search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harassment issue"

    • ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார்.
    • இளம்பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார்.

    பெங்களூரு:

    பெங்களூரு தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏ.இ.சி.எஸ். லே அவுட் பகுதியில் வசித்து வரும் 30 வயது இளம்பெண் ஒருவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் தோசை ஆர்டர் செய்தார்.

    இதையடுத்து அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஆகாஷ் (27) என்பவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த தோசையை மாலை 6.45 மணி அளவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார். அப்போது ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார். இதையடுத்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து ஆகாஷிடம் கொடுத்தார்.

    இதையடுத்து தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் தண்ணீர் கேட்டார். இதனால் அந்த பெண் தண்ணீர் கொண்டு வர சமையலறைக்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற ஆகாஷ் திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார். உடனே ஆகாஷ் படிக்கட்டு வழியாக இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு தென்கிழக்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆகாஷ் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி உணவு டெலிவரி செய்து வருவதும், இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்தவர் என்பவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன் (வயது 35) என்பவர் தமிழ் ஆசிரியராக 5 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி, பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து அருள்செல்வன் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக அந்த மாணவி தலைமை ஆசிரியை(பொறுப்பு) லதாவிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

    இந்தநிலையில், ஆசிரியர் அருள்செல்வன் வழக்கம்போல நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி குற்றத்தை மறைக்க முயற்சித்து மாணவிகளை சமாதானப்படுத்தியது தெரியவந்தது.

    விசாரணையை தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் அதனை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரியலூர் அனைத்து மகளிர் போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் இரு வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    அரூர் அருகே சிறுமியை 4 வாலிபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கூடலூர் இந்திரா நகரை சேர்ந்த தம்பதி, கோவையில் தங்கி கூலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது 17 வயதுடைய மகள், தனது அண்ணன் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு வழக்கம்போல் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சிறுமி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் திடீரென வந்தனர்.

    பின்னர் சிறுமியை, 4 வாலிபர்களும் அலேக்காக தூக்கி சென்று கர்ச்சீப்பை வைத்து முகத்தை மூடியுள்ளனர். இதில் சிறுமி மயக்கம் அடைந்தார்.

    உடனே 4 வாலிபர்களும் சிறுமியை ஒரு மறைவான இடத்துக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவு 11 மணியளவில் சிறுமி மயக்கம் தெளிந்து பார்த்தபோது அந்த வாலிபர்களை காணவில்லை.

    பின்னர் வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது அண்ணனிடம் அழுதுகொண்டே கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அண்ணன், அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று அறிய மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

    17 வயது சிறுமியை, 4 வாலிபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஊத்துக்கோட்டையில் 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயியை கைது செய்த போலீசார் அவரை புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மாலை அவள் பள்ளி முடிந்து வீட்டுக்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த விவசாயி ராமன், சிறுமியிடம் பேச்சு கொடுத்தார்.

    பின்னர் அவர், சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி அலறியபடி அங்கிருந்து தப்பி ஓடினார். இதுபற்றி அவள் பெற்றோரிடம் கூறி கதறினார்.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அனுராதா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தார். அவரை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    தூத்துக்குடியில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை பிரமுத்துவிளையை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருடைய தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இதனால் இளம்பெண்ணின் தாயார் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தாயார் வேலைக்கு வெளியே சென்று விட்ட நிலையில், இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய தந்தை மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அவரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த தந்தை, மகளை அடித்து உதைத்ததுடன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த தாயார், கணவரிடம் இருந்து மகளை மீட்டார்.

    இதுகுறித்து இளம்பெண் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தையை கைது செய்தார். கைதான அவர் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

    காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி மாணவிக்கு ‘லிப்டில்’ செக்ஸ் தொல்லை கொடுத்த துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். #Arrested
    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூரில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழக வளாகத்திலேயே மாணவ-மாணவிகள் தங்குவதற்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இங்கு பெரும்பாலும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்கி உள்ளனர்.

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி பி.இ. இன்பர்மே‌ஷன் டெக்னாலஜி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று இந்த படிப்புக்கான தேர்வு மழையால் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு மாணவ-மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நிர்வாகம் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆண்கள் விடுதியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் செட்டி புண்ணியம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவர் பெண்கள் விடுதியில் உள்ள கழிவு பொருட்களை எடுப்பதற்காக சென்றார்.

    அப்போது அவர் ‘லிப்ட்’ மூலமாக ஏறினார். அந்த நேரத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவியும் அதே லிப்ட்டில் ஏறினார். லிப்ட் சென்று கொண்டிருந்த போது அர்ஜூன் மாணவியிடம் ஆபாசமாக பேசினார்.

    மேலும் தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். இதற்குள் அந்த லிப்ட் குறிப்பிட்ட தளத்தை அடைந்து திறந்தது.

    உடனடியாக மாணவி அலறியடித்தபடி வெளியே ஓடினார். இதனைக்கண்ட மற்ற மாணவிகள் தொழிலாளி அர்ஜூனை பிடிக்க முயன்றனர். இதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார்.

    மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மறைமலை நகர் போலீசிலும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் நேற்று நள்ளிரவு கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் போலீஸ் தடுப்புகளை தாண்டி சாலையில் வந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒத்திவைக்கப்பட்ட தேர்வை ஜனவரி மாதத்தில் நடத்தவும், மாணவிக்கு ‘செக்ஸ்’ தொல்லை கொடுத்த தொழிலாளியை கைது செய்யவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இதற்கிடையே மாணவிக்கு தொல்லை கொடுத்த தொழிலாளி அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Arrested
    மாணவிகளை தொடர்ந்து பேராசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவர், சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு, பேராசிரியை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியது.

    பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகள் அச்சுறுத்தப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் கடந்த 8-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, பல்கலைக்கழக விசாரணைக்குழு நேற்று கல்லூரியில் விசாரணையை தொடங்கியது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி மூலம் தான் பாலியல் புகார் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மாணவி மற்றும் சக மாணவிகளிடம் பல்கலைக்கழக குழு தனித்தனியாக விசாரணை நடத்தியது.

    இதில் ஆங்கிலத்துறை பேராசிரியர் மீது 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் கூறினர். பேராசிரியைகள் சிலரும், பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு உண்மைதான். பேராசிரியர் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியதால் விசாரணை குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

    கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடந்து வருகிறது. முழு விசாரணைக்கு பிறகு, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் படித்து வரும் சென்னை மாணவி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக கல்லூரி முதல்வர் உள்பட 6 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் சென்னை பெருங்குடியை சேர்ந்த கிரிஜா என்ற மாணவி பி.எஸ்.சி. 3-ம் ஆண்டுபடித்து வந்தார்.

    மாணவி கிரிஜாவுக்கு உதவி பேராசிரியர் தங்க பாண்டியன், 7 மாதங்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    மாவட்ட நீதிபதி மகிழேந்தியிடம் மாணவி கிரிஜா இது தொடர்பாக புகார் அளித்தார். இதனையடுத்து பேராசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மாணவி தங்கி இருந்த விடுதியில் வார்டனர்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்டது.



    இது தொடர்பாக, ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளுக்கு சாதகமாக செயல்பட்டது தெரிய வந்தது.

    மாணவிகள் விடுதிக்குள் பேராசிரியர்கள், ஆண்கள் செல்ல அனுமதி கிடையாது. வேளாண்மை பல்கலைக்கழக விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது. பேராசிரியரின் அத்துமீறல்கள் குறித்து மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் தான் முதலில் புகார் கூறியுள்ளார்.

    அப்போது, மாணவியை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி முதல்வர் ஈடுபட்டார். கல்லூரி பெயர் கெட்டு போய்விடும் என்பதால், கல்லூரி நிர்வாகம் மாணவியின் புகாரை மூடிமறைக்க திட்டமிட்டது.

    கல்லூரி நிர்வாகத்தின் சமரசத்தை ஏற்று கொள்ளாத மாணவி, வெளிப்படையாக பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவிக்க போவதாக கூறினார். இதையடுத்து பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் மாணவியை சமரசப்படுத்த அனுப்பப்பட்டனர்.

    மாணவி அடிப்பணியாததால், ஆத்திரமடைந்த பேராசிரியைகள் 2 பேரும், மிரட்டியுள்ளனர். மாணவிக்கு எதிராக ஆதாரங்களை ஜோடித்தனர். இதற்காக, விடுதியில் உள்ள மாணவிகள் 2 பேர் மூலம் மாணவியிடம் ‘ராகிங்’ செய்து இடையூறுகளை ஏற்படுத்தினர்.

    இப்படி செய்வதால், உதவி பேராசிரியர் மீது புகார் அளிக்கவிடாமல் மாணவியை தடுக்க முடியும் என பேராசிரியைகள் நினைத்தனர். ஆனால், மாணவி ‘ராகிங்’ கொடுமைக்கு அஞ்சவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

    அதன்பிறகு, மாணவி கிரிஜாவை அதிகமாக தொந்தரவு செய்தனர். மாணவி தங்கியிருந்த அறையின் உள் தாழ்ப்பாள், வெளித் தாழ்பாள் உடைக்கப்பட்டது. மாணவியுடன் தங்கியிருந்த மற்ற மாணவிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    தனிமைப்படுத்தப்பட்ட மாணவி இரவில் அறையை பூட்டிக்கொண்டு தூங்க முடியாமல் தவித்தார். நள்ளிரவில் மாணவி தூங்கி கொண்டிருக்கும் வேளையில் தங்களுக்கு ஆதரவாக இருந்த 2 மாணவிகள் மூலம் பேராசிரியைகள் மாணவியை பல்வேறு கோணங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

    மாணவி வெளியிட்ட ஆடியோவில் பேராசிரியைகள் தங்களிடம் உன்னை பற்றிய ரகசியங்கள் உள்ளன. அதை வெளியிடுவோம் என்று மிரட்டியதும் இந்த போட்டோ, வீடியோக்களை வைத்து தான் என்று தெரிய வந்தது.

    இதையடுத்து, பாலியல் புகார் கூறிய மாணவி கிரிஜா திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த பேராசிரியைகள் 2 பேர் வெவ்வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

    திருச்சி கல்லூரிக்கு தன்னை மாற்றிய கோவை வேளாண் பல்கலைக்கழக ஆணையை மாணவி ஏற்கவில்லை. பாதிக்கப்பட்ட தனக்கு நியாயம் கிடைக்கும் வேண்டும். அதுவரை திருவண்ணாமலை கல்லூரியில் தான் படிப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார்.

    இதைத்தொடர்ந்து, பாலியல் புகார் கூறிய மாணவி கிரிஜா கல்லூரியில் இருந்து கடந்த 1-ந்தேதி அதிரடியாக நீக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மாணவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், 2 உதவி பேராசிரியைகள் மற்றும் 2 மாணவிகள் என 6 பேர் மீதும் மானபங்கம், கொலைமிரட்டல், அவதூறாக பேசியது உள்பட 10 பிரிவுகளின் கீழ் திருவண்ணாமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
     
    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege

    ×