என் மலர்
நீங்கள் தேடியது "குறும்படம்"
- தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
- வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன.
காதல்...
அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது என்றால் அது "காதல்" தான். அதிலும் மனிதனின் காதல் தனித்துவமிக்கது. அது தரக்கூடிய உணர்வு மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். அப்படிப்பட்ட காதலில் விழுந்து, வாழ்க்கையில் இணைந்தவர்களும் உண்டு. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பிரிந்தவர்களும் உண்டு.
அதே நேரத்தில் தனது மனம் விரும்பிய ஒருவரை கரம்பிடிக்க ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு திருமண பந்தத்தில் இணைந்த ஜோடிகளும் உண்டு. அப்படித்தான் வாலிப பருவத்தில் காதலித்த இருவர், தற்போது 60 வயதுக்கு பிறகு திருமணம் செய்துள்ளனர்.
கேரளாவில் அரங்கேறியிருக்கும் அந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் முண்டக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவர் தனது வாலிப பருவத்தில் ரஷ்மி என்ற பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அதனை அவரிடம் கூற பயந்திருக்கிறார். பின்பு வெகுநாட்களுக்கு பிறகு தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், ரஷ்மிக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். தனது காதல் தோற்றுப் போய்விட்டதாக கருதிய ஜெயபிரகாஷ், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.
இறுதியில் அவரும் திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு நபர்களுடன் திருமண வாழ்க்கையை தொடங்கிய இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. அவர்கள் தங்களது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரின் துணைகளும் அடுத்தடுத்து இறந்தனர்.
ரஷ்மியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பும், ஜெயபிரகாசின் மனைவி 5 ஆண்டுகளுக்கு முன்பும் திடீரென இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் தங்களின் குழந்தைகளே வாழ்க்கை என நினைத்து, வேறு திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தனர்.
கணவரை இழந்த வேதனையிலிருந்து மீள்வதற்காக ரஷ்மி, கலாச்சார நிகழ்வுகளில் ஈடுபட்டார். மேலும் குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். ஜெயபிரகாஷ் தனது குழந்தைகளின் வற்புறுத்தலின் பேரில் மறுமணம் செய்ய திட்டமிட்டார். அதற்காக பெண் தேடும் படலத்திலும் ஈடுபட்டார்.
இந்தநிலையில் ரஷ்மி நடித்த ஒரு குறும்படத்தை ஜெயபிரகாஷ் பார்த்தார். தனது வாலிப பருவ காதலி குறும்படங்களில் நடிப்பதை அறிந்து அவர் உள்ளத்தில் மகிழ்ந்தார். அவரை தொடர்பு கொண்டு பேச துடித்தார். இறுதியில் குறும்பட இயக்குனரிடமிருந்து ரஷ்மியின் மகள் செல்போன் எண்ணை வாங்கினார்.
அதில் தொடர்பு கொண்டு ரஷ்மியிடம் பேசினார். இதையடுத்து அவர்களுக்கு இடையே பழைய உறவு மீண்டும் துளிர்விட்டது. அதே நேரத்தில் இருவரின் துணைகளும் இறந்த விவரத்தை இருவரும் அறிந்துகொண்டனர். தற்போது மறுமணத்துக்கு பெண் தேடி வரும் விவரத்தை ரஷ்மியிடம் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.
அப்போது நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தையும் அவர் முன் வைத்தார். அதுபற்றி ரஷ்மி தனது மகள் மற்றும் மருமகனிடம் கூறினார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தனர்.
இதையடுத்து ரஷ்மி திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாக ஜெயபிரகாஷிடம் தெரிவித்தார். உடனே அவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. 60 வயதுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் இருவரின் திருமணம் கொச்சியில் மிகவும் எளிமையான முறையில் நடந்தது.
அதில் ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் குழந்தைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். இருவரின் திருமணத்தை அவர்களது குழந்தைகள் முன்னின்று நடத்தி வைத்தனர். "உண்மையான காதல் நிச்சயம் ஒரு நாள் ஜெயிக்கும்" என்பதற்கு சாட்சியாக வாலிப வயதில் காதலித்த ஜோடி, தங்களின் 60 வயதிற்கு பிறகு ஒன்றிணைந்துள்ளனர்.
