search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம்போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்
    X

    சேலம் மாவட்ட எஸ்.பி சிவகுமார் விழிப்புணர்வு குறுந்தகடை வெளியிட்ட காட்சி.

    போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம்போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டார்

    • “படிக்க வந்தோம் “ என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொருளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார்.
    • இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது.

    சேலம்:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் "படிக்க வந்தோம் " என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொரு ளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த காலங்களில் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது சாக்லேட்டுகள் கொடுத்து மகிழ்ந்த காலம் மாறி தற்போது மது விருந்து அளிக்கும் கலாச்சாரம் மாணவ சமுதாயத்திடம் அதிகரித்துள்ளது.

    இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர் சமுதா யம் படிப்பில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற்று பிற்கால வாழ்வை பொற்கா லம் ஆக்கிக் கொள்ள வேண்டும். சேலம் மாவட் டத்தில் இதுவரை 2 ஆயிரம் கள்ள சாராய வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இரவு ரோந்து பணியில், டாஸ்மாக் பார் மற்றும் தாபா ஹோட்டல்களை தீவிரமாக கண்கா ணிக்கவும், வாகன தணிக் கையை முழு மையாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் போதைப்பொ ருள் விழிப்புணர்வு குறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 32 கல்லூரிகள் மற்றும் 67 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×