என் மலர்
நீங்கள் தேடியது "#காதல்"
- நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார் சமந்தா
- சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.
இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.
தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
- இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு கொடுத்த பரிசு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
- பூங்கொத்து செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது.
காதல் ஜோடிகள் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசுகளை வழங்குவது வழக்கம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் இளம்பெண் ஒருவர் தனது காதலனுக்கு கொடுத்த பரிசு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் தன் காதலனுக்கு அவருக்கு பிடித்த குட்கா பாக்கெட்டுகளால் ஆன சிறப்பு பூங்கொத்தை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், என்னை சந்திக்க வந்த ஒரு வாடிக்கையாளரான பெண் ஒருவர் அவரது காதலனுக்கு குட்கா மிகவும் பிடிக்கும் என்பதால் அதை பூங்கொத்து போல செய்து தருமாறு கூறினார். எனவே நான் நீல நிற பாக்கெட்டுகளில் குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி பூங்கொத்து உருவாக்கி கொடுத்தேன் என கூறினார்.
அவர் குட்கா பூங்கொத்து செய்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலானது. அதில், ஒரு குச்சியில் 2 குட்கா பாக்கெட்டுகளை ஒட்டி அவற்றை பூக்களை போல அடுக்கி வைத்தி நீல நிற குட்கா பூங்கொத்து தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்கள் காதலும் ஒரு புற்றுநோய் போல தான் என விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.
- தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.
ஆஷ்லே மேடிசன் யூகோவ் உடன் இணைந்து நடத்திய புதிய சர்வதேச ஆய்வில், பத்து பேரில் நான்கு பேர் இந்தியர்கள் ஒரு சக ஊழியருடன் டேட்டிங் செய்திருக்கிறார்கள் அல்லது தற்போது டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, 13,581 வயதானவர்களையும் உள்ளடக்கியது. மேலும் பணியிடத்தில் காதலை ஒப்புக்கொள்ளும் நபர்களை பொறுத்தவரை உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மெக்சிகோ முன்னணியில் உள்ளது. ஆய்வில் 43 சதவீத பேர் சக ஊழியருடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் இந்தியா 40 சதவீத பேர் நெருக்கமாக உள்ளனர். தொழில்முறை எல்லைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், பணியிட உறவுகள் இந்தியாவில் நவீன அலுவலக கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகவே உள்ளன என்பதை கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்களை விட (36%) ஆண்கள் (51%) சக ஊழியரை டேட்டிங் செய்ததற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில்முறை விளைவுகளுக்கு பயந்து அலுவலக உறவுகளைத் தவிர்ப்பதாக 29% பெண்கள் கூறியுள்ளனர். ஆண்கள் 27% தனிப்பட்ட விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது 26% பெண்கள் கவலைப்படுகின்றனர்.
இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர். 34% பேர் அத்தகைய உறவுகள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து கவலை தெரிவித்தனர். இது இளைஞர்களிடையே வளர்ந்து வரும் தொழில்முறை உணர்வு மற்றும் எல்லை விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது.
இந்தியாவின் உயர் தரவரிசை, சமூக மதிப்புகள் மாறி வருவதாலும், பாரம்பரியமற்ற உறவுகளை நோக்கிய வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதாலும் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
திருமணமானவர்களுக்கான டேட்டிங் செயலியான க்ளீடனின் மற்றொரு ஆய்வில், 35% இந்தியர்கள் தற்போது வெளிப்படையான உறவுகளில் இருப்பதாகவும், 41% பேர் தங்கள் துணை பரிந்துரைத்தால் பரிசீலிப்பார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் போக்கு பெருநகரங்களுக்கு அப்பாலும் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் போன்ற நகரங்கள் திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
பணியிட காதல்கள் சாதாரணமாகி வரும் நிலையில், அவை ஆர்வ மோதல்கள் முதல் தொழில்முறை அபாயங்கள் வரை இன்னும் சவால்களைக் கொண்டுள்ளன.
இந்தியாவின் வளர்ந்து வரும் உறவு கலாச்சாரம், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையிலான கோட்டை எவ்வாறு தொடர்ந்து மங்கலாக்குகிறது, வேலையில் காதலை பொதுவானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறது என்பதை இந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
- சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.
- சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான சீக்ரெட் அல்கெமிஸ்ட்டை வெளியிட்டார்.
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.
இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்' வெளியீட்டு விழாவின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில், ராஜ் நிடிமொருவுடன் அவர் மிகவும் நெருக்கமாக, இருக்கும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.
இதன்மூலம் இயக்குநர் ராஜ் நிடிமொரு உடனான காதலை, நடிகை சமந்தா கிட்டத்திட்ட உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
- காதல் ரேகையின் வகைகள்.
- இருதய ரேகையுடன் தொடர்புடைய காதல் ரேகைகள்
கைரேகை மூலம் ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க முயற்சிக்கும்போது காதல் ரேகை மிக முக்கியமான ஒன்றாகும். கையில் இருக்கும் திருமணக் கோடு, நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்பதைக் கணிப்பது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் காதல் அல்லது திருமணம் குறித்த உங்கள் அணுகுமுறையை அடி கோடிட்டு காட்டவும் உதவும். காதல் விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளவும் இது உதவுகிறது.
ஆண்களுக்கு வலது கட்டை விரலுக்கு கீழே சின்னதாக செங்குத்தான ஒரு கோடு செல்லும் அதான் காதல் ரேகை.
ஒருவருடைய கையில் விதிரேகை நன்றாக அமைந்து, அந்த விதி ரேகையை சந்திர மேட்டிலிருந்து வரும் ரேகை ஒன்று தொட்டு நின்று, திருமண ரேகை நன்கு அமையுமானால் அந்த நபர் கண்டிப்பாக காதல் திருமணம் செய்வார்.
காதல் ரேகை அமைப்புக்கேற்ற பலன்களை அறியலாம். படத்தில் 1,2,3..என 8 வரை குறிப்பிட்டுள்ள ரேகைகளுக்கான பலன்கள் எப்படி என்பதை பார்ப்போம்...
1.நீங்கள் காதல் விவகாரங்களில் சற்று அதிக கூச்ச சுபாவம் கொண்டு இருக்கலாம். நீங்கள் மட்டும் காதல் விவகாரங்களில் துணிச்சலுடன் செயல்பட்டால் உங்களுக்கு அதில் வெற்றி உண்டு.
2.காதல் விவாகரங்களில் நீங்கள் சிக்கினீர்கள் என்றால், அது முற்பகுதியில் உங்களுக்கு சந்தோஷத்தை தரும். ஆனால் பிற்பகுதியில் பலவிதமான அனுபவங்களை தரலாம். ஒரு வேலை உங்கள் சுக்கிர மேடு வலுவாக இருந்தால் பல திருப்பு முனைகளை சந்தித்து இறுதியில் உங்களது காதல் வெற்றி பெறும். காதல் ரேகையும் இல்லை, சுக்கிர மேடும் பலமாக அமையவில்லை எனில் காதலில் கூடுமானவரையில் நீங்கள் ஈடுபடுவதை தவிர்த்து, பெற்றோர்கள் பார்க்கும் திருமணத்திற்கு உடன் பட்டு செல்வது நல்லது.
3.பல தடைகளை கடந்து நீங்கள் காதல் செய்வீர்கள், அப்படி செய்தாலும் கூட உங்களின் காதல் வெற்றி அடையும் என்று உறுதி அளிக்க முடியாது. நீங்கள் பேசாமல் வீட்டில் பார்க்கும் பெண்ணை அல்லது மணமகனை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு மிக நல்லது. மீறி காதல் விவகாரங்களில் ஈடுபட்டால் நீங்கள் அதிக ஏமாற்றத்தை சந்திக்க இடம் உண்டு.
4.நல்ல வசதியான நபரை தேடிப் பிடித்து காதல் செய்வீர்கள். பொய்யை கூட உண்மை போலவே சொல்லக்கூடியவர்கள் நீங்கள். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் காதலிப்பவர் நம்பும் படியாக சொல்வதில் வல்லவர்கள். எனினும் காதலில் உண்மையுடன் தான் இருப்பீர்கள் அல்லது நடந்து கொள்வீர்கள் என்று சொல்வதற்கு இல்லை.
