என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Investigaton"

    • தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர்.
    • 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கயத்தாறு:

    நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள பருத்திகுளம் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா (வயது38). இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 27). இவர்களுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி முத்தமிழ் (4½), சுசிலாதேவி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    முத்தையா ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையை கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

    நேற்று காலை கறி குழம்பு வைப்பதற்காக முத்தையா கறி வாங்கி கொடுத்ததாகவும், முத்துலெட்சுமி குழம்பு வைக்க மாட்டேன் என்று மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து முத்தையா தனது மனைவி முத்துலெட்சுமி மற்றும் குழந்தைகளை கங்கைகொண்டானில் இருந்து பருத்திகுளத்தில் உள்ள முத்துலெட்சுமியின் தாயார் லட்சுமி வீட்டில் கொண்டு விட்டுள்ளார். அதோடு நேற்றிரவு முத்தையா குடித்து விட்டு பருத்திகுளம் சென்று முத்துலெட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் முத்துலெட்சுமி மனமுடைந்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை முத்துலெட்சுமி தனது குழந்தைகளை அழைத்து கொண்டு பெருமாள் கோவில் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் லெட்சுமி தேடிப்பார்த்த போது அப்பகுதியில் உள்ள கிணற்று அருகே முத்துலெட்சுமி செருப்புகள் கிடந்ததை கண்டார். உடனே கிணற்றுக்குள் பார்த்த போது கிணற்றில் முத்தமிழ், சுசிலாதேவி ஆகிய 2 குழந்தைகளும் மிதந்தனர்.

    உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் கங்கைகொண்டான் தீயணைப்பு நிலைய அலுவலர் பர்னபாஸ் சாலமோன் தலைமையில் வீரர்கள் கிணற்றுக்கு விரைந்து சென்றனர்.

    மேலும் கங்கைகொண்டான் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி 2 குழந்தைகளை சடலமாக மீட்டனர். தொடர்ந்து முத்துலெட்சுமியும் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. 3 பேர் உடல்களையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டதை பார்த்து அங்கிருந்த உறவினர்களும், கிராம மக்களும் கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் பருத்திகுளம் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், முத்தையா மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கலெக்டர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.
    • மதுரை முழுவதும் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் கட்ராபாளையத்தில் உள்ள விசாகா தனியார் விடுதியில் கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார்.

    குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கலெக்டர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    * விடுதியில் 2 பெண்கள் பலியானது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    * விபத்து தொடர்பாக விசாகா தங்கும் விடுதி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    * கட்டடம் குறித்து வழக்கு இருப்பதாக கூறப்படுவதால் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும்.

    * மதுரை மாவட்டங்களில் முறையான அனுமதியின்றி இயங்கும் விடுதிகளை கண்டறிந்து சீல் வைக்கப்படும்.

    * மதுரை முழுவதும் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    * மதுரையில் பதிவு செய்யாத அனைத்து விடுதிகளையும் ஆய்வின் மூலம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சடலமாக மீட்பு.
    • வனப்பகுதிக்கு சென்று தேடிய நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவரை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

    அரியாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், முருகானந்தம் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

    நேற்றிரவு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படும் நிலையில், வீடு திரும்பாததால் இருவரையும் உறவினர்கள் தேடி வந்தனர்.

    வனப்பகுதிக்கு சென்று தேடிய நிலையில் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர்.

    இருவரும் முயல் வேட்டைக்கு சென்றபோது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது.

    நெல்லை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் விஜயகுமார் (வயது 25). இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிமெண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை சாந்திநகர் 24-வது தெருவை சேர்ந்த ஞானராஜ் மகள் ஜெனிபர் (23) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த ஜெனிபரின் சகோதரர் சிம்சன் என்ற புஷ்பராஜ் செல்போனில் பேசி விஜயகுமாரை நெல்லைக்கு வரவழைத்துள்ளார்.

    நேற்று காலை ரெயிலில் நெல்லைக்கு வந்த விஜயகுமாரை சிம்சன் தனது நண்பரான பாளை அண்ணா நகரை சேர்ந்த சிவாவுடன் (35) சேர்ந்து அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து கொலை செய்தார்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிம்சனையும், சிவாவையும் கைது செய்து நடத்திய விசாரணையில் சிம்சன் கூறியதாவது:-

    எனது தங்கையை நான் கஷ்டப்பட்டு வளர்த்து என்ஜினீயரிங் படிக்க வைத்தேன். பின்னர் அவர் நாகர்கோவிலில் வேலை பார்த்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் விஜயகுமாருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதனை அறிந்து நாங்கள் அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டோம். இதனால் சமீபத்தில் ஜெனிபர் கள்ளக்குறிச்சியில் விஜயகுமாரை தேடி சென்றுவிட்டார்.

    இதுகுறித்து பாளை மகளிர் போலீசில் சமாதானம் பேசி மீண்டும் ஜெனிபரை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டோம். ஆனாலும் எனது தங்கை கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றார். இதனால் எனக்கு மனவேதனை ஏற்பட்டது. எனது தங்கையை இவ்வளவு கஷ்டபடுத்தும் விஜயகுமாரை கண்டிக்க வேண்டும் என்று நினைத்து அவரை நைசாக பேசி நெல்லைக்கு வரவழைத்தேன்.

