என் மலர்
நீங்கள் தேடியது "tamil movie"
தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள புதுப்படங்கள் மற்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற படங்களின் ரீ-ரிலீஸ் என நாளை திரைக்கு வரவுள்ள படங்கள் குறித்து பார்ப்போம்...
அதன்படி, தமிழில் நாளை (நவ. 14) ஏழு திரைப்படங்களும், ஒரு படம் ரீ-ரிலீசும் செய்யப்படுகிறது.
காந்தா:
துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கும்கி 2:
கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கும்கி 2' படத்தை பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. 'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதராஸ் மாஃபியா கம்பெனி:
அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் 'மதராஸ் மாஃபியா கம்பெனி'. வடசென்னை பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஆனந்தராஜ் தாதா வேடத்தில் நடித்துள்ளார்.
ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் கதைக்களத்துடன் படம் உருவாகி உள்ளது.
படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிணறு:
இயக்குநர் ஹரிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிணறு'. இப்படத்தில், விவேக் பிரசன்னா, கனிஷ்குமார் ,மனோஜ் கண்ணன், அஸ்வின், ஸ்ரீ ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவனேஷ் செல்வனேசன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து சிறார்கள் கிணற்றில் நீராட வேண்டும் என்ற உளவியல் ரீதியிலான ஆசையை மையப்படுத்தி திரைப்படம் உருவாகியுள்ளது.
தாவூத்:
இயக்குவர் பிரசாந்த் ராமன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தாவூத். ஒரு தமிழ் நகைச்சுவை-குற்றம் சார்ந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் லிங்கா, சாரா ஆச்சார், ராதா ரவி, ஷா ரா, சாய் தீனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாய்: ஸ்லீப்பர் செல்:
கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ள படம் 'பாய் ஸ்லீப்பர் செல்ஸ்'. கே ஆர் எஸ் பிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார். கதாநாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷாவும் வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகிறது.
சூதாட்டம்:
இயக்குனர் சரவணன் ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சூதாட்டம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சரண்யா மற்றும் சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆட்டோகிராஃப்:
கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப். இப்படம் 21 ஆண்டுகள் கழித்து நாளை ரீ-ரிலீஸ் ஆகிறது.
கும்பகோணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளைஞர் கவுஷிக். பள்ளி முடித்த நிலையில், துபாயில் வேலைக்கு செல்ல முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் கதாநாயகி பிரதிபாவை சந்திக்கிறார். அவள் மீது காதல் வயப்படுகிறார். இதனால், துபாய் திட்டத்தை கைவிடும் கவுஷிக், பிரதிபா படிக்கும் கல்லூரியிலேயே சேர்கிறார்.
இவ்வாறு சென்றுக் கொண்டிருக்கையில், கவுஷிக் மற்றும் பிரதிபா தனது நண்பர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். அப்போது, நண்பர்களுக்கு சாட்சி கையெழுத்துபோட தங்களது ஆவணங்களையும் சமர்ப்பிக்கின்றனர். நண்பர்களின் காதலுக்கு உதவி சென்ற இடத்தில் இவர்களுக்கு விபரீதம் ஏற்படுகிறது.
இதனால், வரும் சிக்கல்களை கதாநாயகன் எப்படி சமாளித்து மீண்டு வருகிறார்? காதலே வேண்டாம் என்று இருக்கும் கதாநாயகியை கரம் பிடிக்கிறாரா ? என்பது மீதிக்கதை..
நடிகர்கள்
ஒரு கிராமத்து இளைஞராக கவுஷிக் சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் படம் என்றாலும் இயல்பாக நடித்திருக்கிறார். பிரதிபா கதாபாத்திரத்தை ஆழமாகப் புரிந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
இயக்கம்
கதையின் ஆரம்பத்தில் இது ஒரு சராசரி காதல் படமாக இருக்கும் என்று நினைத்த நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன். இரண்டாம் பாதியில் படம் சுவாரஸ்யமாகவும், கிளைமேக்ஸில் செண்டிமென்டாகவும் படத்தை நிறைவு செய்துள்ளார். ஒரு சில குறைகள் இருந்தாலும் படத்தின் வேகம் சீராக செல்கிறது.
இசை
பாடல்கள் சுமார் என்றாலும், படத்திற்கு சிறந்த பின்னணி இசையால் பலம் சேர்த்துள்ளார்.
ஒளிப்பதிவு
கிராமப்புற காட்சிகளை பசுமையா பதிவு செய்துள்ளார் பிரகத் முனிசாமி.
இலங்கையிலிருந்து வாழ்வாதாரத்தை தேடி நமது மண்ணை நம்பி வரும் ஒரு குடும்பத்திற்கு இங்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு காண்பது மாதிரி சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் படம் ஐயம்.
