search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "transferred"

    • காவலர் செந்தில் குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.
    • சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த முகவனூர் அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவரின் தாத்தா மருதை என்பவர் அவரின் சகோதரியான பெரியக்காள் (85) என்பவரை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.

    இதனால் ஆத்திரமடைந்த பேரன் பாஸ்கர் பாட்டியை எப்படி முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்கள் என கேட்டு மருதையிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மருதை வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தார். அதன்படி வையம்பட்டி போலீசார் பாஸ்கரிடம் விசாரித்து உள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில் குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.

    பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். மறு நாள் பாஸ்கர் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் சம்பவம் பற்றி கூறி உள்ளார். பாஸ்கரின் தொடை பகுதியில் போலீசார் தாக்கியதில் ரத்த உறைந்து காப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மண ப்பாறை அரசு மருத்து வமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    தாத்தா பேரன் தகராறில் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வாலிபரின் காலில் ரத்தம் உறைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில் குமார் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

    • 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை உள்ளாட்சி அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
    • அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.

    ராமநாதபுரம்

    மாவட்ட காங்கிரஸ் பொறுப்புக்குழு உறுப்பின ரும், மாவட்ட காங்கிரஸ் பொருளாளரும், ராமநாத புரம் நகர்மன்ற 5-வது வார்டு உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் என்ற கோபால் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    ராமநாதபுரம் நகராட்சி 5, 6-வது வார்டுகளில் அல்லிக்கண்மாய் பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர் கள் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் வசித்தனர். அரசு விதிமுறை மற்றும் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் அங்கிருந்து காலி செய்யப் பட்டு 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டினம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு களுக்கு மாற்றப்பட்டனர்.

    இவர்களுக்கு ஓட்டுரிமை ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரா மநாதபுரம் நகராட்சியில் உள்ளது. ஆனால் இவர்கள் குடியமர்த்தப்பட்டு இருப்பது திருவாடானை தொகுதிக்கு உட்பட்ட பட்டினம் காத்தான். இத னால் இவர்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை ராமநாதபுரம் நக ராட்சியால் செய்ய முடியாத நிலை உள்ளது.

    மேலும் ஓட்டுரிமை நகராட்சியில் இருப்பதால் ஊராட்சி நிர்வாகத்தினரும் தேவையான வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர முடியவில்லை. எனவே அவர்களது ஓட்டுரிமையை ஊராட்சி பகுதிக்கு மாற்றம் செய்து ஊராட்சி நிர் வாகத்தின் சார்பில் அடிப் படை வசதிகளை செய்து தரவேண்டும்.

    மேலும் அவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி, குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதி களை செய்துதர வேண்டும். திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் நடவடிக்கையின் பேரில் இந்த குடியிருப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுத்து குடிசை மாற்று வாரியத்தில் உள்ள 70 குடும்பத்தினரின் ஓட்டுரிமையை அப்பகுதி யில் உள்ள உள்ளாட்சி அமைப்பிற்கு மாற்றம் செய்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராக பொறுப்பறே்றார்.
    • ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும்,

     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் 23 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பூர் மாவட்ட மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ரமேஷ்குமார் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த பியூலா எப்சிபாய் குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராகவும், குடிமங்கலம் ஒன்றிய ஆணையாளராக இருந்த சாதிக்பாட்சா, மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    உடுமலை ஒன்றிய ஆணையாளராக இருந்த சரவணன் ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராகவும், ஊத்துக்குளி ஒன்றிய ஆணையாளராக இருந்த சுரேஷ்குமார் குண்டடம் ஒன்றிய ஆணையாளராகவும், குண்டடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த பிரியா பல்லடம் ஒன்றிய ஆணையாளராகவும், பல்லடம் ஒன்றிய ஆணையாளராக இருந்த ரமேஷ் வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வெள்ளகோவில் ஒன்றிய ஆணையாளராக இருந்த வேலுச்சாமி திருப்பூர் ஒன்றிய ஆணையாளராகவும், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளராக இருந்த ஜோதி உடுமலை ஒன்றிய ஆணையாளராகவும், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஜோதிநாத் திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், திருப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ஸ்ரீதர் மூலனூர் ஒன்றிய ஆணையாளராகவும், மூலனூர் ஒன்றிய ஆணையாளராக இருந்த பாலசுப்பிரமணியன் மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மூலனூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த வெங்கடேசன் குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குண்டடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த கந்தசாமி பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பொங்கலூர் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மீனாட்சி ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சாந்திலட்சுமி ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    காங்கயம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த ராகவேந்திரன் காங்கயம் ஒன்றிய ஆணையாளராகவும், காங்கயம் ஒன்றிய ஆணையாளராக இருந்த விமலாதேவி அவினாசி ஒன்றிய ஆணையாளராகவும், அவினாசி ஒன்றிய ஆணையாளராக இருந்த மனோகரன் பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், பல்லடம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த மகேஸ்வரன் வெள்ளக்கோவில் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், வெள்ளகோவில் வட்டாரவளர்ச்சி அதிகாரியாக இருந்த எத்திராஜ் மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராகவும், மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளராக இருந்த செந்தில்கணேஷ்மலா குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்த சிவகுருநாதன் தாராபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் பணியிடமாற்றம் செய்து கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டார்.

    • பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.
    • கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட, கனிமவளத் துறை உதவி இயக்குநராக பணியாற்றியவா் வள்ளல். இவரை, பணியில் அலட்சியமாக செயல்படுவதாக் கூறி முன்னாள் மாவட்ட கலெக்டர் வினீத், கனிமவளத் துறை உதவி இயக்குநா் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டாா். இதையடுத்து தமிழக கனிமவளத் துறை ஆணையா் வெளியிட்ட அறிவிப்பில், உதவி இயக்குநரை பணியில் இருந்து விடுவிக்க கலெக்டருக்கு அதிகாரமில்லை எனக் கூறி மீண்டும் பணியில் தொடர அனுமதி அளித்தாா்.

    இதைத்தொடா்ந்து மீண்டும் திருப்பூா் மாவட்ட உதவி இயக்குநராக வள்ளல் பணியில் சோ்ந்தாா். இந்நிலையில், திருப்பூா் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் வள்ளல், சென்னை கிண்டி கனிமவளத்துறை அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக கனிம வளத் துறை உதவி இயக்குநராக சச்சின் ஆனந்த் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். 

    • உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஜவகர் பிறப்பித்தி ருந்தார்.
    • தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்ய ப்பட்டுள்ளனர்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொறுப்பேற்ற நாளிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி அதற்கென்று தனியாக போலீசாரை நியமித்து உள்ளார்.

    இதேபோல் டாஸ்மாக் கடைகள், பார்களையும் போலீசார் கண்காணிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 12 போலீசார் அதிரடியாக தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பிறப்பித்திருந்தார்.

    அதன்படி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த கிரேடு–1 ஜெய சங்கர மூர்த்தி, மூர்த்தி, கருங்கல்பாளையம் கிரேடு–1 பால முருகன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் சித்தோடு கோபால், பவானி ரமேஷ், அம்மாபேட்டை முருகன், பவானிசாகர் முத்துமாணிக்கம், ஈரோடு டவுன் மதுவிலக்கில் ராஜேந்திரன், செந்தில், ஆசனூர் மதுவிலக்கு சாதிக் பாட்சா, தலைமை காவ லர்கள் கடத்தூர் தினேஷ் குமார், கடம்பூர் அசோக் ஆகிய 12 பேரும் தாளவாடி போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவில் குறிப்பிட ப்பட்டுள்ளது. மேலும் நிர்வாக காரணத்திற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
    • வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார்.

     திருப்பூர் :

    வெள்ளகோவில் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த ஆர்.மோகன் குமார் பணி மாறுதல் அடிப்படையில் காலியாக உள்ள பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதை நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது காலியாக உள்ள வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த மணி என்பவர் பணியிட மாறுதலாக கூடலூர் நகராட்சியின் பொறியாளராகவும், திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபு ரிந்து வந்த தீபன் என்பவர் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பொறியாளராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    • சட்ட விரோத செயல்களுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்ந்த சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட அ.முக்குளம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் ஆயுதப்படை பிரிவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டனர்.

    இதனையறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசாரின் இத்தகைய பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அ.முக்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பல வருடங்க ளாக கஞ்சா விற்பனை, திருட்டு, மதுபாட்டில்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்து வந்தது.

    சில மாதங்களுக்கு முன்பு அ.முக்குளம் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி வந்த சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், மாவட்ட எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சிலம்பரசன் ஆகியோர் சக போலீசாருடன் இணைந்து கஞ்சா விற்பனை, சட்ட விரோத மதுபான விற்பனை, கொலை, கொள்ளை, மணல் திருட்டு போன்ற குற்ற சம்பவங்க ளுக்கு எதிராக நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அதன் காரணமாக அந்த பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவு குறைந்திருந்தன. மேலும் அ.முக்குளம் பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் கஞ்சா விற்பனை படுஜோராக நடந்த நிலையில் பணிக்கு வந்த சில வாரங்களிலேயே வாகன தணிக்கையின் போது நரிக்குடி சரகத்தில் ஒரே நேரத்தில் 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் அதில் சம்பந்தப்பட்ட 8 குற்றவாளி களை அதிரடியாக கைது செய்தனர்.

