என் மலர்
நீங்கள் தேடியது "பெண்கள் பாதுகாப்பு"
- தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
- பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க் கட்சிகளும்!
ஒரு குற்றம் நடந்தவுடனே அதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அற்பப் புத்தியோடு செயல்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் அரைவேக்காட்டுத்தனத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது கோவை நிகழ்வு.
கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் அதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று உண்மை நிலை தெரிவதற்கு முன்பே முந்திரிக் கொட்டையாக வந்து அயோக்கியத்தனமான அறிக்கையை வெளியிட்டார் 'பச்சைப் பொய்' பழனிசாமி. கோவை நிகழ்வில் காவல்துறை தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. அந்தச் சம்பவம் குடும்பத் தகராறில் ஏற்பட்டது என தெரிய வந்தது. "என்னை யாரும் கடத்தவில்லை" என அந்தப் பெண் வீடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இதே போல நேற்றைய முன்தினம் இரவு காணாமல் போன கண்ணகி நகர் மாணவியைத் தனிப்படை அமைத்து காலை 6.30 மணிக்கே காவல்துறை மீட்டு வீட்டில் ஒப்படைத்துவிட்டது. உண்மைகள் இப்படியிருக்கத் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அவர்களது பாதுகாப்பில் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுக்காது. அது திரும்பத் திரும்ப நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
- திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.
- விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, Is Tamil Nadu Safe For Women? என்ற தலைப்பில் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. மேலும், சென்னை கண்ணகி நகரில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளை பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக Compromise செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.
எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்.
திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
- எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுக-வின் சாதனை!
தேசத்தையே உலுக்கச் செய்த கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து மூன்று நாட்களுக்கு உள்ளாகவே கோவை இருகூரில் அலறல் சத்தத்துடன் ஒரு பெண் கடத்தப்படும் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படாமல், உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடத்தப்பட்ட பெண்ணை மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
விமான நிலையம் அருகில் பாலியல் வன்கொடுமை, பரப்பரப்பான சாலையில் கடத்தல் எனக் கோவையில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
திறனற்ற நிர்வாகத்தையும், சீரழிந்த சட்டம் ஒழுங்கையும் வைத்துக் கொண்டு எத்தனைக் குற்றவாளிகளைச் சுட்டுப் பிடித்து பெண்களைக் காப்பாற்ற போகிறீர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அரசை நாடு போற்றும் நல்லாட்சி என்று கூறும் அவலத்தை வேறு கேட்க நேருவது பெரும் சாபக்கேடு! என கூறியுள்ளார்.
- மழைக்காலங்களில் ஹை ஹீல்ஸ் காலணிகளுக்கு நிச்சயம் விடுமுறை கொடுங்கள்.
- மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள்.
மாற்றம் தரும் மழைக்காலம் நகரமெங்கும் மென்மையாகப் படர்ந்து, பூமியைத் தழுவும் இந்த இனிய சூழலில், அலுவலகம் செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பு விதிகளை சற்று மெருகூட்டுவது அவசியம். இது அச்சப்பட வேண்டிய செய்தி அல்ல, மாறாக, அதிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியதன் அறைகூவல் ஆகும்! நம்முடைய நவீனத் தோழிகளுக்காக, மழையை எதிர்கொள்ளும் சில தனித்துவமான, புத்திசாலித்தனமான பாதுகாப்பு மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒரு செய்தி கட்டுரையாக மட்டும் கருதாமல், உங்கள் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான பகுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
அடிப்படைத் தேவைகள்
முதலில், காலணிகள் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் விலை உயர்ந்த ஹை ஹீல்ஸ் காலணிகளுக்கு இந்த சீசனில் நிச்சயம் விடுமுறை கொடுங்கள். நீங்கள் எடுக்க வேண்டிய முதல் மற்றும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை என்னவென்றால், வழுக்காத ரப்பர் அல்லது பிளாஸ்டிக் அடிப்பாகம் கொண்ட, நீர்ப்புகாத காலணிகளைத் தேர்ந்தெடுப்பது தான். சாலையில் தேங்கும் சேறு, சகதி ஆகியவற்றில் தடுமாறாமல், உங்கள் பாதங்களுக்கு அசைக்க முடியாத பிடியைக் கொடுக்கும் இந்தக் காலணிகள், உங்களைப் பாதுகாப்பாக நிலத்தில் நிலைநிறுத்த உதவும். இது நாகரிகம் குறைவானது என்று நினைக்க வேண்டாம்; இது விவேகத்தின் மிக முக்கியமான அடையாளம்.