செந்தில் ஆண்டவர் மூவிஸ் சார்பில் ஈஸ்வரன் விஜயன் தயாரிப்பில் ந.வசந்த் இயக்கி வருகிறார். கதாநாயகனாக பாலாஜி, கதாநாயகியாக ரெய்னா கரட் ஆகியோர் அறிமுகம் ஆகிறார்கள்.
போஸ் வெங்கட், கானா உலகநாதன், ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தீபா சங்கர் ,கே.பி.ஒய் வினோத், மிப்பு,ரஞ்சன், விஜய் கணேஷ்,கிரேன் மனோகர்,யாசர், சுப்ரமணி, டி.என்.ஏ விஜயலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு கமலக்கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பெங்களூர், ஒசூர் தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை ஆகிய இடங்களில் 40 நாட்களாக நடைபெற்று இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கி வருகிறது.
நாயகன் நட்டி நட்ராஜ் மோசடி செய்து மக்களிடம் பணம் பறித்து வாழ்ந்து வருகிறார். இவர் பல லட்சம் கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவிடுகிறார். வைரத்தை கைப்பற்றுவதற்காக சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழைகிறார் நட்டி நட்ராஜ். மேலும், அந்த கோவிலை தனது ஆசிரமமாக மாற்றிக் கொண்டு சாமியாராக வாழ்ந்துக் கொண்டே வைரத்தை தேடுகிறார்.
இறுதியில் நட்டி நட்ராஜ்க்கு வைரம் கிடைத்ததா? இல்லையா ? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், கதாபாத்திரத்தை உணர்ந்து அசால்டாக நடித்திருக்கிறார். ஏற்கனவே இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால், இதில் சாதாரணமாக நடித்து இருக்கிறார். படம் முழுவதும் அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் முக்கேஷ் ரவி, ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக்காட்சியில் தனது சிக்ஸ் பேக் உடம்பை காட்டுவதை தவிர வேறு எதையும் செய்யவில்லை.
நாயகிகளாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி மற்றும் ஷாலினி இருவரும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். சிங்கம் புலி, கோதண்டம், முருகானந்தம், சாம்ஸ் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி. போலி சாமியாரின் ஆசிரமத்தையும், அங்கு நடக்கும் பலான சம்பவங்களை வைத்துக் கொண்டு மக்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. காமெடி நடிகர்களை சரியாக பயன்படுத்த தவறி இருக்கிறார்.
இசை
சதீஷ் செல்வம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் தனது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.
நாளை திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் புதிய படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க
பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
டியூட்
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ட்யூட். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
டீசல்
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பி கட்ன கதை
நடிகர் நட்டி, ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் 'கம்பி கட்ன கதை' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே கார்த்தி, முத்துராமன், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் சதுரங்கவேட்டை பட பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் வருகிற 17ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை எடுத்துச் சொல்வது 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.'
சிங்கப்பூரில் வசிக்கிற முரளி சொந்த ஊருக்கு வருகிறான். தனது காதலியை தேடிப் போகிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறான். நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள்.
அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறான். அது மனநிலை அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பது கதை.
ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காயத்ரி ரெமா, அனுகிருஷ்ணா கதாநாயகிகளாக நடிக்க தம்பி சிவன், வர்ஷிதா,விஜய் டிவி சரத்,மனோகர் பெருமாத்தா ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். டைசன் ராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.ராஜன், ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஜாக்குவார் தங்கம், என்.விஜயமுரளி, விவேகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளி வருகிறது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் ரம்யா பாண்டியன். ஒருநாள் இவருக்கு மர்ம நபரிடம் இருந்து இமெயில் ஒன்று வருகிறது. அதில் இன்னும் சில நாட்களில் வார் ஒன்று நடக்க போகிறது என்று இருக்கிறது. இதை பார்த்த ரம்யா பாண்டியன், உடனே அதை செய்தியாக்கி வெளியிடுகிறார்.
இதற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. யார் என்று தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த இமெயிலை வைத்து செய்தியை வெளியிட்டது தவறு என்று பிரச்சனை வருகிறது. மீண்டும் மர்ம நபரிடம் இருந்து இமெயில் வருகிறது. இதை போலீசுக்கு தெரியப்படுத்துகிறார் ரம்யா பாண்டியன். இதை விசாரிக்க அதிகாரியான ஸ்சுவேதா களம் இறங்குகிறார். இவருடைய விசாரணையில் மர்ம நபர் பெயர் காரி என்று தெரியவருகிறது.
இறுதியில் காரி என்பவர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? காரியை ஸ்சுவேதா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறார் ஸ்சுவேதா நாயர். இவரது உடை, உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. நிதானமாக இவர் யோசிக்கும் போதும், கேள்விகள் கேட்கும் போதும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் பத்து நிமிடம் மட்டுமே வந்து சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன்.
சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் பிரஜன். தாய், தந்தை இழந்த காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருள் அஜித். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். ஏ ஐ டெக்னாலஜியை அனைவருக்கும் புரியும் படி சொல்லியிருக்கிறார். நிறைய காட்சிகள் வசனத்திலேயே கடந்து போயிருக்கிறார். இதை தவிர்த்து இருக்கலாம். நிறைய கதாபாத்திரங்களை வீணடித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
அமீன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிகள் தெளிவாக அமையவில்லை.
இசை
கார்த்திக் ஹர்ஷா இசையில் பாடல்கள் கவரவில்லை. ஹரியின் பின்னணி இசை பெரியதாக எடுபடவில்லை.
- மட்டி படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.
- பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்குகிறது.
மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான Mud ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக மட்டி என்ற திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தவர் இயக்குனர் டாக்டர் பிரகபல்.
இவர் அடுத்ததாக, அதைவிட சுவாரஸ்யமான ஒரு கதையாக கிடா சண்டை பந்தையத்தை படமாக உருவாக்கவுள்ளார்.
இந்த படத்தில், மட்டி படத்தில் நடித்த யுவன் கிருஷ்ணாவும், ரிதன் கிருஷ்ணாஸ்சும் இந்த படத்திலும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மது சூதன் ராவ் நடித்துள்ளார். மற்றும் சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் உதயகுமார், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்குகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
- சரீரம் படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "சரீரம்".
இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.
இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
- அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார்
- படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது.
அறிமுக இயக்குநர் பாஸ்கல், வெப்பம் குளிர் மழை (VKM)படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான ஷங்கர் என்பவர் இசையமைக்கிறார். ஹேஷ்டேக் FDFS என்ற நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. படத்தின் கதை தற்போது நிகழும் சமூக பிரச்சனையை பேசக்கூடியதாக இருக்கும் என படகுழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார். வெப்பம் குளிர் மழை படத்தின் போஸ்டர் மிகவும் நேர்த்தியாகவும், வித்தியாசமாகவும் இருக்கிறது. கதாநாயகன் பால் கேனை தூக்கிக் கொண்டு இருப்பது போலவும், மாட்டின் தலைக்கு பதில் கதாநாயகியின் தலை வைக்கப்பட்டிருக்கிறது. மாட்டின் வயிற்றில் மனித சிசு வளர்வது போன்ற காட்சிகள் போஸ்டரில் காணப்படுகிறது. இத்திரைப்படம் எதை பற்றி பேசப்போகிறது என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
- ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.
- ஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி.
படங்களை திரையரங்குகளில் பார்ப்பதே ஒரு சுகம். மனிதன் எத்தகைய சூழ்நிலையில் இருந்தாலும் அவனை மூன்று மணி நேரம் கவலைகளை மறக்கச் செய்து , அவன் மீண்டும் இயங்குவதற்கான உத்வேகத்தை சினிமா தருகிறது எனலாம். ஒருவன் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும், நண்பர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்றாலும், தன் காதலியுடன் நேரம் செலவிட வேண்டும் என்றாலும் அவன் திரையரங்கத்திற்கே செல்கிறான். காதல், குடும்பம், நட்பு என மூன்றிலும் பொதுவாக இருக்கும் ஒன்று சினிமா. அதிலும் திரையரங்கம்.
தற்போது வெளியாகும் படங்கள் எல்லாம் ஒரு மாத இடைவெளிக்கு பின் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதனால் மக்கள் சிலரிடம் படங்களை திரையரங்குகளில் சென்று பார்க்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படத்திற்கு மட்டும் திரையரங்களில் பார்க்கும் பழக்கம் சமீபத்தில் உருவாகியுள்ளது. இதனால் சாதாரண படங்களும், குறைந்த பட்ஜட் படங்களும் மக்கள் பார்வைக்கு வருவதற்கு முன்னரே காணாமல் போய்விடுகிறது.
என்னதான் படங்கள் ஓடிடியில் வெளியானாலும் அதனை திரையரங்கில் மக்களுடன் மக்களாக அமர்ந்து பார்க்கும் அனுபவத்தை தருவதில்லை. சமீபத்தில் பல தமிழ்ப் படங்கள் ரீ - ரிலீஸ் செய்யப்படுகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான 3 , மயக்கம் என்ன, யாரடி நீ மோகினி. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, விருமாண்டி. விக்ரம் நடித்த அந்நியன், சாமி. ஜீவா நடிப்பில் வெளிவந்த சிவா மனசுல சக்தி. சூர்யா நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திரைபடம் எல்லாம் 10 - 15 வருடங்களுக்கு முன்னால் வந்த திரைபடமாக் இருந்தாலும், ஓடிடி தளங்களில் இருந்தாலும் கூட மக்கள் திரையரங்குகளில் வந்து பார்க்க விரும்புகின்றனர்.
