என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maternity leave"

    • உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.
    • மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி உத்தரவு.

    மூன்றாவது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த ரஞ்சிதா என்பவருக்கு 3வது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நீதிபதி நிராகரித்துள்ளார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வு, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டது.

    மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் பணி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார்.
    • இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பணி ஒதுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்,

    மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவல் ஆளிநர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததைத் தொடர்ந்து, மொத்தம் 209 பெண் காவல் ஆளிநர்கள் தங்களது பேறுகால விடுப்பிற்கு பிறகு, குழந்தைகளை கவனித்துக்கொள்ள ஏதுவாக, மற்ற மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.

    அதன்படி, 03.06.2025 வரை, பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்திருந்த 209 பெண் காவல் ஆளிநர்களுக்கும் அவர்கள் விரும்பிய மாநகரம்/மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    • மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பித்து, முறையாக அனுமதி பெற்ற பிறகே விடுப்பு அளிக்கப்படுகிறது.
    • சில இடங்களில், விடுப்பு எடுக்கும் ஆசிரியரே தற்காலிக ஆசிரியருக்கு மாத ஊதியம் வழங்குவதும் தொடர்கிறது.

    திருப்பூர்:

    அரசு ஊழியர்களின் மகப்பேறு கால விடுமுறை, ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிற துறைகளில் பணிபுரிவோர் விடுப்பு எடுத்து சென்றாலும் சக ஊழியர்களால் பணிகளை பகிர்ந்து செய்ய முடியும். ஆனால் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால், மாணவர்களுக்கு ஒரு கல்வியாண்டே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பெற்றோர் - ஆசிரியர் கழக நிதி உள்ள பள்ளிகளில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கற்பித்தல் பணிகளுக்கு ஆவண செய்யப்படுகிறது. சில இடங்களில், விடுப்பு எடுக்கும் ஆசிரியரே தற்காலிக ஆசிரியருக்கு மாத ஊதியம் வழங்குவதும் தொடர்கிறது.

    ஆனால் இதுபோன்ற வசதி இல்லாத பட்சத்தில், ஆசிரியர் விடுப்பு எடுத்தால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விடுகிறது. உபரி ஆசிரியர்கள் இல்லாதபட்சத்தில் பிற ஆசிரியர்களே கூடுதலாக வகுப்பு கையாள வேண்டியிருப்பதால், பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இதற்கு பதிலி ஆசிரியர் நியமித்து, அரசே ஊதியம் வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பு எடுக்கும் போது, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்கள் முடிப்பதில் பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.மகப்பேறு விடுப்புக்கு விண்ணப்பித்து, முறையாக அனுமதி பெற்ற பிறகே விடுப்பு அளிக்கப்படுகிறது.

    எனவே விடுமுறை காலங்களுக்கு, அரசே ஊதியம் வழங்கி, பதிலி ஆசிரியர் நியமிக்க வேண்டும். ஓராண்டு விடுப்பு அளிப்பதால் இந்த ஏற்பாடு செய்தால்தான், கற்பித்தல் பணிகள் தேக்கமின்றி நடக்கும் என்றனர்.

    ×