என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பணி இடமாற்றம்
- மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இருந்த ஜெய ஸ்ரீ ஐபிஎஸ், ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றம்.
- சட்டம் ஒழுங்கு எஸ்பி ஆக உள்ள முத்தரசி ஐபிஎஸ், செய்தித் தொடர்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை ஜெயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மாநில குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இருந்த ஜெய ஸ்ரீ ஐபிஎஸ், ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றம்.
தொழில்நுட்ப பிரிவு ஐஜி ஆக உள்ள அவினாஷ் குமார் ஐபிஎஸ், குற்ற ஆவண காப்பக ஐஜி ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு எஸ்பி ஆக உள்ள முத்தரசி ஐபிஎஸ், செய்தித் தொடர்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து டிசிபி-யான சங்கு செங்குன்றத்திற்கு கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் பயற்சி பள்ளி எஸ்பி ஆக இருந்த மகேஸ்வரி, போலீஸ் பயிற்சி கல்லூரி எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story






