என் மலர்
நீங்கள் தேடியது "தியேட்டர்"
தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
அதன்படி, தமிழில் நாளை (நவ. 14) ஏழு திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.
காந்தா:
துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கும்கி 2:
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. 'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதராஸ் மாஃபியா கம்பெனி:
அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'மதராஸ் மாஃபியா கம்பெனி'. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.
ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.
படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிணறு:
இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிணறு'. இப்படத்தில், விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது.
தாவூத்:
இயக்குவர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தாவூத். ஒரு தமிழ் நகைச்சுவை-குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் லிங்கா, சாரா ஆச்சார், ராதா ரவி, ஷா ரா, சாய் தீனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாய்: ஸ்லீப்பர் செல்:
கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் 'பாய் ஸ்லீப்பர் செல்ஸ்'. கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.
சூதாட்டம்:
இயக்குனர் சரவணன் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூதாட்டம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா மற்றும் சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆட்டோகிராஃப்:
கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இப்படம் 21 ஆண்டுகள் கழித்து நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் எனவும் அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.
மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்நிலையில், 'தளபதி கச்சேரி' எனத் தொடங்கும் முதல் பாடல் நேற்று வெளியானது.
இந்த வீடியோவில் விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படங்களின் பாடல்கள் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடலை விஜய்,அனிருத் மற்றும் அறிவு ஆகியோர் பாடியுள்ளனர்.
'ஜன நாயகன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானதை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது ரசிகர் ஒருவர் பட்டாசை வெடித்து தூக்கியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ரசிகர்களின் அன்பு காரணமாக தான் நான் இந்த நிலைமையில் இன்று இருக்கிறேன்.
- ரசிகர்களின் அன்பையும் கனவை ஈர்ப்பையும் நாம் கண்காணிக்க வேண்டும்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கும் அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
நேர்காணலில் பேசிய அஜித்குமார், "ரசிகர்களின் அன்பு காரணமாக தான் நான் இந்த நிலைமையில் இன்று இருக்கிறேன். ஆனால் அவர்களின் அன்பையும் கனவை ஈர்ப்பையும் நாம் கண்காணிக்க வேண்டும்.
திரையரங்கு உரிமையாளர்கள் பல லட்சங்கள் செலவு செய்து, தியேட்டரை புதுப்பிக்கிறார்கள். ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் திரையரங்கிற்கு உள்ளே பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது, Once More கேட்டு திரையை கிழிப்பது இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்"என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, "கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவரும் இதற்கு பொறுப்புதான். ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
- ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் கடைசி சீசன் தயாராகி வருகிறது.
2016 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 2,3,4 சீசன்களும் பெரும் ஹிட் அடித்தன.
தற்போது ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரின் கடைசி சீசன் தயாராகி வருகிறது. இந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் இந்த தொடர் வெளியாகிறது.
இந்நிலையில், அதே நாளில் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸ் தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் இந்த தொடர் தியேட்டர்களில் வெளியாகிறது. டிசம்பர் 31 மற்றும் அடுத்தாண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய 2 தினங்களுக்கு மட்டும் சிறப்பு காட்சியாக இந்த தொடர் வெளியாகிறது. 350 தியேட்டர்களுக்கு மேல் இந்த தொடர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கொரோனா தொற்றுக்கு முன்பு வரை வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டர் செயல்பட்டது.
- இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக கடந்த 50 ஆண்டுகளாக திகழ்ந்த வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன்பு வரை செயல்பட்ட இத்திரையரங்கத்தில் ரூ.40 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. உதயம், திரையரங்கம், தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கம், பெரம்பூரில் இருந்த ஸ்ரீபிருந்தா திரையரங்கம் ஆகியவை அண்மையில் மூடப்பட்டது.
ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- 2 மணி நேரம் கூட வேலைக்கு ஓய்வு கொடுக்க முடியாதா?
- Work-Life balance கேள்விக்குள்ளாகியுள்ளது என்று நெட்டிசன்கள் கேள்வி
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் லோகா' படத்தின் போது திரையரங்கிற்குள் அமர்ந்து மடிக்கணினியில்
வேலை செய்து கொண்டிருந்த பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.
2 மணி நேரம் கூட வேலைக்கு ஓய்வு கொடுக்க முடியாதா? Work-Life balance கேள்விக்குள்ளாகியுள்ளது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
- பட்டாசு வெடிக்க கூடாது என சினிமா தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
- மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி ஜூனியர் என்.டி.ஆர். நடித்த தேவரா படம் வெளியானது.
அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சினிமா தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட கட்டவுட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பிரபல திரைப்பட நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது பட்டாசு வெடிக்க கூடாது என சினிமா தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பவன் கல்யாண் நடித்த ஹரிஹர வீர மல்லலு திரைப்படம் வெளியானது. அப்போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க சினிமா தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.
- எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை அசோக் நகரில் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உதயம் திரையரங்கம் உதயம், சந்திரன், சூரியன் என மூன்று திரைகளுடன் செயல்பட்டது. கார்பரேட் நிறுவனங்களால் மல்டிப்ளெக்ஸ் திரைகள் அறிமுகமாவதற்கு முன்னரே சென்னையில் 4 திரைகளுடன் சினிமா ரசிகர்களின் கோட்டையாக விளங்கியது.
ஒவ்வொரு திரையிலும் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ரசிக்கக்கூடிய வகையில் இந்தத் திரையரங்கம் இருந்து வந்தது. இருப்பினும் காலத்திற்கேற்றவாறு புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டுவரத் தவறியதால் உதயம் தியேட்டர் அண்மையில் மூடப்பட்டது.
