என் மலர்
நீங்கள் தேடியது "Sub Inspector"
- தேனி ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றியவர் கொடைக்கானல் விடுதியில் மாரடைப்பால் இறந்தார்.
- கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
தேனி ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றியவர் பாஸ்கரன் (வயது 56). இவருக்கு திருமணமாகி நாகஜோதி என்ற மனைவியும், ஜெகதீஸ் (23) என்ற மகனும், பிரியதர்ஷினி (22) என்ற மகளும் உள்ளனர்.
பாஸ்கரன் தனது நண்பரான லெனின் என்ப வருடன் கொடைக்கா னலுக்கு சென்றார். இவர்கள் அங்குள்ள தனது நண்பர்களை சந்தித்து விட்டு நாயுடுபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார்.
மறுநாள் காலையில் லெனின் எழுந்து தனது நண்பர் பாஸ்கரனை எழுப்பினார். அப்போது அவர் அசைவற்ற நிலையில் கிடந்தார். உடனே விடுதி ஊழியர்களுடன் சேர்ந்து பாஸ்கரனை கொடைக்கா னல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மார டைப்பால் உயிரிழந்திரு க்கலாம் என தெரிவித்தனர்.
- நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
- 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.
நெல்லை:
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு 6,909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வில் ஆண்கள் 4,312 பேரும், பெண்கள் 1,304 பேரும் என மொத்தம் 5,616 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வுக்கு விண்ணப் பித்ததில் 1,293 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று காவல்துறையில் முதல் நிலை மற்றும் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களாக பணிபுரிந்து 5 வருடங்கள் நிறைவு பெற்ற போலீஸ்காரர்களுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு நடைபெற்றது.
எஸ்.பி. ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 725 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் இந்த தேர்வினை எழுதுவதற்கு 170 பேர் வரவில்லை. தேர்வு பாளையில் உள்ள ஜான்ஸ் கல்லூரி மையத்தில் இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் நேரில் ஆய்வு செய்தார்.
- எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.
- 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.
கடலூர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 750 பணியிடங்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் (தாலுக்கா, ஆயுதப்படை, மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மற்றும் நிலை அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைபள்ளி, செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.
முன்னதாக தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வந்தனர். பின்னர் அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தினர். தொடர்ந்து தேர்வு மையங்களை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு இன்று மதியம் நடைபெற உள்ளது.
- நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக 7 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
- தேர்வையொட்டி மொத்தம் 586 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளனர்.
நெல்லை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது. இதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக பாளை ஜான்ஸ் கல்லூரி, ஜான்ஸ் பள்ளி, சேவியர் பள்ளி உள்பட 7 பள்ளிகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நேற்றே முடிக்கப்பட்ட நிலையில் இன்று காலை எழுத்துத்தேர்வு நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்து இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 909 பேர் விண்ணப்பித்து இருந்தனர். காலை 10 மணி முதல் 12.30 மணி வரை மெயின் தேர்வும், மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தேர்வும் நடைபெற்றது. தேர்வர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.இதனையொட்டி மாவட்டத்தில் உள்ள 7 மையங்க ளிலும் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வையொட்டி மொத்தம் 586 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்ப ட்டுள்ளனர். கடுமையான பரிசோதனை களுக்கு பின்னரே தேர்வறை க்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் தென்காசி மஞ்சம்மாள் பெண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்பட 6 இடங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த தேர்வு மையங்களில் இன்று காலை முதலே தேர்வர்கள் குவிந்தனர். ஆண்கள், பெண்கள் என மொத்தம் 4,311 பேருக்கு தேர்வெழுத அழைப்பாணை விடுக்கப்பட்டு இருந்தது.
தேர்வுக்காக வந்திருந்த தேர்வர்கள் அழைப்பு கடிதம் இருந்தால் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் தேர்வறைக்குள் செல்லும்போது புகைப்ப ட்டத்துடன் கூடிய அடையாள அட்டை, பரீட்சை அட்டை, ஊதா அல்லது கருமை நிற பேனாவை தவிர வேறு எந்த பொருளையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வுக்காக 5,144 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த எழுத்து தேர்வு தூத்துக்குடி மாவட்டத்தில் பி.எம்.சி மெட்ரிகுலேசன் பள்ளி, காமராஜ் கல்லூரி, இன்னாசிபுரம் புனித தாமஸ் மேல்நிலை பள்ளி மற்றும் சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெற்றது.
இதனையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது. முன்னதாக நேற்று தேர்வு மையங்களை தேர்வு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி யாக நியமிக்கப்பட்டுள்ள நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தேர்வு அறைக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் எதுவும் எடுத்துச்செல்ல தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
- தேர்வு எழுதும் நபர்களை காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர்.
- தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
திருவள்ளூர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு பல்வேறு பிரிவுகளில் உள்ள 621 காலியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெறுகிறது.
