என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சிறுமி பாலியல் பலாத்காரம்- 4 வாலிபர்கள் வெறிச்செயல்
Byமாலை மலர்15 Nov 2021 3:27 PM IST (Updated: 15 Nov 2021 3:27 PM IST)
அரூர் அருகே சிறுமியை 4 வாலிபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கூடலூர் இந்திரா நகரை சேர்ந்த தம்பதி, கோவையில் தங்கி கூலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது 17 வயதுடைய மகள், தனது அண்ணன் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு வழக்கம்போல் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சிறுமி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் திடீரென வந்தனர்.
பின்னர் சிறுமியை, 4 வாலிபர்களும் அலேக்காக தூக்கி சென்று கர்ச்சீப்பை வைத்து முகத்தை மூடியுள்ளனர். இதில் சிறுமி மயக்கம் அடைந்தார்.
உடனே 4 வாலிபர்களும் சிறுமியை ஒரு மறைவான இடத்துக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவு 11 மணியளவில் சிறுமி மயக்கம் தெளிந்து பார்த்தபோது அந்த வாலிபர்களை காணவில்லை.
பின்னர் வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது அண்ணனிடம் அழுதுகொண்டே கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அண்ணன், அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று அறிய மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
17 வயது சிறுமியை, 4 வாலிபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கூடலூர் இந்திரா நகரை சேர்ந்த தம்பதி, கோவையில் தங்கி கூலி செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது 17 வயதுடைய மகள், தனது அண்ணன் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு வழக்கம்போல் அந்த பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சிறுமி சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க 4 வாலிபர்கள் திடீரென வந்தனர்.
பின்னர் சிறுமியை, 4 வாலிபர்களும் அலேக்காக தூக்கி சென்று கர்ச்சீப்பை வைத்து முகத்தை மூடியுள்ளனர். இதில் சிறுமி மயக்கம் அடைந்தார்.
உடனே 4 வாலிபர்களும் சிறுமியை ஒரு மறைவான இடத்துக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இரவு 11 மணியளவில் சிறுமி மயக்கம் தெளிந்து பார்த்தபோது அந்த வாலிபர்களை காணவில்லை.
பின்னர் வீடு திரும்பிய சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது அண்ணனிடம் அழுதுகொண்டே கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அண்ணன், அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்று அறிய மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
17 வயது சிறுமியை, 4 வாலிபர்கள் பலாத்காரம் செய்த சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X