என் மலர்
நீங்கள் தேடியது "Kumki"
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது பிரபு சாலமன் - சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது. இதில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தது குறித்து சுகுமார், "'கும்கி' படத்தை விட இன்னும் ஒருபடி மேலாக 'கும்கி 2' படம் குழந்தைகளை ரொம்பவே ஈர்க்கும் படமாக உருவாகியுள்ளது.. இரண்டும் வெவ்வேறு விதமான பின்னணி கொண்ட கதைகள். யானை ஒன்று மட்டுமே இரண்டு படங்களையும் இணைக்கும் ஒற்றுமை பாலம்.. இந்தியாவுக்குள்ளேயே சினிமாக்காரர்கள் யாரும் இதுவரை நுழையாத ஒரு அருமையான ரம்மியமான வனப்பகுதியில் 'கும்கி 2' படப்பிடிப்பை நடத்தி வந்துள்ளோம்." என கூறியுள்ளார்
'கும்கி2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக மதியழகன் அறிமுகம் ஆகிறார். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகம் ஆகிறார். ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.
இந்நிலையில் 'கும்கி 2' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
- பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி.
- தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.
பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான படம் கும்கி. படத்தின் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் உள்பட பல படங்களில் நடித்தார்.
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் பல படங்களில் நடித்து வரும் லட்சுமிமேனன் தனது முதல் காதல் பற்றி கூறியதாவது:-
யாரும் என்னை காதலிப்பதாக சொல்லவில்லை. ஆனால் நான் ஒருவரிடம் என் காதலை சொன்னேன். பள்ளியில் படிக்கும் போது எனக்கு பிடித்த ஒருவரிடம் காதலை சொன்னேன். சில நாட்கள் கழித்து என்னுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து அடிக்கடி நாங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தோம்.
குடும்பத்தினருக்கு தெரியாமல் இருப்பதற்காக போர்வைக்குள் இருந்து கொண்டு காதலரிடம் பேசுவேன். சினிமா வாய்ப்புகள் வந்ததால் பள்ளி படிப்பையும் தொடர முடியவில்லை. காதலையும் தொடர முடியவில்லை. அவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்ததாக கேள்விப்பட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். தற்பொழுது ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் சப்தம் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார், தமன் இசையமைத்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
கோவை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த சின்னதம்பி யானையை வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் கொண்டு சென்று விட்டாலும் அது அங்கு இருக்காமல் ஊருக்குள் வருவது தொடர்கதையாகி உள்ளது.
இதையடுத்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து “சின்னதம்பி பாதுகாப்பு குழு” என்ற பெயரில் தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 31-ந்தேதி காட்டுப்பகுதியில் இருந்து மீண்டும் ஊருக்குள் புகுந்த சின்னதம்பி யானை ஒவ்வொரு பகுதியாக சுற்றி வருகிறது. தற்போது உடுமலை அருகே மயில்வாடி என்ற இடத்தில் சின்னதம்பி யானை தஞ்சம் புகுந்துள்ளது. ஊரை எட்டியுள்ள பகுதிகளில் நடமாடினாலும் யானை இதுவரையில் யாரையும் தாக்கவில்லை.

இந்த நிலையில் விலங்குகள் நல ஆர்வலரான அருண் பிரசன்னா என்பவர் சின்னதம்பி யானைக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளார்.
ஐகோர்ட்டு நீதிபதிகள் மணிகுமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு ஆஜரான அவர், கும்கி யானையாக சின்னதம்பி யானையை மாற்றினால் அது சித்ரவதை செய்யப்படும். இதனால் யானை பலியாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுபற்றி முறைப்படி மனு அளியுங்கள். இன்று பிற்பகலிலேயே விசாரணை நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.
அதன்படி பிற்பகல் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சின்னதம்பி யானையை கும்கி யானையாக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2 கும்கி யானைகள் மூலம் சின்னதம்பி யானையை காட்டுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. #ChinnathambiElephant







