என் மலர்
நீங்கள் தேடியது "hot water bath"
- வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும்.
- குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும்.
மழை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சி நிலைக்கு மாறிவிடும். அந்த குளிர் நீரில் குளியல் போடுவதற்கு பலரும் விரும்புவார்கள். ஆனால் குளிர்ந்த நீரை விட சுடு நீரில் குளியல் போடுவதுதான் மழைக்காலத்திற்கு சிறந்தது என்று ஒரு சிலர் கருதுவார்கள். இந்த இரண்டு குளியல் முறையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
சுடு நீர் குளியல்:
தண்ணீரை சூடுபடுத்தி மேற்கொள்ளும் இந்த குளியல் மூலம் வெளிப்படும் வெப்பம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
தசை வலி, மூட்டு வலியை குறைக்க உதவும்.
வெதுவெதுப்பான இந்த நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும். அதில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் தன்மை மற்றும் நச்சுக்களை நீக்குவதை எளிதாக்கும்.
தூங்க செல்வதற்கு முன்பு சுடுநீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். பின்னர் உடல் குளிர்ச்சி நிலைக்கு மாற்றமடையும்போது தூக்கத்தை வரவழைக்கும். நன்றாக தூங்குவதற்கு வழிவகை செய்யும்.
குளிர் நீர் குளியல்:
குளிர்ந்த நீர் நரம்பு மண்டலத்தை தூண்டி சுவாசத்தின் வழியே ஆக்சிஜனை உள்ளிழுப்பதை அதிகரிக்க செய்யும். உடலுக்குள் ஆக்சிஜன் செயல்பாட்டை மேம்படுத்தும். காலையில் சீக்கிரம் எழுவதற்கு வழிவகுக்கும்.
இந்த குளிர் குளியல் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தலாம். ரத்த நாளங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.
குளிர் குளியல் தசை இழப்பு, வீக்கத்தை குறைக்கும். உடற்பயிற்சி செய்த பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்த பலனை அளிக்கும்.
மன அழுத்தத்திற்கும், குளிர்கால சுடுநீர் குளியலுக்கும் தொடர்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சூடான நீரில் குளியல் போடுவது மன அழுத்தத்திற்கு எளிதில் நிவாரணம் தேடித்தரும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஜெர்மனியிலுள்ள பிரிய்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வாரம் இரண்டு முறை சுடுநீரில் குளித்து வந்தால் மன அழுத்தத்திற்கான அறிகுறிகள் குறைய தொடங்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்படி 30 நிமிடங்கள் குளிப்பது மன அழுத்தத்தை போக்குவதற்காக மேற்கொள்ளும் பயிற்சியை விட நல்ல பலனை கொடுக்கும் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
பொதுவாகவே பகல் நேரத்தில் உடலின் வெப்பநிலை அதிகமாக இருக்கும். இரவில் குறைந்துபோய் காணப்படும். குளிர்காலத்தில் காலையில் எழுந்ததும் சூடான நீரில் குளியல் போடுவது உடல் நலத்திற்கும் நல்லது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது உடல் சோர்வு உண்டாகும். அதனை சரிப்படுத்துவதற்கு சுடுநீர் குளியல் கைகொடுக்கும். அத்துடன் மன உளைச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சுடுநீர் குளியலுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சளி காரணமாக மூக்கடைப்பு உள்ளவர்கள் சுவாசிப்பது கடினமாக இருக்கும். இது போன்ற நேரங்களில் வெந்நீரில் குளிப்பதால் மூக்கடைப்பு நீங்கி சுவாசம் சீராகும்.
ஆனால் ஒருசில நோயாளிகள் மட்டும் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சினை உள்ளவர்களுக்கு வெந்நீரில் குளித்தால் அந்த நோயின் தன்மை அதிகரித்து அரிப்பு ஏற்படும்.
எனவே சொரியாசிஸ் மற்றும் பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் சுடுநீரில் குளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள் சருமத்தின் உணர்வுத்திறன் குறைவாக இருக்கும். எனவே இவர்கள் அதிக சூடான நீரில் குளிக்க கூடாது. இல்லையெனில் உடலில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படும்.
நீரை அளவுக்கு அதிகமாக கொதிக்க வைத்து குளிக்கக் கூடாது. ஏனெனில் அதனால் சருமம் மற்றும் முடிகளில் உள்ள ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.
அதிகமான சூட்டில் குளிப்பதால் கால்களில் வெடிப்பு ஏற்படுவதுடன், உயிரணுக்கள் பாதிக்கப்பட்டு மலட்டுத்தன்மை வர கூட வாய்ப்பு உள்ளது.
குறிப்பு
சில நோயாளிகள் வெந்நீரில் துணியை நனைத்து உடலை சுத்தம் செய்வார்கள், ஆனால் அவ்வாறு செய்வதால் உடலில் உள்ள அழுக்குகள் அப்படியே தங்கிவிடும், எனவே வெந்நீரில் குளிப்பது நல்லது.






