என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் திரைப்படம்"

    தமிழில் நாளை (நவ. 14) ஏழு திரைப்படங்கள் வெளியாகிறது.

    தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...

    அதன்படி, தமிழில் நாளை (நவ. 14) ஏழு திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.

    காந்தா:

    துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    கும்கி 2:

    கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. 'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    மதராஸ் மாஃபியா கம்பெனி:

    அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'மதராஸ் மாஃபியா கம்பெனி'. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.

    ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.

    படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    கிணறு:

    இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிணறு'. இப்படத்தில், விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது.

    தாவூத்:

    இயக்குவர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தாவூத். ஒரு தமிழ் நகைச்சுவை-குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் லிங்கா, சாரா ஆச்சார், ராதா ரவி, ஷா ரா, சாய் தீனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    பாய்: ஸ்லீப்பர் செல்:

    கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் 'பாய் ஸ்லீப்பர் செல்ஸ்'. கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.

    சூதாட்டம்:

    இயக்குனர் சரவணன் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூதாட்டம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா மற்றும் சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஆட்டோகிராஃப்:

    கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இப்படம் 21 ஆண்டுகள் கழித்து நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது.

    சராசரி காதல் கதையில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்.

    கும்பகோணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளைஞர் கவுஷிக். பள்ளி முடித்த நிலையில், துபாயில் வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் கதாநாயகி பிரதிபாவை சந்திக்கிறார். அவள் மீது காதல் வயப்படுகிறார். இதனால், துபாய் திட்டத்தை கைவிடும் கவுஷிக், பிரதிபா படிக்கும் கல்லூரியிலேயே சேர்கிறார்.

    இவ்வாறு சென்றுக் கொண்டிருக்கையில், கவுஷிக் மற்றும் பிரதிபா தனது நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். அப்போது, நண்பர்களுக்கு சாட்சி கையெழுத்துபோட தங்களது ஆவணங்களையும் சமர்ப்பிக்கின்றனர். நண்பர்களின் காதலுக்கு உதவி சென்ற இடத்தில் இவர்களுக்கு விபரீதம் ஏற்படுகிறது.

    இதனால், வரும் சிக்கல்களை கதாநாயகன் எப்படி சமாளித்து மீண்டு வருகிறார்? காதலே வேண்டாம் என்று இருக்கும் கதாநாயகியை கரம் பிடிக்கிறாரா ? என்பது மீதிக்கதை..

    நடிகர்கள்

    ஒரு கிராமத்து இளைஞராக கவுஷிக் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் இயல்பாக நடித்திருக்கிறார். பிரதிபா கதாபாத்திரத்தை ஆழமாகப் புரிந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

    இயக்கம்

    கதையின் ஆரம்பத்தில் இது ஒரு சராசரி காதல் படமாக இருக்கும் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன். இரண்டாம் பாதியில் படம் சுவாரஸ்யமாகவும், கிளைமேக்ஸில் செண்டிமென்டாகவும் படத்தை நிறைவு செய்துள்ளார். ஒரு சில குறைகள் இருந்தாலும் படத்தின் வேகம் சீராக செல்கிறது.

    இசை

    பாடல்கள் சுமார் என்றாலும், படத்திற்கு சிறந்த பின்னணி இசையால் பலம் சேர்த்துள்ளார்.

    ஒளிப்பதிவு

    கிராமப்புற காட்சிகளை பசுமையா பதிவு செய்துள்ளார் பிரகத் முனிசாமி.

    செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில் ந.வசந்த் இயக்கி வருகிறார்.

    இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்தை தேடி நமது மண்ணை நம்பி வரும் ஒரு குடும்பத்திற்கு இங்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காண்பது மாதிரி சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம் ஐயம்.

    செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில் ந.வசந்த் இயக்கி வருகிறார். கதாநாயகனாக பாலாஜி, கதாநாயகியாக ரெய்னா கரட் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள்.

    போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தீபா சங்கர் ,கே.பி.ஒய் வினோத், மிப்பு,ரஞ்சன், விஜய் கணேஷ்,கிரேன் மனோகர்,யாசர், சுப்ரமணி, டி.என்.ஏ விஜயலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு கமலக்கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பெங்களூர், ஒசூர் தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய இடங்களில் 40 நாட்களாக நடைபெற்று இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது.

    கோவிலுக்குள் இருக்கும் வைரத்தை கைப்பற்ற போலி சாமியாராக நுழையும் ஆசாமி விடும் கம்பி கட்ன கதை.

    நாயகன் நட்டி நட்ராஜ் மோசடி செய்து மக்களிடம் பணம் பறித்து வாழ்ந்து வருகிறார். இவர் பல லட்சம் கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

    வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவிடுகிறார். வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழைகிறார் நட்டி நட்ராஜ். மேலும், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொண்டு சாமியாராக வாழ்ந்துக் கொண்டே வைரத்தை தேடுகிறார்.

    இறுதியில் நட்டி நட்ராஜ்க்கு வைரம் கிடைத்ததா? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், கதாபாத்திரத்தை உணர்ந்து அசால்டாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால், இதில் சாதாரணமாக நடித்து இருக்கிறார். படம் முழுவதும் அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முக்கேஷ் ரவி, ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சியில் தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டுவதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.

    நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஷாலினி இருவரும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், சாம்ஸ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி. போலி சாமியாரின் ஆசிரமத்தையும், அங்கு நடக்கும் பலான சம்பவங்களை வைத்துக் கொண்டு மக்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. காமெடி நடிகர்களை சரியாக பயன்படுத்த தவறி இருக்கிறார்.

    இசை

    சதீஷ் செல்வம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

    நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

    நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க

    பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    டியூட்

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    டீசல்

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    கம்பி கட்ன கதை

    நடிகர் நட்டி, ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் 'கம்பி கட்ன கதை' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே கார்த்தி, முத்துராமன், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் சதுரங்கவேட்டை பட பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் வருகிற 17ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

    தீபாவளி கொண்டாட்டம் என்றாலே ஒன்று பட்டாசும், மற்றொன்று புதிய திரைப்படங்களும் தான். 

    முன்பெல்லாம், தீபாவளி- பொங்கல் பண்டிகைகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரும்பாலும் வெளியாகும். ஆனால், சமீப காலமாக அந்த போக்கு மாறி வருகிறது.

    தற்போது சிறிய பட்ஜெட் படங்களும், புதிய ஹீரோக்களின் படங்களும் கூட தீபாவளி முன்னிட்டு வெளியாகி வசூல் சாதனை படைக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20ம் தேதி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

    அதன்படி, வரும் 17ம் தேதி அன்று துருவ் விக்ரமின் பைசன், ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட் ஆகிய மூன்று படங்கள் வௌியாக தயாராக உள்ளன.

    பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    டியூட்

    இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    டீசல்

    பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகளவில் நாளை 7 தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன.
    • 'படை தலைவன்' படம் திரையரங்க ஒதுக்கீடு காரணமாக ஒத்திவைப்பு.

    தமிழகம் மற்றும் உலகளவில் நாளை வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

    நாளை ஒரே நாளில் 7 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

    அதன்படி, விஜய் சேதுபதி நடிப்பில் 'ஏஸ்', டொவினோ தாமஸ்-ன் 'நரி வேட்டை', யோகி பாபுவின் 'ஸ்கூல்', 'மையல்', 'அகமொழி விதிகள்', 'ஆகக் கடவன', 'திருப்பூர் குருவி' ஆகிய 7 படங்கள் நாளை வெளியாகின்றன.

    சண்முக பாண்டியன் நடிப்பில் நாளை திரைக்கு வரவிருந்த 'படை தலைவன்' படம் திரையரங்க ஒதுக்கீடு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும்.
    • இயலாமையையோ கொண்டாடும் மணநிலைக்கு வந்துவிட்டோமோ.