அடுத்து, உங்கள் குடை ஒரு பாதுகாப்பு சாதனமாகவும் செயல்பட வேண்டும். மழையில் குடை என்பது வெறும் நனைவதில் இருந்து உங்களைக் காக்கும் சாதனம் மட்டுமல்ல; அது உங்கள் பாதுகாப்புக்கான வெளிச்சமாகவும் இருக்க முடியும். அடர் நீலம், நியான் பச்சை, ஆரஞ்சு போன்ற கண்ணைக் கவரும் பிரகாசமான வண்ணங்களில் குடைகளைத் தேர்ந்தெடுங்கள். மழையின் போதும், மப்பும் மந்தாரமுமாக இருக்கும் நேரங்களிலும், வாகன ஓட்டிகள் உங்களை வெகு சுலபமாக கவனிக்க இந்த வண்ணங்கள் உதவுகின்றன. உங்கள் குடை, நீங்கள் பாதுகாப்பாகப் பயணிக்கிறீர்கள் என்பதைப் பறைசாற்றும் ஒரு பிரகாசமான ரேடார் சிக்னலாக இருக்கட்டும்.
பாதுகாப்பே பிரதானம்
அலுவலகம் செல்லும் பெண்கள் தங்கள் கைப்பைக்குள் பல அத்தியாவசியப் பொருட்களை வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த மழைக்காலத்தில் உங்கள் பையை ஒரு 'நடமாடும் பாதுகாப்பு மையம்' போல மாற்றுங்கள். உங்கள் அவசரப் பையினுள் கைபேசி, அதன் பவர் பேங்க் இவற்றை மழையிலிருந்து எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்க ஒரு பிளாஸ்டிக் கவர் மற்றும் சிறிய அளவிலான ஆனால் கூர்மையான பாதுகாப்பு பொருள் ஆகியவற்றை உடனே கைக்கெட்டும் தூரத்தில் வையுங்கள். இவை மற்ற பொருட்களுக்கு அடியில் புதைந்திருக்காமல், அவசர காலத்தில் மின்னல் வேகத்தில் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும். காரணம் இந்த மழைக்காலத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில விஷமிகள் நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.

கண்ணைக் கவரும் பிரகாசமான வண்ணங்களில் குடைகளைத் தேர்ந்தெடுங்கள்
அதேபோல் நீங்கள் வெளியே புறப்பட்டவுடன் அல்லது பயணத்தின் கடினமான பகுதி தொடங்கும் முன், உங்கள் மொபைலில் உள்ள 'லைவ் லொகேஷன்' வசதியைத் ஆன் செய்து, உங்கள் குடும்ப உறுப்பினர் மற்றும் ஒரு நெருங்கிய நண்பருக்கு உடனடியாகப் பகிருங்கள். நீங்கள் பத்திரமாக வீடு சென்றடையும் வரை, உங்கள் இருப்பிடத்தை யாரோ ஒருவர் கவனித்து வருகிறார் என்ற உணர்வே உங்களுக்குப் பெரும் பலத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.
கவனம் மிக அவசியம்
மழைக்காலத்தில் சாலையில் தேங்கியுள்ள நீரின் ஆழம் தெரியாது. ஆகவே, பார்க்க முடியாத இடத்தில் ஒருபோதும் கால் வைக்காதீர்கள். உங்கள் குடையை ஒரு 'ஊன்றுகோலாக' பயன்படுத்தி, தண்ணீரில் மெதுவாக ஊன்றிப் பார்த்து, அதன் அடியில் பள்ளங்கள், குழிகள் அல்லது திறந்திருக்கும் பாதாளச் சாக்கடைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சிறு முயற்சி உங்களைப் பெரிய விபத்துகளில் இருந்து நிச்சயம் காக்கும். மேலும், மின்சாரக் கம்பிகள் அருகில் தேங்கியுள்ள நீர், கண்ணுக்குத் தெரியாத மின்சாரக் கடத்தியாக இருக்கலாம்; அதைத் துளியும் அண்டாமல் விலகிச் செல்லுங்கள்.