இதற்கான எழுத்து தேர்வு திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 3 மையங்களில் நடைபெற்றது.
இதில் காக்களூர் சி, சி, சி இந்து மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 1300 பேரும், திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் 1075 ஆகிய இரண்டு மையங்களில் ஆண்களும், திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி.சி மேல்நிலை பள்ளியில் 558 பெண்களும் மொத்தம் 3 மையங்களிலும் இந்த தேர்வில் 2 ஆயிரத்து 933 பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுதும் நபர்களை காலை 8.30 மணிக்கு தேர்வு மையத்துக்குள் அனுமதித்தனர். மேலும் ஆதார் அட்டையை சரிபார்த்து அனுமதித்தனர்.
மேலும் தேர்வாளர்கள் கொண்டு வந்த கை பை, புத்தகங்கள், செல்போன் மற்றும் செல்போன், கால்குலேட்டர், புளுடூத் போன்ற மின்சாதன பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு மையங்களுக்கு காலை 10 மணிக்கு பிறகு வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
இந்த தேர்வு பணிக்காக 3 தேர்வு மையத்திற்கு அமலாக்கத்துறை காவல்துறை தலைவர் ராதிகா மேற்பார்வையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கந்தன், கிரியாசக்தி உள்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
- சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.
சேலம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு வரும் 26, 27-ந் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வு 7 மையங்களில் நடக்கிறது. இதில்8 ஆயிரத்து 95 ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வுக்கான ஏற்பாடு களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.பி. அருண் கபிலன் தலைமையிலான போலீசார் செய்து வரு கிறார்கள். இந்த நிலையில் காரிப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மின்னாம்பள்ளியில் உள்ள மகேந்திரா பொறியியல் கல்லூரியின் தேர்வு மையத்தை மாற்றி மாவட்ட காவல் துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரியில் தேர்வு எழுத அனுமதி சீட்டு பெற்ற 1000 விண்ணப்ப தாரர்களும் அம்மையத்தின் எதிரில் உள்ள ஏ.வி.எஸ். கல்லூரி மையத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர்.
எனவே மகேந்திரா என்ஜினீயரிங் கல்லூரி மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் சின்னகவுண்டா புரத்தில் உள்ள ஏ.வி. எஸ். கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் தேர்வு எழுத வருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என சேலம் மாவட்ட போலீஸ் சூபப்பிரண்டு அருண்கபிலன் தெரிவித்துள்ளார்.
- சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
- சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் சின்னதிருப்பதி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 53). இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு சர்க்கரை மற்றும் சிறுநீரக நோய் இருந்து வந்தது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். அவரது உடலுக்கு சேலம் மாநகர போலீசார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
- நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி யில் கார்த்திக் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.
- நேற்று அவரது வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில் எங்ககிட்ட மோதாதே, செத்துருவ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி யில் கார்த்திக் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். இவர் அங்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அவரது வீட்டிற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், அரிவாள் படம் வரைந்து, எங்ககிட்ட மோதாதே, செத்துருவ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்தில் அனுப்புனர் முகவரி இல்லை.
போலீசாரை மிரட்ட வேண்டும் என்பதற்காக யாரோ மர்ம நபர் மொட்டை கடிதம் அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபரை தேடி வருகிறார்.
- திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி:
திருச்சி மாநகரத்தில் செயல்படும் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடப்பதாக புகார்கள் வருகின்றன. அவ்வப்போது விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரும் மேற்கண்ட மையங்களில் அதிரடி சோதனை நடத்தி அப்பாவி பெண்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலை தடுக்க தவறியதாக, திருச்சி மாநகர விபச்சார தடுப்பு பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், பால சரஸ்வதி, ஏட்டு அசாலி ஆகிய மூவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் வெளி மாநில அழகி உட்பட 3 பேர் மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
- ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார்.
- அந்த புகாரில், ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பூபதி (வயது 42). இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார்.
லஞ்சம்
அந்த புகாரில், ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெவ்வெறு காரணங்களுக்காக எனது நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கடன் பெற்று செலுத்தவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பூபதி விசாரணை நடத்தினார். அப்போது வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ெஜயராஜனிடம் இரு தவணைகளில் ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், அவர் மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அதிரடி சோதனை
இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் பெற்றோர் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள மாமனார் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனி குழுவாக சோதனையில் ஈடுபட்டனர்.
ரூ.1.74 லட்சம் சிக்கியது
நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 10 அரை மணி நேரம் நடந்த இந்த சோதனையில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி வீட்டில் இருந்த கணக்கில் வராத ரூ.1.74 லட்சம் ரொக்கம் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியது.
இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார், துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த திடீர் சோதனையால் நாமக்கல் சட்டம்- ஒழுங்கி பிரிவில் பணியாற்றும் போலீசார் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் போலீசார், இது ெதாடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அதன்படி கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத இந்த பணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் பூபதியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.