என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது போதை"

    • மது போதையில் இருந்த அந்த போலீஸ்காரர் சேரில் அமர்ந்தபடியும் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருந்தார்.
    • பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று நடைபெற்ற அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நேற்று மாலை கொடைரோடு வழியாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அங்கிருந்து தரைவழி மார்க்கமாக வாடிப்பட்டி வழியே கொடைரோடு பயணியர் விடுதிக்கு வந்தடைந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் சரவணன் மற்றும் எஸ்.பி. பிரதீப் ஆகியோர் கவர்னர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அதன் பின் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் சென்றார். இந்நிலையில் கொடைரோடு, அம்மையநாயக்கனூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பாதுகாப்பு பணியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த நிலக்கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட விளாம்பட்டியைச் சேர்ந்த அபிமன்யு என்ற போலீஸ்காரர் சீருடையில் மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தார்.

    பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை கவனித்த அருகில் இருந்த மற்ற போலீசார் அவரை கைத் தாங்கலாக அழைத்து சென்று சாலையோரத்தில் இருந்த ஒரு வாகனத்தின் மறைவில் சேர் போட்டு அமர வைத்தனர். மது போதையில் இருந்த அந்த போலீஸ்காரர் சேரில் அமர்ந்தபடியும் தள்ளாடிய நிலையில் அமர்ந்திருந்தார். இதனை அந்த வழியில் சென்ற பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    கவர்னர் வருகையின் போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் காலை முதலே மது போதையில் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • பஸ் நிலையத்தில் மது போதையில் இருந்த முதியவர் பஸ்சில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.
    • பஸ்சில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஒங்கோல் பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை நிறுத்தி வைத்திருந்தனர். கண்டக்டர், டிரைவர் இருவரும் சாவியை பஸ்சிலேயே விட்டு விட்டு ஓய்வு அறைக்கு சென்றனர்.

    அப்போது பஸ் நிலையத்தில் மது போதையில் இருந்த முதியவர் பஸ்சில் ஏறி டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.

    பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சை வேகமாக ஓட்டி சென்றார்.

    முதியவர் பஸ்சை கடத்திச் செல்வது குறித்து பஸ் நிலையத்தில் உள்ள புறக் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் உடனடியாக வேனில் பஸ்சை விரட்டி சென்றனர்.

    முதியவர் பஸ்சை தாறுமாறாக வேகமாக ஓட்டி சென்றார். பின்னர் ஒரு வழியாக ஒங்கோல்-கர்னூல் இடையே உள்ள மேம்பாலத்தில் பஸ்சை மடக்கி பிடித்தனர்.

    பஸ்சில் இருந்த நபரை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பஸ்சை விபத்தில் சிக்காமல் ஓட்டி சென்றதால் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

    டிரைவரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பஸ்சை மீட்ட அதிகாரிகள் அதை போக்குவரத்து பணிமனைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது.
    • பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மல்லாபுரத்தை சேர்ந்தவர்கள் வேட்டைக்காரன் (35), முனுசாமி மகன் மெய்யப்பன் (45) கூலி தொழிலாளர்களான இருவரும் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு ஒரு கொட்டகையில் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மெய்யப்பனின் செல்போனை வேட்டைக்காரன் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மெய்யப்பன் வேட்டைக்காரனை திட்டி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வேட்டைக்காரன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிந்து, மெய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதையில் ஆற்றில் இறங்கி இறால் பிடித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
    • கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்தவர் பழனிசாமி(வயது38). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பழனிசாமி மீன்பிடிதுறைமுகத்தில் சுமை தொழிலாளியாக பணியாற்றி வந்தார். துறைமுகத்தில் வேலை இல்லாத நேரத்தில், ஆற்றில் இறங்கி இறால் பிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் காலை காரைக்கால் மேலஓடுதுறை அருகே உள்ள அரசலாற்றில் இறங்கி இறால் பிடித்து, அதை விற்று, அருகில் உள்ள சாராயக்கடையில் சாராயம் குடித்துவிட்டு, போதையுடன் மீண்டும் ஆற்றில் இறங்கி இறால் பிடித்துள்ளார். அப்போது நிலைதடுமாறி, தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ளார்.