    அது மட்டுமின்றி நரிக்குடி மற்றும் அ.முக்குளம் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள், ஆடு திருட்டு என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவர்க ளையும் கைது செய்வதற்கு உதவியாக இருந்தனர்.

    இவ்வாறு பணியில் சேர்ந்தது முதல் குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்துவதோடு அந்த பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கிராமங்க ளுக்கு நேரில் சென்று மாணவர்களின் எதிர்கா லத்தை சீரழிக்கும் கஞ்சாவை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் குற்றச்செயல்கள் குறைந்து வந்ததுடன் காவல் நிலையம் செல்லும் பொது மக்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்ட றிந்து அது தொடர்பாக புகார் கொடுக்கப்படும் நபர்கள் மீது பாரபட்சமின்றி முறையான விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் இவர்களை போன்ற நேர்மை யாகவும், பொது மக்களுக்கு பாதுகாவ லனாகவும் இருக்கும் போலீசாரை திடீரென்று இடமாற்றம் செய்யப் பட்டதால் அ.முக்குளம் பகுதியில் மீண்டும் கஞ்சா விற்பனை, கொள்ளை, திருட்டு போன்ற சட்ட விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. அதன் காரணமாக மீண்டும் சீர்கேடான பகுதியாக அ.முக்குளம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை என்று பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

    எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் அ.முக்குளம் காவல் நிலையத்தில் நேர்மையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் ஏட்டுவின் பணியிட மாற்றத்தை பரிசீலனை செய்து மீண்டும் அ.முக்குளம் காவல் நிலையத்திலேயே பணி அமர்த்த வேண்டும்.

    இதன் மூலம் அ.முக்குளம் காவல் நிலைய எல்லைப்ப குதிகளில் உள்ள கிராமங்களை மீண்டும் அமைதி பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.

    • 34 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலக அதிகாரிகள்-ஊழியர்கள் இடமாற்றம் எப்போது? என குமுறல் எழுந்துள்ளது.
    • அலுவலக உதவியாளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அலுவலக உதவியாளர்கள் 18 பேர் திடீரென பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டையில் இருந்து திருச்செந்தூர், களக்காடு, கங்கை கொண்டான், கொல்லங்கோடு உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு அலுவலக உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த பணி இடமாற்றம் குறித்து அலுவலக உதவியாளர் ஒருவர் கூறுகையில், பல ஆண்டுகளாக நகராட்சி அலுவலகத்தில் பணி யாற்றும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யாமல் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் எங்களை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனால் பொருளாதார ரீதியாகவும் குடும்ப சூழ்நிலை ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இதனை நகராட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்கள் மற்றும் அதிகா ரிகள் 34 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் எங்களை மட்டும் குறிப்பாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? என்று வேதனை யுடன் தெரிவித்தார்.

    பொதுவாக அரசு பணியில் உள்ள ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வேலை பார்த்தால் அந்த நபரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்வார்கள். ஆனால் இந்த நகராட்சியில் ஏன் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அலுவலக ஊழியர்களை பணியிட மாற்றம் செய்யாமல் உள்ளனர்? புதிதாக பணியில் சேர்ந்தவர்களை இடமாற்றம் செய்வது என்ன நியாயம்? என்று பாதிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள் கேள்வி விடுக்கின்றனர். எனவே இந்த இடமாற்றம் தொடர்பாக சம்பந்தப்பட் அதிகாரிகள் மீண்டும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அலுவலக உதவியா ளர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    • 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.

     தாராபுரம் :

    தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    • பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.
    • கழுவேரிபாளையத்தில் பணியாற்றிய பிரபுகுமாா் ப.வடுகபாளையத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

    பல்லடம் : 

    பல்லடம் வட்டத்தில் அ பிரிவு கிராமங்களில் ஓராண்டு காலத்துக்கு மேல் பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கும், ஆ பிரிவு கிராமங்களில் 3 ஆண்டு காலத்துக்கு மேல் பணி முடித்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கும் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா். அதன் விபரம் வருமாறு:-

