனையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கினார்.

    புதுச்சேரி:

    ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம், சத்திரிய சேனா சேவகம், சர்வதேச கேரளா கட்டை விளையாட்டு சம்மேளனம் இணைந்து சர்வதேச கர்லா கட்டை தினம் கொண்டாடப்பட்டது.

    ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் கர்லாக்கட்டை சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது. புதுவை, பல்வேறு வெளிநாடுகள், மாநில, மாவட்டங்களில் இருந்தும் பலர் பங்கேற்றனர். கலைமாமணி ஜோதி செந்தில் கண்ணன் தலைமை வகித்தார். அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் ராஜேந்திரன் இந்த சாதனையை பதிவு செய்து சான்றிதழ் வழங்கினார்.

    சத்ரிய சேனா சேவக பொதுச்செயலாளர் வெற்றிச்செல்வம் வரவேற்றார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், பொது செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.

    பயிற்சியாளர்கள் பயில்வான் பெரியசாமி, முன்னாள் ராணுவ வீரர் ஆனந்தராஜ், நிர்வாகிகள் அருள்ராஜ், ராதாகிருஷ்ணன், திருவேங்கடம், பாலாஜி, குமார், சிவராமகிருஷ்ணன், சுவாதி உட்பட நிர்வாகிகள், பள்ளி, கல்லூரி முதல்வர்கள், நிறுவனர்கள், ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.

    • போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும்.
    • டும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு 2, மாநகர காவல் துறை ஆகியன சாா்பில் பழைய பேருந்து நிலையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநகர காவல் துணை ஆணையா் வனிதா பேசியதாவது:- போதைப் பழக்கமானது உடல் நலத்துக்கும், சமூக நலத்துக்கும் தீங்குவிளைவிக்கக்கூடியதாகும். இதனால் தனி மனிதன் மட்டுமின்றி அவா் சாா்ந்த சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் கல்வியில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். அதே வேளையில், குடும்ப உறுப்பினா்கள், நண்பா்கள் உள்பட யாரும் போதைப் பொருள்களை பயன்படுத்தாதபடி விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி மூலமாக போதை ஒழிப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில், பங்கேற்ற அனைவரும் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் செய்திருந்தாா்.

    • தி .எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளியின் இரசன ரங்கம் 9-ம் ஆண்டு விழா வைப்ரேஷன் தி ஹீலர்ஸ் என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஜிப்மர் அரங்கத்தில் நடைபெற்றது.
    • பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    கடலூர் பெரிய காட்டுப்பாளையம். தி .எஸ்.பி.பி.மில்லினியம் பள்ளியின் இரசன ரங்கம் 9-ம் ஆண்டு விழா வைப்ரேஷன் தி ஹீலர்ஸ் என்ற தலைப்புகளில் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் ஜிப்மர் அரங்கத்தில் நடைபெற்றது.

    பள்ளி முதல்வர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். புதுவை ஸ்ரீபாலாஜி வித்யா பீத் இயக்குனர் மற்றும் பேராசிரியர் ஆனந்த பாலயோகி பாவானணி, புதுவை பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியரும் மிருதங்கம் மற்றும் அறுமுகனம் வித்துவானுமான கோப குமார், கிருகம்பாக்கம் பி.எஸ்.பி.பி. மில்லினியம் பள்ளி பவாணி பாஸ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமான வகையில் அமைந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து பாராட்டி பேசினர்.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை பள்ளி தலைமை ஆசிரியர் கமலா முரளி முன்னிலையில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    ×