ஜெயபிரகாஷ்-ரஷ்மி ஆகிய இருவரின் திருமண புகைப்படத்தை ரஷ்மியின் மகள் சமூக வலைதளங்களில், "எந்த குழந்தைகளுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைக்கும்" என்ற நெகிழ்ச்சியான வாசகத்துடன் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிக்கும் உளவியல் அடிப்படையிலான கதை 'பேரடாக்ஸ்'*
- இயக்குநர் சேரன் ஒரு பாடலை இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் எல் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிக்கும் உளவியல் அடிப்படையிலான கதை 'பேரடாக்ஸ்'*
தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் எல் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்திற்கு 'பேரடாக்ஸ்' (Paradox) என்று பெயரிடப்பட்டுள்ளது.
துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'பேரடாக்ஸ்' குறும்படத்தின் டிரெய்லரை திரையுலக பிரபலங்களான இயக்குநர்-நடிகர் சேரன், இயக்குநர்-நடிகர் எம். சசிகுமார், நடிகர் பிரசன்னா மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டு முன்னோட்டத்தை பாராட்டியதோடு இயக்குநர் பிரியா கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த குறும்படத்திற்காக இயக்குநர் சேரன் ஒரு பாடலை இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரியா கார்த்திகேயன், "ஒரு மனிதனின் உளவியல் பற்றி இப்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறான். இந்நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. இதை தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை 'பேரடாக்ஸ்' பார்வையாளர்களுக்கு விளக்கும்," என்றார். குறும்படம் இன்று யூடியூபில் வெளியாக இருக்கிறது.
'பேரடாக்ஸ்' குறும்படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்க, ஃபைசல் வி காலித் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ஹரிபிரகாஷ் மேற்கொண்டுள்ளார். ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக் கலவையை எஸ் சிவகுமார் மற்றும் கிருஷ்ணன் சுப்பிரமணியனும், கலரிங்கை குபேந்திரனும், டிஐ பணிகளை இன்பினிட்டி மீடியாவும் செய்துள்ளனர்.
- குமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்கும்
- கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெற உள்ளது.
அப்போது நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்கு கள், குடும்ப நல வழக்குகள் மற்றும் குடும்ப பராமரிப்பு வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இந்த சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சியில் வழக்காளர்களை அதிகள வில் கலந்து கொள்ள வைக்கும் வகையில் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட்டு வருகிறது.
சிறப்பு லோக் அதாலத் குறித்த விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அகண்ட எல்.இ.டி. திரை கொண்ட வாகனத்தில் ஒளிபரப்பும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் இன்று
நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி அருள்முருகன் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறும் படத்தை ஒளிபரப்பு செய்யும் வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த வாகனமானது குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று சிறப்பு லோக் அதாலத் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நிகழ்ச்சியில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
- வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
- போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் சிறார்கள் பாலியல் தொந்தரவு தடுக்கும் போக்சோ சட்டம், குழந்தைத் திருமணங்கள் மற்றும் இணைய குற்றங்கள் தடுப்பு குறித்து, பள்ளிகள் தோறும் ஆசிரியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வெங்கடாசலம் வரவேற்றார்.
இதில் வாழப்பாடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா, தலைமை காவலர் வைரமணி ஆகியோர் போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இக்கருத்தரங்கில், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தற்காப்பு மற்றும் விழிப்புணர்வோடு செயல்படுவதாக உறுதியேற்றனர்.
- நாளை நமதே என்னும்பெ யரில் விழிப்புணர்வு குறும்படம் மாணவ, மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.
- விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம்.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் பெண்கல்வியின் முக்கியத்துவத்தையும், இடைநிற்றலைத் தவிர்த்து தடைகளை கடந்து விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் "நாளை நமதே" என்னும்பெ யரில் விழிப்புணர்வு குறும்படம் மாணவ, மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.
இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்னசுகந்தி, உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், ஒன்றிய பிரதிநிதி எழிழரசன், எழில்நிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- “படிக்க வந்தோம் “ என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொருளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார்.
- இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது.
சேலம்:
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் "படிக்க வந்தோம் " என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொரு ளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த காலங்களில் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது சாக்லேட்டுகள் கொடுத்து மகிழ்ந்த காலம் மாறி தற்போது மது விருந்து அளிக்கும் கலாச்சாரம் மாணவ சமுதாயத்திடம் அதிகரித்துள்ளது.
இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர் சமுதா யம் படிப்பில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற்று பிற்கால வாழ்வை பொற்கா லம் ஆக்கிக் கொள்ள வேண்டும். சேலம் மாவட் டத்தில் இதுவரை 2 ஆயிரம் கள்ள சாராய வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இரவு ரோந்து பணியில், டாஸ்மாக் பார் மற்றும் தாபா ஹோட்டல்களை தீவிரமாக கண்கா ணிக்கவும், வாகன தணிக் கையை முழு மையாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும் போதைப்பொ ருள் விழிப்புணர்வு குறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 32 கல்லூரிகள் மற்றும் 67 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தக்காளி விவசாயி தனது வயலில் தக்காளி விதைக்கிறார்.
- விவசாயி எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் குறித்து விளக்கும் வகையில் அந்த கருத்தை மையமாக வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி:
தக்காளி விவசாயி சந்திக்கும் சூழல்களை விளக்கும் குறும்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.
பல குறும்படங்களை இயக்கிய அப்துல்மஜீத் இயக்கத்தில் தூத்துக்குடி மாவட்ட முத்துநகர் திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் முருகேசன், நடிகர்கள் முருகேசன், ஜாகிர் உசேன், சக்திவேல், தங்கராஜ், டேனியல் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அத்திமரபட்டி வயல்வெளிகளில் நடத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
தக்காளி விவசாயி தனது வயலில் தக்காளி விதைக்கிறார். விலை இல்லை என்று மறு வருடம் மாற்றுப்பயிர் விதைக்கிறார். ஆனால் தக்காளி விலை கூடுகிறது.
இதனால் விவசாயி எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் குறித்து விளக்கும் வகையில் அந்த கருத்தை மையமாக வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
- லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார்.
- குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இளம் இயக்குனர் பட்டியலில் மறுக்க முடியாத இடத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து அவர் இயக்கிய "லியோ" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
ஹோலிவுட் படத்தில் வரும் மார்வல் யூனிவர்ஸ், டி.சி. காமிக்கலில் வரும் யூனிவர்ஸ் கான்சப்ட்டுகளைப் போல, தனக்கென்று ஒரு தனி ஸ்டைலாக லோகேஷ் சினிமேடிக் யூனிவர்ஸ் ( LCU) என்று ஒன்றை உருவாக்கினார்.
அதில் விக்ரம், லியோ, கைதி போன்ற படங்கள் உள்ளடக்கம். லியோ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார்.

அதை தொடர்ந்து கைதி- 2 எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது வந்த அண்மை தகவல்கள்படி லோகேஷ் கனகராஜ் LCU வை மையமாக வைத்து 15- 20 நிமிட நேரத்திற்கு ஒரு குறும்படம் இயக்க இருக்கிறார்.
அதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார்.
குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், கமல் மற்றும் சூர்யா நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால் இந்த குறும்படம் கைதி - 2 படத்திற்கு முன்னே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரஜினிகாந்த நடிப்பில் “தலைவர் 171” படத்தை இயக்கி வருகிறார்.
- இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்
லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த நடிப்பில் "தலைவர் 171" படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகியது.
லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர். ஹோலிவுட் ஸ்டைலில் அவருக்கென LCU என சினிமேட்டிக் யூனிவர்சை தன் படங்களின் மூலம் உருவாக்கியுள்ளார்.
இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ இந்த எல்.சி.யூ கான்சப்டில் வரும். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகும். அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2, ரோலெக்ஸ் போன்ற படங்கள் இயக்குவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும் படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. இக்குறும்படம் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்தது.
போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து விரைவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக சினிமா துறையை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக வெளியாகும் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டுமானால் அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக டிக்கெட் விலை உயர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் முன்னணி நடிகர்கள் 2 குறும் படங்களில் நடிக்க வேண்டும். அதில் ஒன்று சைபர் குற்றம் மற்றொன்று போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து இருக்க வேண்டும்.
இந்த 2 குறும்படங்களும் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும். இந்த புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே டிக்கெட் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சினிமா டிக்கெட் விலை உயர்த்த நடிகர்கள் விழிப்புணர்வு படங்களில் நடிக்க வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.
- குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் குறும்பட விழா நடைபெற்றது.
- பெரும்பாலானோர் குறும்படங்கள் மூலம் தான் திரைப்பட இயக்குனராகி வருகின்றனர்.
குன்னூர்:
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 2 நாள் குறும்பட விழா நடைபெற்றது.
