search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hot water"

    • கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
    • மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகளை போக்கும்.

    காலையில் எழுந்ததும் வெந்நீர் பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும், மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகளை போக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்று கருதுகிறார்கள். அதனை ஊட்டச்சத்து நிபுணர்களும் ஆமோதிக்கிறார்கள்.

    ஆனால் உடல் எடையை குறைக்க உதவும் என்பதற்காக பலரும் நாள் முழுவதும் வெந்நீர் பருகிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி பருகுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தினமும் 6 முதல் 10 டம்ளர் சூடான நீர் பருகலாம் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது. அதிகபட்சம் ௧௦ டம்ளர் வரை பருகலாம் என்றும் கூறுகிறார்கள். சூடான நீரை பருகும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

    அடுப்பில் தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி அதே சூடோடு பருகும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். அது தவறானது. சூடான நீரை 136 டிகிரி பாரன்ஹீட் அல்லது 57.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும்போது பருகுவதுதான் சரியானது. இந்த வெப்பநிலையை குறைத்துக்கொள்ளலாம். ஓரளவு சூடு ஆறியதும் பருகினால் கூட தவறில்லை. ஆனால் ௧௫௦ டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலையில் இருக்கும்போது வெந்நீர் பருகுவது ஆபத்தானது.

    அத்தகைய கொதிநிலை கொண்ட சூடான நீர் உணவுக்குழாய்களில் உள்ள திசுக்களை சேதப்படுத்திவிடும். மேலும் சுவை மொட்டுக்களை எரித்து நாக்கிலும் காயத்தை ஏற்படுத்தி விடும். வாயின் உட்பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கிவிடும். தொடர்ந்து 150 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையில் சூடான நீரை பருகி வந்தால் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.

    சூடான நீர் மட்டுமல்ல காபி, டீ போன்ற பானங்கள் பெரும்பாலும் அதிக கொதிநிலையிலேயே வழங்கப்படுகின்றன. அதாவது ௧௬௦ டிகிரி பாரன்ஹீட் (71.1 டிகிரி செல்சியஸ்) முதல் 185 டிகிரி பாரன்ஹீட் (85 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையில் தயாரித்தவுடன் பரிமாறப்படுகின்றன. ஆனால் அதனை பருகும்போது 140 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவான வெப்பநிலைதான் இருக்க வேண்டும். எனவே ஆவி பறக்க, உதடுகளில் காயங்கள் ஏற்படும் அளவுக்கு டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். உதடுகளுக்கு இதமாக, இளஞ்சூட்டில் பருகுவதுதான் சரியானது.

    வெந்நீரை பொறுத்தவரை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. அது வளர்சிதை மாற்றத்தை தூண்ட உதவும். அத்துடன் செரிமான உறுப்புகளைத் தூண்டி, அன்றைய பணிகளுக்கு தயார்படுத்த உதவும். உணவுத் துகள்களை உடைக்கவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை துரிதப்படுத்தவும் உதவும். காலை வேளையில் இரண்டு டம்ளர்கள் வரை வெந்நீர் பருகலாம்.

    இரவில் தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பும் வெந்நீர் பருகலாம். இது தொண்டைப்புண், இருமலை தணிக்க உதவும். மன அழுத்தத்தை குறைக்க உதவும். தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் துணைபுரியும். இரவு முழுவதும் நீரேற்றமாக இருப்பது பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு வழிவகுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    • குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார்.
    • சிகிச்சைக்காக சென்ற குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்,

    கடலூர்:

    கடலூர் அடுத்த ஈச்சங்காடு சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவருக்கு 2 வயதில் கவினேஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.சம்பவத்தன்று குழந்தை கவினேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த சுடு தண்ணீரில் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தை கவினேஷ் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை கவினேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகு பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    • தூத்துக்குடி புதுக் கோட்டை நடுகூட்டுடன் காட்டை சேர்ந்தவர் சுடலை (வயது32). டிரைவர். இவரது மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.
    • சுடலையின் அக்காள் இறந்துவிட்டதால் அவரது குழந்தைகளை சுடலை கவனித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுடலைக்கும், மகாலெட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக் கோட்டை நடுகூட்டுடன் காட்டை சேர்ந்தவர் சுடலை (வயது32). டிரைவர். இவரது மனைவி மகாலெட்சுமி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.