    தமிழ் திரையுலகின் பிரபல நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதி ராஜா சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு திரையுலகினர், ரசிகர்கள், பொது மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    பிரபலங்கள் துக்க நிகழ்வுகள் ஊடகங்களில் அதிகம் காட்டப்படுவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், துக்க வீடுகளில் ஒருவரின் துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தை ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் என்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பு சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அந்த சங்கத்தின் செயல் தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும்.

    ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன் மரண வீடுகள் மௌனிக்கப்படவும் துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும். துயர்கொள்ளவும் வேண்டியவை

    யாரோ இறந்துபோனார் எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்தும் விதத்தையோ ஏன் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்க வேண்டும் ஒருவரின் துயர் நமக்கு காசாகத்தான் வேண்டுமா?

    பார்வையாளர்களைக் கொண்டு வரும் என்ற எண்ணம் எத்தனை இரக்கமற்றது? கொடியது?

    நாம் மற்றொருவரின் மரணத்தையோ, இயலாமையையோ கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமோ என்ற கவலை வலுக்கிறது.

    ஊடகங்கள் கார்களின் உள்ளேயும் நடுவீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடலையும் ஏன் படம் பிடிக்க வேண்டும்? அதுவும் முண்டியடித்துக்கொண்டு துக்க முகங்களைக் காட்டுவதில் அப்படி என்ன பேரானந்தம் கிடைத்துவிடப் போகிறது?

    இனி வரும் காலங்களில் ஊடக அனுமதி இறப்பு வீடுகளில் கூடவே கூடாது என்பதை முன்னெடுக்க வேண்டும்.

    அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும், பத்திரிகை தொடர்பாளர் யூனியனும் இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வைக் காண்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    சக மனிதர்களின் இழப்பை நம் வீட்டு இழப்பாகக் கருதி துயர் விசாரிக்க வரட்டும். கையில் காமெரா இல்லாமல்.

    இனிவரும் காலங்களில் இச்செயல் முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஊடகங்களுக்கு முன் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பானர் சங்கம் இவ்வேண்டுகோளை வைக்கிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • "சட்டம் ஒரு இருட்டறை" விஜயகாந்த் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய படம்
    • ரஜினி, கமல் என இரு துருவங்களுக்கு இடையே அவர்களுக்கு இணையாக வெற்றி பெற்றார்

    1952 ஆகஸ்ட் 25 அன்று மதுரையில் அழகர்சாமி, ஆண்டாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார், விஜயகாந்த். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் விஜயராஜ்.

    செல்வாக்கான விவசாய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், திரைத்துறையில் கதாநாயகனாக நடிக்க விரும்பி 70-களின் மத்தியில் சென்னைக்கு வந்தார் விஜயராஜ். கதாநாயகனாகவே நடிக்க விரும்பியதால், திரைப்படங்களில் பல சிறு சிறு வேடங்களில் நடிக்க வந்த வாய்ப்புகள் அனைத்தையும் துணிச்சலாக உதறி தள்ளினார். இருந்தாலும், ஆரம்பத்தில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு உடனடியாக கிடைக்கவில்லை.


    பல போராட்டங்களுக்கு பிறகு அப்போதைய முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எம்.ஏ. காஜா இயக்கத்தில் "இனிக்கும் இளமை" திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார். திரைப்படத்திற்காக "விஜயகாந்த்" என மாற்றப்பட்ட அவர் பெயர், காலமெல்லாம் அவருக்கு நிலைத்தது.

    பிறகு விஜயகாந்த் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன.

    1980ல் கே. விஜயன் இயக்கத்தில் அவர் மீனவராக மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய "தூரத்து இடி முழக்கம்" திரைப்படம் தேசிய விருது வென்றது. இப்படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டதை அடுத்து, பிற இயக்குனர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ள தொடங்கினர்.

