search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counterfeit Liquor"

    • துறை சார்ந்த அலுவலர்களுடன் வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான வாராந்திரஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் போதைபொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான துறை சார்ந்தஅலுவலர்களுடன் வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து தொடர்ந்து காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பாக புகார்கள் வரும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வுமையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அனுமதியற்ற மதுபானகூடங்கள் குறித்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். வருகின்ற ஜுன் 26 போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

    அதிக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ெரயில் நிலையம், காய்கறிச்சந்தை மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு குறித்த சுவரொட்டிகள், ஒட்டுவில்லைகள் மூலம்பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சென்றடையும் வகையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.காவல்துறை, கலால்துறை இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டு அனுமதியற்ற மதுபானக்கூடங்கள் மற்றும் போதைபொருள் இல்லாத நிலைக்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் , மாநகர காவல் உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) ஈஸ்வரன்,உதவி ஆணையாளர் (கலால்) ராம்குமார், வடிப்பக அலுவலர் துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

    • கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் இருந்து 500 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் ராமநாயக்கன் குல வடகரை சேர்ந்த பால்பாண்டி மற்றும் அருள்மொழித் தேவன் சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்த உதயகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும், அவர்களிடமிருந்து 500 சாராய பாட்டில்களும், நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மது பாட்டில்களை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்தார்.

    • 5 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல்
    • ஜெயிலில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை,

    ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமை யிலான போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சின்னமூக்கனூர் அருகே உள்ள சாமியார் கொட்டை பகுதியில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மற்றும் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த பாக்கியராஜ் (வயது 35) என்பவரை பிடித்து 30 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

    அச்சமங்கலம் கீழ் தெரு பகுதியில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்த ரவி (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 40 மது பாட்டில்களையும் 5 லிட்டர் கள்ளசாரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ள சாராயம், மது விற்ற இதே போன்று பழைய ஜோலார்பேட்டை, கடை தெரு பகுதியில் திலீப் குமார் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 58 லிட்டர் கள்ள சாராயத்தையும் 30 மது பாட்டில்கள் என மொத்தம் 100 மது பாட்டில்களையும் 68 லிட்டர் கள்ளசாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிவிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க “10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)“8300018666” என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் அனைத்து துறைஅலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் கள்ளச்சாராயம் நடமாட்டம் உள்ளதா என கிராம நிர்வாக அலுவலர்கள் வட்டாட்சியருக்கு தெரிய–ப்படுத்தி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பானவிபரங்களை தெரிவிக்க "10587 இலவச அழைப்புஎண்ணிற்கோ (அ)"8300018666" என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ்,மாவட்ட காவல் துணைகண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், உதவி ஆணையர் நரேந்திரன், மாவட்ட மேலாளர் நாகப்பட்டினம் வாசுதேவன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா மற்றும் காவல் துறை அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி வழங்கி வருகிறது.
    • அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்க ளையும் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    புதுவை அரசு கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி வழங்கி வருகிறது. அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல் கட்டமாக 146 பட்டதாரி ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

    இதற்கான கோப்பு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. புதுவை, காரைக்காலில் 127 அரசு பள்ளிகளும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு மாற விண்ணப்பித்துள்ளன. சிபிஎஸ்இ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்யாமலேயே அரசு பள்ளிகள் என்பதால் 78 பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

    மீதமுள்ள பள்ளிகள் விண்ணப்பிக்க கால தாமதம் ஏற்பட்டதால் அனுமதி கிடைக்கவில்லை. அந்த பள்ளிகளுக்கும் அனுமதி கிடைத்துவிடும். சிபிஎஸ்இ பாடத்தி ட்டத்துக்கு மாறினாலும் சீருடையில் எந்த மாற்றமும் இருக்காது. பொது தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இதற்காக பள்ளிகளை கண்காணிப்பது, ஆசிரி யர்களை கண்காணிக்க குழு அமைக்க உள்ளோம். சென்டாக் மாணவர் சேர்க்கையின்போது ஜாதி சான்றிதழ் பெற மாண வர்கள் அலைக்கழிக்கப்படு வதாக தொடர்ந்து கூறப்படு கிறது.