    ஆற்றில் இறங்கி இறால் பிடித்த பழனிசாமி வெகு நேரம் ஆகியும் காணாததால், கரையில் இருந்த சிலர், காரைக்கால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஆற்றில் இறங்கி சேரில் மூழ்கி கிடந்த பழனிசாமி உடலை மீட்டனர். இது குறித்து, பழனிசாமியின் மனைவி லட்சுமி, நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறனர்.

    • ஜஸ்டின் வீட்டிலிருந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கி டையே வாய்தகராறு ஏற்பட்டது
    • புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ், செல்வன் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே செருப்பாலூர் அரமன்னம் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 46), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இரும்புலி பகுதி யைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32), திருவரம்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வன் (32).

    இவர்கள் 3 பேரும் நண்பர்கள். ராஜேஷும் செல்வனும் ஜஸ்டின் வீட்டிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். இவர்கள் ஒன்றாக ஜஸ்டின் வீட்டிலிருந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் ராஜேஷ், செல்வன் இருவரும் ஜஸ்டினை வீட்டின் பக்கத்தில் உள்ள கால்வாயில் பிடித்து தள்ளினார்கள்.

    இதில் ஜஸ்டினுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த வரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து ஜஸ்டினின் உறவினர் அனீஸ் குலசே கரம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ், செல்வன் இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜஸ்டின் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.குலசேகரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார்.
    • கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்

    கடலூர்:

    நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 பூம்புகார் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் தேவராஜ் (வயது37). திருமணம் ஆகாதவர். தேவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளது‌. கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார். அப்போது வீட்டில் இருந்த தேவராஜின் தாய் பவுனம்பாள் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று கேள்வி ேகட்டார்.அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தேவராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.

    ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனாம்பாள் நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலிசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாதுகாப்பு போலீசார் அவரை வெளியேற்றினர்
    • மது போதையில் மனு கொடுக்க வந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மது போதையில் ஒருவர் தனது தெரிந்த நபருடன் மனு கொடுக்க வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர் கையில் வைத்திருந்த மனுவில், ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையின் போது அன்னதானம் வழங்கவும், பெண் குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று மல்லுக்கட்டி அந்த போதை நபரை பிடித்து கலெக்டர் அலுவலக வளாகத்தை விட்டு வெளியேற்றினர்.




    • ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
    • சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43). கூலி தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன், சிவராஜ் உட்பட 4 பேர் பொட்டகுளம் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது சிவகுமாருக்கும், மணிவண்ணன் தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிவண்ணன் உள்பட 4 பேர் சிவகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த சிவகுமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் மணிவண்ணன், சிவராஜ் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மணிவண்ணன், சிவராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

    • தஞ்சையில் பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
    • மது போதையில் அவர் தள்ளாடியபடி நடந்து சென்றுள்ளார்.

    தஞ்சாவூர்:தஞ்சையில் பள்ளத்தில் தவறி விழுந்து வாலிபர் பலியானார். 

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை தோப்புக்குளம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 34) தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று மது அருந்தினார்.

    பின்னர் தள்ளாடியபடியே வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்து ஒரு பள்ளத்தில் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே கோபிநாத் இறந்தார்.

    இதற்கிடையே கோபிநாத்தை காணாதது கண்டு குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது பள்ளத்தில் கோபிநாத் பிணமாக கிடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வலியுறுத்தல்
    • குளச்சல் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வந்து கண்காணித்து வந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் திங்கள் நகரும் ஒன்று. இங்கு ஏராளமான வர்த்தக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவ மனைகள் ஏராளம் உள்ளது.

    திங்கள் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இரணியல், நெய்யூர் பகுதிகளில் உள்ள மக்கள் பொருள்கள் வாங்கவும், வங்கி பணிகளுக்கும் திங்கள் நகர் வருவது வழக்கம். இப்பகுதியில் இருந்து ஏராளமான பெண்கள் நாகர்கோவில், கருங்கல், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். திங்கள் நகர் பஸ் நிலையத்தில் இருந்துதான் இவர்கள் அனைவரும் பஸ் ஏறி செல்ல வேண்டும்.