உதயம் திரையரங்கத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு விற்பனை செய்த நிலையில் திரையரங்கம் முழுவதுமாக இடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அங்கு குடியிருப்பு கட்டுமான பணிகள் தொடங்கப்படவுள்ளது.
சென்னையின் அடையாளமாக விளங்கிய உதயம் தியேட்டரை தொடர்ந்து சென்னையில் உள்ள மேலும் இரு திரையரங்குகள் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் உள்ள எம்.எம். திரையரங்கமும், பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா திரையரங்கமும் மூடப்படுவதாக கூறப்படுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தண்டையார்பேட்டையில் பல வருடங்களாக செயல்பட்டு வந்த எம்.எம். திரையரங்கம் மெட்ரோ ரெயில் பணிகளின் போது கடுமையாக பாதிக்கப்பட்டது. மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட எம்.எம். திரையரங்கம் தொடர்ந்து நட்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.
பெரம்பூரில் 1985ஆம் ஆண்டு ஸ்ரீபிருந்தா தியேட்டரை ரஜினிகாந்த் திறந்துவைத்தார். அதன்பின்பு இந்த தியேட்டரை ரசிகர்கள் அன்போடு ரஜினி தியேட்டர் என்றே அழைத்தார்கள். இந்த தியேட்டரில் மாப்பிள்ளை, பாண்டியன், அண்ணாமலை போன்ற பல ரஜினி திரைப்படங்கள் இங்கு வெற்றிகரமாக ஓடின.
சென்னையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் ஒற்றை திரை கொண்டு செயல்பட்டு வரும் திரையரங்குகள் நட்டத்தை சந்தித்து வருகின்றன. ஒருகாலத்தல் சென்னையின் அடையாளமாக விளங்கிய தியேட்டர்கள் படிப்படியாக மூடப்படுவதால், ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத வட்டார வரியை ரத்து செய்ய வேண்டும்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை
மதுரை, ராமநாதபுரம் ஒருங்கிணைந்த சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் எம்.ஓ. சாகுல் ஹமீது, இணைச் செயலாளர் தாமஸ், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் பேசினர்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடிகர்-நடிகைகளின் சம்பள உயர்வால் தமிழ் படங்களின் விலை அபரி தமாக உயர்ந்துள்ளது. எனவே சம்பளத்தை குறைக்க வேண்டும்.
திரையரங்குகளுக்கு தமிழ்நாடு அரசால் விதிக்கப்பட்டிருக்கும் 8 சதவீத வட்டார வரி விதிப்பு முழுவதும் ரத்து செய்ய வேண்டும்.
திரையரங்கு உரிமையாளர்கள்-விநியோகஸ்தர்கள் ஒருங்கிணைந்து கூட்டு கூட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ஆவேசமாக கூச்சல் போட்டும் இடையூறு செய்து கொண்டிருந்தனர்.
- தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகிறார்கள்.
சென்னை:
தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரனின் மகன், பேரன் உள்பட குடும்பத்தினர் தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தியேட்டருக்கு நேற்று இரவு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்-2 என்ற படம் பார்க்க சென்றுள்ளார்கள்.
இரவு 10.50 மணிக்கு காட்சி தொடங்கியது. படம் ஓடிக் கொண்டிருந்த போது அவர்களுக்கு பின் இருக்கையில் அமர்ந்து இருந்த 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் காட்சிகளை பார்த்து விசில் அடித்தும், ஆவேசமாக கூச்சல் போட்டும் இடையூறு செய்து கொண்டிருந்தனர். உடனே அமைச்சரின் குடும்பத்தினர் அவர்களிடம் அமைதியாக இருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென்று அமைச்சரின் மகன் ரமேஷ் (50) பேரன் கதிர் ஆகியோர் மீது தாக்கி இருக்கிறார்கள். இதனால் கதிருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
உடனே தியேட்டர் நிர்வாகத்தினர் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள். அந்த தருணத்தை பயன்படுத்தி அவர்கள் 6 பேரும் தியேட்டரில் இருந்து தப்பி சென்றுவிட்டார்கள்.
காயம் அடைந்த கதிர் உடனடியாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதிகாலை 4 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.
இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தேடி வருகிறார்கள்.
- விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
- விளக்கத்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
திருப்பூர்:
திருப்பூர் யூனியன் மில் மெயின் ரோட்டில் பிரபல தியேட்டர் ஒன்று உள்ளது. இங்கு தீபாவளி அன்று அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சிகள் வெளியிடுவதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் அடிப்படையில் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், வருவாய் அதிகாரி தேவி, கிராம நிர்வாக அதிகாரி விஜயராஜ் ஆகியோர் தியேட்டரில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்பாக காலை 7.10, 7.25, 8.10, 8.25 என 6 காட்சிகள் வெளியிட்டு இருப்பது தெரியவந்தது.
விசாரணைக்கு பின் இது தொடர்பான அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு தாசில்தார் அனுப்பி வைத்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு அனுமதித்த நேரத்துக்கு முன்பாக திரையிட ப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டு தியேட்டர் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்ப ப்பட்டுள்ளது .அந்த விளக்க த்தின் அடிப்படையில் தியேட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
- 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
- பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும்.
உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ராயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 தியேட்டர்கள், 40 ஓட்டல்கள், பார்கள் இருக்கின்றன.
இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண்ட கப்பல் தனி உலகமாக கடலில் உலா வரும். இந்த கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.






