search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drink"

    • அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.
    • உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

    நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை நம்முடைய செல்களுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றிக் கொடுக்கும் செயல்பாட்டிற்குப் பெயர் தான் மெட்டபாலிசம். இந்த வளர்சிதை மாற்றம் சரியாக இருந்தால் தான் உடலின் ஜீரண உறுப்புகள் சரியாகி இயங்கி உடல் எடை அதிகரிக்காமல் தடுப்பது முதல் உடலின் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என பல்வேறு வேலைகளை உடலால் சரியாக செய்ய முடியும்.

    மெட்டபாலிசம் அதிகரிக்கும் பானம்

    தேவையான பொருள்கள்

    இஞ்சி - ஒரு துண்டு

    சீரகப் பொடி - கால் ஸ்பூன் (வறுத்து அரைத்தது),

    எலுமிச்சை பழம் - பாதி அளவு

    கல் உப்பு - சிறிதளவு

    செய்முறை

    இஞ்சியை மண் இல்லாமல் நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு, அதன் மேல் தோலை சீவி எடுத்து விடுங்கள். பின்பு அதை துருவிக் கொள்ளுங்கள். ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்து அதில் துருவிய இஞ்சி, சீரகப் பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.

    இந்த கலந்து வைத்திருக்கும் கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து வெதுவெதுபடபான நீரில் கலந்தால் பானம் தயார்.

    பயன்படுத்தும் முறை

    இந்த பானத்தை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் உணவு எடுத்துக்கொள்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மேலே சொன்ன கலவையை ஒரு வாரத்திற்கு ஏற்றபடி தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்து, தேவையான போது வெந்நீரில் கலந்து குடித்துக் கொள்ளலாம்.

    பயன்கள்

    * இந்த பானத்தை தினமும் குடிப்பதால் ஜீரண ஆற்றல் மேம்படும்.

    * அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும்.

    * உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் பார்த்துக் கொள்ளும்.

    * உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.

    * உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.

    • குடிக்க பணம்தர மறுத்த தந்தைக்கு அரிவாள்வெட்டு விழுந்தது.
    • மகன் கைது செய்யபட்டார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள ஆதன குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 60). இவர் பருத்தி விற்ற பணத்தை முதல் மனைவியின் மகன் பழனிசாமி (28) குடிப்பதற்காக கேட்டார். ராமர் கொடுக்க மறுத்தார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, பெற்ற தந்தை என்றும் பாராமல் ராமரை அரிவாளால் வெட்டினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மனைவி வள்ளி (45) கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.

    நாம் வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நம் அடுத்ததலைமுறை பிள்ளைகளுக்கு நாம் மறுக்கும் வாய்ப்பு என்பதை மறவாதிருப்போம்.

    ஒருகுடம் தண்ணி எடுத்து ஒரு பூ பூத்துச்சாம் என்று சிறுவர்களால் பூத்துக் குலுங்கிய தெருக்கள் இன்று தண்ணீர் லாரிகளுக்காகத் தவமிருந்து கொண்டிருக்கின்றன.

    நம் உடல் 75 சதவீதம் நீரால் நிரப்பப்பட்டிருக்கிறது. தாயின் தண்ணீர்க் குடத்தில் மிதந்து பிறந்து பொத்தல் செய்யப்பட்ட நீர் நிறைந்த மண்குடத்தோடு நம் வாழ்வை முடிக்கிறோம். உலகம் 97 சதவீதம் உப்பு நீர் நிறைந்த கடலால் சூழப்பட்டிருக்கிறது. 2 சதவீதம் தண்ணீர் உறைபனிப்பாறைகளுக்குள் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கிறது. எஞ்சிய ஒரு சதவீதம் நல்ல தண்ணீரைத் தான் இந்த உலகில் வாழும் கோடிக் கணக்கான மக்கள் குடி தண்ணீராகப் பயன்படுத்துகின்றனர்.

    முன்பு ஆடி பதினெட்டு எனும் பதினெட்டாம் பெருக்கு வந்தால் ஆறுவகை அன்னங்களோடு ஆறு, அருவி போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று வயிறார உணவு உண்டு அந்தத் தண்ணீரை இருகைகளால் அள்ளிப்பருகி வீட்டிற்கு வருவோம். இன்று அப்படிச் செய்ய முடியுமா? இருபது ஆண்டுகளுக்குள் குடிதண்ணீரைப் பெரும் லாபம் தரும் விற்பனைப் பொருளாக மாற்றியது யார்? அறிவியலில் முன்னேறிவிட்டோம் என்று நாம் ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்க குடிதண்ணீருக்காக மக்கள் பல மைல்தூரம் தலையிலும் கையிலும் குடங்களோடு நடப்பதைக் காண்கிறோம்.

    நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 500 அடியைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறது. உணவு உண்டுவிட்டு நாம் கைகழுவும்போது திறக்கப்படும் தண்ணீர் குழாய்களால் ஒவ்வொரு முறையும் இரண்டு லிட்டர் நன்னீர் வீணாகிறது. வெஸ்டர்ன் கழிவறைகளால் ஒவ்வொரு முறையும் பத்துலிட்டர் நீர் கழிவுத்தொட்டிக்கு வீணாகச் சென்று சேர்கிறது. துணிதுவைப்பு எந்திரம் ஒவ்வொரு முறையும் இருபது லிட்டர் தண்ணீரைச் சோப்புக் கழிவுடன் வெளியேற்றுகிறது.

    சரிவரப் பராமரிக்காத தண்ணீர் குழாய்களிலிருந்து சொட்டும் தண்ணீர் ஒருநாளைக்கு ஒரு வாளி வீணாகிறது. கவனமில்லாமல் தண்ணீர் மோட்டரை இயக்குவதன் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் ஒருமுறைக்கு முப்பது லிட்டர் தண்ணீர் தரையில் கொட்டி வீணாகிக்கொண்டிருக்கிறது. முன்பு வாளியில் தண்ணீர் நிரப்பி பாத்திரங்களைக் கழுவிய நாம் தண்ணீர் குழாய்களை அருவியாய் திறந்துவிட்டு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருக்கிறோம். குளியலறை ஷவர்களால் ஒவ்வொரு முறையும் நான்குவாளி தண்ணீர் வீணாகிறது.

    நாம் வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நம் அடுத்ததலைமுறை பிள்ளைகளுக்கு நாம் மறுக்கும் வாய்ப்பு என்பதை மறவாதிருப்போம். தமிழகத்து நதிகள் யாவும் வறண்டு ஒருதுளி நீரின்றி வற்றிக்கிடக்க இந்த சுட்டெரிக்கும் கோடையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி உற்பத்தியாகும் பாபநாசம் பொதிகை மலையின் காரையார் எனும் மலைப்பகுதிக்குச் சென்றபோது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் ஆதாரமான தாமிரபரணித் தண்ணீரை வாகனங்களைக் கழுவியும் உண்ட உணவுப்பொருட்களின் மீதத்தை நதியில் கொட்டியும் சோப்புபோட்டு துணிகளைத் துவைப்பதையும் காணமுடிந்தது.

    மின்சாரத்திற்கு மீட்டர் வைத்து செலவழித்த அளவுக்கு மின்கட்டணம் செலுத்துவதுபோல் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் நாம் பணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.

    எல்லாப் பயணங்களும் ஒரு தனிமனிதனின் காலடித் தொடக்கத்திலிருந்துதான் தொடங்குகிறது. சமுதாயம் மாற முதலில் நாம் மாறவேண்டும், சிறுதுளிதான் பெரு வெள்ளமாகிறது. ஊர்கூடினால் தண்ணீரைப் பெருமளவு சேமித்து விடமுடியும். கர்மவீரர் காமராஜர் செய்ததுபோல் தமிழக ஆறுகளில் மழைக்காலத்தில் பெருகி வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை புதிய அணைகள்கட்டி சேமித்து மக்களுக்குத் தேவையான காலங்களில் வழங்கவேண்டும். நாம் வீணாக்காமல் சேமிக்கும் ஒவ்வொரு துளி தண்ணீரும் அடுத்ததலைமுறைக்கு நாம் தரும் சொத்து என்பதை உணர்வோம்.

    முனைவர் சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.
    குரும்பூர் அருகே மது குடித்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குரும்பூர்:

    குரும்பூர் அருகே அம்பலபிறப்பு பகுதியை சேர்ந்தவர் பழையகாரன். இவரது மகன் வனச்செல்வன்(வயது 22). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தாய் இறந்துவிட்டார். இதனால் அவர் தந்தை மற்றும் சகோதரருடன் அப்பகுதியில் வசித்து வந்தார். 

    வனச்செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. நேற்று வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதனால் பழையகாரன் மகனை கண்டித்தார். பின்பு அவர் ஆடு மேய்க்க சென்றுவிட்டார். தந்தை திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான வனச்செல்வன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மாலை 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்கு போட்டுக்கொண்டார். சற்றுநேரத்தில் வீடு  திரும்பிய வனசெல்வனின்  சகோதரர் வனச்செல்வன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தர்.  

    உடனடியாக அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் வனச்செல்வனை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆரோக்கியம் குறித்து வல்லுநர்கள் கூறுவதை நாம் அறிவோம். நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

    ஆம். உண்மையில் ஆரோக்கியத்திற்கும் நம் அழகிற்கும் இரவு நேரத்தில் வெந்நீர் குடிப்பது அவசியம். சிலர் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், சிறுநீர் உபாதைகள் ஏற்பட்டு, தூக்கம் கெட்டுவிடும் என்றே தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுவார்கள். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரவு படுக்கும் முன் வெந்நீர் குடித்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும். மேலும் வெந்நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகளை பார்ப்போம்.

    உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது தான் மன அழுத்தம் மற்றும் உணர்வு நிலையில் ஏற்ற இறக்கம் போன்றவை உண்டாகும். மேலும் இதனால் தூக்கம் தடைப்படும். தினசரி இரவு நேரத்தில் தூங்க போகும் முன் வெந்நீர் குடித்துவிட்டு தூங்குவதால் உணர்ச்சி நிலை சீராக இருக்கும்.

    வெந்நீர் அருந்துவதால், உடலின் உள்ளே வெப்பம் உற்பத்தியாகி, வியர்வையாக வெளியேறும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

    நம் உடலுக்கு நீர் என்பது மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால், வியர்வை, சிறுநீர் போன்றவற்றால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனை சமன் செய்ய தொடர்ச்சியாக நீர் அருந்துவது கட்டாயம். இரவு நேரத்தில் வெந்நீர் குடித்துவிட்டு படுப்பதால் உடலில் நீர் தேவை பூர்த்தியாகிறது.

    சாப்பிட்டு முடித்தபின் வெந்நீர் அருந்துவதால் செரிமானம் எளிதாக இருக்கும். கடினமான உணவுகள் கூட எளிதில் ஜீரணமாக்க கூடிய திறன் வெந்நீருக்கு உண்டு. இரவு நேரத்தில் செரிமானம் என்பது சற்றே தாமதமாக இருக்கும். வெந்நீர் குடுப்பதால் அந்த பிரச்சனை இருக்காது.

    வெந்நீர் அருந்துவதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகிறது. உணவு எளிதில் உடைத்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்க செய்கிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது. காலையும் இரவும் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியமாக வாழ இதனை பின்பற்றுவோம். 
    உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும்.
    உணவில் நச்சு இருந்தால் வயிற்றுப்போக்கும், வாந்தியும் மட்டுமே ஏற்படும் என எண்ண வேண்டாம். அதிகம் வியர்த்துக் கொட்டுவது கூட உணவு ஒவ்வாமையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக் கூடும்.

    * வயிற்று பிடிப்பு, உப்பிசம், காற்று, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏதோ தவறான உணவினை நீங்கள் எடுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதைக் காட்டுகின்றன.

    * வயிற்றுப் பிரட்டல், வாந்தி இவை இருக்கும்.

    * 1-8 மணி நேரம், 12-72 மணி நேரம் சென்றும் கூட அறிகுறிகள் வெளிப்படலாம்.

    * ஜூரம் இருக்கலாம்.

    * எதிலும் கவனம் செலுத்த முடியாது.

    * உடலில் நீர் வற்றுதல்

    போன்ற அறிகுறிகள் ஏற்படும் பொழுதே உடனடி கவனம் செலுத்தினால் பாதிப்பிலிருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.

    * கைகளை சாப்பிடும் முன்பும், பின்பும் சுத்தமாகக் கழுவுங்கள்.

    * வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிடுங்கள்.

    * வீடு, குறிப்பாக சமையலறையை மிகவும் சுத்தமாக வைத்திருங்கள்.

    * முறையாக சமைக்காத அசைவ உணவு குடலில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கவனம் தேவை.

    * மீந்து போன அசைவ உணவுகளில் அதிக கிருமிகள் பாதிப்பு ஏற்படலாம்.

    * காய்ச்சாத பச்சை பாலினை பயன்படுத்த வேண்டாம்.

    * பச்சை முட்டை, பச்சை மீன் இவை குடலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

    * நன்கு கழுவப்படாத பழங்கள், காய்கறிகள் ஆபத்தானதே.

    * முளை கட்டிய பயிரினை கூட ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது நல்லது.

    வாழைப்பழம் என்றவுடன் பல வகை வாழைப்பழங்கள் வகையினைப் பற்றி நாம் நினைப்போம். உண்ணும் பழக்கம் உள்ளது. செவ்வாழைப் பற்றி அரிந்து கொண்டால் நாம் செவ்வாழையினையும் அடிக்கடி உண்ண ஆரம்பிப்போம்.

    * செவ்வாழை நிறைந்த நார் சத்து கொண்டது. மலக்சிக்கல் செரிமான கோளாறு, வயிற்றில் காற்று இவற்றினை நீக்கும் தன்மை கொண்டது. இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பு இவைகளை தவிர்க்கும் தன்மை கொண்டது.

    * சிறு நீரக கற்கள் உருவாவதைத் தவிர்க்கும்.

    * எலும்பு ஆரோக்கியத்தினைக் கூட்டும்.

