என் மலர்
நீங்கள் தேடியது "போதைப்பொருட்கள்"
- நடிகர்கள் மட்டும் போதை பொருளை பயன்படுத்துவதில்லை.
- சாமானிய மக்கள் கூட போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடிய நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது.
மதுரையில் அ.தி.மு.க. மாநில மகளிரணி துணைச் செயலாளர் நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களிடம் கூறி யதாவது:-
போதைப்பொருள் இவ்வளவு சுதந்திரமாக கிடைக்க காரணம் தி.மு.க. ஆட்சி தான். தி.மு.க.வி.ல் இருப்பவர்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. போதைப் பொருள் புழக்கத்தால் பாலியல், கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
நடிகர்கள் மட்டும் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்று இல்லை. மாணவர்கள் மத்தியிலும் அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. தி.மு.க.விலிருந்து, அ.தி.மு.க.விற்கு ஆட்களை அனுப்பி கெட்ட பெயர் வாங்க வைக்க வேண்டும் என செயல்படுகிறார்கள்.
தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் அதிகமாக உள்ள நிலையில் நடிகர்கள் விவகாரத்தை வைத்து திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். முதலமைச்சர் மட்டும் தான் தன்னை ஒரு மாடல் என சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர அவர் தமிழகத்தை ஒரு மாடல் ஆக்கியதாக தெரியவில்லை.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் தி.மு.க. நிறுத்தி விட்டது. 2026-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலத் திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்ப டும். நடிகர்கள் மட்டும் போதை பொருளை பயன்படுத்துவதில்லை, சாமானிய மக்கள் கூட போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடிய நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகளை மையப்படுத்தி எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளார். தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை பேசுவதில்லை, தி.மு.க. மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பும் வேலைகளில் எல்லாம் ஈடுபட்டு வருகிறது.
பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாவதற்கு மிக முக்கிய காரணமாக டாஸ்மாக் உள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த முடியாது. மதுவிலக்கு அமல்படுத்தினால் கள்ளச்சாராய புழக்கம் அதிகரிக்கும். ஆனால் மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்..
- தமிழ்நாட்டிலும் அண்மை காலங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
- போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் குற்றச்செயல்களை அதிரித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளில் இந்திய முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டிலும் அண்மை காலங்களில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. போதைப்பொருட்கள் பயன்பாட்டினால் குற்றச்செயல்களை அதிரித்துள்ளன என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
அண்மையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யபட்டது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலை தடுக்க, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, போதைக்கு அடிமையாவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதெல்லாம் இத்தினத்தில் வலியுறுத்தப்படும்.
- போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
- போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல் 5பேர் Grindr செயலியை பயன்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதே சமயம் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல் 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
- போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
- போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன்.
ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.
போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும்.
போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும்.
இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓய்வுபெற்ற போலீஸ் SI ஜாகீர் உசேன் (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
- ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத கல் குவாரிகளின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டிய சமூக ஆர்வலரான ஜகபர் அலி (வயது 58) ஜனவரி மாதம் 17-ம் தேதி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலையின் பரபரப்பு அடங்குவதற்குள்ளே நெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 60) நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே வீடியோ வெளியிட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை எனில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜாகீர் உசேன் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதனால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது.
ஒருபக்கம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேற மறுபக்கம் தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே சாதி ரீதியிலான மோதல்கள் அதிகரித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலியில் கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி விட்டன. 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருநெல்வேலியில் 285 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 60 இளம் சிறார்கள் உட்பட 1045 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 392 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டவும் ரவுடிகளை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாக்குறுதி வெறும் வார்த்தையில் மட்டும் தான் உள்ளதோ என்ற கேள்வி எழுகிறது.
போலீஸ் துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரும்புக் கரம் கொண்டு இத்தகைய பிரச்சனையை தடுப்பார் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் இன்றுவரை ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது.
ஜாகிர் உசேனின் படுகொலை 2026 சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மாணவர்களிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
- கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ மாணவிகளின் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு சான்றிதழையும் நினைவு பரிசினையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசும் போது, 'மாவட்டத்தில் தாலுகா வாரியாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் கஞ்சா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களை புழக்கத்தில் விடும் நபர்கள் குறித்து புகார் அளிக்கலாம்' என்றார்.
இதில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார், நகர் மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார், சேர்மன் ரவி கலந்து கொண்டனர்.
முன்னதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2022-23 -ம் கல்வியாண்டில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார்.
- அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
- போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுடன் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.இதில் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக போதை பொருள் ஒழிப்பு, சாலை விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் விபத்துக்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து போலீசார் செயல்பட வேண்டுமென அமைச்சர் அறிவுறுத்தினர்.திருப்பூர் மாவட்டத்தில் விபத்துகளை குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . போதை பொருள் இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருக்க வேண்டும் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை போலீசார் உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
- துறை சார்ந்த அலுவலர்களுடன் வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான வாராந்திரஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் போதைபொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான துறை சார்ந்தஅலுவலர்களுடன் வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து தொடர்ந்து காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பாக புகார்கள் வரும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வுமையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அனுமதியற்ற மதுபானகூடங்கள் குறித்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். வருகின்ற ஜுன் 26 போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
அதிக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ெரயில் நிலையம், காய்கறிச்சந்தை மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு குறித்த சுவரொட்டிகள், ஒட்டுவில்லைகள் மூலம்பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சென்றடையும் வகையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.காவல்துறை, கலால்துறை இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டு அனுமதியற்ற மதுபானக்கூடங்கள் மற்றும் போதைபொருள் இல்லாத நிலைக்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் , மாநகர காவல் உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) ஈஸ்வரன்,உதவி ஆணையாளர் (கலால்) ராம்குமார், வடிப்பக அலுவலர் துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை:
சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை அடங்கிய 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கடைகளில் 3 கிலோவுக்குள் குட்கா விற்பனை செய்யப்பட்டால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது.
- குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி ராஜினாமா செய்ய வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் அருகே உண்ணாவிரதம் நடந்தது.
100-க்கும் மேற்பட்ட பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி பங்கேற்றனர்.
உண்ணாவிரதத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
புதுச்சேரியில் நடந்த கொடூர சம்பவம் பெண்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா கூட்டணி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி வந்த பிறகு போதைப் பொருட்களான கஞ்சா, அபின், போதை ஸ்டாம்ப் தாராளமாக விற்கப்படுகிறது. கல்லூரி, பள்ளி, பல்கலைக்கழகம் முன்பாகவும் விற்கப்படுகிறது.
புதுவை கஞ்சா நகரமாகிவிட்டது. மக்கள் வசிக்கும் பகுதியில் ரெஸ்டோபார்கள் திறக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
முதல்- அமைச்சரும், உள்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்யவில்லை. அதைத் தொடர்ந்தே இச்சம்பவம் நடந்துள்ளது. குழந்தை உயிரிழப்பானது மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
குழந்தைகளை பள்ளி, கல்லூரிக்கு எப்படி அனுப்புவது? யார் பாதுகாப்பு என பெற்றோர்கள் பயத்தில் உள்ளனர்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் அதுபோல் நடக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் இதேநிலைதான் உள்ளது.
குஜராத்தில் ஏராளமான பெண்கள் காணாமல் போயுள்ளனர். பெண்களை துச்சமாக மதிக்கும் பா.ஜனதா, பெண்களுக்கு பாதுகாப்பு தராத ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டும்.
சிறுமி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை.
புதுவை அரசு வழக்கை பூசி மெழுக பார்க்கிறது. அத்துடன் கஞ்சா விநியோகம், எங்கிருந்து வருகிறது. யார் விநியோகம் செய்கிறாகள். எந்த அரசியல்வாதி பின்னணி, பல மாநிலங்களில் சேர்ந்து வருவதால் சி.பி.ஐ. விசாரணை வைத்தால் தான் இவ்வழக்கை முழு ரூபத்தை காணமுடியும். நடவடிக்கை எடுக்க முடியும்.
சிறுபான்மையினரை பாதிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் அமல்படுத்த முயற்சித்தால் எதிர்ப்போம்.
புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து நிற்க யாருமில்லா நிலை பா.ஜனதாவில் உருவாகியுள்ளது. காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. காங்கிரஸ் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிக்கும் என்று கூறினார்.
- இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்
- முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை
நேற்று சென்னையில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை விமர்சிப்பதோடு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தியதாக அதிமுகவை விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது அதிமுக ஆட்சியில் தான்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.
அப்போது, "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை. நாகலாந்து, உத்தரகாண்ட், இமாச்சல், குஜராத் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்களை கைப்பற்றுகிறார்கள் என்றால் அதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் இப்படி அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது.
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதை தான் குற்றம் சாட்டுகிறோம். போதை பொருட்களை மத்திய அரசின் துறைகள் பிடித்து நடவடிக்கை எடுக்கிறது. திமுக அரசு மீது குற்றச்சாட்டு வைத்தால், அவர்களுக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்
- 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 3 மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை கண்டுபிடித்து, சுமார் ₹300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
ராஜஸ்தானின் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மால், ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒசியான் மற்றும் குஜராத் மாநிலத்தின் காந்திநகர் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.
அதில், சம்பவ இடத்தில் இருந்து 149 கிலோ மெபெட்ரோன், 50 கிலோ எபிட்ரின் மற்றும் 200 லிட்டர் அசிட்டோன் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் இதுவரை ₹ 4,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