    1981-ல் எஸ்.ஏ. சந்திரசேகர் (நடிகர் விஜய் அவர்களின் தந்தை) இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமானார். மாபெரும் வெற்றியை பெற்ற இத்திரைப்படம், அதன் இயக்குனருக்கும் ஒரு முன்னேற்ற பாதையை வகுத்து தந்தது. தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ரஜினிகாந்த், இந்தி திரையுலகில் நடிக்க விரும்பிய போது, "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படத்தைத்தான் ரீமேக் செய்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    இருவருக்கும் இடையேயான நட்பினால் தொடர்ந்து எஸ்.ஏ.சி., விஜயகாந்தை கதாநாயகனாக வைத்து பல படங்களை எடுத்தார். அவற்றில் பல பாக்ஸ் ஆபீசில் பெரும் வசூலை அள்ளி குவித்தன.

    எஸ்.ஏ.சி. விஜயகாந்தை அன்புடன் 'கேப்டன்' என அடைமொழி இட்டு அழைத்தார். அப்பெயரிலேயே விஜயகாந்தை, அவரது ரசிகர்கள் அழைக்க தொடங்கினர்.

    மேலும், தனது மகனை திரையுலகில் நிலைநிறுத்த எஸ்.ஏ.சி. மேற்கொண்ட முயற்சிகளுக்கு உதவும் வகையில், "செந்தூர பாண்டி" எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு சகோதரனாக ஒரு முக்கிய வேடத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்ததை பல பேட்டிகளில் எஸ்.ஏ.சி., கூறியிருக்கிறார்.

    "சிவப்பு மல்லி", "ஜாதிக்கொரு நீதி", "சிவந்த கண்கள்" உள்ளிட்ட பல படங்களில் புரட்சிகரமான தோற்றங்களில் நடித்து தனக்கென ஒரு பாணியை அமைத்து கொண்டார் விஜயகாந்த். மேலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வசனத்தில் சில படங்களில் கதாநாயகனாக நடித்து உணர்ச்சி பொங்க வசனம் பேசி நடித்து பாராட்டை அள்ளி குவித்தார்.


    அதனை தொடர்ந்து விஜயகாந்த், மனநல மருத்துவராக "நூறாவது நாள்", கிராமத்து பாடகராக "வைதேகி காத்திருந்தாள்", பாட்டு வாத்தியாராக "அம்மன் கோவில் கிழக்காலே", மூர்க்கமான ஜமீந்தாராக "நானே ராஜா நானே மந்திரி" உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு வித்தியாசமான வேடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

    ஆக்ஷன் ஹீரோவாகவும், திரில்லர் படங்களின் கதாநாயகனாகவும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட விஜயகாந்தின் திரைப்படம் என்றாலே சண்டை காட்சிகளுக்கும், விறுவிறுப்பான திரைக்கதைக்கும் பஞ்சம் இருக்காது என நம்பி ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்த காலம் உண்டு. முகம் சுளிக்க வைக்கும் ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களையோ பெரும்பாலும் தவிர்த்து வந்ததால், ரசிகைகள் கூட்டமும் விஜயகாந்திற்கு குறைவின்றி இருந்தது.

    1986-ல் வெளிவந்த திரைப்பட கல்லூரி மாணவர்களின் பிரமாண்ட வெற்றி படைப்பான "ஊமை விழிகள்" திரைப்படத்தில் டி.எஸ்.பி. தீனதயாள் எனும் வயது முதிர்ந்தவராக, நரை எய்திய தலையுடன் இடைவேளை நெருங்கும் தறுவாயில் திரையில் தோன்றும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக, மிக சிறப்பாக நடித்தார்.

    அதனை தொடர்ந்து விஜயகாந்தின் திரைப்பட வாழ்வு ஏறுமுகத்தில் சென்றது.