கடைசியாக, ஆரோக்கியமே உங்கள் கவசம். மழைக்காலம் தொற்றுநோய்கள் பெருகும் நேரம் என்பதால், வெளியில் கிடைக்கும் அசுத்தமான தண்ணீரை நம்பி இருக்காமல், எப்போதும் வீட்டிலேயே தயாரித்த வெண்ணீர் அல்லது மூலிகை தேநீர் நிரப்பப்பட்ட தெர்மோஸ் குவளையை எடுத்துச் செல்லுங்கள். இது உங்களை வெப்பமாக வைத்திருக்க உதவுவதுடன், பிற இடங்களில் கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான தண்ணீரைத் தவிர்க்க ஒரு நல்ல காரணமாகவும் அமையும். உங்கள் உடலின் ஆரோக்கியமே உங்கள் ஆகப் பெரிய சொத்து. இந்த எளிய, ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு ஆலோசனைகளைக் கடைப்பிடித்து, மழையின் அழகை விவேகத்துடன் கொண்டாடுங்கள்!
- பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன.
- விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
புதுடெல்லி:
ஆண்களுக்கு நிகராக அனைத்து வேலைகளையும் செய்யக்கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள்.
பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளித்துறை வரை சாதனை படைத்து வருகிறார்கள்.
ஆனாலும், பணியிடங்களில் பாதுகாப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் ஒன்று. பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், விரிவான நகர்ப்புற அமைப்பு மற்றும் பாதுகாப்பான சூழல் ஆகிய வசதிகள் கிடைக்க பெறுவது அவசியம்.
இந்நிலையில், இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்றை உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியாகியது. ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3ம் இடத்திலும் உள்ளன.
இந்தப் பட்டியலில், தமிழ்நாடு 4ம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்பது ஓர் அளவீடு என்ற அளவில் இல்லாமல் கல்வி, வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கான பிரதிபலிப்பாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்பான சூழல், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஆகியவை அந்த இடங்களை நோக்கி பெண்கள் படையெடுக்க வழிவகுக்கிறது என தெரிவிக்கின்றது.
- தவெக பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.
- சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார்.
தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரம் முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது.
சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சிகளில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளி தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்து வழங்குவார் என கூறினார்.
சுசித்ராவின் குற்றச்சாட்டிற்கு விஜய் அமைதியாக இருக்கிறார். காவல் துறையும் விஜய் மீதும், நடிகை த்ரிஷா மீதும் விசாரணை நடத்தாதது ஏன்?
இப்படி ஒரு சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து போதைப் பொருள் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
- ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.
- சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது.
வேலை வாய்ப்புகள் அரிதான இக்காலத்தில் ஏரளமான சிறுதொழில் களுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. சிறுதொழில் செய்வது என்று முடிவெடுத்து விட்டால் ஆரம்பத்தில் அதிக லாபம் எதிர்பார்க்க இயலாது. லாபமானது சிறிது சிறிதாக அதிகரிக்கும். அதே போல் உங்கள் சக்திக்கு ஏற்ற ஒரு சிறுமுதலீட்டில் உங்களுக்கு விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். உங்கள் லாபமானது உங்கள் பொருள்களின் தரம், உங்களின் சேவையின் நிலைப்பு தன்மை, வாடிக்கையாளர்களை நீங்கள் நடத்தும் விதம், போன்றவற்றால் உங்களின் லாபம் அதிகரிக்கும்.
சரி உங்களக்கு உங்கள் விருப்பமான சிறுதொழில் என்னவென்று தெரியவில்லையா.கீழ் கொடுக்கப்பட்ட பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
உணவு பொருள் சிறுதொழில்:
1.மசாலா பொடி தயாரிப்பு
2.ஊறுகாய் தயாரிப்பு
3.பிஸ்கட்டுகள் மற்றும் பன் தயாரிப்பு
4.ஜாம் தயாரிப்பு
5.சிப்ஸ் தயாரிப்பு
6.அப்பளம் மற்றும் வத்தல் தயாரிப்பு
7.மிட்சேர் போன்ற சிற்றுண்டி தயாரிப்பு
8.சிறு உணவகம்
9.டீ கடை
10.ஜூஸ் கடை
11.சிற்றுண்டி விற்பனை கடை
12.இட்லி மாவு மற்றும் தோசை மாவு தயாரிப்பு
சிறு விற்பனை தொழில்கள்:
13.ஆடைகள் விற்பனை (பெண்கள் ஜாக்கெட் துணி ,சேலை மற்றும் பெட்டிகோட் வீடு, வீடாக சென்று விற்பனை செய்யலாம்).
