என் மலர்
நீங்கள் தேடியது "தூத்துக்குடி"
- அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார்.
- தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம்
தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவிக்கோரி இன்று முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலும், தவெக நிர்வாகி அஜிதாவிற்கு அப்பதவி வழங்கப்படவில்லை. தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜை நியமித்தார் அக்கட்சித் தலைவர் விஜய்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் தவெக தலைவர் விஜய். அதன் ஒருபகுதியாக இன்று விடுபட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதே நேரத்தில், தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக சாமுவேல் என்பவர் நியமிக்கப்பட உள்ளார் என்ற செய்தியும் நேற்றே பரவியது.
இதனால் தனக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பெண் நிர்வாகி அஜிதா இன்று முழுவதும் தவெக தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகையில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும் அவருக்கு எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. விஜய் காரை மறித்தும் விஜய் இடமிருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சார் சார் என அழைத்தும் கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்
- கட்சிக்காக நீண்டநாட்கள் உழைத்ததாக கூறும் அஜிதா
சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த விஜய்யின் காரை, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா. இவர் விஜய் கட்சி தொடங்கியவுடன் தவெகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால் தனக்கு அந்தப் பதவியை வழங்கவேண்டும் என அஜிதா கோரியதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு அப்பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அஜிதா காலையிலிருந்து கண்ணீருடன் பனையூர் அலுவலகத்தின் முன்பு அவரது ஆதரவாளர்களுடன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் விஜய் அலுவலகத்திற்கு வர, அவரிடம் பேசவேண்டும் என அவரது காரை மறிக்க முயன்றார். ஆனால் விஜய்யின் பவுன்சர்கள் அவரை தடுத்து உடனே அப்புறப்படுத்தினர். பின்னர் விஜய்யின் கார் புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்குள் சென்றது. அங்கு போய் விஜய்யை சந்திக்கலாம் என கேட்ட போதும் அஜிதாவுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
தவெகவில் விடுபட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று நியமிக்கப்படுகின்றனர். இதனால் விஜய் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுவிட்டு அவர் வெளியே வரும் வரை நான் காத்திருப்பேன் என அஜிதா அங்கேயே நின்று கொண்டிருக்கிறார். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.






