என் மலர்
நீங்கள் தேடியது "தமிழ் படம்"
மனிதர்களை சந்தர்ப்பச் சூழ்நிலை என்னவெல்லாம் செய்யும் என்பதை எடுத்துச் சொல்வது 'ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி.'
சிங்கப்பூரில் வசிக்கிற முரளி சொந்த ஊருக்கு வருகிறான். தனது காதலியை தேடிப் போகிறான். அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்ட விவரம் தெரிந்து அதிர்ச்சியடைகிறான். அந்த அதிர்ச்சியிலிருந்தும் அவனை மீட்க அவனது நண்பன் தனது தங்கையை திருமணம் செய்து வைக்கிறான். நாட்கள் நல்லபடியாக நகர முரளியின் மனைவி தாய்மையடைகிறாள்.
அந்த சந்தர்ப்பத்தில் தனது முன்னாள் காதலியைப் பற்றி சில விஷயங்கள் முரளியின் கவனத்துக்கு வருகிறது. அவளுக்கு திருமணமான விவரம் தெரிந்தபோது அதிர்ச்சியடைந்ததை விட பல மடங்கு அதிர்ச்சியடைகிறான். அது மனநிலை அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போடுகிறது என்பது கதை.
ஆர்.ஆர் மூவிஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் ஆதிக் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காயத்ரி ரெமா, அனுகிருஷ்ணா கதாநாயகிகளாக நடிக்க தம்பி சிவன், வர்ஷிதா,விஜய் டிவி சரத்,மனோகர் பெருமாத்தா ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். டைசன் ராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கே.ராஜன், ஆர்.வி. உதயகுமார், பேரரசு ஜாக்குவார் தங்கம், என்.விஜயமுரளி, விவேகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளி வருகிறது.
ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். விவசாயியான விதார்த் தனது மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவுடன் உழைக்கிறார். இதற்காக அதிகளவில் கடனை பெற்று மகனை பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்க்கிறார்.
இந்த சூழலில், தனது விவசாய நிலம் வங்கியில் ஏலம் விட்டதை தெரிந்து விதார்த் அதிர்ச்சி அடைகிறார். வாங்காத கடனுக்கு நிலம் எப்படி ஏலத்தில் போகும் என்றும் குழம்புகிறார்.
இதுதொடர்பாக விதார்த் வங்கியில் கேட்கும்போது, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், கடன் வாங்கியிருந்தால் தந்தை இதை பற்றி சொல்லியிருப்பாரே என்றும் யோசிக்கிறார். இதில், ஏதோ மோசடி நடந்திருப்பதை விதார்த் உணர்கிறார். இந்த மோசடி பின்னணியில் இருக்கும் விஷயங்களை ஆராய்கிறார்.
இறுதியில் விதார்த் தனது நிலத்தை மீட்டாரா? மோசடியில் ஈடுபட்டது யார்? என்பதே மீதி கதை...
நடிகர்கள்
விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதார்த், நிலத்தை மீட்க போராடும் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். தனது நடிப்பின் அனுபவம் வெளிப்படுகிறது. ரக்ஷனா கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை காட்டியிருக்கிறார்.
சிறுவனாக நடித்துள்ள கார்த்திக் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. அருள்தாஸ், சரவண சுப்பையா, மாறன், நாகராஜ் ஆகியோரின் நடிப்பு நினைவில் நிற்கிறது.
இயக்கம்
பட நேரம் குறைவு என்றாலும் இழுவையாக தெரிகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளை மோசடியாக சிலர் எப்படி சுரண்டுகிறார்கள்? என்பதை சொல்லி, அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்து திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வி.கஜேந்திரன்.
இசை
என்.ஆர்.ரகுநந்தன் இசை கதைக்கு கச்சிதம்.
ஒளிப்பதிவு
அருள் கே.சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவு கிராமத்து பசுமையைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக வேலை பார்த்து வருகிறார் ரம்யா பாண்டியன். ஒருநாள் இவருக்கு மர்ம நபரிடம் இருந்து இமெயில் ஒன்று வருகிறது. அதில் இன்னும் சில நாட்களில் வார் ஒன்று நடக்க போகிறது என்று இருக்கிறது. இதை பார்த்த ரம்யா பாண்டியன், உடனே அதை செய்தியாக்கி வெளியிடுகிறார்.
இதற்கு பல எதிர்ப்புகள் வருகிறது. யார் என்று தெரியாத ஒருவரிடம் இருந்து வந்த இமெயிலை வைத்து செய்தியை வெளியிட்டது தவறு என்று பிரச்சனை வருகிறது. மீண்டும் மர்ம நபரிடம் இருந்து இமெயில் வருகிறது. இதை போலீசுக்கு தெரியப்படுத்துகிறார் ரம்யா பாண்டியன். இதை விசாரிக்க அதிகாரியான ஸ்சுவேதா களம் இறங்குகிறார். இவருடைய விசாரணையில் மர்ம நபர் பெயர் காரி என்று தெரியவருகிறது.
இறுதியில் காரி என்பவர் யார்? எதற்காக மிரட்டுகிறார்? காரியை ஸ்சுவேதா கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டே இருக்கிறார் ஸ்சுவேதா நாயர். இவரது உடை, உடல் மொழி ஆகியவை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. நிதானமாக இவர் யோசிக்கும் போதும், கேள்விகள் கேட்கும் போதும் நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் பத்து நிமிடம் மட்டுமே வந்து சென்றிருக்கிறார் ரம்யா பாண்டியன்.
சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் பதிந்து இருக்கிறார் பிரஜன். தாய், தந்தை இழந்த காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இயக்கம்
திரில்லர் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருள் அஜித். ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். ஏ ஐ டெக்னாலஜியை அனைவருக்கும் புரியும் படி சொல்லியிருக்கிறார். நிறைய காட்சிகள் வசனத்திலேயே கடந்து போயிருக்கிறார். இதை தவிர்த்து இருக்கலாம். நிறைய கதாபாத்திரங்களை வீணடித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
அமீன் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். காட்சிகள் தெளிவாக அமையவில்லை.
இசை
கார்த்திக் ஹர்ஷா இசையில் பாடல்கள் கவரவில்லை. ஹரியின் பின்னணி இசை பெரியதாக எடுபடவில்லை.
- படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
- சரீரம் படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.
G.V.P. PICTURES வழங்கும், இயக்குநர் G.V. பெருமாள் எழுதி, தயாரித்து, இயக்க, புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நடிப்பில், உன்னதமான காதல் திரைப்படமாக, கடவுள் தந்த சரீரத்தின் பெருமையை பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "சரீரம்".
இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை எழுதி தயாரித்து உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் G.V. பெருமாள்.
ஒரு காதல் ஜோடி, அவர்களின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, வாழ வழி தெரியாமல், காதலுக்காக ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்கிறார்கள். அந்த காதல் ஜோடியை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா?. அவர்களின் விதி என்னவானது என்பது தான் இபடத்தின் கதை.
இதுவரை திரையில் காதலுக்காக, பேச்சு முதல் இதயம் வரை பலவற்றை தியாகம் செய்ததாக பல படங்கள் வந்துள்ளது. ஆனால் சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் முதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
புதுமுகங்கள் தர்ஷன், சார்மி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் J.மனோஜ், பாய்ஸ் புகழ் ராஜன், ஷகீலா, மதுமிதா, புதுப்பேட்டை சுரேஷ், கௌரி, லில்லி, மிலா ஆகியோருடன் இயக்குநர் G.V.பெருமாள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் V.T. பாரதிராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.