14.சிறு பாத்திரங்கள் விற்பனை,
15.அழகு சாதன பொருள்கள் விற்பனை
16.கைக்கடிகாரம் மற்றும் பெல்ட் விற்பனை
17.வீட்டுக்கு தேவையான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை
18.பூ காய்கறி மற்றும் பழ விதைகள் விற்பனை
19.பழம் விற்பனை
20.காய்கறி விற்பனை
ஆபீஸ்களுக்கு எழுதுபொருள் விற்பனை
பண்ணை சிறு தொழில்கள்:
21.முயல் வளர்ப்பு
22.கோழி மற்றும் காடை வளர்ப்பு
23. தேனீ வளர்ப்பு
24.ஆடு வளர்ப்பு (ஆரம்பத்தில் ஒரு ஜோடி வாங்கினால் நல்லது )
மேற்கண்ட பண்ணை தொழில்கள் முறையான பயிற்சி பெற்ற பின் செய்தால் நல்லது. இது போன்ற பல தொழிகள் நம்மை சுற்றியுள்ளன. அவற்றில் உங்களின் விருப்பமான சிறுதொழிலை தேர்ந்தெடுத்துக்கொள்வது முதல் படி. இரண்டாவது அந்த சிறுதொழிகளுக்கான மூலப்பொருள்கள் கிடைக்குமிடங்களை தெரிந்து கொள்வது .
மூன்றாவது அந்த சிறுதொழில்களுக்கான கருவி முதலீடுகளை குறைத்தல். இப்போது நீங்க மசாலா தயாரிப்பு நிறுவனம் நடத்த போகிறீர்கள் என்றால் மசாலா அரைக்கும் கருவியை உடனே வாங்கிவந்து விட கூடாது. ஒரு வருடமாவது கடைகளில் அரைத்து விற்பனை செய்து அதில் வரும் லாபத்தைக்கொண்டு கருவிகளை வாங்கவேண்டும்.
நான்காவது உங்கள் தொழில் மேம்பட தினமும் 5 முக்கிய வேலைகளை ஒவ்வொன் றாக செய்ய வேண்டும். முக்கியமற்ற வேலை களை பின்பு நேரம் இருந்தால் செய்யலாம்.
ஐந்தாவது மனக்காட்சி படுத்துதல் உங்களால் இத்தொழிலை சாதிக்க முடியும் என நம்புவது. சுருக்கமான சொல்ல வேண்டுமானால் உங்களின் படைப்பு திறனை முடிவாகிவிடுதல். 20 நிமிடம் கண்களை மூடி கொண்டு நீங்கள் உங்கள் தொழிலில் அதிக பட்சமாக உங்கள் சாதிக்க முடிந்தால் என்ன என்ன மாற்றங்கள் நிகழும். உங்கள் நிறுவன கணக்கில் ஏராளமான பணம், கார் பங்களா, வெளிநாடு சுற்றுலா மற்றும் பண்ணை வீடு போன்றவற்றை மனக்காட்சி படுத்த வேண்டும்.
- இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன.
- சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் வீட்டு வேலைகளில் பங்கெடுத்து செய்வதோடு வேலைகளை எளிதாக முடிக்க விருப்பப்படுகிறார்கள். இவர்களுக்காகவே இப்பொழுது புதுமையான பல சமையலறை உபகரணங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக வந்திருக்கின்றன என்றால் சற்று யோசிக்கத் தோன்றுகிறது அல்லவா. என்னதான் சமையல் வேலைகளில் ஆண்கள் பங்கெடுத்தாலும் மாவு அரைப்பது, சப்பாத்தி போடுவது போன்ற வேலைகளை செய்யத் தயங்குவார்கள். அதுபோன்ற வேலைகளையும் எளிதாக செய்வதற்கென்றே புதுமையான உபகரணங்களை பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன…
* இப்பொழுது வந்திருக்கும் மாவு அரைக்கும் கிரைண்டர்கள் இடத்தையும், நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்தும் விதத்தில் இருக்கின்றன என்றால் நம்ப முடிகின்றதா. ஆமாம்., இந்த புதுமையான கிரைண்டர்கள் இடத்தை அடைக்காதவாறு மிகச் சிறிய இடத்திலும் வைத்துக் கொள்வது போல் மோட்டருக்கு மேலேயே மாவரைக்கும் பாத்திரமானது இருப்பது போல் வடிவமைத்திருக்கிறார்கள்.. இதில் அரிசி மற்றும் உளுந்தைப் போட்டுவிட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடியை போட்டு மூடி கிரைண்டரை இயக்க வேண்டும்.. இடையில் தண்ணீர் தேவைப்பட்டால் மூடியின் மேற்புறத்தில் இருக்கும் சிறிய துளை வழியே தண்ணீரை ஊற்றிக் கொள்ளலாம். அதேபோல் மாவு அரைத்து முடித்தபிறகு நாம் கைகளால் மாவை அள்ள வேண்டிய அவசியமே இல்லை..
