என் மலர்
நீங்கள் தேடியது "தாய் கொலை"
- உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார்
- காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோவில் பகுதியில் வசித்து வந்த 36 வயது பெண்ணுக்கு 17 வயதில் மகள் இருக்கிறாள். இவர், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு அவர் படிப்பை நிறுத்தி விட்டார். கணவரை பிரிந்து வாழ்ந்த 36 வயது பெண், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26-ந்தேதி அந்த பெண் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பெண்ணின் தங்கையின் தகவலின் பேரில் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். ராமநகர் மாவட்டம் கக்கலிபுராவில் பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது தனது காதலன், நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்ததாக அந்த சிறுமி கூறினார். அதைத்தொடர்ந்து, காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
அவர்கள் 4 பேருக்கும் 18 வயதாகவில்லை என்பதும், அவர்களும் சிறுவர்கள் என்பதும், இதில் ஒரு சிறுவனுக்கு 13 வயது தான் ஆவதும் தெரிந்தது. இதையடுத்து 17 வயது சிறுமி, காதலன் உள்பட 5 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமி, தன்னுடன் படித்த வாலிபரை தான் காதலித்துள்ளார். தனது மகள், அந்த வாலிபரை காதலிப்பது நேத்ராவதிக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மகள், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை படுக்கை அறைக்கு இழுத்து சென்று, கழுத்தில் சேலையால் கட்டி உடலை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுமி உள்பட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
- காதலுக்கு இடையூறாக உள்ள தாயை கொலை செய்ய முடிவு செய்தார்.
- மாணவி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அஞ்சலி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
தெலுங்கானா மாநிலம் ஜுடி மெட்லா ஷிபூர் நகரை சேர்ந்தவர் அஞ்சலி (வயது 39).
இவர் தெலுங்கானா கலாச்சார கலைஞர் குழுவில் நடன கலைஞராக இருந்து வந்தார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவருக்கு திருமணமானது. முதல் கணவருக்கு ஒரு மகள் பிறந்தார். முதல் கணவர் இறந்த பிறகு ரவி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகள் பிறந்தார். கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்தில் ரவி இறந்தார்.
முதல் கணவருக்கு பிறந்த 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவிக்கு நலகொண்டாவை சேர்ந்த டி.ஜே மாஸ்டர் சிவா (19) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார். இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நீண்ட நேரம் அரட்டை அடித்து நட்பாக பழகி வந்தனர்.
பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. மகளின் காதல் விவகாரம் அவரது தாய் அஞ்சலிக்கு தெரியவந்தது. காதலை கைவிடுமாறு மகளிடம் அஞ்சலி வற்புறுத்தி வந்தார். இதனால் தாய்க்கும் மகளுக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
காதலுக்கு இடையூறாக உள்ள தாயை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி காதலன் சிவாவுக்கு போன் செய்த மாணவி தாயை கொலை செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
இதற்கு சிவா மறுப்பு தெரிவித்தார். காதலி மிரட்டியதால் சிவா அவரது தாயாரை கொலை செய்ய ஒப்புக்கொண்டார்.
நேற்று முன்தினம் காதலனுக்கு போன் செய்து தாய் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். சிவா 17 வயதுடைய தனது சகோதரருடன் அஞ்சலி வீட்டுக்கு வந்தார்.
அப்போது மாணவி தனது தாய் வீட்டில் உள்ளே இருக்கிறார். சென்று கொலை செய்யுங்கள் என தெரிவித்தார். காதலனை வீட்டிற்குள் அனுப்பிய மாணவி யாரும் வராமல் கண்காணிக்க வீட்டிற்கு வெளியே நின்று இருந்தார்.
சகோதரருடன் வீட்டுக்குள் சென்ற சிவா அஞ்சலியின் கழுத்தில் கயிற்றைப் போட்டு இறுக்கினார். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அஞ்சலி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது சிவாவும் அவரது சகோதரரும் அஞ்சலியின் கழுத்தை கயிற்றால் இறுக்கினர்.