    கடந்த காலத்தில் வாங்கிய சாதி சான்றிதழ் எண் இருந்தால்கூட போதும் என தெரி வித்துள்ளோம். ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக கொள்கை வெளியிட்டுள்ளோம். இதற்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். அவர்களையும் அழைத்து பேசி முடிவெடுக்கப்படும். பள்ளிகள் திறக்கும் முன்பே கவுன்சிலிங் நடத்தி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.

    கூட்டுறவு கல்வியியல் கல்லூரியை கல்வித்துறையுடன் இணைக்க முதல அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதில் நடைமுறை பிரச்சினைகள் உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இதன்பின் கல்லூரி கல்வித் துறைக்கு மாற்றப்படும்.

    தமிழகத்தில் கள்ளச்சாராய வழக்கில் புதுவையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக புதுவை போலீசாரும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளோம். கலால்துறையுடன் இணைந்து மாநில எல்லைகளில் சாராய நடமாட்டத்தை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதுவையை பொறுத்தவரை கள்ளச்சாராயம் கிடையாது.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழ் விருப்ப பாடமாக இருக்கும். மொழி ஆர்வம் உள்ளவர்கள் தமிழை எடுத்துக்கொள்வார்கள். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. பாஜக பிரமுகர் செந்தில்குமரன் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு அரசு பரிந்துரைக்கவில்லை. என்.ஐ.ஏ. தானாகவே முன்வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் விசாரணை முடித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கள்ள சாராயத்தை ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • 91500 11000 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

    விருதுநகர்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    இதைத்தொடர்ந்து கள்ள சாராயத்தை ஒழிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து ஏராளமா னோரை கைது செய்துள்ளது.

    வடமாவட்டங்களில் தற்போது கள்ள சாராய விற்பனை இருக்கும் நிலையில் தென் மாவட்டங் களில் கள்ள சாராயம் 90 சதவீதம் ஒழிக்கப்பட்டு ள்ளது. இதற்கு கடந்த காலத்தில் நடந்த கள்ள சாராய சாவுகளே காரணம்.

    கடந்த 1995-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கள்ள சாராயம் குடித்து 27 பேர் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கள்ள சாராய சாவு நிகழ்ந்த பின் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க போலீசார் அப்போது தீவிர நடவ டிக்கை எடுத்தனர். விருது நகர் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீசார் கள்ள சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கள்ள சாராய தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப் பணர்வு ஏற்படுத்தப் பட்டது.

    தென் மாவட்டங்களில் கள்ள சாராயம் தலை தூக்காமல் இருக்க மாவட்ட போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்பவர்களையும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பவர்க ளையும் போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இதுபோன்ற தொடர் நடவடிக்கை காரணமாக தென் மாவட்டங்களில் வெகுவாக கள்ள சாராய விற்பனை தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்டத்தில் எங்கேனும் கள்ள சாராயம் தயாரித்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ள சாராயம் தொடர்பாக 91500 11000 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திட்டக்குடி அருகே 120 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி கிராமம் அருகில் கோ.குடிகாடு பகுதியில் சேலம் மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் துரத்தி பிடிக்கும் முயற்சி செய்யும்போது கீழே தள்ளிவிட்டு மீண்டும் ஓட்ட பிடித்தார். ஆனால் போலீசார் லேசான காயத்துடன் விடாமல் துரத்தி பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது 4லாரி டியூப்களில் 120 லிட்டர் கள்ளச்சாராயம் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த இராமசேசபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் (34) என்பது தெரிய வந்தது. அவரை ராமநத்தம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து இருசக்கர வாகனம் மற்றும் 120 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். வாலிபர் அருளை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி பிடித்ததில் ராமநத்தம் சப்-இன்ஸ்கபெக்டர் கலியமூர்த்தி, போலீசார் ஆனந்த ரட்சகன், ஜெயபிரகாஷ் ஆகிய3 போலீசாருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவர் கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • 2 மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
    • காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஒக்கூர் வடக்குத்தெருவை சேர்ந்த செல்லையன் மகன் சதீஷ்குமார் (வயது 26) ஒக்கூர் தெற்குத்தெருவை சேர்ந்த செல்லையன் மகன் பிரபு (வயது 28) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    திட்டச்சேரியில் சாராயம் கடத்தி கைது செய்யப்பட்ட–வர்களையும் சாராயம் மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் படத்தில் காணலாம்.

    ×