5.நீங்கள் காதல் செய்யும் நபர் எதிர்காலத்தில் பலராலும் அறியப்படும் நபராக இருப்பார். மேலும் நீங்கள் அதிக ரொமேன்டிக்காக செயல் படத் தெரிந்தவர்கள். காதல் விவகாரங்களில் பட்டையை கிளப்புவீர்கள்.
6.நீங்கள் காதல் செய்வதை கூடிய வரையில் தவிர்த்து வீட்டில் பார்க்கும் பெண்ணை அல்லது வாழ்க்கை துணையை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு நல்லது. காரணம், நீங்கள் காதல் விவகாரங்களில் இறங்கினால் கண்டிப்பாக அந்தக் காதல் உங்களுக்கு சந்தோஷத்தை தர வாய்ப்பில்லை.
7.நீங்கள் காதலிக்கும் நபர் அதிக நேர்மையான நபராக இருக்க வாய்ப்பில்லை. இதனால் வாழ்க்கையில் சில தொல்லைகளை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. நீங்கள் பெரும்பாலும் காதல் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.

அ.ச.இராமராஜன்
8.உங்களுக்கே உங்கள் காதல் மீது நம்பிக்கை இல்லாமல் போகலாம். மேலும் நீங்கள் செய்யும் காதல் சமயத்தில் ஒரு தலை காதலாகக் கூட இருக்கலாம். அதனால் சில ஏமாற்றங்களை நீங்கள் சந்திக்க இடம் உண்டு. நீங்களும் கூட காதல் விவகாரங்களில் தலை இடாமல் வீட்டில் பார்க்கும் வாழ்க்கை துணையை திருமணம் செய்து கொள்ளுதல் நலம்.
திருமண ரேகை இரண்டு துண்டுகளாக காணப்பட்டு, அதில் ஒரு துண்டு இருதய ரேகையும், புத்தி ரேகையும் கடந்து நின்றால், அப்படிப்பட்ட நபர் காதலில் தோல்வியை சந்திப்பர். அந்த ரேகை ஆயுள் ரேகையும் கடந்து சென்றால் அப்படிப்பட்ட நபர் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்வார்.
காதல் ரேகையின் வகைகள் மற்றும் பலன்கள்:
நீளமான காதல் ரேகை:
நீண்ட, நேராக செல்லும் காதல் ரேகை ஒருவரின் ஆழ்ந்த உணர்ச்சிகளையும், காதல் மீதான ஈடுபாட்டையும் குறிக்கிறது. இது ஒரு நிலையான மற்றும் தீவிரமான காதல் வாழ்க்கையை குறிக்கும் என்று கருதப்படுகிறது.
குறுகிய காதல் ரேகை:
குறுகிய காதல் ரேகை கொண்டவர்கள் உணர்ச்சி ரீதியாக வெளிப்படையாக இல்லாமல் இருக்கலாம் அல்லது காதல் விஷயங்களில் அவ்வளவு ஆர்வம் காட்டாமல் இருக்கலாம், குறுகிய காதல் ரேகைகள் உள்ளவர்கள் ஒரு உறவில் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிவார்கள், மேலும் தங்கள் சொந்த விருப்பங்களையும் தேவைகளையும் முதலில்வைக்கபயப்படுவதிலை. ஒரு குறுகிய ரேகை, காதல் மற்றும் உறவுகள் என்று வரும்போது ஒருவர் சற்று தனிமையாக இருப்பதையும் குறிக்கலாம்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகள் கொண்ட காதல் ரேகை:
காதல் ரேகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகள் பிரிந்திருந்தால், இது ஒருவரின் காதல் வாழ்க்கையில் பல உறவுகள் அல்லது குழப்பங்கள் இருப்பதைக் குறிக்கலாம்,
காதல் ரேகை மற்றும் சூரிய ரேகை சந்திப்பு:
காதல் ரேகை சூரிய ரேகையை சந்திக்கும் போது, இது ஒருவரின் காதல் வாழ்க்கையில் பிரபலமான மற்றும் வெற்றிகரமான நபராக இருப்பதைக் குறிக்கலாம் என்று கருதப்படுகிறது,
காதல் ரேகையின் ஆரம்பம் மற்றும் முடிவு:
காதல் ரேகையின் ஆரம்பம் மற்றும் முடிவு எந்த மேட்டிலிருந்து தொடங்குகிறது மற்றும் எந்த மேட்டை அடைகிறது என்பதை வைத்து, ஒருவரின் காதல் வாழ்க்கையின் ஆரம்பம் மற்றும் முடிவு பற்றியும் அறியலாம்,