இதில் 84 குறும்படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு நாளான நேற்று சிறந்த படங்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. இதில் 10 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் முதல் 3 இடங்களை பிடித்த ஆதிகுடி, துணை, கூட்டத்தில் ஒருவன் ஆகிய குறும்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
விழாவில் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் 15 குறும்படங்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார்.
சினிமாவை கண்டுபிடித்தவருக்கும், நான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தவர், எனக்கு ஊக்கம் அளித்த ஆசிரியர்களுக்கு நன்றி.
தோல்வியை கண்டு யாரும் பயப்படக்கூடாது. தோல்வி தான் நமது வெற்றிக்கு முதல் படி. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாததால் உலகில் என்ன நடக்கிறது எனக் கூட தெரியாத நிலை இருந்தது. விமானம் மேலே பறந்தால் அதிசயமாக பார்ப்பார்கள்.
நாளடைவில் டூரிங் டாக்கீஸ் குத்தகைக்கு எடுத்து படங்களை திரையிட்ட பின்னர்தான் இதுதான் உலகம் என தெரிந்து கொண்டனர். இதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம்.
கோபி செட்டிபாளையத்தில் முதன்முறையாக கேமராவை எடுத்துக் கொண்டு போன ஒரே நபர் நான் தான். அதன்பின்னர் ராசியான ஊர் என்பதால் அங்கு அதிகளவில் படப்பிடிப்புகள் நடந்தது.
நான் முன் அனுபவமே இல்லாமல் கதை எழுதி சினிமாவில் கால் பதித்தேன். அதற்கு கேள்வி ஞானம் இருந்தால் போதும். கேள்வி ஞானம் இருந்தாலே சினிமா துறையில் சாதிக்கலாம்.
தற்போது உள்ள இளைஞர்கள் சினிமா வாய்ப்பு கேட்டு எங்கும் அலைய வேண்டாம். குறும்படங்கள் எடுத்து அதனை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களுக்கு ஏற்றார் போல்படம் இருந்தது என்றால் உடனடியாக வாய்ப்பு கிடைக்கும்.
இன்று பெரும்பாலானோர் குறும்படங்கள் மூலம் தான் திரைப்பட இயக்குனராகி வருகின்றனர். சினிமாவில் புதிய தொழில்நுட்பம் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் இளைஞர்களும் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உண்மையின் வெளிச்சத்தை நமக்கு LLR love lust retro குறும்படம் யதார்த்தமாக பதிவு செய்கிறது.
- அடுத்த தலைமுறையின் காதலுக்கான பிரச்சனை காமம் தான் என்பதை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.
காதலில் காமம் கலந்து விட்டது என்ற நிகழ்கால உண்மையின் வெளிச்சத்தை நமக்கு LLR love lust retro குறும்படம் யதார்த்தமாக பதிவு செய்கிறது. modern love, coffee shop, relationship போன்ற 2k Kids-ன் மனநிலையை நெருக்கமாக நம் கண் முன் நிறுத்துகிறது.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்தும் தரமாக ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. ஈகோ, male domination, ஆண் பெண் சகிப்பு தன்மை அந்தரங்கம் உளவியல் பிரச்சனை என கொஞ்சம் ஆழமாக அலசுகிறது. படத்தின் தொடக்க காட்சியே Love breakup-ல் ஆரம்பித்து மீண்டும் ஒரு புதிய காதல் என தொடங்கி காமத்தில் முற்று பெறுகிறது. அந்தரங்க அறையின் ரகசியங்கள் பார்வையாளர்களுக்கும் ரகசியமாகவே கடத்தப்படுகிறது. காதலுக்கான பிரச்சனையாக ஜாதி, மதம், இனம், மொழி, பெற்றோர் என காதலின் பிரிவிற்கு பல காரணிகள் இருந்தாலும் அடுத்த தலைமுறையின் காதலுக்கான பிரச்சனை காமம் தான் என்பதை தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.
காதலில் கலந்த காமம் புனிதம் தான் என்றாலும்...
காமத்தை மட்டுமே வாடிக்கையாக கொண்டிருக்கும் ஒரு சில ஆண் இனத்திற்கும்... பெண் இனத்திற்கும் அது பொது தான் என்பதை எப்போது உணர்ந்து கொள்வாரோ... அவ்வப்போது இப்படி யாராவது சொன்னால் தான் உண்டு...
இன்றைய இளம் தலைமுறையினருக்கு காமம் காதல் குறித்து வெளிப்படையாக புரிதல் அவசியம். நவீன காதலுக்கு படகுழுவினருக்கும் இயக்குனர் மாஸா கோபி-க்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