    * வைட்டமின் சி சத்து அதிகம் கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    * அதிக கலோரி சத்து இல்லாததால் எடை குறைப்பிற்கு உதவும்.

    * வைட்டமின்கள் அதிகம் கொண்டதால் ரத்த விருத்தி, சிகப்பு அணுக்கள், ஹீமோ குளோபின் இவற்றுக்கு பெரிதும் உதவும்.

    * உடனடி சக்தி அளிக்க வல்லது.

    * சிகரெட் பழக்கத்தினை நிறுத்தும் பொழுது செவ்வாழை எடுத்துக் கொள்வது உடல், மன நலத்தினை பாதுகாக்கும்.

    * நெஞ்சு எரிச்சல் உடையவர்கள் செவ்வாழையினை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

    * மூல நோய்க்கும் சிறந்தது.

    * ஸ்ட்ரெஸ் பாதிப்பு உடையவர்கள் செவ்வாழை எடுத்துக்கொள்ள நல்ல நிவர்த்தி கிடைக்கும்.

    * வயிற்றுப் புண் நீக்கும்.

    * கண் பார்வைக்கு நல்லது.
    ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.
    ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

    திங்கள்-அருகம்புல்

    ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.

    அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

    செவ்வாய்-சீரகம்

    இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

    இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும். ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.

    புதன்-செம்பருத்தி

    இரண்டு செம்பருத்தி பூ (மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

    இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். ரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

    வியாழன்-கொத்துமல்லி

    ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

    அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.

    வெள்ளி-கேரட்

    ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

    இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும். இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும். மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக கேரட் ஜூஸ் நல்ல மருந்து.

    சனி-கரும்பு சாறு

    கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

    உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும். உடல் பருமன், தொப்பை குறையும்.

    ஞாயிறு-இளநீர்

    ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.

    உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

    குறிப்பு:- நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

    “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

    ரத்த சோகையை தடுக்கும் முருங்கை கீரை

    கோவா கடற்கரையில் சமையல் செய்தாலோ அல்லது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டாலோ உடனடியாக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #GoaBeach
    பனாஜி:

    இந்தியாவில் உள்ள கடலோர சுற்றுலா இடங்களில் முதன்மை இடத்தில் இருப்பது கோவா மாநில கடலோரமாகும்.

    கோவா கடற்கரையில் ரம்மியமான சூழ்நிலை இருப்பதால் அங்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவது உண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 லட்சம் சுற்றுலா பயணிகள் கோவா கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள். இந்தியர்களை தவிர வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிலும் கணிசமானவர்கள் கோவா கடற்கரைக்கு செல்ல தவறுவது இல்லை.

    கோவா கடலோரத்தில் மது அருந்துவது மிக பிரதானமான பொழுது போக்காக உள்ளது. சுங்கவரி குறைப்பு காரணமாக கோவா கடற்கரையில் மிக குறைந்த விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதும் இதற்கு உதவுவதாக உள்ளது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோவா கடலோரத்தில் சட்டம்- ஒழுங்கு அதிக அளவில் சீர் குலைந்து வருகிறது. கோவா கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கேயே அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு மது அருந்தி தகராறில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.


    இதையடுத்து கோவா கடலோர சுற்றுலா பயணிகளை நெறிப்படுத்த சட்டத் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையில் கோவா மாநில சட்டசபை கூட்டம் நடந்தது.

    அந்த கூட்டத்தில் சுற்றுலா சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி கோவா கடலோரத்தில் சமையல் செய்தாலோ அல்லது மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டாலோ உடனடியாக ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவா கடலோரத்தில் மது குடித்து விட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை உடனடியாக கைது செய்து 3 மாதம் வரை சிறையில் அடைக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    கோவா கடலோரத்தில் மட்டுமின்றி பொது இடங்களில் மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களை தண்டிக்கவும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  #GoaBeach
    பண்ருட்டி அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் மனவேதனை அடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆற்றங்கரை ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ர்தவர் பழனிசாமி (வயது53). கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி(46).

    பழனிசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் மனைவி செல்வியிடம் தகராறு செய்து வந்தார்.

    நேற்று அவர் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். அப்போது செல்வி பணம் கொடுக்க மறுத்தார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பழனிச்சாமி மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரய்யா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    குடித்து விட்டு வந்த கணவனை மனைவி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவர் மனைவியை அரிவாளால் வெட்டினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள பி.இலந்தகுளத்தை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மனைவி திருத்துவகுமாரி (வயது 43). பிச்சையா தினசரி குடித்து விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிச்சையா நேற்று தனது மனைவி திருத்துவக்குமாரியை சரமாரி அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டார். பலத்த காயம் அடைந்த திருத்துவக்குமாரியை பாளை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக அவர்களது மகன் ரூபன் பாப்பாகுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பிச்சையாவை தேடி வருகிறார்கள்.
    ×