என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை டவுண்"

    • தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த இனத்தை சேர்ந்தவர்கள்.
    • தமிழரின் பண்பாடு உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு.

    நெல்லை:

    உலக மொழிகளில் தொன்மை வாய்ந்த மொழி தமிழ். இதனை தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த இனத்தை சேர்ந்தவர்கள். பாரம்பரிய பெருமை உடையவர்கள்.

    தமிழரின் பண்பாடு உலகம் போற்றும் ஒரு சிறந்த பண்பாடு. அதனால் தான் வெளிநாட்டினரும் தமிழ் கலாசாரத்தை நேசித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு விழாக்களி லும் தமிழர்கள் பின்பற்றும் கலாசாரங்கள், நடைமுறைகள் இன்றளவிலும் வெளிநாட்டினரை ஈர்த்து வருகிறது. தமிழனின் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு கடல் கடந்து வந்து காதலித்து தமிழனை திருமணம் செய்த பெண்கள் ஏராளம்.

    அந்த வகையில் தான் நேற்று நெல்லை டவுனை சேர்ந்த ஒரு தமிழ் இளைஞரை வியட்நாம் நாட்டை சேர்ந்த இளம்பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்-வாசுகி தம்பதியினர். இவர்களது மகன் மகேஷ் (வயது 35). இவர் பட்டப்படிப்பு படித்து முடித்து வியட்நாமில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    அதே நிறுவனத்தில் வியட்நாம் நாட்டு இளம்பெண்ணான நுயென் லே துய் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் அந்த பழக்கம் காதலாக மாறியது. தொடர்ந்து 4 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள 2 பேரும் முடிவு செய்துள்ளனர்.

    இதனால் இருவரது பெற்றோரிடமும் தங்களது காதலை தெரிவிக்கவே, அவர்களும் பச்சைக்கொடி காட்டியுள்னர். மகிழ்ச்சியில் திளைத்த காதல் ஜோடி திருமணம் செய்ய முடிவு செய்தபோது தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்று நுயென்லே துய் தனது ஆசையை தெரிவித்துள்ளார்.

    இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த மணமகன் மகேஷ் மகிழ்ச்சியுடன் தனது காதலியையும், காதலியின் தாயாரையும் நெல்லைக்கு அழைத்து வந்துள்ளார்.

    நெல்லை டவுன்-குற்றாலம் சாலையில் உள்ள கோவிலில் வைத்து இருவ ருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து திரளான உறவினர்கள் வந்து வாழ்த்து தெரிவித்த னர். வெளிநாட்டு பெண் என்ற தகவலை கேள்விப் பட்டு, அவரை பார்ப்ப தற்காகவே ஒரு கூட்டம் அங்கு அலைமோதியது.

    இந்த திருமணம் குறித்து மணப்பெண் நுயென்லே துய் கூற ஆரம்பித்தபோது எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறிதான் பேச ஆரம்பித்தார். அவரது அழகான தமிழ்பேச்சை கேட்டு அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், இன்று எனக்கு திருமணம். நான் இப்போது இந்திய கலாச்சாரப்படி புடவையில் உள்ளேன். தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்துள்ளது. அதன்படி எனக்கு திருமணம் நடந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களையும், தமிழ் நாட்டையும் மிகவும் பிடித்து உள்ளது. இரண்டையும் நான் நேசிக்கிறேன் என்று ஆங்கிலத்தில் கூறினார்.

    • கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர்.
    • சொத்து தகராறில் கும்பல் வெறிச்செயல்.

    நெல்லை:

    நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57). இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.

    அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றார்.

    பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து வந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார்.

    ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்தது.

    பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, டவுன் உதவி கமிஷனர் அஜிகுமார் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது முகம் மற்றும் பின் தலை பகுதிகள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள தொட்டிப்பாலம் தெருவை அடுத்த பிரதான சாலையில் 36 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை முற்றிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜாகீர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் 2 தரப்பினருக்கும் இடையே மேலும் முன்விரோதம் அதிகரித்த நிலையில், எதிர்தரப்பினர் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களினால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலிக்கு மனைவி, 1 மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

    நெல்லை மாநகரின் முக்கிய இடத்தில் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    நெல்லை டவுணில் தேனீக்களில் கொட்டி 30 மாணவ- மாணவிகள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக 2 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை டவுண் தெற்கு மவுண்ட்ரோட்டில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் எதிரே ஜவகர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகே ராட்சத மரத்தின் மீது 3 அடி உயரத்தில் பெரிய தேனீ கூடு இருந்தது.

    இந்நிலையில் இன்று வீசிய பலத்த காற்றில் அந்த தேனீ கூடு கீழே விழுந்தது. இதையடுத்து இதில் இருந்து ஏராளமான தேனீக்கள் வெளியேறி அருகில் உள்ள பள்ளிகளில் புகுந்தது. இதில் கல்லணை பள்ளியில் இருந்த சுமார் 25 மாணவிகளையும், ஆசிரியைகளையும் கொட்டியது. இதனால் அலறியடித்து கொண்டு மாணவிகள் வெளியேறினர்.

    இதையடுத்து அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனீக்கள் அருகில் உள்ள ஜவகர் பள்ளி மாணவர்கள் 5 பேரையும் தாக்கியது. மேலும் அவ்வழியாக வாகனத்தில் மற்றும் நடந்து சென்றவர்களையும் தாக்கியது. இதையறிந்த பெற்றோர்கள் ஏராளமானவர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களை பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதையடுத்து கல்லணை மற்றும் ஜவகர் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. இதனால் டவுண் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×