    இதனால் திங்கள் நகர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். பெண்கள், குழந்தைகள், மாணவ-மாணவிகள் என அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய பஸ்சை எதிர்ப்பார்த்து நிற்பார்கள்.

    பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் நிலையத்திற்குள் தனியார் வாகனங்கள் எதுவும் செல்ல கூடாது என்று திங்கள் நகர் பேரூராட்சி செயல் அலுவலர் உத்தரவிட்டார். இதனால் தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்திற்குள் செல்வது குறைந்தது. மேலும் இதனை குளச்சல் போக்குவரத்து போலீசார் அடிக்கடி வந்து கண்காணித்து வந்தனர்.

    மேலும் போலீசார் சோதனையில் அத்துமீறும் வாகனங்களுக்கு அபரா தமும் விதிக்கப்பட்டது. பஸ் நிலையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதுபோல பஸ் நிலையத்தில் இரணியல் போலீசாரும் அடிக்கடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இல்லாத நேரத்தில் இப்போது போதை நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அவர்கள் அதிக போதையில் பஸ் நிலைய ஓய்வறை பகுதியில் மயங்கி கிடப்பதும், பயணிகள் மற்றும் பெண்கள் நிற்கும் பகுதியில் விழுந்து கிடக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. இன்னும் சிலர் பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் பகுதியில் கூட விழுந்து கிடக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

    இன்னும் சிலர் போதையில் ஆபாசமாக பேசியபடி பஸ்நிலையத்தில் சுற்றி வருகிறார்கள். பஸ்சுக்கு காத்திருக்கும் பெண்கள் மற்றும் மாணவிகள் இதனை கண்டு பயந்து ஓடும் சம்பவங்கள் நடக்கிறது. முதியவர்கள் இதனை பார்த்து முகம் சுழித்தப்படி செல்கிறார்கள்.

    திங்கள் நகர் பஸ் நிலையத்தில் நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இங்கு எப்போதும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக திங்கள் நகர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இரணியல் போலீசார், குளச்சல் போக்குவரத்து காவல் துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    குறிப்பாக திங்கள் நகர் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து அங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டால் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் மற்றும் பொதுமக்கள் விருப்பபடி இங்கு புறக்காவல் நிலையம் அமைத்தால் அசம்பாவிதங்களை தடுப்பதோடு, போதை நபர்களால் ஏற்படும் தொல்லையும் முடிவுக்கு வரும்.

    • மது போதையில் இருந்த ராணுவ வீரரிடம் நகை திருடிய தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் தொப்பம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் பாண்டி (வயது28). இவர் மேகலாயாவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் திருவண்ணாமலையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம் மடவிளாகத்திற்கு கடந்த 7-ந் தேதி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அப்போது தன்னியாபுரம் பகுதியை சேர்ந்த மணிஅச்சன் (43) என்பவரும் மது குடித்துள்ளார்.

    அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே ரமேஷ் பாண்டி அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனால் அவர் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அவர் திருவண்ணாமலையில் உள்ள தனது மாமனாருக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து அவரது மாமனார் சம்பவ இடத்திற்கு வந்து ரமேஷ் பாண்டியை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றார். ரமேஷ் பாண்டி போதை தெளிந்த தும் அவர் அணிந்திருந்த 1 ½ பவுன் கை செயின், 1 பவுன் மோதிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இதுபற்றி அவர் கடந்த 9-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் தனது நண்பர் மணிஅச்சன் நகையை திருடி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் நேற்று போலீசார் மணி அச்சனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் ரமேஷ் பாண்டியிடம் இருந்து கைசெயினை மட்டும் திருடியதாக கூறினார். இருந்த போதிலும் மோதிரத்தையும் அவர் தான் திருடியிருக்க வேண்டும் என்று ரமேஷ் பாண்டி கூறியதால் அவரை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மணிஅச்சன் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் வலங்கைமான் பகுதியில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இ்ந்த ஊர்வலம் வலங்கைமான் கடைத்தெரு, கும்பகோணம் ரோடு, மகா மாரியம்மன் கோவில், வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று போலீஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது,

    சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை டிரைவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினர்.

    இதில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் வலங்கைமான், குடவாசல் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ×