என் மலர்
நீங்கள் தேடியது "Palai"
- பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது.
- சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் சந்திரயான் மஹோத்சவ் என்ற தலைப்பில் சந்திரயான் கொண்டாட்டம் நடைபெற்றது. கல்லூரி செயலர் அம்பா ஆலோ சனையின்படி கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் அறிமுக உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி இஸ்ரோ புரொபுல்ஷன் காம்ப்லெஸ் துணை பிரிவு தலைவர் லிபோநா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியம், பாடல் மற்றும் நடனப் போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு களை வழங்கினார். முடிவில் பார்வதி தேவி நன்றி கூறினார்.
- பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணித துறையின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
- கணிதவியல் துறை உதவி பேராசிரியை லிங்கேஸ்வரி விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார்.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் கணித துறையின் ஸ்ரீநிவாச ராமானுஜன் மன்றம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு, கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவண பவப்ரியா அம்பா ஆசியுடன், கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திர சேகரன் வழிகாட்டுதலின்படி, கல்லூரி முதல்வர் கமலா தலைமையில் நடந்தது. கணிதவியல் துறை தலைவர் ரேவதி வரவேற்று பேசினார்.
கணிதவியல் துறை உதவி பேராசிரியை லிங்கேஸ்வரி விருந்தினர் குறித்து அறிமுக உரையாற்றினார். தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி (சுயநிதி பிரிவு) கணிதவியல் துறையின் தலைவர் முத்துகுமாரி சிறப்புரையாற்றினார். முதுகலை 2-ம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி திவ்யா நன்றி கூறினார்.
- பாளை சாரதா மகளிர் கல்லூரியில் “பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
- கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார்.
நெல்லை:
பாளை சாரதா மகளிர் கல்லூரியில் "பெண் விவசாயிகள் மற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் இடம்பெயர்வு" என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார். பள்ளிச் செயலர் யதீஸ்வரி முகுந்தப்ரியா அம்பா ஆசியுரை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் சங்கீதா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை வழங்கினார்.
உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மதுரை பெஞ்ச் முதல்வர் ஸ்ரீ.எம். சத்தியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிப்படை உரிமைகள் குறித்து விளக்கம் அளித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக இணைப்பேராசிரியர் மற்றும் சமூக பணித்துறைத் தலைவர் வேலுசாமி, மதுரை தியாகராஜர் கல்லூரி உயிரியல் துறை இணைப்பேராசிரியர் அருண் நாகேந்திரன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பிரிவின் இணைப்பேராசிரியர் ஹேமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
கருத்தரங்கிற்கு 9 கல்லூரிகளில் இருந்து பேரா சிரியர்களும், மாணவிகளும் கலந்து கொண்டு 129 ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினர். கல்லூரி இயக்குநர் பேராசிரியர் சந்திரசேகரன் மகிழ்வுரை வழங்கினார். முடிவில் வணிக நிறும செயல்பாட்டுத்துறை உதவிப்பேராசிரியர் ஆறுமுக செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசி ரியர்கள் கலந்து கொண்டனர்.
- பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
- மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
நெல்லை:
நெல்லை மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு தலைவருமான பவுல்ராஜ் நெல்லை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.
அதேபோல் மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது 7-வது வார்டு வட்ட பிரதிநிதி சுண்ணாம்பு மணி, நிர்வாகி சுனில் குமார் உட்பட பலர் உள்ளனர்.
- தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணி புரியும் இடத்திற்கு அருகாமையில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவை உள்ளது.
- பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாக தங்களது வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய சூழ்நிலையில் குறைந்த வாடகையில் பணி புரியும் இடத்திற்கு அருகாமை யில் தரமான பாதுகாப்பான தங்கும் விடுதிகள் மிகவும் அவசியமான தேவை உள்ளது.
