search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது
    X

    தூத்துக்குடியில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி கைது

    தூத்துக்குடியில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மட்டக்கடை பிரமுத்துவிளையை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். பிளஸ்-1 படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருடைய தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இதனால் இளம்பெண்ணின் தாயார் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் தாயார் வேலைக்கு வெளியே சென்று விட்ட நிலையில், இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய தந்தை மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அவரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த தந்தை, மகளை அடித்து உதைத்ததுடன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த தாயார், கணவரிடம் இருந்து மகளை மீட்டார்.

    இதுகுறித்து இளம்பெண் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜென்சி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தையை கைது செய்தார். கைதான அவர் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×