என் மலர்
நீங்கள் தேடியது "வெந்நீர்"
- வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- வெந்நீர் குடிப்பது வலி நிவாரணியாக செயல்பட்டு தசை வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
தினமும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு ஆரோக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதேசமயம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்தால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? இந்தப் பதிவில் அவை என்னென்ன என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது பண்டைய காலங்களில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம். இதற்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்கின்றனர். வெந்நீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்,செரிமானம் மேம்படவும் , உடல் எடையைக் குறைக்கவும், மன அழுத்தம் குறையவும்,சரும பிரச்சனைகள் மற்றும் வலி நிவாரணியாகவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு:
வெந்நீர் குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன்மூலம் தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
செரிமானம் மேம்படும்:
வெதுவெதுப்பான நீர் குடிப்பது செரிமான மண்டலத்தைத் தூண்டி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் மலத்தை மென்மையாக்கி கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. வெந்நீர் குடிப்பது செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து உணவு எளிதாக ஜீரணிக்கவும், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவி செய்கிறது.

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது:
வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரி வேகமாக எரிக்க உதவுகிறது. மேலும், வெந்நீர் குடிப்பதால் பசி குறைந்து அதிகமாக உணவு உண்பது தடுக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது.
மன அழுத்தம் குறையும்:
உடலில் உள்ள கார்ட்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைத்து, தூக்கத்தை மேம்படுத்தி, மனதை அமைதியாக வைக்கிறது. இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
சரும பிரச்சனைகள் குறையும்:
சருமப் பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடர்ச்சியாக வெந்நீர் குடித்து வந்தால் அவை குறைய நேரிடும். வெந்நீர் தோலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி தோலை சுத்தமாக வைக்கிறது. மேலும், முகப்பரு, சரும அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

வலி நிவாரணி:
வெந்நீர் குடிப்பது வலி நிவாரணியாக செயல்பட்டு தசை வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வலியும் வெந்நீர் குடிப்பதால் குறையும் என சொல்லப்படுகிறது.
எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- சிறைக்கைதிகள் கடுங்குளிரால் அவதிப்படுவதாகவும், மேலும் வயதானவர்கள் மெத்தை இல்லாமல் துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
- டெல்லியில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குளிப்பதற்கும், சுகாதாரத்தேவைகளுக்கும் வெந்நீர் மற்றும் மெத்தை போன்ற வசதிகளை செய்து தர கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி கவர்னர் சக்சேனா சமீபத்தில் சிறைக்கைதிகளின் அடிப்படை மனிதத் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறைகளுக்கான 2 வார ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில், சிறைக்கைதிகள் கடுங்குளிரால் அவதிப்படுவதாகவும், மேலும் வயதானவர்கள் மெத்தை இல்லாமல் துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் உள்ள 16 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு குளிப்பதற்கும், சுகாதாரத்தேவைகளுக்கும் வெந்நீர் மற்றும் மெத்தை போன்ற வசதிகளை செய்து தர கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
- கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
- மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகளை போக்கும்.
காலையில் எழுந்ததும் வெந்நீர் பருகும் பழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும், மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகளை போக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் என்று கருதுகிறார்கள். அதனை ஊட்டச்சத்து நிபுணர்களும் ஆமோதிக்கிறார்கள்.
ஆனால் உடல் எடையை குறைக்க உதவும் என்பதற்காக பலரும் நாள் முழுவதும் வெந்நீர் பருகிக்கொண்டே இருக்கிறார்கள். அப்படி பருகுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தினமும் 6 முதல் 10 டம்ளர் சூடான நீர் பருகலாம் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது. அதிகபட்சம் ௧௦ டம்ளர் வரை பருகலாம் என்றும் கூறுகிறார்கள். சூடான நீரை பருகும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
அடுப்பில் தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி அதே சூடோடு பருகும் வழக்கத்தை சிலர் பின்பற்றுகிறார்கள். அது தவறானது. சூடான நீரை 136 டிகிரி பாரன்ஹீட் அல்லது 57.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருக்கும்போது பருகுவதுதான் சரியானது. இந்த வெப்பநிலையை குறைத்துக்கொள்ளலாம். ஓரளவு சூடு ஆறியதும் பருகினால் கூட தவறில்லை. ஆனால் ௧௫௦ டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பநிலையில் இருக்கும்போது வெந்நீர் பருகுவது ஆபத்தானது.
