என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை"

    • மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.
    • நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.

    தென்னிந்தியாவின் ஆகஸ்போர்டு என அழைக்கப்படும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவ னங்கள் அதிகம் உள்ளன.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய, மாநில அளவில் நெல்லை மாவட்டம் கல்வியில் சாதனை படைத்து வருகிறது. உயர் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளும் நெல்லையில் அதிகமாக உள்ளனர்.

    நெல்லை, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள், விஞ்ஞானிகள் என பலர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உயர் அறிவியல் நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

    இத்தகைய சிறப்புமிக்க பாளையங்கோட்டையில் அண்ணா, கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்று அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் மாணவ-மாணவிகள், போட்டி தேர்வாளர்கள், உயர் கல்வி கற்பவர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டுமென்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசினார். மேலும் முதலமைச்சரிடமும் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார்.

    இதையடுத்து பாளையங்கோட்டையில் ரூ.98 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும் என கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு அந்த நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து நூலகம் அமைப்பதற்காக பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கத்திற்கு கீழ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான இடத்தை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு பார்வையிட்டு தேர்வு செய்தார். அந்த இடத்தில் நூலகம் அமைப்பது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து அங்கு 3 ஏக்கர் நிலத்தில் 69 ஆயிரத்து 414 சதுர அடி பரப்பளவில் நூலகம் அமைப்பதற்கு இடம் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    இந்த நூலகம் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இதில் உயர் கல்வி கற்பதற்கான புத்தகங்கள், போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்கள், போட்டி தேர்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் அரங்கம், மாநாட்டு கூடம் வசதி, குழந்தைகள், மாணவர்கள், முதியவர்கள் படிப்பதற்கு தனி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இடம் பெறுகிறது.

    சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போன்றே அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படு கிறது. இங்கு போட்டித் தேர்விற்கு மாணவர்கள் தயாராகும் வகையில் 1 லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகிறது. இந்த நூலகம் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டுக்கு மேலும் ஒரு பெருமையை சேர்க்கும் என கல்வியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்.
    • கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    நெல்லைக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்நிலையில், மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்திருந்த குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    • 13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
    • புல்வெளியில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் ராம் என எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    நெல்லை ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள பாறையில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

    அருங்காட்சியகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள், பெயிண்ட் மூலம் பாறையில் இந்தியில் ராம் என எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    13 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ள நிலையில் புல்வெளியில் அழகிற்காக வைக்கப்பட்டுள்ள பாறையில் இந்தியில் ராம் என எழுதி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வடமாநிலத்தவர்களை வைத்தே அரசு அதிகாரிகள் இந்தி எழுத்துகளை அழித்தனர்.

    • மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
    • மிக கனமழை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், நெல்லையில் மிக கனமழை எச்சரிக்கையை அடுத்து அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் கனமழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 0462- 2501070, 9786566111 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு.

    தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

    • தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.
    • இரு மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    கன்னியாகுமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 25ம் தேதி குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

    நெல்லை, தென்காசிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.

    • நாய் கடித்த காயத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால், உடல்நிலை மோசமாகியுள்ளது.
    • சிகிச்சை பலனின்றி ரேபிஸ் பாதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நாய் கடித்து ரேபிஸ் பாதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சில நாட்களுக்கு முன் ஐயப்பன் (30) என்ற கட்டட தொழிலாளி நாய் கடித்த நிலையில், காயத்தை சரியாக கவனிக்காமல் விட்டதால், உடல்நிலை மோசமாகி நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    • நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
    • தூத்துக்குடி மாநகர பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காட்சியளித்தது. வெயில் தலைகாட்டவில்லை. இந்நிலையில் மாலையில் திடீரென மாநகரின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. மேலும் மின்னலும் பலமாக இருந்தது.

    வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கொக்கிரகுளம் பழைய ஆற்றுப்பாலம், பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் பெருமாள்புரத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.

    சுமார் 2 மணி நேரம் டவுன் பகுதியில் பெய்த கனமழையால் டவுன் வ.உ.சி. தெருவில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி கிடந்தது. ஏற்கனவே வாறுகால் அடைப்புகளால் சாக்கடை நிரம்பிய நிலையில் இரவு முழுவதும் சாக்கடை நீர் மழைநீருடன் கலந்து செல்வதற்கு வழியின்றி தேங்கியது. அதில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். பாளையங்கோட்டை மற்றும் நெல்லையில் தலா 3 சென்டிமீட்டர் மழை கொட்டியது.

    நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பகலில் வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக 3½ சென்டி மீட்டர் மழை பதிவாகியது. அம்பையில் இன்று காலை விட்டு விட்டு மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. பாபநாசம் அணை நீர்மட்டம் 109 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 98½ அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 116 அடியாகவும் இருக்கிறது. 52 அடி கொண்ட கொடுமுடியாறு அணையில் 45 அடி நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 67¾ அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 60 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 130½ அடியாக வும் உள்ளது.

    நகர் பகுதிகளை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியான சிவகிரி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மாலை நேரங்களில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் கனமழை கொட்டியது. இதனால் குளிர்ச்சியான நிலை அந்த பகுதிகளில் நிலவி வருகிறது.

    அதிகபட்சமாக சிவகிரியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் அடித்தது. இன்று காலை முதலே புளியங்குடி, சிவகிரி, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர், கழுகு மலை, திருச்செந்தூர் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. காடல்குடி, வைப்பார், சூரங்குடியில் பெய்த பரவலான மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரத்தில் சாரல் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகர பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    • தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர்.
    • 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது38). இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 27). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி முத்தமிழ் (4½), சுசிலாதேவி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    முத்தையா ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையை கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

    நேற்று காலை கறி குழம்பு வைப்பதற்காக முத்தையா கறி வாங்கி கொடுத்ததாகவும், முத்துலெட்சுமி குழம்பு வைக்க மாட்டேன் என்று மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து முத்தையா தனது மனைவி முத்துலெட்சுமி மற்றும் குழந்தைகளை கங்கைகொண்டானில் இருந்து பருத்திகுளத்தில் உள்ள முத்துலெட்சுமியின் தாயார் லட்சுமி வீட்டில் கொண்டு விட்டுள்ளார். அதோடு நேற்றிரவு முத்தையா குடித்து விட்டு பருத்திகுளம் சென்று முத்துலெட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் முத்துலெட்சுமி மனமுடைந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை முத்துலெட்சுமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பெருமாள் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் லெட்சுமி தேடிப்பார்த்த போது அப்பகுதியில் உள்ள கிணற்று அருகே முத்துலெட்சுமி செருப்புகள் கிடந்ததை கண்டார். உடனே கிணற்றுக்குள் பார்த்த போது கிணற்றில் முத்தமிழ், சுசிலாதேவி ஆகிய 2 குழந்தைகளும் மிதந்தனர்.

    உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அலுவலர் பர்னபாஸ் சாலமோன் தலைமையில் வீரர்கள் கிணற்றுக்கு விரைந்து சென்றனர்.

    மேலும் கங்கைகொண்டான் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர். தொடர்ந்து முத்துலெட்சுமியும் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதை பார்த்து அங்கிருந்த உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் பருத்திகுளம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முத்தையா மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாலையிலும் பரவலாக மழை பெய்தது.
    • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பரவலாக நேற்று மாலையில் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் வகையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் திடீர் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாலையிலும் பரவலாக மழை பெய்தது. டவுன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் ஓடியது.

    மாநகரை பொறுத்தவரை அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லிமீட்டரும், பாளையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டி சுற்று வட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகம் திரண்டு காணப்பட்டது. குளிர்ச்சியான காற்று வீசியதோடு, பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கார் சாகுபடியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் சுற்றுவட்டாரங்களில் நெற்கதிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று பெய்த மழையால் பல இடங்களில் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தன.

    மேலும் மழை காரணமாக கார் சாகுபடிக்கான அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவடை செய்து மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது.

    குறிப்பாக மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கார் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை பணிகள் சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென பெய்த மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் அங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது.

    ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும், கொள்முதல் செய்வதற்காக குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளும் மழையில் நனைந்து நாசமாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணையில் 17 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதோடு, விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பரவலாக நேற்று மாலையில் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. அங்கு 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை, சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்துமலை அருகே பலபத்திரராம புரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவேங்கடத்தில் 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் நடுவக்குறிச்சி, பழங்கோட்டை பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    • பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த நரசிங்க நல்லூர் பொன்விழா நகரை சேர்ந்தவர் அப்துல் வகாப் (வயது 37).

    இவர் கராத்தேவில் டிப்ளமோ முடித்துள்ள நிலையில் டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் கராத்தே வகுப்பு நடத்தி வருகிறார். இதேபோல் பாளை கே.டி.சி. நகர் பகுதியிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார்.

    இந்த 2 பயிற்சி வகுப்புகளிலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்துல் வகாப்பின் மையத்திற்கு சுத்தமல்லி பகுதியை சேர்ந்த ஒருவரின் 13 வயது மகள் சென்று கராத்தே படித்து வருகிறார்.

    இவரது தாய் தினமும் காலையில் அந்த சிறுமியை பயிற்சி மையத்திற்கு கொண்டு சென்று விட்டுள்ளார். அப்போது அப்துல் வகாப் அந்த பெண்ணிடம் தவறான நோக்கத்தில் பழகிட, செல்போன் எண்ணை அவரிடம் இருந்து பெற்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் நைசாக பேசி ஆசை வார்த்தை கூறி தனிமையில் பழகி உள்ளார்.

    தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக அவர்கள் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் சமீப காலமாக அந்த பெண் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற அப்துல் வகாப், போன் செய்தபோது எதற்காக எடுக்கவில்லை என்று கூறி அவரை தாக்கியதோடு, தான் அழைக்கும்போது தன்னுடன் வந்து தனிமையில் இருக்க வேண்டும் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

    இதனால் அப்துல் வகாப் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். உடனடியாக அந்த பெண் சுத்தமல்லி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    அப்துல் வகாப் தினமும் தனது பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்களின் தாயாரை நோட்டமிட்டு அதில் சில பெண்களிடம் நைசாக பேசி அவர்களது செல்போன் எண்களை வாங்கி பேச்சு கொடுத்துள்ளார்.

    தொடர்ந்து அவர்களை ஆசை வார்த்தை கூறி மயக்கி தனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அவரது மன்மத லீலையின் வலையில் சுமார் 8 பெண்கள் வரை ஏமாந்து இருப்பதும், சில பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையை இழந்திருப்பதும் தெரிய வந்தது.

    மேலும் இதனை வெளியே தெரிவித்தால் தங்களுக்கு அவமானம், வெளியில் நடமாட முடியாது என்று கருதி அந்த பெண்கள் எதையும் வெளியே சொல்லாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

    தற்போது பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கராத்தே மாஸ்டரின் இந்த மோசமான நடவடிக்கைகளை அறிந்தே அவரிடம் இருந்து விலகியதாகவும், அதனால் தான் அப்துல் வகாப் வீட்டிற்கு சென்று பிரச்சினை செய்ததாகவும் தகவல் தெரியவந்தது.

    இதையடுத்து சுத்தமல்லி போலீசார் நேற்று இரவு பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அப்துல் வகாபை கைது செய்தனர். அவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் தைரியமாக புகார் அளித்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் உறுதியளித்துள்ளனர்.

    • மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 118 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று அணையில் 118.55 அடி நீர் இருந்த நிலையில், இன்று நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 119.75 அடியாக உள்ளது.

    மற்றொரு பிரதான அணையான சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களில் சுமார் 15 அடி வரை உயர்ந்துள்ளது. நேற்று அந்த அணையில் நீர் இருப்பு 118.11 அடியாக இருந்தது.

    தொடர் மழையால் நீர் வரத்து அதிகரித்து 123.52 அடியாக உயர்ந்தது அந்த அணையில் ஒரே நாளில் 5 அடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாலுமுக்கு மற்றும் ஊத்து எஸ்டேட்டுகளில் தொடர்ச்சியாக 3 நாட்கள் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 7 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 6½ சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மேலும் காக்காச்சியில் 5½ சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. இதன் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, தென்காசி நகர் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டமாக காட்சியளிப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணைகளை பொறுத்த வரை 85 அடி கொண்ட கடனா அணைக்கு வினாடிக்கு 132 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் நேற்று இன்று ½ அடி உயர்ந்து 67½ அடியை எட்டியுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து 72½ அடியை எட்டியது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 61 அடியை நெருங்கி உள்ளது.

    ×