என் மலர்tooltip icon

    இந்தியா

    உலகின் மிக வயதான மாரத்தான் வீரர்.. 114 வயதில் சாலை விபத்தில் மரணம்
    X

    உலகின் மிக வயதான மாரத்தான் வீரர்.. 114 வயதில் சாலை விபத்தில் மரணம்

    • The Turbaned Tornado என்ற பெயரில் குஷ்வந்த் சிங் எழுதியுள்ளார்.
    • பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, பௌஜா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்று அறியப்படுபவர் பௌஜா சிங் (Fauja Singh). இவருக்கு வயது 114.

    இவர் திங்கள்கிழமை, பஞ்சாபில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அடையாளம் வாகனம் மோதி உயிரிழந்தார்.

    விபத்தில் படுகாயமடைந்த அவர், ஜலந்தரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவை எழுத்தாளர் குஷ்வந்த் சிங் உறுதிப்படுத்தியுள்ளார் .

    பௌஜா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை "தி டர்பண்ட் டோர்னாடோ" (The Turbaned Tornado) என்ற பெயரில் குஷ்வந்த் சிங் எழுதியுள்ளார்.

    பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, பௌஜா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×