    கொதிக்கும்வெந்நீர்

    சுடலையின் அக்காள் இறந்துவிட்டதால் அவரது குழந்தைகளை சுடலை கவனித்து வந்துள்ளார். இது தொடர்பாக சுடலைக்கும், மகாலெட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மகாலெட்சுமி, கொதிக்கும் வெந்நீரை எடுத்து சுடலை மீது ஊற்றினார். இதனால் அலறிதுடித்த சுடலை, மனைவியை தாக்கி கீழே தள்ளினார். இதில் கணவன்-மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

    வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    காலை நேரத்தில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று ஆரோக்கியம் குறித்து வல்லுநர்கள் கூறுவதை நாம் அறிவோம். நம்மில் பலரும் இதனை பின்பற்றிக் கொண்டு இருப்பார்கள். வெந்நீர் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் அதிகபடியான நன்மைகளை செய்யக்கூடியது. ஆனால் இரவு நேரத்தில் வெந்நீர் குடித்தால் உடலுக்கு நல்லதா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

    ஆம். உண்மையில் ஆரோக்கியத்திற்கும் நம் அழகிற்கும் இரவு நேரத்தில் வெந்நீர் குடிப்பது அவசியம். சிலர் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், சிறுநீர் உபாதைகள் ஏற்பட்டு, தூக்கம் கெட்டுவிடும் என்றே தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுவார்கள். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரவு படுக்கும் முன் வெந்நீர் குடித்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும். மேலும் வெந்நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகளை பார்ப்போம்.

    உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் போது தான் மன அழுத்தம் மற்றும் உணர்வு நிலையில் ஏற்ற இறக்கம் போன்றவை உண்டாகும். மேலும் இதனால் தூக்கம் தடைப்படும். தினசரி இரவு நேரத்தில் தூங்க போகும் முன் வெந்நீர் குடித்துவிட்டு தூங்குவதால் உணர்ச்சி நிலை சீராக இருக்கும்.

    வெந்நீர் அருந்துவதால், உடலின் உள்ளே வெப்பம் உற்பத்தியாகி, வியர்வையாக வெளியேறும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

    நம் உடலுக்கு நீர் என்பது மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால், வியர்வை, சிறுநீர் போன்றவற்றால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனை சமன் செய்ய தொடர்ச்சியாக நீர் அருந்துவது கட்டாயம். இரவு நேரத்தில் வெந்நீர் குடித்துவிட்டு படுப்பதால் உடலில் நீர் தேவை பூர்த்தியாகிறது.

    சாப்பிட்டு முடித்தபின் வெந்நீர் அருந்துவதால் செரிமானம் எளிதாக இருக்கும். கடினமான உணவுகள் கூட எளிதில் ஜீரணமாக்க கூடிய திறன் வெந்நீருக்கு உண்டு. இரவு நேரத்தில் செரிமானம் என்பது சற்றே தாமதமாக இருக்கும். வெந்நீர் குடுப்பதால் அந்த பிரச்சனை இருக்காது.

    வெந்நீர் அருந்துவதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகிறது. உணவு எளிதில் உடைத்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்க செய்கிறது. இதனால் உடல் எடையும் குறைகிறது. காலையும் இரவும் வெந்நீர் குடிப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியமாக வாழ இதனை பின்பற்றுவோம். 
    காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் உடலுக்கு என்னவென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிப்பதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன.

    இரவு உணவை எப்போதும் லைட்டாக சாப்பிட வேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் சாப்பிடுகிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

    இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள், காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் மலம் எளிதாக வெளியேறும். சிலருக்கு டீ, காபி குடித்தால்தான் மலம் கழிக்கும் எண்ணம் வருவது, அந்த பானங்களில் உள்ள வெப்பம் தான் காரணம்.

    உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் குடித்தால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வென்னீர் குடித்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

    மாதவிடாய் காலங்களில் வயிறு வலி அதிகமாக இருக்கும் போது, வெறும் வயிற்றில் சுடுநீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் சுடுநீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்.
    ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். எந்த நோயாளிகள், எதனால் சுடுநீரில் குளிக்கக்கூடாது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    வெந்நீரில் குளிப்பதால் ரத்த நாளங்கள் விரிவடைந்து, உடலின் அனைத்து உறுப்புகளிலும் ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்ச்சி கிடைக்கும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும். எனவே காலை மற்றும் மாலை என்று இருவேளையும் வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

    சளி காரணமாக மூக்கடைப்பு உள்ளவர்கள் சுவாசிப்பது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வெந்நீரில் குளிப்பதால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சீராகும்.

    ஆனால் ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சினை உள்ளவர்களுக்கு வெந்நீரில் குளித்தால் அந்த நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும்.

    எனவே சொரியாசிஸ் மற்றும் பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் சுடுநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.



    சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருக்கும். எனவே இவர்கள் அதிக சூடான நீரில் குளிக்க கூடாது. இல்லையெனில் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.

    நீரை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைத்து குளிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

    அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படுவதுடன், உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர கூட வாய்ப்பு உள்ளது.
    குறிப்பு

    சில நோயாளிகள் வெந்நீரில் துணியை நனைத்து உடலை சுத்தம் செய்வார்கள், ஆனால் அவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கிவிடும், எனவே வெந்நீரில் குளிப்பது நல்லது.
    ×