search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி  மாவட்டத்தை   போதை பொருள் இல்லா பகுதியாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்  கலெக்டர் பேச்சு
    X

    கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போதை பொருள் இல்லா பகுதியாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் பேச்சு

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தை போதை பொருள் இல்லா பகுதியாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 11- ந்தேதி முதல் ஒரு வார காலத்திற்கு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்க அறிவுறுத்தினார்.

    அதன்படி கள்ளக்குறிச்சியில் போதை ப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    போதைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு விளை விப்பதோடு, குடும்பத்தின் அமைதியான சூழலுக்கும் தீங்கு விளைவி க்கிறது. எனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு உட்படாமல் இருத்தல் வேண்டும்.

    மேலும் குடும்பத்தை அழிக்கக்கூடிய போதைப் பழக்கத்தை அனைவரும் தவிர்த்து குடும்ப நலத்தை பேணிக்காப்பதோடு நாளைய சமுதாய வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். தொடர்ந்து போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாகவும் அல்லது பயன்பாடு தொடர்பாக ஏதேனும் அறிந்தால் மாவட்ட நிர்வா கத்தின் தொலைபேசி எண் 04151-228801 வாயிலாகவும் காவல்துறைக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

    மேலும் போதை ப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பள்ளி மாணவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள் அகியோர் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்மணி, கள்ளக்கு றிச்சி ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) விஜய கார்த்திக்ராஜ், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×