என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாரத்தான் போட்டி: நாளை அதிகாலை 3.00 மணி முதல் மெட்ரோ ரெயில் இயக்கம்
- சென்னையில் நாளை அதிகாலை 4.45 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.
- அதிகாலை 3 மணி முதல் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
இந்திய கடற்படையை போற்றும் விதமாக கடற்படை சார்பில் சென்னை நேப்பியர் பாலம் அருகே முதன்முறையாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாளை அதிகாலை 4.45 மணி தொடங்கி 6.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், மாரத்தானில் பங்கேற்பவர்களின் வசதிக்காக நாளைய தினம் அதிகாலை 3 மணி முதல் காலை 5 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதே வேளையில், எம்.ஜி.ஆர். சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை (கோயம்பேடு வழியாக) நேரடி ரெயில் சேவை காலை 3 மணி முதல் 5 மணி வரை இயக்கப்படாது என்றும், இந்த நேரங்களில் பயணிகள் எம்.ஜி.ஆர். சென்டிரல் (கிண்டி வழியாக செல்லும் ரெயில்களில்), ஆலந்தூர் அறிஞர் அண்ணா மெட்ரோ நிலையங்களில் வழித்தடங்களை மாற்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






