search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marathon"

    • கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது.
    • போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 12-வது சென்னை மாரத்தான் இன்று நடந்தது. சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனம் ஆதரவுடன் இந்த போட்டி நடந்தது. முழு மாரத்தான் (42.195 கிலோ மீட்டர்), பெர்பெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ.), அரை மாரத்தான் (21.097 கி.மீ.) மற்றும் 10 கிலோ மீட்டர் ஓட்டம் என 4 பிரிவுகளில் நடைபெற்றது.

    முழு மாரத்தான் பந்தயம் மெரீனா கடற்கரையில் உள்ள நேப்பியர் பாலத்தில் தொடங்கியது. கலங்கரை விளக்கம், மத்திய கைலாஷ், டைட்டல் பார்க் ஆகியவற்றை கடந்து கிழக்கு கடற்கரை சாலையை சென்றடைந்தது. பெர்பெக்ட் மைலர், 10 கிலோ மீட்டர் ஆகியவையும் நேப்பியர் பாலத்தில் இருந்துதொடங்கியது. அரை மாரத்தான் போட்டி எலியட்ஸ் கடற்கரை பகுதியில் இருந்து தொடங்கியது.

    4 பிரிவில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த போட்டியையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்தேன்.
    • காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக பேசுபொருளாகி இருக்கிறது.

    பிரிட்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நண்பரின் காரை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட வீரருக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற 50 மைல் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஜோசியா சக்ரெவ்ஸ்கி கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில், பந்தயத்தின் போது அவர் தனது நண்பரின் காரில் சிறிது தூரம் கடந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தயத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதால், காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஓட்டப்பந்தயத்தின் போது காரில் பயணித்து வெற்றி பெற்றதற்காக இவர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க 12 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை பிரிட்டனை சேர்ந்த விளையாட்டு ஒழுங்குமுறை கூட்டமைப்பு பிறப்பித்து இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தின் போது காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. 

    • கடற்கரை சாலை காந்தி சிலை அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • கோப்பை தன்னார்வலர் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    மோட்டார் சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மோட்டார் சைக்கிள் வாகன பேரணி புதுவை கடற்கரை சாலையில் நடந்தது.

    காந்தி சிலை அருகே பேரணியை செல்வகணபதி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.

    நகரத்தின் முக்கிய வீதிகளில் சென்ற பேரணியில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளையும் கையில் ஏந்திய படி சென்றனர். புதுவை அரசு மற்றும் தன்னார்வலர் அமைப்பு சார்பில் போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே தொடங்கிய மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    போட்டி நகரம் முழுவதும் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

    மாரத்தான் கடற்கரை சாலை, பட்டேல் சாலை, அண்ணாசாலை, புஸ்சி வீதி வழியாக மீண்டும் கடற்கரை சாலையை அடைந்தது.

    போட்டியில் முதலிடம் பெற்ற 5 பேருக்கு பரிசு, கோப்பை தன்னார்வலர் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம்
    • முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் அசோக்குமார் சின்னசாமி துவக்கி வைத்தார்.விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
    • முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்யை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதனைதொடர்ந்து, ராமேசுவரம் பேக்கரும்பு அப்துல்கலாம் நினைவிடத் தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி துவக்க விழா மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்துகொள்வதற்காக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் ராமேசுவரம் வருகை தந்தார். அவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இதனைதொடர்ந்து, மாரத்தான் போட்டியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முதல் போட்டி 21 கிலோ மீட்டர், இரண்டாவது போட்டி 5 கிலோ மீட்டர், மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி 3 கிலோ மீட்டர் என நிர்ணயம் செய்யப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.25 ஆயிரம், 3-வது பரிசு 10 ஆயிரம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.5 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெ.தங்கதுரை, உதவி கலெக்டர் சிவானந்தம், கலாம் பேரன் சேக்சலீம், நகர்மன்ற தலைவர் நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா மற்றும் உள்ளாட்சி பிரநிதிகள் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெக்டர் வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் சார்பாக 4 பேர்களுக்கு தலா ரூ. 9,050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள்கள், 2 பேருக்கு பராமரிப்புக்கான பாதுகாவலர் நியமனச் சான்றுகளையும் கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    மேலும் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை கலெ க்டர் வழங்கினார். மேலும் திருநங்கை களுக்கான பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

    இதே போல் தமிழ் வளர்ச்சி த்துறையின் சார்பில் ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த பேச்சுப் போட்டியி லும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    • தேனியில் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.
    • ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் சார்பில் இளைஞர்களிடம் உடற்பயிற்சியை பேணுவது குறித்தும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அண்ணா நெடுந்தூர மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு அரண்ம னைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்திலிருந்து தொடங்கி கொடுவிலா ர்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 70 நபர்கள் கலந்து கொண்டனர்.