அப்போது பள்ளிக்கு சென்ற இளைய மகள் வீட்டுக்கு வந்தார். அவரிடம் மாணவி தாய் வீட்டுக்குள் யாரையும் அனுப்ப வேண்டாம் என கூறி பக்கத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அஞ்சலி இறந்து விட்டதாக கருதிய சிவா வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். மாணவி வீட்டிற்குள் சென்று பார்த்த போது அஞ்சலி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி மீண்டும் காதலனுக்கு போன் செய்து தாய் இன்னும் சாகவில்லை. வந்து கொலை செய்துவிட்டு போ என தெரிவித்தார்.
மீண்டும் வீட்டிற்கு வந்த சிவா அஞ்சலியின் கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
பின்னர் மாணவி தங்களது உறவினர்களுக்கு போன் செய்து தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜுடி மெட்லா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையின் போது மாணவி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மாணவியை பிடித்து விசாரித்த போது தங்களது காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் மற்றும் அவரது சகோதரரை வரவைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி அவரது காதலன் சிவா, அவரது சகோதரரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- கிரிஷூடனும் பிரவீனாவுக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது.
- பிரவீனா மற்றும் அவரது மகள் வெட்டப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடையூர் குன்னு பகுதியை சேர்ந்தவர் பிரவீனா(வயது34). இவருக்கு முதலில் சதீஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்தநிலையில் அவருக்கு கிரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து பிரவீனா, தனது கணவரை விட்டு பிரிந்து கிரிஷுடன் சென்று விட்டார்.
தனது மகள்களான அனர்கா(14), அபினா(9) ஆகிய இருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். கிரிஷூடன் வயநாடு மானந்தவாடி பகுதியில் வாடகை வீடு ஒன்றில் குடித்தனம் நடத்தி வந்தார். இதற்கிடையே கிரிஷூடனும் பிரவீனாவுக்கு தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதனால் அவரை பிரிந்து செல்ல அவர் முடிவு செய்தார். இதனையறிறந்த கிரிஷ் நேற்று அவருடன் தகராறு செய்திருக்கிறார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது அவர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரவீனாவை சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரவீனாவை மட்டுமின்றி அவரது மூத்த மகளான அனர்காவையும் கிரிஷ் கத்தியால் சரமாரியாக வெட்டினார். இதில் சிறுமியின் கழுத்து, காது உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.
இந்தநிலையில் பிரவீனா மற்றும் அவரது மகள் வெட்டப்பட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரவீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சிறுமி அனர்காவை மீட்டு சிகிச்சைக்காக மானந்தவாடி தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பிரவீனா மற்றும் அவரது மூத்த மகள் வெட்டப்பட்ட நிலையில், அவரது இளைய மகளான அபினா எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. வீடு மற்றும் அதனை சுற்றியுளள பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அவர் தனது தாய் மற்றும் அக்காவை கிரிஷ் கத்தியால் வெட்டுவதை பார்த்து பயத்தில் அங்கிருந்து எங்காவது சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதையடுத்து தாயை கொலை செய்தபின், சிறுமியை கிரீஷ் காட்டிற்குள் கடத்தி சென்றது தெரிய வந்தது.
அடர்ந்த வனப்பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை ட்ரோன் மூலம் தேடிய போலீசார், சிறுமியை கண்டுபிடித்து கிரீஷை கைது செய்தனர்.
- நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு திருமணமாகி விட்டது. 4 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவரது தாய் அசோதை (70). இவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு சக்திவேல் தனது தாய் அசோதையிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டார். அதோடு ரேசன் கார்டையும் கேட்டு நச்சரித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இன்று காலை திடீரென எழுந்த சக்திவேல் நேராக தனது தாய் அசோதையிடம் சென்று பணம் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது தாய் என்று கூட பாராமல் அசோதையை கொடூரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த சக்திவேல் தனது தாய் இறந்து விட்டார் என கருதி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்குள்ள உறைகிணற்றில் வீசி சேலையால் அதனை மூடினார்.
நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார். அவரிடம் கிராம மக்கள் விசாரித்த போது, தனது தாயை கொன்று விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் வீசப்பட்ட அசோதையின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
பெற்ற தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார்.
- கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்
கடலூர்:
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 பூம்புகார் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் தேவராஜ் (வயது37). திருமணம் ஆகாதவர். தேவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளது. கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார். அப்போது வீட்டில் இருந்த தேவராஜின் தாய் பவுனம்பாள் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று கேள்வி ேகட்டார்.அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தேவராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனாம்பாள் நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலிசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர்.
- தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அமடபாகுலா பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி. ராமுலு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சங்கரம்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தார். ராமுலு தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் தனது மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தாயை கழுத்தை நெருங்கி 2 பேரும் கொலை செய்தனர்.
பின்னர் தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.
சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வனபர்த்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் நாகசேகர் மற்றும் போலீசார் ராமுழு அவரது மனைவி சிவமணி ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய் நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்ததால் அவரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனபர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகன், மருமகளை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.
- வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜசேகர உடையார். அவரது 2-வது மனைவி ஜெயமேரி (வயது 51). இவர்களது மகன் அமலோற்பவ நாதன் (28). பி.டெக் என்ஜினீயர்.
சொத்து தகராறு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ராஜசேகர உடையார் முதல் மனைவியின் உறவினரான மணவாளன் கொலை வழக்கு தொடர்பாக ஜெயமேரி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வந்த அவர் லாஸ்பேட்டை கிருஷ்ணாநகர் விரிவாக்கம் 20-வது குறுக்கு தெருவில் தனது மகனுடன் வசித்து வந்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந் தேதி நள்ளிரவு ஜெயமேரி செல்போனில் வீடியோகால் மூலம் வேறு நபருடன் நிர்வாணமாக பேசிக்கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த மகன் அமலோற்பவநாதன், மிகுந்த கோபமடைந்தார். இந்த வயதில் வேறுநபருடன் வீடியோ கால் மூலம் நிர்வாணமாக பேசுகிறாயே என கேட்டு ஆத்திரத்தில் வீட்டில் கிடந்த நாற்காலியால் தாய் என்றும் பாராமல் ஜெயமேரியை சரமாரியாக தாக்கினார்.
இதில் காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். பின்னர் சமையல் அறையில் இருந்த கத்தியால் 12 முறை தாயை அமலோற்பவநாதன் குத்தி கொலை செய்தார். அதன்பின் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்த கொலை தொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலோற்பவநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அமலோற்பவநாதன் மீதான கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கில் அமலோற்பவநாதன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
- சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- இந்திரா வேலை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மீண்டும் வளைகுடாவுக்கு சென்றுவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள நரிக்கல்லு பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு என்பவரின் மனைவி சுமித்ரா(வயது63). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர், நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் படுக்கையில் கிடந்தார்.
இதனை பார்த்த அவரது மகன் பாபு, அவரை அங்கிருந்து மீட்டு மானந்தவாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுமித்ரா இறந்தார். தனது தாய், அறையில் இருந்த மரக்கட்டிலில் தவறி விழுந்ததில் தலையில் காயமடைந்து இறந்து விட்டதாக போலீசில் பாபு தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் திருநெல்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். மேலும் சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சுமித்ரா கழுத்தை நெரித்து கொன்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சுமித்ராவை கொன்றது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர்களது வீட்டில் சுமித்ராவின் மகளுடன் முருகன்(42) என்பவர் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்து வந்த விவகாரம் தெரியவந்தது.
திருவண்ணாமலையை சேர்ந்த அவருக்கு, வளைகுடா நாட்டில் டிரைவராக வேலை பார்த்த போது அங்கிருந்த இந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர்கள் இருவரும் கேரளாவுக்கு திரும்பிவந்து ஒன்றாக வாழ தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் இந்திரா வேலை பார்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் மீண்டும் வளைகுடாவுக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு முருகன், இந்திராவின் குழந்தைகள், சகோதரர் பாபு மற்றும் தாய் சுமித்ரா ஆகியோருடன் இந்திராவின் வீட்டில் வசித்து வந்தி ருக்கிறார்.
