search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளில் மழைநீர் தேங்கியதால் கூலி தொழிலாளிகள் அவதி
    X

    ஆப்பனூர் கிராமத்தில் மழை நீரில் வீடுகள் சூழ்ந்துள்ளதை காணலாம். 

    வீடுகளில் மழைநீர் தேங்கியதால் கூலி தொழிலாளிகள் அவதி

    • வீடுகளில் மழைநீர் தேங்கியதால் கூலி தொழிலாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
    • வீட்டுக்குள் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் காலனி பகுதியில் 300க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் வசித்து வருகின்றனர். அரசு சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் அவர்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது அந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பழுதான வீடுகளில் மழை நீர் ஒழுகுவதால் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.க. மாவட்ட செயலாளர் வெற்றிமாலை கூறுகையில், வீடுகள் சேதம் அடைந்து இருப்பதை பலமுறை கலெக்டரிடம் புகார் அளித்தும் வீடுகளை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்தப்பகுதியில் பெய்த மழையால் வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. வீட்டுக்குள் குடை பிடித்து வசிக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அவர்களுக்கான குடியிருப்பு இடம் வழங்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×