search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகரில்  14 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் - கமிஷனர் பிரபாகரன் உத்தரவு
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாநகரில் 14 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் - கமிஷனர் பிரபாகரன் உத்தரவு

    • 3 ஆண்டுகளுக்கு மேலான 201 போலீசார் கடந்த இரு வாரம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    • திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலான 201 போலீசார் கடந்த இரு வாரம் முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது 14 சப்-இன்ஸ்பெக்டர்களை மாநகருக்குள் இடமாற்றம் செய்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படிவடக்கு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரஜினிகாந்த் கட்டுப்பாட்டு அறைக்கும், வடக்கு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், தெற்கு எஸ்.ஐ., இளஞ்செழியன் வடக்குக்கும், தெற்கு ராமசாமி வடக்கு குற்றப்பிரிவுக்கும், கொங்கு நகர் அனைத்து மகளிர் எஸ்.ஐ., கனகவள்ளி தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், கே.வி.ஆர்., நகர் சப்- இன்ஸ்பெக்டர் அய்யம்மாள் கொங்கு நகர் மகளிருக்கும், கலாவதி கே.வி.ஆர்., நகர் மகளிருக்கும், சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மத்திய போலீஸ் நிலையத்திற்கும், கட்டுப்பாட்டு அறை சப்- இன்ஸ்பெக்டர் கேசவன் மத்திய குற்றப்பிரிவுக்கும், திருமுருகன்பூண்டி ராஜூ வடக்குக்கும், நல்லூர் கிருஷ்ணமூர்த்தி வீரபாண்டிக்கும், மத்திய குற்றப்பிரிவு அப்பாகுட்டி திருமுருகன்பூண்டிக்கும், வீரபாண்டி சாம் ஆல்பர்ட் மத்திய குற்றபிரிவுக்கும் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு பாண்டிதுரை ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×