இதனால் அவருக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில் தனக்கும், சுமித்ரா கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இருந்தபோதிலும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், சுமித்ராவை கொன்றதை ஒப்புக்கொண்டார். மகள் இந்திராவுடன் லிவ்-இன் பார்ட்னராக முருகன் வாழ்வது சுமித்ராவுக்கு பிடிக்காமல் இருந்திருக்கிறது. இதனால் சுமித்ரா மற்றும் முருகனுக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டபடி இருந்திருக்கிறது.
இதனால் சுமித்ராவை கொல்ல முருகன் திட்டமிட்டார். சுமித்ராவின் மகன் பாபு இல்லாத நேரத்தில் அவரை கொல்ல முடிவு செய்திருக்கிறார். அதன்படி பாபு வெளியே சென்றிருந்த நேரத்தில், சுமித்ராவை கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறார். பின்பு சுமித்ரா தவறி விழுந்து காயமடைந்தது போன்று செட்-அப் செய்துவிட்டு, சென்றிருக்கிறார்.
சுமித்ராவின் சாவுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தம் இல்லாதது போன்று வழக்கம்போல் நடமாடிய படி இருந்திருக்கிறார். ஆனால் போலீசார் நடத்திய துரித விசாரணை காரணமாக முருகன் சிக்கிக்கொண்டார். கைது செயயப்பட்ட முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
- மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
- கொலை செய்த முருகனை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சிவந்திப்பூ (வயது 80).
இவரது கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு 4 மகள்களும், முருகன் (50) என்பவர் உள்பட 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
மூதாட்டி சிவந்திப்பூ புளி குத்தும் வேலைக்கு சென்ற தாகவும், அதன் மூலம் வரும் வருமானத்தையும், முதியோர் உதவித்தொகை மூலம் வரும் வருமானத்தையும் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவரிடம் இருக்கும் பணத்தை கேட்டு அவரது மகன் முருகன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவில் மது போதையில் வந்த முருகன், சிவந்திப்பூவிடம் அவர் இருக்கும் வீட்டை எழுதி தருமாறும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கிய ரூ.1,000 பணத்தை கேட்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அதற்கு சிவந்திப்பூ மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன், தாய் என்றும் பாராமல் சிவந்தி பூவின் கழுத்தை துணியால் இறுக்கியும், வீட்டினுள் கிடந்த அம்மிக்கல் மற்றும் மற்றொரு கல்லை தலையில் போட்டும் கொலை செய்தார்.
இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் உயிரிழந்த சிவந்திப்பூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்த முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார்.
- வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்காளை. இவர் மதுரை பழங்காநத்தம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (வயது55). பக்கவாத நோயால் அவதிப்பட்டு பரமேஸ்வரி அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தேங்கல்பட்டியில் உள்ள அவரது வீட்டில் பரமேஸ்வரி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் சிவன்காளை மனைவியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு பரமேஸ்வரியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பரமேஸ்வரி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பரமேஸ்வரியின் மகள் சிவரஞ்சனி (31) கொடுத்த புகாரின் பேரில் செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகராணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார். பிரேத பரிசோதனையில் கழுத்து நெறிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி இறந்தது அறிக்கையில் தெரிய வந்தது. இதனால் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர்.
மேலும் கொலை தொடர்பாக மகள் சிவரஞ்சனி, இவரது கணவர் ஜெயபிரகாஷ் (30), அவரது நண்பர்கள் நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுசூதனன் (30), மதனகோபால் (29), அழகுபாண்டி (34) ஆகியோர் ஆ.கொக்குளம் வி.ஏ.ஓ., சங்கர் முன்னிலையில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-
தேங்கல்பட்டியை சேர்ந்தவர் பரமேஸ்வரியின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில் மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்த சிவன்காளையுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சிவன்காளைக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி இறந்து விட்டார்.
