search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug Prevention"

    • பவானி போலீசார் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
    • இப்பேரணி பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று கூடுதுறை அடைந்தது.

    பவானி:

    பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு பவானி போலீசார் ஏற்பாடு செய்திருந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு பேரணி நடை பெற்றது.

    ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    பவானி புதிய பஸ் நிலையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு தொடங்கிய இப்பேரணி பவானி நகரில் முக்கிய வீதி வழியாக சென்று கூடுதுறை அடைந்தது.

    இந்த பேரணியில் பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, போலீ சார் மற்றும் பவானி, மயிலம்பா டி, சித்தோடு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவி கள் என 300-க்கும் மேற்ப ட்டோர் கலந்து கொண்டனர்.

    மாணவ, மாணவிகள் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தியும், எமதர்மராஜா, மது பாட்டில், சிகரெட் போன்ற வேடம் அணிந்தும் பொதுமக்கள் மத்தியில் போதை பொருள் தடுப்பு குறித்து விழி ப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • அன்னப்பராஜா பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
    • மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு மன்றத்தின் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடை பெற்றது. தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் பேசுகையில், இன்றைய நாளில் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால், கல்வியில் நாட்டமின்மை, ஒழுக்கக்கேடுகள், சமூகவிரோதச் செயல்பாடுகள், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இவைகளிலிருந்து மாணவர்கள் விடுபடவேண்டும் என்றார். கூட்டத்தில் போதை தடுப்பு மன்ற உறுப்பினர்களும் மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார். 

    • போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு
    • போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில் நேற்று போதைதடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

    இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன் உள்பட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, வியாபாரிகள் யாரும் தங்கள் கடைகளில் குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்வது கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    முடிவில் தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் நன்றி கூறினார்.

    • போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
    • சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    திருச்சி:

    முசிறி அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. முசிறி டிஎஸ்பி யாஸ்மின், குழந்தை நல குழு உறுப்பினர் பிரபு ஆகியோர், போதைப்பொருள் மாணவர்கள் (குழந்தைகள்) பயன்படுத்துவதால் உடல் அளவில், மனதளவில் ஏற்படும் பாதிப்புகள், எதிர்காலத்தில் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006 ன் படி குழந்தை திருமணத்துக்கு உதவி செய்தாலோ, உடந்தையாக இருந்தாலோ, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பு சட்டம் 2012ன் படி பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல் பாலியல் தொந்தரவு செய்தாலோ மற்றும் பாலியல் வன்முறை குழந்தைக்கு நடந்தது தெரிந்தும், குழந்தைக்கு உதவி செய்யாமல் இருந்தாலோ, இச்சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் ,வேலை செய்ய அனுமதிப்பதும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் . மேலும் கல்வியின் அவசியம், குழந்தைகளின் தன்னம்பிக்கை, உயர்கல்விக்கு செல்வதற்கான வழிமுறைகள் சார்ந்த வாழ்க்கைக் கல்வி குறித்தும், குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 செயல்பாடு, பணிகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கினார்கள்.

    முன்னதாக முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் காவேரி, முசிறி காவல் நிலைய குழந்தை நல காவல் அலுவலர் பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு குழந்தைகள் மீதான வன்முறை குறித்த துண்டு பிரசுரங்கள்,நோட்டிஸ் விநியோகம் செய்தனர்.

    • போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    மதுரை

    மதுரையில் போதைப் பொருள் தடுப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை பினாக்கிள் ஹாப் மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    இதனை மதுரை மாநகர காவல்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தியது. 'மாற்றத்திற்காக ஓடுங்கள்' என்ற தாரக மந்திரத்தின் மூலம், ஆரோக்கிய வாழ்க்கை முறை, சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அமைந்த மாரத்தான் ஓட்டத்தை கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஜித்சிங்காலோன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்- பெண், சிறுவர்- சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    ரேஸ் கோர்ஸ் சாலை, எம்.ஜி.ஆர். ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம், அழகர்கோவில் மெயின் ரோடு, புதூர் போலீஸ் நிலையம், கடச்சனேந்தல் வழியாக சென்றது. மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    • போதை பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • காவல்துறை துணை கண்காணிப்பாளர் போதை பொருள் பயன்பாட்டின் தீமை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார்.

    உடுமலை :

    உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலாளர் கே.ஆர்.கே. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர்.தேன்மொழி வேல் கலந்துகொண்டு போதை பொருள் பயன்பாட்டின் தீமை மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்து பேசினார்.உடுமலை போக்குவரத்து ஆய்வாளர் ஏ.வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளித் தலைமை ஆசிரியை கே.டி. பூரணி நன்றி கூறினார்.

    போதை பழக்கத்துக்கு எதிராக உறுதிமொழி எடுத்தல் மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி குடிமங்கலம் போலீஸ் சார்பில் நடந்தது. நால்ரோடு பகுதியில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனிதச்சங்கிலி நடைபெற்றது.நீண்ட தூரத்திற்கு அணி வகுத்து நின்ற மாணவர்கள், போதை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.,க்கள் ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார், முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    ஈரோடு, ஆக. 13-

    ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை யொட்டி போதைப் பொருள் தடுப்பு, போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையொட்டி ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் அமைச்சர் சு.முத்து சாமி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்க ளின் மனநலம் மற்றும் கற்றல் குறைபாடுகள் குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது.