மகளிர் விடுதிகள்
இத்தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் அரசு, பொருளாதார ரீதியாக நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்குக்காக மகளிர் விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் அமைத்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் பணிபுரியும் மகளிருக்கான புதிய விடுதிகளை உருவாக்கவும், செயல்பட்டு வரும் விடுதிகளை புதுப்பிக்கவும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற அமைப்பை அமைத்துள்ளது.
முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
இதன் மூலம் நெல்லை மாவட்டத்தில் பாளை வீரமா ணிக்கபுரத்தில் புதுப்பிக்க ப்பட்ட மகளிர் விடுதியை இன்று காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனையொட்டி நெல்லை யில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார்.
கலந்து கொண்டவர்கள்
தொடர்ந்து மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ உள்ளிட்டவர்கள் குத்து விளக்கு ஏற்றினர். மாவட்ட சமூகநல அலுவலர் தனலட்சுமி, ஒன் ஸ்டாப் சென்டர் பொன்மு த்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விடுதியில் சுத்திகரிக்க ப்பட்ட குடிநீர்வசதி, பாதுகாப்பு வசதி, பொழுதுபோக்கு அறை என பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்ப ட்டுள்ளது. வீரமாணிக்கபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விடுதி ரூ. 45.54 லட்சத்தில் கட்டி முடிக்க ப்பட்டுள்ளது. இவ்விடுதி 60 படுக்கை வசதியுடன் இருவர், நால்வர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
முன்பதிவு
மேலும் www.tnwwhclin என்ற இணையதளம் வாயிலாக படுக்கை அறைகள் இருப்புத்தன்மை அறிந்து தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கட்டணம் கட்டணம் செலுத்திடும் முறை அறிமுகம் செய்யப்பட்டு பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியினை சொந்த இடங்களை விட்டு வெளியூர்க ளில் தங்கி பணிபுரியும் அனைத்து மகளிரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. வருடங்கள், மாதங்கள் மட்டுமின்றி வாரங்கள், ஓரிரு நாட்கள் கூட மகளிர் இவ்விடுதிகளில் தங்கிடவும் வசதி செய்யப்பபட்டுள்ளது.
- நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
- ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார்.
நெல்லை:
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளை ஜோதிபுரம் திடலில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. லெட்சுமணன் தலைமை தாங்கினார். மாவடட அவைத்தலைவர் முருகன், துணை செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தர்மன், பொருளாளர் வண்ணை சேகர் முன்னிலை வகித்தனர். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா தொகுப்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், நெசவாளரணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் தொண்டரணி செயலாளர் விஜிலா சத்யானந்த், நெசவாளரணி செயலாளர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:
ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார். பல்வேறு தலைவர்களின் வரலாற்றை படித்துள்ள நான் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரைப் போல் உலகில் வேறு எந்த தலைவரையும் பார்த்ததில்லை. அண்ணாவால் கூட அகில இந்திய அரசியலில் கால் பதிக்க முடியவில்லை.
முந்தைய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தி.மு.க.வை புலுவை போல் பார்க்கும் மனப்பாங்கு கொண்டிருந்தனர். வங்கிகளை தேசிய மயமாக்கியது, இலவச மின்சாரம் வழங்கியது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மட்டும் தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபர்களையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிய பெருமை கருணாநிதிக்கு தான் உண்டு.
கொள்கை, கோட்பாடு கொண்ட ஒரே இயக்கம் தி.மு.க. என்பதால் பா.ஜனதா நம்மை கண்டு பயப்படுகிறது. பிரதமர் மோடி ஆட்சியை அகற்றியே தீருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் நாட்டின் ஒரே முதல்-அமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். மதவாதமும் ஊழலும் கைகோர்த்துவரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், அப்துல் கையூம், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட விவசாய அணி பொன்னையா பாண்டியன், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட முன்னாள் துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான நவநீதன், இளைஞரணி மீரான் மைதீன், நிர்வாகிகள் வீரபாண்டியன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் செய்திருந்தார்.
- நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.
- இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் நேற்று முதல் வருவாய் தீர்வாயம் என்று அழைக்கப்படும் ஜமாபந்தி தொடங்கியது.
கோரிக்கை மனு
இதில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதன் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரி களிடம் நடவடி க்கை எடுக்க அறிவுறுத்தினர்.
நேற்று முதல் நாள் பாளை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து மனு க்களை பெற்றுக் கொண்ட நிலை யில் இன்று 2-வது நாளாக அங்கு நடந்த கூட்ட த்தில் கலெக்டர் பங்கேற்றார்.
2-ம் நாள்
2-ம் நாளான இன்று பாளை வட்டம் மேலப்பா ட்டம் குறு வட்டத்திற்குட்பட்ட அரியகுளம், திருத்து, கீழப்பாட்டம், கான்சாபுரம், மருதூர், கீழநத்தம், நடுவக்கு றிச்சி, சீவலப்பேரி, அவினா ப்பேரி உள்ளிட்ட கிராமங்க ளில் ஜமாபந்தி நடைபெற்றது.
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது கோரி க்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். பாளை தாலுகா அலுவல கத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணன், உதவி இயக்கு னர்கள் வாசு தேவன், கிருஷ்ண குமார், வருவாய் ஆய்வாளர் ராஜசெல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.
- மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நெல்லை, மே.1-
பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது. மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியானது மேலக்குளம் பகுதியில் இருந்து தொடங்கி 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்க்கிட் மாநகரம் வரை சென்று மீண்டும் மேலக்குளம் வந்தடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டி போட்டியினை தமிழ்நாடு மாட்டு வண்டி போட்டி யாளர் சங்க தலைவர் வேலங்குளம் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குதிரை வண்டி போட்டி மேலக்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் மேலக்குளத்தை வந்தடைந்தது.
போட்டியில் வெற்றி பெற்ற வண்டிகளுக்கு கோப் பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனக ராஜ், சுப்பையா, நவீன்போஸ், பரமராஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி களுக்கான ஏற்பாடு களை மேலக்குளம் பெரிய பெருமாள், சுஜித்வேல், விஜய வேல் மற்றும் விழாக் கமிட்டி யினர் செய்திருந்தனர்.
- பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது.
- இந்த கோவிலையொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
நெல்லை:
பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை யொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.
சிதிலமடைந்த தெப்பக்குளம்
கடந்த சில ஆண்டுகளாகவே தெப்பக்குளத்தை சுற்றி உள்ள கல் சுவர்கள் உடைந்து விழுந்ததோடு, தெப்பக்குளம் சிதிலம் அடைந்து காணப்படுவதாக பக்தர்கள் புகார் கூறினர்.
எனவே தெப்பக்குளத்தை சீரமைத்து தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என பக்தர்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்தனர்.
சீரமைப்பு பணிகள்
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் செத்து மிதந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து பக்தர்கள் கோவில் செயல் அலுவலர் சுஜாதாவிடம் புகார் கூறினர்.
இதுபற்றி செயல் அலுவலர் சுஜாதா கூறுகை யில், கோவில் தெப்பகுளம் பல வருடங்களாக சீரமைக் கப்படாமல் உள்ளது. எனவே சிதிலம் அடைந்து காணப்படும் தெப்பக்குக் குளத்தை சீரமைத்து திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.
எனவே 2 அடிக்கு மட்டும் தண்ணீர் வைத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மீன்களுக்காக தெப்பக்குளத்திற்குள் ஒரு கிணறு உள்ளது. அதையும் தாண்டி தற்போது வெயி லின் தாக்கத்தால் மீன்கள் இறந்துள்ளது.
விரைவில் தெப்பக்குளத்தை முழுமையாக சீரமைத்து திருப்பணிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாளை பர்கிட் மாநகரை அடுத்த நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விநாயகம். கூலித்தொழிலாளி.
இவரது மகள் சீதா (வயது 17). இவர் சம்பவத்தன்று விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சீதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாளை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.