இருதய ரேகையுடன் தொடர்புடைய காதல் ரேகைகள்
ஒருவருக்கு காதல் ரேகை, இருதய ரேகையை நோக்கி வளைந்திருந்தால், அவர் தனிமரமாகவே இருப்பார். அவருக்கு திருமண வாழ்க்கை அமைந்தாலும், தனியாகவே வாழ வேண்டியிருக்கும். ஒருவேளை அந்த வளைவு சற்று மங்கலாக இருந்தால், அந்த நபர் திருமண வயதை அடையும் போது நாள்பட்ட நோய் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். தொடக்கத்தில் கோடு V வடிவமாக இருந்தால், அவர் எந்த காதலிலும் நிரந்தரமாக இருக்கமாட்டார் என்று அர்த்தம். சூரிய ரேகையை வெறும் கோடு தொட்டால், செல்வந்தருடன் திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு. காதல் கோட்டில் கரும்புள்ளி இருந்தால், துணை இறக்கலாம்.
காதல் ரேகையின் மீது பல்வேறு கோடுகள்
காதல் ரேகைக்கு மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகள் இருந்தால், அந்த நபருக்கு பல்வேறு காதல் ஏற்படக்கூடும் என்பதை குறிக்கிறது. அதில் சில காதல்கள் வலுவாக இருக்கும் என்று கைரேகை பலன்கள் கூறுகின்றன. கோடுகள் எதுவும் வலுவாக இல்லாவிட்டால், அந்த நபருக்கு உறுதியான காதல் எதுவும் அமையாது என்று அர்த்தம். இதுபோன்ற கைரேகை கொண்ட நபருக்கு திருமண பந்தமும் நிலைக்காது என்று கைரேகை பலன்கள் கூறுகின்றன.
- நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஷ்வரி நடித்திருந்தார்.
- கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன்.
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.230 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித்தை காதலித்தேன் என்று பிரபல நடிகை மகேஸ்வரி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1997ம் ஆண்டு வெளியான நேசம், உல்லாசம் ஆகிய 2 படங்களில் அஜித் குமாருக்கு ஜோடியாக மகேஸ்வரி நடித்திருந்தார். அந்த சமயத்தில் அஜித்குமார் மீது தனக்கு கிரஷ் ஏற்பட்டது நடிகை மகேஸ்வரி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெகபதி பாபுவின் டாக் ஷோவில் கலந்து கொண்டு பேசிய மகேஸ்வரி, "அஜித் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர் மீது பயங்கர கிரஷ். கடைசி நாள் சூட்டிங்கின் போது அஜித்தை இனிமேல் பார்க்க முடியாதே என்று கவலையாக இருந்தேன். அப்போது அஜித் என்னிடம் வந்து மகி, நீ எனக்கு தங்கச்சி மாதிரிமா. வாழ்க்கையில் உனக்கு என்ன தேவையாக இருந்தாலும் என்னை கூப்பிடு. நான் உனக்காக வருவேன் என்று கூறினார். அதை கேட்டதும் என் மனசே உடைச்சிடுச்சு" என்று தெரிவித்தார்.
இதை கேட்டு அருகில் இருந்த நடிகை மீனா சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். மகேஸ்வரியும் மீனாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
- இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
சேலம், தாரமங்கலம் அருகே உள்ள ஓமலூரைச் சேர்ந்த 32 வயதான சரவணகுமார், தன்னுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றும் 30 வயதான திருநங்கை சரோவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் ஈரோடு, கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடைபெற்றது.