    இப்பயிற்சியில் 240 ஆசிரியர்கள் நேரடியாக வும், 380-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர்.

    மேலும் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி, ஈரோடு மற்றும் திகிணாரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பனக ஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து தாளவாடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி யில் போதைப்பு பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியும், கோபி செட்டி பாளையம் அடுத்த கரட்டடி பாளையம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்களுக்கான உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    மேலும் போதை பொருள் தடுப்பு குறித்து டாக்டர்கள், செவிலியர்கள் பேசினர்.

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    • தொண்டி அரசு ஆண்கள் பள்ளியில் போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.


    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் நடந்தது. இப்பள்ளியைச் சேர்ந்த 260 மாணவர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாககூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது, பள்ளிப்பருவத்தில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், முதல் தகவல் அறிக்கை உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.


    கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போதை பொருள் இல்லா பகுதியாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 11- ந்தேதி முதல் ஒரு வார காலத்திற்கு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்க அறிவுறுத்தினார்.

    அதன்படி கள்ளக்குறிச்சியில் போதை ப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    போதைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு விளை விப்பதோடு, குடும்பத்தின் அமைதியான சூழலுக்கும் தீங்கு விளைவி க்கிறது. எனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு உட்படாமல் இருத்தல் வேண்டும்.

    மேலும் குடும்பத்தை அழிக்கக்கூடிய போதைப் பழக்கத்தை அனைவரும் தவிர்த்து குடும்ப நலத்தை பேணிக்காப்பதோடு நாளைய சமுதாய வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். தொடர்ந்து போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாகவும் அல்லது பயன்பாடு தொடர்பாக ஏதேனும் அறிந்தால் மாவட்ட நிர்வா கத்தின் தொலைபேசி எண் 04151-228801 வாயிலாகவும் காவல்துறைக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

    மேலும் போதை ப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பள்ளி மாணவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள் அகியோர் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்மணி, கள்ளக்கு றிச்சி ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) விஜய கார்த்திக்ராஜ், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாணவ, மாணவியரிடம் எடுத்துரைக்கப்படவுள்ளது.
    • போதைப்பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    உடுமலை :

    உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், வரும் 19ந் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாரம் செயல்படுத்தப்படுகிறது.அவ்வகையில் பல்வேறு அரசுத்துறையினருடன் இணைந்து, போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மாணவ, மாணவியரிடம் எடுத்துரைக்கப்படவுள்ளது.

    அதன்படி போதைப்பொருள் தடுப்புக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை அறிவேன். ஒருபோதும் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாட்டிக்கு எதிரான தடுப்பு நடவடிகைக்கு துணை நிற்பேன்' என, மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி மாவட்ட அலுவலர் பழனிசாமி தலைமை வகித்தார்.பள்ளித்துணை ஆய்வாளர் கலைமணி, தலைமையாசிரியர் விஜயா, நகராட்சி கவுன்சிலர் ஜெயக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பழனிசாமி, தலைமை வகித்தார்.வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்வுக்கு, முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., தேன்மொழிவேல், 'போதை பயன்பாட்டின் தீமை மற்றும் தடுப்பு நடவடிக்கை' குறித்து பேசினார்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்உட்பட பலர் பங்கேற்றனர்.கமலம் கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, கல்லூரிச்செயலாளர் சஞ்சீவ் முன்னிலை வகித்தார். முதல்வர் பிருந்தா, வரவேற்றார். டி.எஸ்.பி., டாக்டர் அன்பரசு, துணை முதல்வர் சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.கொமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எஸ்.ஐ., நாகராஜன் கலந்து கொண்டார்.எஸ்.கே.பி., உள்ளிட்டபல பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

    • போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • போதைப் பொருட்கள் பயன்பாட்டால் சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன் ஒருபகுதியாக பொதுமக்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாட்டால் சமூகத்துக்கும் தனி மனிதனுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கும் வகையில் உடுமலை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

    தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் உடுமலை ஆர்டிஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த காலங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டு நன்னடத்தை குற்ற பிணை சான்றிதழ் வழங்கப்பட்டது.மேலும் அனைவரும் உடலையும் உள்ளத்தையும் பாதிக்கும் போதைப் பொருளை அறவே ஒழிப்போம்.

    சமூகத்தில் போதைப்பொருள் புழங்குவதை இயன்றவரை தடுப்பதற்கு முயற்சி செய்வேன் என்பது உள்ளிட்ட போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல்,இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • போதை தடுப்பு குறித்து தேசிய பசுமை படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் சிறப்புரையாற்றினார்.
    • குழந்தை திருமணம் மற்றும் மகளிர் உதவி எண் 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவுரையின் படி, சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம் இணைந்து சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் மகளிர் உதவி எண் 181 மற்றும் போதை பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

    பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரெங்கநாதன் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் உடையார் வரவேற்று பேசினார். போதை தடுப்பு குறித்து தேசிய பசுமை படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கணபதி சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தின் வழக்கு பணியாளர் ஞானவேல், ராணி, மாவட்ட குழந்தை அலுவலக சமூக பணியாளர் ஹெலினா ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் முதுகலை ஆசிரியர்கள் ருக்மணிதேவி, வைகுண்டம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஷேக் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதுகலை தமிழாசிரியர் நான்சி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

    ×