இந்த கிரைண்டரில் மாவரைக்கும் பாத்திரம் சுற்றாமல் அதன் உள்ளிருக்கும் கற்கள் மட்டும் சுற்றுவதுபோல் வடிவமைத்திருக்கிறார்கள்..இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அரைக்கும் மாவானது சூடாவது தவிர்க்கப்படுகின்றது..இதனால் இட்லி கூடுதல் மிருதுவாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகின்றது..மாவரைக்கும் பாத்திரத்திலேயே கீழ்ப்புறத்தில் மாவு வெளியேறுவதற்காக ஒரு துளையானது கொடுக்கப்பட்டுள்ளது.. மாவு அரைத்து முடித்தபிறகு அந்த துளையின் மூடியை அகற்றி பாத்திரத்தில் இருக்கும் மாவை கைகளில் தொடாமலேயே மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றிவிட முடியும்.. அதேபோல் அந்த மாவு பாத்திரத்தை கழுவுவதற்கும் மேற்புறத்தில் தண்ணீரை ஊற்றி கிரைண்டரை இயக்கினால் அது நன்றாக சுத்தமாகி அந்த தண்ணீரும் துளை வழியாக வெளியேறிவிடும். சாதாரண கிரைண்டர்கள் இயங்கும் அந்த நேரத்திலேயே மிகவும் அருமையாக மாவை அரைத்துத் தரும் இந்த புதுமையான கிரைண்டரை விரும்பாதவர்கள் இருக்க முடியாது.ஆண்கள்,உடல்நிலை முடியாதவர்கள் மட்டுமல்லாது வயதானவர்களும் இந்த கிரைண்டரை எளிதாக உபயோகிக்கலாம்..
*சாதத்தை வடித்து சாப்பிடுபவர்களுக்கென்றே கஞ்சியை தனியாக வடிப்பது போன்று குக்கர்களும் வந்திருக்கின்றன.இந்த குக்கர் மூடியில் மேற்புறத்தில் தண்ணீர் குழாய் போன்று கொடுக்கப்பட்டுள்ளது. மூடியின் உட்புறம் நீளமான ஸ்ட்ரா போன்ற அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.இதன் வழியாக சாதத்தில் இருக்கும் கஞ்சி மூடியின் வெளிப்புறம் கொடுக்கப்பட்டுள்ள குழாயின் வழியாக வெளியேறிவிடும். இந்தக் குழாயின் மேற்புறத்தில் ஒரு சிறிய திருகு மூடி ஒன்று இருக்கின்றது. இந்த திருமுடியை திறப்பதன் மூலம் சாதத்தில் இருக்கும் கஞ்சி வெளியேற்றப்படுகிறது.. நம் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் இந்த குக்கர்களை விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள்..