    தொடர்ந்து திரைப்பட கல்லூரி மாணவர்களின் முதல் படங்களுக்கு கதாநாயகனாக நடித்து அவர்களை ஊக்குவித்தார். அனுபவம் மிக்க இயக்குனர்களின் படங்களுக்கே முன்னணி கதாநாயகர்கள் நடிக்க ஒப்பு கொள்ளும் காலகட்டத்தில், பல இயக்குனர்களின் முதல் படத்தில் முழு ஒத்துழைப்பு தந்து அப்படங்கள் வெற்றி பெற காரணமாக இருந்தவர். இதன் மூலம் அந்த இயக்குனர்களுக்கும் திரைப்படத்துறையில் ஒரு வலுவான அடித்தளம் உருவானது.

    நடிகனாக மட்டும் இல்லாமல் தன் நண்பரான இப்ராகிம் ராவுத்தருடன் இணைந்து "புலன் விசாரணை", "கேப்டன் பிரபாகரன்", "உழவன் மகன்" உட்பட பல திரைப்படங்களை பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து அத்திரைப்படங்களை வெற்றிப்படங்களாகவும் உருவாக்கியவர் விஜயகாந்த்.

    தனக்கென சில கோட்பாடுகளை வைத்து கொண்டு அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர் விஜயகாந்த். இறுதியாக "ஓம் சக்தி" (1982) எனும் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அவர், அதன் பின் திரைப்படத்துறையில் இறுதி வரை வில்லனாகவோ, குணசித்திர நடிகராகவோ நடிக்காமல் கதாநாயகனாகவே நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

    விளம்பர படங்களில் நடிப்பதில்லை என்பதையும் ஒரு கொள்கையாகவே கொண்டிருந்தார்.


    அதே போல், தனது படங்களை அவரை வைத்தே வேற்று மொழிகளில் எடுக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்த போதும், தமிழ் மொழி தவிர பிற மொழிகளில் நடிக்காமல் இருந்தார்.

    தனது படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட முறையில் விஜயகாந்த் அதிக முயற்சிகள் எடுத்து கொண்டதால், ரஜினி, கமல் படங்களை விட இவர் நடித்த படங்களில் சண்டை காட்சிகள் தத்ரூபமாக இருந்தன. பல ஸ்டண்ட் காட்சிகளில் 'டூப்' போடாமல் இவரே நடித்ததுண்டு.

    ஆர்.வி. உதயகுமாரின் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த "சின்ன கவுண்டர்" திரைப்படம் இன்றளவும் பேசப்படும் அவரது பல திரைப்படங்களில் ஒன்று.

    "மீனாட்சி திருவிளையாடல்" எனும் பக்தி படத்திலும் சிறப்பாக நடித்த விஜயகாந்தால் மட்டுமே "ரமணா" எனும் திரைப்படத்தில் அரசாங்கத்தால் தூக்கிலடப்படும் குற்றவாளியாகவும் உயிரோட்டத்துடன் வித்தியாசமாக ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்கின்றனர் விமர்சகர்கள்.

    2010-ல் வெளியான விருத்தகிரி எனும் திரைப்படத்தில் வழக்கம் போல ஆக்ஷன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்த விஜயகாந்த்திற்கு, அதன் பிறகு உடல்நிலையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொள்ள வேண்டி வந்தது.


    கிட்டத்தட்ட 154 திரைப்படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், ஒரு நடிகர் என்பதை தாண்டி அவரது தன்னார்வ பொதுநல தொண்டுகளின் காரணமாக லட்சக்கணக்கானவர்களால் விரும்பப்படும் மனிதராக வலம் வந்தவர்.

    சத்யராஜ், சரத்குமார், அருண்பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பதை மிகவும் ஊக்குவித்த விஜயகாந்த், தன்னலமில்லாமல் தனக்கு வந்த பல பட வாய்ப்புகளை அவர்களுக்கு கொடுத்து உதவினார்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரு துருவங்கள் மட்டுமே கோலோச்சிய தமிழ் திரையுலகில் அவர்களுக்கு இடையே போட்டி போட்டு தனக்கென ஒரு பாணியை அமைத்து தனியிடத்தை பிடித்தவர் விஜயகாந்த்.