படங்கள் வெளியான போது திரையரங்கிற்கு சென்று பார்க்க முடியாமல் போனதால், அப்பொழுது சிறு வயதில் இருந்த காரணத்தினாலும், இம்மாதிரி ரீ-ரிலீஸ் படங்கள் ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக அமைகிறது.
அதனை ஊக்குவிக்கும் வகையில் ஐஃப்லிக்ஸ் (iFLICKS) என்ற புதிய தளத்தை உருவாக்கியுள்ளது தினத்தந்தி. இத்தளத்தில் உங்கள் ஊரில் உள்ள திரையரங்குகளைப் பற்றியும், அத்திரையரங்குகளில் என்ன படங்கள் வெளியாகியுள்ளது என்பது பற்றிய தகவல்கள் இருக்கும்.
மேலும், சமீபத்தில் வெளியான படங்களைப் பற்றியும் அதன் நடிகர்கள், படக்குழுவினர் பற்றிய தகவல்களும், படத்தின் விமர்சனங்களையும் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
இப்பொழுது நாம் பட டிக்கெட்டுகளை பெறுவதற்கு கார்ப்பரேட் தளங்களை உபயோகித்து வருகிறோம். அதில் பெரும்பான்மையாக மாலில் உள்ள தியேட்டர்களும், பிரபலமான தியேட்டர்களும் மட்டும் தான் காண்பிக்கப்படுகிறது.
ஆனால், ஐபில்க்ஸ் தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் என்ன படம், எத்தனை மணிக்கு திரையிடப்படும் என்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும். பெரிய திரையரங்குகள் முதல், சாதாரண திரையரங்குகள் வரை இதில் பட்டியலிடப்படும். விரைவில் சினிமா டிக்கெட்டுகளை புக்-செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- 'கேங்ஸ் ஆப் வாசிப்பூர்' படம் எடுக்க காரணமே சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் தான்
- அனுராக் காஷ்யப்பிற்கு எப்பொழுதும் தமிழ் சினிமா மீதும் , மலையாள சினிமா மீதும் ஒரு ஆர்வம் உண்டு.
அனுராக் காஷ்யப் இந்தி சினிமாவின் முதன்மையான இயக்குனர். ராம் கோபால் வர்மாவுடன் இணைந்து தொலைக்காட்சி தொடரான 'சத்யா'-வில் எழுத்தாளராக தன் பயணத்தை தொடங்கினார். 'பான்ச்' என்ற படத்தை அனுராக் காஷ்யப் முதன் முதலில் இயக்கினார். ஆனால் அப்படம் சென்சார் பிரச்சனைகளால் திரைக்கு வரவில்லை. 2004-ஆம் ஆண்டு 'பிளாக் ஃப்ரைடே'என்ற படத்தை இயக்கினார். 2007 ஆம் ஆண்டு 'நோ ஸ்மோக்கிங்' படத்தையும், 2009-ல் 'தேவ். டி'என்ற படத்தையும் இயக்கினார். 2012 ஆம் ஆண்டு 'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்தை இயக்கினார். இத்திரைப்படம் அனுராக் காஷ்யப்புக்கு மிகப் பெரிய பெயரையும் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. இத்திரைப்படம் இரண்டு பாகமாக வெளியானது. இரண்டு பாகங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நெட்ஃபிக்ஸ் முதன் முதலில் தயாரித்த இந்தியன் வெப்சீரிஸான 'சாக்ரட் கேம்ஸ்' என்ற சீரிசை அனுராக் காஷ்யப் இணைந்து இயக்கினார்.
அனுராக் காஷ்யப்பிற்கு எப்பொழுதும் தமிழ் சினிமா மீதும் , மலையாள சினிமா மீதும் ஒரு ஆர்வம் உண்டு. மலையாள சினிமா அளவிற்கு இந்தி சினிமா என்றுமே படங்களை எடுக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டை எப்பொழுதும் வைப்பார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு நெடுநாளாகவே இருக்கிறது. 'கேங்ஸ் ஆப் வாசிப்பூர்' படம் எடுக்க காரணமே சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் தான் என்று அவர் பல நேர்காணலில் கூறியுள்ளார். 'கேங்ஸ் ஆப் வாசிப்பூர் படத்தின்' தொடக்கத்திலே நன்றி மதுரை சாம்ராட் சசிகுமார் என்று தன் அன்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்நிலையில் அனுராக் காஷ்யப் தமிழ் சினிமாவில் களம் இறங்கவுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான ஜி. வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து இயக்கவுள்ளார். இத்திரைப்படம் அனைத்து மொழிகளிலும் (PAN INDIA MOVIE)வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.