    ஆனால் அவர் முன் எச்சரிக்கையாக அவரது நண்பர் ஒருவரை அழைத்து வந்திருந்தார். இதனால் அவரை நம்பும்படி பேசி கழட்டிவிட்டுவிட்டு விஜயகுமாரை மட்டும் அழைத்து வந்தேன். எனது நண்பன் சிவா வீட்டில் வைத்து சமாதானம் பேசினோம். அப்போது அவர் எங்களது சமாதானத்தை கேட்கவில்லை. காதலை கைவிட மறுத்தார். இதனால் நான் அவரை தாக்கினேன். ஆத்திரம் அதிகரித்ததில் நாங்கள் 2 பேரும் சேர்ந்து விஜயகுமாரை கொலை செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே விஜயகுமார் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அந்த வழியாக வந்தது. கார் மேம்பாலம் அருகே ரோட்டில் ஏறியபோது திடீரென ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.
    • காரின் முன்பகுதி, உள்பக்கம் அனைத்தும் அப்பளம்போல் நொறுங்கியது. கார் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இதையடுத்து 30-வது நாள் காரிய நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.

    இந்த நிலையில் இரவு கண் விழித்து தூங்காமல் இருப்பதற்காக நேற்று இரவு டீ குடிக்க வேண்டி ஆத்தூர் பஸ் நிலையத்திற்கு அவரது உறவினர்கள் ராஜேஷ், சந்தியா உள்பட 11 பேர் ஆம்னி காரில் சென்றனர். அங்கு ஒரு டீ கடையில் அனைவரும் டீ குடித்து விட்டு அங்கிருந்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினர்.

    காரை ராஜேஷ் ஓட்டி வந்தார். சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓட்டம்பாறை மேம்பாலம் பகுதியில் வலது புறத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் அந்த வழியாக வந்தது. கார் மேம்பாலம் அருகே ரோட்டில் ஏறியபோது திடீரென ஆம்னி பஸ் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி, உள்பக்கம் அனைத்தும் அப்பளம்போல் நொறுங்கியது. கார் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டன. கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது.

    இந்த விபத்தில், காரை ஓட்டிய ராஜேஷ் (வயது 29), காருக்குள் இருந்த சந்தியா (20), சரண்யா (26), ரம்யா (25), சுகன்யா (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பெரியண்ணன், கிருஷ்ணவேணி, சுதா, புவனேஸ்வரன், உதயகுமார், தன்ஷிகா (11) ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் அவர்கள் கதறினர்.

    இதை பார்த்த பொதுமக்கள் இது பற்றி ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவர்கள், கார் இடிபாடுகளில் இருந்து படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆத்தூர் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் அங்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து இடிபாடுகளை அகற்றி 6 பேரையும் மீட்டு மோட்டார்சைக்கிள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் 11 வயது சிறுமி தன்ஷிகா சேலம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

    உயிரிழந்த 5 பேர் உடல்களும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.

    இது குறித்த தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா மற்றும் ஆத்தூர் டி.எஸ்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே அங்கு சென்ற மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் சம்பவ இடத்தில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். துக்க நிழ்வுக்கு வந்தவர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த மாரிசாமி என்பவரது மனைவி சுதா (23), பெரியசாமி மகன் பெயரியண்ணன் (38) , ஹரிமூர்த்தி மகள் புவனேஸ்வரி (17), செல்வராஜ் மனைவி கிருஷ்ணவேணி (45), சிவகுமார் மகன் உதயகுமா ர் (17)ஆகிய 5 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சந்தித்த கலெக்டர் கார்மேகம் மற்றும் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர். மேலும் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் உடனுக்குடன் செய்யவும் டாக்டர்களிடம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். அப்போது கதறி அழுதவர்களை கலெக்டர் தேற்றினார். தொடர்ந்து விபத்து நடந்த பகுதியையும் கலெக்டர் கார்மேகம், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    லாஸ்பேட்டை அருகே படிப்புக்கேற்ற வேலைகிடைக்காத விரக்தியில் இளம் பெண் தூக்குபோட்டு இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது44). கொத்தனார். இவருடைய மகள் பிரியங்கா (18). இவர் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலைபார்த்து வந்தார். பின்னர் அந்த வேலை பிடிக்கவில்லை என்று கூறி வேலையில் இருந்து நின்று விட்டார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இருந்து மற்றொரு மகளை சாப்பிட முருகன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது மகள் பிரியங்கா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தூக்கில் இருந்து மகள் பிரியங்காவை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரியங்கா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து முருகன் லாஸ்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அம்மாசாமி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பிரியங்கா சாவுக்கு வேறு ஏதேணும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    பண்ருட்டி அருகே குடும்ப பிரச்சனையில் தம்பியை அடித்து கொன்ற அண்ணனை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி அருகே கீழகுப்பம் காலனியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள். குடும்ப பிரச்சினை காரணமாக வீரமுத்துவை பிரிந்து பழனியம்மாள் சென்றுவிட்டார்.

    இந்நிலையில் நேற்று வீரமுத்து, தன்னுடைய அண்ணன் சக்திவேலிடம்(50) என்னுடைய மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல் கீழே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து வீரமுத்துவை சரமாரியாக தாக்கினார். இதில் வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர். #tamilnews
    ×