என் மலர்
நீங்கள் தேடியது "Love Story"
- படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
- சரீரம் படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "சரீரம்".
இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.
இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
- பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி.
- தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி. படத்தின் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்பட பல படங்களில் நடித்தார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் பல படங்களில் நடித்து வரும் லட்சுமிமேனன் தனது முதல் காதல் பற்றி கூறியதாவது:-
யாரும் என்னை காதலிப்பதாக சொல்லவில்லை. ஆனால் நான் ஒருவரிடம் என் காதலை சொன்னேன். பள்ளியில் படிக்கும் போது எனக்கு பிடித்த ஒருவரிடம் காதலை சொன்னேன். சில நாட்கள் கழித்து என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.
குடும்பத்தினருக்கு தெரியாமல் இருப்பதற்காக போர்வைக்குள் இருந்து கொண்டு காதலரிடம் பேசுவேன். சினிமா வாய்ப்புகள் வந்ததால் பள்ளி படிப்பையும் தொடர முடியவில்லை. காதலையும் தொடர முடியவில்லை. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். தற்பொழுது ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சப்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