    அ பிரிவு கிராமம் பருவாயில் பணியாற்றிய கோவிந்தராஜ் நெருப்பெரிச்சல் கிராமத்துக்கும், வே.கள்ளிப்பாளையத்தில் பணியாற்றிய குணசேகரன் வீரபாண்டிக்கும், காட்டூா்(குரூப்) பணியாற்றிய மகேஸ்வரன் பள்ளபாளையத்துக்கும், துத்தாரிபாளையத்தில் பணியாற்றிய சதாசிவம் பொங்கலூருக்கும், கழுவேரிபாளையத்தில் பணியாற்றிய பிரபுகுமாா் ப.வடுகபாளையத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

    ஆ பிரிவு கிராமம் கரைப்புதூரில் பணியாற்றிய முத்துபரமேஸ்வரி மங்கலத்துக்கும், பொங்கலூரில் பணியாற்றிய சிவசங்கா் அழகுமலைக்கும், பூமலூரில் பணியாற்றிய கோபி ஈட்டிவீரம்பாளையத்துக்கும், சுக்கம்பாளையத்தில் பணியாற்றிய சாந்தஷீலா கள்ளிபாளையத்துக்கும், புளியம்பட்டியில் பணியாற்றிய கலைவாணி கழுவேரிபாளையத்துக்கும், ப.வடுகபாளையத்தில் பணியாற்றிய சுகன்யா புளியம்பட்டிக்கும், நாரணாபுரத்தில் பணியாற்றிய மோகன்தாஸ் வடமலைபாளையத்துக்கும், பள்ளபாளையத்தில் பணியாற்றிய கெளரி கரைப்புதூருக்கும், கே.அய்யம்பாளையத்தில் பணியாற்றிய காா்த்திகேயன் கே.கிருஷ்ணாபுரத்துக்கும், சாமளாபுரத்தில் பணியாற்றிய ஞானசேகரன் பணிக்கம்பட்டிக்கும், பணிக்கம்பட்டியில் பணியாற்றிய ரேவதி கே.அய்யம்பாளையத்துக்கும், கே.கிருஷ்ணாபுரத்தில் பணியாற்றிய பூங்கொடி பருவாய்க்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனா்.

    இதற்கான உத்தரவை திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பிறப்பித்துள்ளாா். இடமாறுதல் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் புதிய கிராமங்களில் பொறுப்பேற்றுக்கொண்டனா்.

    • 3 ஆண்டுகளுக்கு மேலான 201 போலீசார் கடந்த இரு வாரம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர்  :

    திருப்பூர் மாநகர போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலான 201 போலீசார் கடந்த இரு வாரம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது 14 சப்-இன்ஸ்பெக்டர்களை மாநகருக்குள் இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படிவடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரஜினிகாந்த் கட்டுப்பாட்டு அறைக்கும், வடக்கு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், தெற்கு எஸ்.ஐ., இளஞ்செழியன் வடக்குக்கும், தெற்கு ராமசாமி வடக்கு குற்றப்பிரிவுக்கும், கொங்கு நகர் அனைத்து மகளிர் எஸ்.ஐ., கனகவள்ளி தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், கே.வி.ஆர்., நகர் சப்- இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் கொங்கு நகர் மகளிருக்கும், கலாவதி கே.வி.ஆர்., நகர் மகளிருக்கும், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மத்திய போலீஸ் நிலையத்திற்கும், கட்டுப்பாட்டு அறை சப்- இன்ஸ்பெக்டர் கேசவன் மத்திய குற்றப்பிரிவுக்கும், திருமுருகன்பூண்டி ராஜூ வடக்குக்கும், நல்லூர் கிருஷ்ணமூர்த்தி வீரபாண்டிக்கும், மத்திய குற்றப்பிரிவு அப்பாகுட்டி திருமுருகன்பூண்டிக்கும், வீரபாண்டி சாம் ஆல்பர்ட் மத்திய குற்றபிரிவுக்கும் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு பாண்டிதுரை ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் 490 போலீசார் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி. சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தாழையூத்து, சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய துணை காவல் சரகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் சுமார் 35 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த போலீஸ் நிலையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போலீசார் இடமாறுதல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

     சில நேரங்களில் போலீசார் தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுப்பது வழக்கத்தில் உண்டு.

     அதன் அடிப்படையில் அவர்கள் கேட்கும் போலீஸ் நிலையங்களில் காலியிடம் இருந்தால் உயரதிகாரிகள் அந்த மனுவை பரிசீலனை செய்து பணியிட மாறுதல் வழங்குவார்கள்.


    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக போலீசாரின் இடமாற்றம் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    இதனையொட்டி பல்வேறு போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகள் பணியை முடித்தவர்கள் மற்றும் பணியிட மாறுதல் கேட்டு மனு கொடுத்தவர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

    சுமார் 490 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பிறப்பித்துள்ளார்.

     பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசார் உடனடியாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
    ×