    25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான போட்டி யில் அரண்மனைபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தி லிருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வழியாக மீண்டும் அரண்மனைப்புதூர் விலக்கு, ரயில்வே கிராசிங் வழியாக புதிய பஸ் நிலையம் வரை 10 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது. இப்போட்டியில் 30 நபர்கள் கலந்து கொண்டனர்.

    17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 125 நபர்களும் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் 25 நபர்களுக்கான போட்டி அரண்மனைபுதூர் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் இருந்து கொடுவிலார்பட்டி, பள்ளபட்டி விலக்கு, அய்யனார்புரம் வரை 5 கி.மீ தூரம் சென்று நிறைவடைந்தது.

    ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    இதில் உதவி காவல் கண்காணிப்பாளர் மதுகுமாரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் அலுவலர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.
    • நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது.

    நாமக்கல்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி சார்பில் மாரத்தான் போட்டி நாமக்கல்லில் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ராஜா முன்னிலை வகித்தார். நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு மாரத்தான் தொடங்கியது. இப்போட்டியினை நாமக்கல் ரோட்டரி கிளப் தலைவர் ராகேஷ், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஆண்- பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற போட்டி, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி கொண்டி செட்டி பட்டி வழியாக அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியை வந்தடைந்தது.

    இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக ரொக்கத்தொகை மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • தேசிய இளைஞர் தின திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக மாரத்தான் போட்டி நடந்தது.
    • நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கோவை,

    தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் வாயிலாக எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, தேசிய, மாநில, மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் தின திருவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக மாரத்தான் போட்டி நடந்தது.

    கோவையிலும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை கலெக்டர் கிராந்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த மாரத்தான் ஓட்டம் அவிநாசி சாலை, பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அண்ணா சிலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தது.

    இந்த மாரத்தான் ஓட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் திருநங்கைகள் என பலரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு ஓடினர்.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

    • கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.

    கடலூர்:

    தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26-ந் தேதி சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரும், சுகாதார பணிகள் துணை இயக்குனருமான மீரா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின் பால், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்றார். மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் திட்ட நோக்கவுரையாற்றினார். இதையடுத்து கடலூர் டவுன் ஹாலில் இருந்து தொடங்கிய போட்டியானது சில்வர் பீச் வரை சென்றது. இந்த மினி மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே நாடகப்போட்டி, குரும்பட போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டியும் நடத்தப்பட்டது.

    இதில் துணை இயக்குனர் (காசநோய்) கனகராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவா, மாவட்ட குருதி பரிமாற்றுக்குழும அலுவலர் குமார், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய முதுநிலை மருத்துவர் தேவ்ஆனந்த், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, ஏ.ஆர்.டி. மருத்துவ அலுவலர் சாமிநாதன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

    • எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி: 

    புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து எய்ட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை இன்று காலை நடத்தியது. இந்த மாரத்தான் போட்டி காரைக்காலில் உள்ள அரசு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி, காரைக்காலில் உள்ள முக்கிய வீதி வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. இந்த மாரத்தான்போட்டியினை காரைக்கால் மாவட்ட முதுநிலை போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பரண்டு சுப்பிரமணியன், முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    • பெண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை காட்டுநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனகலட்சுமி, சங்கீதா, மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர்.
    • போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரத்தில் தூத்துக்குடி ஈ.சி. பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. ஆர்.எஸ். புரத்தில் தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்த போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    போட்டியினை சரவணராஜா, ராம்குமார் ஆகியோர் கொடியசைக்து தொடங்கி வைத்தனர். பெண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை காட்டுநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனகலட்சுமி, சங்கீதா, மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர். ஆண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை பசுபதி, அஜித்குமார் மற்றும் பார்வதிநாதன் ஆகியோர் பிடித்தனர்.

    தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கி பேசினார். முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

    முன்னதாக ஈ.சி. பிட்னஸ் பயிற்சியாளர் இம்மானுவேல் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னர்களாக தொழிலதிபர்கள் பரமேஸ்வரன், ஜெபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் செயல் விளக்க காட்சிகளாக போதை இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் உடல் வலிமை யுடனும், மன வலிமையுடனும் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

    மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், ட்ராவல் பேக் மற்றும் டி-ஷர்ட் வழங்கப்பட்டது. முடிவில் ஜெபதிலகர் நன்றி கூறினார்.

    ×