*வீட்டிலேயே நம் வசதிக்கேற்ப எண்ணையை அரைத்துக் கொடுக்கும் இயந்திரங்களும் மிகவும் கச்சிதமான அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அரைக்கிலோ வேர்க்கடலையைக் கூட இந்த இயந்திரத்தில் போட்டு சுத்தமான எண்ணெயை எடுக்க முடியும் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு.. இந்த எண்ணெய் இயந்திரத்தின் மேற்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் அரைக்க வேண்டிய எள், வேர்க்கடலை,தேங்காய்,பாதாம், சூரியகாந்தி விதை என எவற்றை வேண்டுமானாலும் ஒருமுறை அரைப்பதற்கு அரை கிலோ என்ற அளவில் போடமுடியும்.இயந்திரத்தின் உள்ளே செல்லும் இவை எண்ணை தனியாகவும் சக்கை தனியாகவும் பிரித்து வெளியேற்றப்படுகின்றது.நம் கண்ணெதிரிலேயே மிகவும் சுத்தமாகவும் நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடியதுமான இந்த எண்ணை அரைக்கும் இயந்திரம் ஒவ்வொருவரது சமையலறையிலும் இருக்கவேண்டிய தவிர்க்கமுடியாத உபகரணம் என்று சொல்லலாம்.வாரத்திற்கு ஒரு முறை நம் வீட்டிற்குத் தேவையான எண்ணெயை நாமே அரைத்துக் கொள்ளலாம். அழகான வடிவமைப்புடன் இருக்கும் இந்த இயந்திரம் இடத்தை அடைக்காமல் இருப்பதுபோல் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
*சாதாரண டேபிள் டாப் கிரைண்டரின் வடிவத்தில் சப்பாத்தி தேய்த்துக் கொடுக்கும் இயந்திரம் விற்பனையில் உள்ளது என்றால் நம்ப முடிகின்றதா? இந்த இயந்திரத்தில் சப்பாத்தி தேய்க்கும் கல் மற்றும் பூரிக்கட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. சப்பாத்தி தேய்க்கும் கல்லின் மீது வட்ட வடிவில் உறுதியான, மெலிதான பிளாஸ்டிக் தாள்கள் இருக்கின்றன.சப்பாத்தி உருண்டையை உருட்டி இரண்டு பிளாஸ்டிக் தாள்களின் இடையில் வைத்து அதன்மீது பூரி கட்டையை பிரஸ் செய்து இந்த இயந்திரத்தை இயக்கினால் பூரி கட்டையில் இருக்கும் இரண்டு உருளைகளும் எதிரெதிர் திசையில் இயங்கி சப்பாத்தியை மிகவும் மெல்லியதாக திரட்டித் தருகின்றன..ஐந்து நபர்கள் வரை இருக்கும் குடும்பத்திற்கு இந்த சப்பாத்தி திரட்டும் இயந்திரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.இப்பொழுது சொல்லுங்கள் இந்த இயந்திரம் வீட்டில் இருந்தால் ஆண்களும் எளிதாக பூரி மற்றும் சப்பாத்தி செய்ய முடியும் தானே?
*சமையலறையில் சமைக்கும் பொழுது ஃபேனை இயக்கினால் கேஸ் அடுப்பு அணைந்து விடும்.. எனவே பெரும்பாலான நேரங்களில் வேர்த்து விறுவிறுத்து தான் எந்த ஒரு வேலையையும் செய்ய முடிகின்றது. இதனால் சீக்கிரமாகவே சோர்வு ஏற்பட்டு விடுகின்றது..இதுபோன்ற சோர்வு ஏற்படாமல் புத்துணர்ச்சியுடன் சமையலறையில் இருப்பதற்காகவே பிரத்தியேகமாக ஃபேன் களை வடிவமைத்திருக்கிறார்கள்.. இந்தப் ஃபேன்களை அடுப்பின் அருகிலேயே வைத்து இயக்கினாலும் அவை அடுப்பை அணைக்காமல் அதே நேரத்தில் நமக்கும் குளுமையான காற்றை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் உயரத்தை நமக்கு ஏற்றவாறு ஏற்றி இறக்கிக் கொள்ள முடியும்.சீலிங் ஃபேனிற்கு மாற்றாக வந்திருக்கும் இந்த ஃபேன்களை சமையலறையில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்
* ஏசி பொருத்த முடியாத இடங்களிலும் வைத்துக் கொள்வது போல் போர்ட்டபிள் ஏசியை வடிவமைத்து விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்த சிறிய வகை ஏசியை சமையலறை, படுக்கை அறை, அலுவலக அறை என எங்கு வேண்டுமானாலும் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் நம்முடனேயே எடுத்துச் செல்ல முடியும்.சிறிய ஏர் கூலர் வடிவில் இருக்கும் இந்த போர்ட்டபிள் ஏசி அதிகப்பட்ச குளிர்ச்சியை கொடுக்கின்றது.. இந்த ஏசியின் அடிப்புறத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு வசதியாக சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- எந்த இடங்களிலும் ரகசிய கேமராக்களை வைக்கமுடியும்.
- முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான்.
