search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "laborers"

    • 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.

     தாராபுரம் :

    தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது.
    • வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர்.

    திருப்பூர் :

    விவசாய குடும்பத்தை சேர்ந்த பல இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. அதேபோல விவசாய தொழிலாளர்களின் வாரிசுகளும் விவசாய பணிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலும் பனியன் நிறுவனங்களிலும், ஐ.டி., நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர். கணிசமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களை குத்தகைக்கு விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்வது அதிகரித்துள்ளது.

    சிறிய பண்ணைகளில் குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். பெரிய பண்ணைகளில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சமாளிக்க வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • வீடுகளில் மழைநீர் தேங்கியதால் கூலி தொழிலாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • வீட்டுக்குள் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். அரசு சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது அந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பழுதான வீடுகளில் மழை நீர் ஒழுகுவதால் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க. மாவட்ட செயலாளர் வெற்றிமாலை கூறுகையில், வீடுகள் சேதம் அடைந்து இருப்பதை பலமுறை கலெக்டரிடம் புகார் அளித்தும் வீடுகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்தப்பகுதியில் பெய்த மழையால் வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. வீட்டுக்குள் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவர்களுக்கான குடியிருப்பு இடம் வழங்க வேண்டும் என்றார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தாமணி (35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் கணவன் மனைவியே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.

    இந்நிலையில் சரவணன் நேற்று வீட்டில் வாங்கி வைத்திருந்த தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரையை குடித்துள்ளார். உடனே அவரை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சாந்தாமணி பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தார். போரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×