search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பாக பணி புரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசு
    X

    சிறப்பாக பணியாற்றிய சாத்தூர் தாசில்தார் வெங்கடேசனுக்குரிய முதல் பரிசை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார். அதை தனி வட்டாட்சியர் சீதாலட்சுமி பெற்றுக்கொண்டார்.

    சிறப்பாக பணி புரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசு

    • சிறப்பாக பணி புரிந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் வருவாய்த்துறை அலுவலர்களுடனான நவம்பர் மாதத்திற்கான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை நடந்தது.

    இதில் சிறப்பாக பணி யாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சியர்களில், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேசனுக்கு முதல் பரிசும், சிவகாசி வருவாய் வட்டாட்சியர் லோகநாதனுக்கு 2-ம் பரிசும், முன்னாள் ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் சீனிவாசனுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி)சாத்தூர் தனி வட்டாட்சியர்நா.சீதா லட்சுமிக்கு முதல் பரிசும், சிவகாசி தனி வட்டாட்சியர் சாந்திக்கு 2-ம் பரிசும், அருப்புக்கோட்டை தனி வட்டாட்சியர் சிவக்குமாருக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவண க்குமாருக்கு முதல்பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி க்கு 2-ம் பரிசும், காரியா பட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி க்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் வெம்பக்கோட்டை வட்ட த்துணை ஆய்வாளர் மாரிமுத்துக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்டத்துணை ஆய்வாளர் கார்த்தி கேயனுக்கு 2-ம் பரிசும், சிவகாசி வட்டத்துணை ஆய்வாளர் சுப்புராஜாவுக்கு 3-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் சிவகாசி வட்ட சார் ஆய்வாளர் சுரேசுக்கு முதல் பரிசும், காரியாபட்டி வட்ட சார் ஆய்வாளர் கணேசன், ராஜபாளையம் வட்ட குறுவட்ட அளவர் ராஜீவ்காந்தி ஆகியோருக்கு 2-ம் பரிசும், விருதுநகர் வட்ட குறுவட்ட அளவர் பாண்டிசெல்வி, சாத்தூர் வட்ட குறுவட்ட அளவர் ராதா ருக்குமணி ஆகியோருக்கு 3-ம் பரிசும் கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×