கதவுகள், சுவரின் ஒரு மூலை, அறையின் மேற்கூரை, சுவர் கடிகாரம், மின் விளக்கு, புகைப்பட ஃப்ரேம்கள், டிஷ்யூ பெட்டிகள், பூக்குவளை, பூச்செண்டு, புகை கண்டறியும் கருவிகள் இப்படி முன்புறம் ஒரு சிறுதுளை, அதன்பின்னால் ஒரு பேட்டரியோ அல்லது வயரோ செல்வதற்கான இடம் இவை இருக்கும் எந்த இடங்களிலும் ரகசிய கேமராக்களை வைக்கமுடியும். இதில் முக்கியமாக நாம் கவனிக்கவேண்டியது கண்ணாடியைத்தான். ஏனென்றால் இதுதான் அநேகமான கிட்டதட்ட அனைத்து இடங்களிலுமே இருக்கிறது. ட்ரெயல் ரூம்களிலுள்ள ஆளுயரக்கண்ணாடியை கண்டிப்பாக நாம் சோதிக்கவேண்டும். ஏனென்றால் நமக்கு அது பிரதிபலிக்கும் கண்ணாடியாக தெரிந்தாலும், அதன்பின்னணியில் இருப்பவர்கள் நமது செயல்களை கவனிக்கமுடியும்.
உங்களுக்கு கண்ணாடியின் மீது சந்தேகம் எழுந்தால் உடனே அதன் அருகில் சென்று உங்கள் விரலை கண்ணாடியில் வைக்கவும். உங்கள் விரலுக்கும், கண்ணாடியின் பிரதிபலிப்பிற்கும் இடைவெளி இருந்தால் அது உண்மையான கண்ணாடி. இடைவெளி இல்லாமல் இரண்டும் ஒட்டி இருந்தால் அது பொய்யான கண்ணாடி அதன் பின்னணியில் ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்னொன்று சில கேமராக்கள் இரவிலும் செயல்படக்கூடியதாக இருக்கும் அதனால் அதனைச்சுற்றி எல்.ஈ.டி. விளக்குகள் எரிந்துகொண்டு இருக்கும். நீங்கள் அறையின் விளக்கை அணைத்தால் அது தெரிய வாய்ப்பிருக்கிறது.
பெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அங்கு சில அயோக்கியர்களால் அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்கு புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்.
முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் செல்போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் செல்போனில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில் உள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள். இப்போது புகைப்படத்தை கவனியுங்கள். ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும். இதை வைத்து அறையினுள் ரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை அறியலாம்.
"ஹிட்டன் கேமரா டிடெக்டர்" (hidden camera detector) என்ற ஒரு ஆப் உள்ளது. இதன்மூலமும் கண்டறியலாம். இந்த ஆப்பை முழுமையாக நம்ப முடியாது என்றாலும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்டதுதான். இப்படியான வழிகளைக்கொண்டு நாம் கண்டறியலாம்.
- பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டம்.
- ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது முத்திரை பதித்து இருக்கக்கூடிய திட்டம்தான், புதுமைப்பெண் திட்டம்.
ஏற்கனவே பெண்களுக்காக நடைமுறையில் இருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டது. அந்த திட்டத்தின்படி, 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, தொழிற்படிப்புகளில் இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கில் மாணவிகளுக்கு ரூ.1,000 மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டிலேயே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.698 கோடியை தமிழக அரசு ஒதுக்கி, அரசாணையையும் வெளியிட்டது.
புதுமைப்பெண் திட்டம்
இந்த திட்டத்தில் பயன்பெற அரசு பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் 2, 3, 4-ம் ஆண்டுகளில் படிப்பை தொடரும் மாணவிகள் விண்ணப்பிக்க முதலில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாணவிகள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவிகளிடம் 6 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்ததற்கான சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவை கேட்டு பெறப்பட்டது.
அவ்வாறு விண்ணப்பித்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வரும் 1 லட்சத்து 13 ஆயிரம் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில்தான் இதற்கு புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டது.
3-வது தவணையாக...
விண்ணப்பித்து தகுதியான மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1,000 உதவித்தொகை சென்றடையும் வகையில், அனைத்து செயல்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் இணைய வழியில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன்படி, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதில் இருந்து தற்போது 3-வது தவணையாக ரூ.1,000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது முதலாம் ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து இருக்கும் மாணவிகளும், ஏற்கனவே 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படித்து வந்து இந்த திட்டத்தில் சேராதவர்களும் வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
- தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.
செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனை பெறுதல் என்பது மிக அவசியம். மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.
தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.
தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.
சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே, எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே, தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது.
முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.