    தோற்றத்தில் கருப்பு நிறமுடையவர்களும் தமிழ் திரையுலகில் ஜெயிக்க முடியும் என்பதை நடிகர் ரஜினிகாந்த் நிரூபித்தார். அவரை தொடர்ந்து திரையுலகில் கால் பதித்த விஜயகாந்த், ரஜினி, கமல் இருவருக்கும் இணையாக ஒருவர் வெற்றிகரமான கதாநாயகனாகவே பல ஆண்டுகள் உலா வரவும் முடியும் என்பதையும் தன் வாழ்நாளில் சாதித்து காட்டினார்.

    • ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார்.
    • 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது அரண்மனை 4.

    தமிழ் திரையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற மூன்று படங்கள் இன்று ஓடிடியில் வெளியானது.

    அந்த வகையில், மெளன குரு, மகாமுனி போன்ற படங்களை இயக்கிய சாந்தகுமார், இயக்கத்தில் வெளியான 'ரசவாதி தி அல்கெமிஸ்ட்' படம் ஒடிடியில் வெளியானது.

    படத்தின் கதாநாயகனாக அர்ஜூன்தாஸ், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். கடந்த மே மாதம் 10 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படம் ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் கடந்த மே மாதம் 24ம் தேதி வெளியான படம் பிடி சார். வேல்ஸ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை காத்திக் இயக்கினார். இந்த படம் திரையரங்கு வெளியீட்டில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியானது.

    மேலும், சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 கடந்த மே மாதம் 3ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வெற்றியை தொடர்ந்து, அரண்மனை 4 இன்று டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    • இயக்குநர் அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக், ஜனனி நடிப்பில் உருவாகியுள்ளது அறியான்.
    • ஆவலைத்தூண்டும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி திரை பிரபலங்கள் வெளியிட்டனர்.

    எம்டி பிக்சர்ஸ் வழங்கும் , துரை மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக், ஜனனி நடிப்பில், மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள "அறிவான்" திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    ஆவலைத்தூண்டும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி திரை பிரபலங்களான இயக்குநர்கள் பிரபு சாலமன், சீனு ராமசாமி, அல்போன்ஸ் புத்திரன், நடிகர்கள் ஆரி அர்ஜுனன், வெற்றி மற்றும் விக்ராந்த் ஆகியோர் இணையம் வழியே இன்று வெளியிட்டனர்.

    ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றலாகிறார். அங்கு அடுத்தடுத்து தொடர்ந்து 4 கொலைகள் நிகழ்கிறது. அந்த கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? அந்த கொலைகளுக்கு காரணம் என்ன என்பதை அவர் கண்டுபிடிக்கிறாரா என்பது தான் இந்த "அறிவான்" படத்தின் கதை.

    ஒவ்வொரு நொடியும் மனதை அதிர வைக்கும் திருப்பங்களுடன், பரபரவென பறக்கும் திரைக்கதையில், ஒரு புதுமையான இன்வஸ்டிகேசன் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அருண் பிரசாத்.

    இப்படத்தில் இளம் நடிகர் ஆனந்த் நாக் போலீஸ் அதிகாரியாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மிக முக்கிய வேடங்களில் பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கௌரி சங்கர், சரத் ராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

    இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் நெய்வேலியில் 65 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த திரில்லர் திரைப்படத்தை, MD Pictures சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிப்பாளர் துரை மகாதேவன் தயாரித்துள்ளார்.

    ஹிப் ஹாப் தமிழாவிடம் பணியாற்றிய கார்த்திக் ராம் எரா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் ஒளிப்பதிவு செய்ய, சத்யா எடிட்டிங் செய்கிறார். சூர்யா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஏ. ராஜா மக்கள் தொடர்பு பணிகளை கவனிக்கிறார்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாதம் படத்தின் இசை வெளியீட்டை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. விரைவில் படத்தை திரைக்குக் கொண்டுவரவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

    ×