அத்தகைய கொதிநிலை கொண்ட சூடான நீர் உணவுக்குழாய்களில் உள்ள திசுக்களை சேதப்படுத்திவிடும். மேலும் சுவை மொட்டுக்களை எரித்து நாக்கிலும் காயத்தை ஏற்படுத்தி விடும். வாயின் உட்பகுதியிலும் பாதிப்பை உண்டாக்கிவிடும். தொடர்ந்து 150 டிகிரி பாரன்ஹீட் அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையில் சூடான நீரை பருகி வந்தால் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
சூடான நீர் மட்டுமல்ல காபி, டீ போன்ற பானங்கள் பெரும்பாலும் அதிக கொதிநிலையிலேயே வழங்கப்படுகின்றன. அதாவது ௧௬௦ டிகிரி பாரன்ஹீட் (71.1 டிகிரி செல்சியஸ்) முதல் 185 டிகிரி பாரன்ஹீட் (85 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலையில் தயாரித்தவுடன் பரிமாறப்படுகின்றன. ஆனால் அதனை பருகும்போது 140 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவான வெப்பநிலைதான் இருக்க வேண்டும். எனவே ஆவி பறக்க, உதடுகளில் காயங்கள் ஏற்படும் அளவுக்கு டீ பருகுவதை தவிர்க்க வேண்டும். உதடுகளுக்கு இதமாக, இளஞ்சூட்டில் பருகுவதுதான் சரியானது.
வெந்நீரை பொறுத்தவரை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. அது வளர்சிதை மாற்றத்தை தூண்ட உதவும். அத்துடன் செரிமான உறுப்புகளைத் தூண்டி, அன்றைய பணிகளுக்கு தயார்படுத்த உதவும். உணவுத் துகள்களை உடைக்கவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை துரிதப்படுத்தவும் உதவும். காலை வேளையில் இரண்டு டம்ளர்கள் வரை வெந்நீர் பருகலாம்.
இரவில் தூங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பும் வெந்நீர் பருகலாம். இது தொண்டைப்புண், இருமலை தணிக்க உதவும். மன அழுத்தத்தை குறைக்க உதவும். தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும் துணைபுரியும். இரவு முழுவதும் நீரேற்றமாக இருப்பது பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு வழிவகுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார்.
- சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கரீம் நகரை சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 39). இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரோஹிதி. தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக ஹேமந்த் மது போதைக்கு அடிமையாகியதால் வேலையை விட்டு நின்றார். மேலும் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.
இதனால் கணவரை தீர்த்துக்கட்ட ரோஹிதி முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமந்த் மது போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து ரோஹிதி தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களான சாய்கிரன் மற்றும் நவீனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைத்தார்.
நண்பர்கள் வீட்டிற்கு வந்ததும் கணவரின் ஆடைகளை கழற்றி விட்டு தூணில் கயிற்றால் கட்டினார். பின்னர் வெந்நீரை கொதிக்க வைத்து கணவர் உடல் மீது ஊற்றினார்.
இதனால் ஹேமந்த் வலியால் அலறி துடித்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து கணவரின் உடல் மீது தூவினார். பின்னர் கட்டையை எடுத்து வந்து கணவரின் தலை மீது தாக்கினார். இதில் ஹேமந்த் படுகாயம் அடைந்தார்.
தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ரோஹிதியின் நண்பர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்த ரோஹிதி கணவரை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே ஹேமந்த் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து ரோஹிதி மற்றும் அவரது நண்பர்கள் சாய் கிரண், நவீன் ஆகியவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் இருக்கும் போது விபத்து
- இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
ஜார்கண்ட் மாநிலம் பஞ்ச்கதியபஜார் ரக்சி பகுதியை சேர்ந்தவர் ரபிக்முபின் (வயது 34). இவரது சகோதரர் மபிஜீதின் முமின் (31). இருவரும் குருந்தன்கோடு அருகே உள்ள கொடுப்பைக்குழியில் உள்ள வலை கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று ரபிக்முபின் கொதிகலனில் சாயம் முக்கும் பணியில் இருக்கும் போது எதிர்பாராதவிதமாக கொதிகலனில் இருந்த சூடான தண்ணீர் ரபிக்முபின் உடல் முழுவதும் பட்டு பலத்த காயமடைந்தார்.
பணியில் இருந்தவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் மபிஜீதின்முமின் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