இத்திருமணத்தை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் மு. சென்னியப்பன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலையுள்ளது. பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 52 வயதான ராணி தனது வயதை மறைத்து Filter மூலம் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
- 52 வயதான ராணிக்கு 4 குழந்தைகள் இருப்பது அருணுக்கு தெரிய வந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அருண் (26) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் ராணி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
52 வயதான ராணி என்ற பெண் தனது வயதை மறைத்து Filter மூலம் புகைப்படத்தை பதிவேற்றி இளம்பெண் போல அருணை ஏமாற்றி வந்துள்ளார்.
முதல்முறையாக ராணியை அருண் நேரில் சந்தித்தபோதே அவளுக்கு 52 வயது என்றும் 4 குழந்தைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை கண்டு கோபமடைந்த அருண், ராணியை ஏமாற்றி அவரிடம் இருந்து ரூ.1.5 லட்சம் பெற்றுள்ளார்.
பின்னர் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் அருணை ராணி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அருண், ராணியை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்து சென்று அவரது தாவணியை வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தூக்கி வீசியுள்ளார்.
ராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் அருணை கைது செய்தனர். கொலை செய்ததை அருண் ஒப்புக்கொண்டதால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை.
- போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார்.
காதலனுக்காக பெற்றோரை விட்டு ஓடி போய் ஏமாற்றமடைந்து வேறு ஒருவரை திருமணம் செய்யும் சம்பவங்கள் சினிமாவில் பார்த்திருக்கிறோம்.
ஆனால் அது போன்ற ஒரு ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் ஒன்று மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள இந்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷ்ரத்தா திவாரி. கல்லூரி படிப்பை முடித்த இவர் வீட்டில் பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தனர். அவருடைய காதலன் எந்த சமயத்திலும் உன்னை கைவிடவே மாட்டேன் என அடிக்கடி வாக்குறுதி அளித்தார்.
இது ஒருபுறம் இருக்க காதல் விவகாரம் ஷ்ரத்தா திவாரி வீட்டிற்கு தெரிய வந்தது. அவர்கள் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஷ்ரத்தா திவாரி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்ய முடிவு செய்தார். இது பற்றி அவருடைய காதலனிடம் தெரிவித்தார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
சம்பவத்தன்று ஷ்ரத்தா திவாரி தன்னுடைய உடைமைகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு புறப்பட்டார். வீட்டில் இருந்த பெற்றோர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது நான் எனது காதலனை திருமணம் செய்து கொண்டு தான் வருவேன் என கூறினார்.
அவரிடம் பெற்றோர்கள் கெஞ்சி கதறி அழுது பார்த்தனர். ஆனால் தன்னுடைய காதலனை திருமணம் செய்வதில் ஷ்ரத்தா திவாரி உறுதியாக இருந்தார். பெற்றோரை உதறி விட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவர் காதலனிடம்ஏற்கனவே கூறியபடி அங்குள்ள ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
நீண்ட நேரம் காத்திருந்தும் அவருடைய காதலன் வரவில்லை. போன் மூலம் காதலனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். அவர் அழைப்பை எடுக்கவில்லை.
ஒரு கட்டத்தில் காதலனிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில் இப்போது எனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
காதலனை நம்பி பெற்றோரை உதறி விட்டு வந்த ஷ்ரத்தா திவாரி கதறி அழுதார். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர். வீட்டிற்கும் செல்ல முடியாது காதலனும் கைவிட்டு விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் ஷ்ரத்தா திவாரி நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தார்.

அந்த நேரத்தில் ரெயில் ஒன்று வந்தது. அந்த ரெயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்தார். அந்த பெட்டியில் ஷ்ரத்தா திவாரி கல்லூரியில் படித்த போது நண்பராக இருந்த கரண் என்பவர் இருந்தார்.
இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது கண்கலங்கியபடி இருந்த ஷ்ரத்தா திவாரியிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என கரண் கேட்டார்.
திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி வந்து விட்டேன். காதலன் கைவிட்டதால் அதுவும் நடக்கவில்லை. இனிமேல் என்னால் வாழ முடியாது என்றார்.
கரண் அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. இறுதியாக கரண் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.
நம்பிக்கை துரோகம் செய்த காதலனை விட ஆபத்தில் உதவும் நண்பன் எவ்வளவோ மேல் என சிந்தித்த ஷ்ரத்தா திவாரி சம்மதம் தெரிவித்தார். இருவரும் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தம்பதியினர் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் இளம்பெண் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவரது தந்தை நான் எனது மகளை 10 நாட்கள் கணவரிடம் இருந்து பிரித்து எனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 10 நாட்களுக்கு பிறகும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விரும்பினால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதற்கு ஷ்ரத்தா திவாரி, கரண் இருவரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இளம்பெண் பெற்றோருடன் சென்றார்.
சினிமா போல் நடந்த இந்த சம்பவம் இந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 2 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- மணமகள் சாரா குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர்.
கோவை:
கோவை நவ இந்தியா பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பிரேமலதா. இவர்களது மகன் கவுதம்(வயது30). இவர் கனடாவில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார்.
கவுதம் கல்லூரியில் படித்தபோது அவருக்கு அமெரிக்கா வாஷிங்டன் டி.சி. பகுதியை சேர்ந்த ராபர்ட் டக்ளஸ் பிராட்-எலினிட்டா யசன்யா பிராட் தம்பதி மகள் சாரா(30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கவுதம் மற்றும் சாரா ஆகியோரின் பெற்றோர் பங்கேற்றனர். அப்போது கவுதமும், சாராவும் தங்களது பெற்றோரிடம், தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டனர்.
அதற்கு அவர்கள் மேற்படிப்பு முடித்த பிறகு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கவுதமும், சாராவும் பட்ட மேற்படிப்பு முடித்து தற்போது கனடாவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
2 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
மணமகள் சாராவின் பெற்றோர் தமிழ் கலாசாரத்தின் மீது பற்று கொண்டவர்கள் என்பதால் அவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் மகள் திருமணத்தை நடத்த விரும்பினர்.
இதையடுத்து மணமகள் சாரா குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்தனர். பின்னர் இங்கு திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு பெற்றோரும் செய்து வந்தனர்.
நேற்று கொடிசியா வளாகத்தில் கவுதம்-சாரா திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் தமிழ்முறைப்படி நடந்தது. மணமகள் சாராவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து மணமகன் கவுதம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண விழாவில் மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கனடா, அமெரிக்காவை சேர்ந்த உறவினர்கள் என பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
- இருவரும் தொடர்ந்து பேசிய போது அவர்களின் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருந்தது.
- இவர்களின் காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலானது.
அமெரிக்காவின் அலபாமா பகுதியை சேர்ந்த ஆசிரியை ஹாரீஸ். இவர் ஆங்கிலம் கற்பிப்பதற்காக சீனாவின் ஷென்யாங் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஒரு நாள் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்திருந்த போது லியு என்ற உணவு வினியோக நிறுவன ஊழியர் நூடுல்ஸ் ஆர்டரை வினியோகம் செய்ய ஹாரீஸ் வீட்டிற்கு சென்றார். இருவரும் முதல் முறையாக சந்தித்த போது லியு ஆங்கிலத்தில் பேச முயன்றார்.
அப்போது அவர், 'ஹலோ ஐ லவ் யூ' என்று தவறுதலாக கூறினார். இதை கேட்ட ஹாரீஸ் சிரித்துவிட்டார். தொடர்ந்து அவர்கள் உரையாடினர். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி ஒருவருக்கொருவர் மொழியை கற்க உதவினர். இந்த உரையாடல் அவர்களுக்கிடையே காதலை மலர செய்தது. இருவரும் தொடர்ந்து பேசிய போது அவர்களின் விருப்பங்களும் ஒரே மாதிரியாக இருந்தது. அவர்களின் உறவை மேலும் ஆழப்படுத்தியது.
தொடர்ந்து காதல் மலர்ந்த 5 மாதங்களிலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் கதை சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த காதல் சினிமா பாணியில் இருப்பதாக பதிவிட்டனர்.