சிவரஞ்சனிக்கு திருமணம் முடிந்து நாகமலை புதுக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். பரமேஸ்வரிக்கு இரண்டு சொந்த வீடுகள் உள்ளது. இந்த நிலையில் தேங்கல்பட்டியில் சொந்த வீடு கட்டும் பணி நடைபெற்று வந்தது. வீடு கட்டுவதால் பண நெருக்கடியில் இருந்த பரமேஸ்வரி வீட்டின் பெயரில் வங்கியில் கடன் பெற முயன்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் லோன் பெற தேவையான ஆவணங்கள் இல்லையென பரமேஸ்வரியின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
இதனால் வேறுவழியின்றி மகள் சிவரஞ்சனியின் உதவியை நாடியுள்ளார். அப்போது மகளிடம் அவரது பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து லோன் வாங்கி தருமாறு கூறி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். ஆனால் மகள் சிவரஞ்சனி தனது தாய் இரண்டாவதாக சிவன்காளையை திருமணம் செய்தது பிடிக்காமலும், சொத்துக்களை தன்னிடம் இருந்து வாங்கி அவருக்கு கொடுத்து விடுவார் என்ற எண்ணத்திலும், ஏற்கனவே உள்ள வீட்டை தன் பெயரில் எழுதி தருமாறு சிவரஞ்சனி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் சிவரஞ்சனி, அவரது கணவர் மற்றும் அவரின் கூட்டாளிகள் மூன்று பேரும் தேங்கல்பட்டியிலுள்ள பரமேஸ்வரியின் வீட்டிற்கு சென்று சொத்தை சிவரஞ்சனி பெயருக்கு மாற்றி தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் பரமேஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதிலிருந்து தப்பித்து கொள்ள பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாகவும், தன் தாயின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து மகள் சிவரஞ்சனி, அவரது கணவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கூட்டாளிகள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சொத்துக்காக பெற்ற மகளே தனது தாயை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
- கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.
ராம்ஜிநகர்:
திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி 12-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் லிங்கம்(வயது 55). இவர் நாடார் சத்திரத்தில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கொடிமலர்(48). இவர்களுக்கு ராஜகுமாரன்(29) என்ற மகனும், வளர்மதி(28) என்ற மகளும் உள்ளனர்.
வளர்மதிக்கு திருமணம் ஆகிவிட்டது. ராஜகுமாரன் திருச்சி சாஸ்திரி ரோட்டில் ஒரு நகைகடையில் வேலை செய்து வருகிறார். லிங்கம் தினமும் வியாபாரத்திற்காக மார்க்கெட் சென்று பழங்கள் வாங்கி வருவது வழக்கம்.
நேற்று இவர் வழக்கம்போல பழங்கள் வாங்க சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கொடிமலர் கழுத்து அறுக்கப்பட்ட் நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதை பார்த்து அலறி துடித்த லிங்கம் மற்றும் அவரது மகன் ராஜகுமாரன் ஆகியோர் கொடிமலரின் உடலை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது கொடிமலர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலசந்தர், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட கொடிமலரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொடிமலரை கழுத்தை அறுத்து கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
மகன் ராஜகுமாரனே தாய் கொடிமலரை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. ராஜகுமாரன் தனது தந்தை வழி உறவினர் மகளை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு கொடிமலர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும் தனது உறவினர் மகளைதான் திருமணம் செய்யவேண்டும் என்று ராஜகுமாரனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் ராஜகுமாரன் கடந்த 6-ந்தேதி விஷத்தை குடித்துவிட்டார். உடனே அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ராஜகுமாரன் வீடு திரும்பினார்.
வீட்டுக்கு வந்தபிறகு தான் விரும்பிய பெண்ணுடன் திருமணம் செய்து வைக்குமாறு கொடிமலரிடம் வற்புறுத்தினார். அதற்கு கொடிமலர் பிடிவாதமாக மறுவிட்டார். இது ராஜகுமாரனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நேற்று அதிகாலை லிங்கம் கடைக்கு சென்ற நிலையில் கொடிமலருக்கும், ராஜகுமாரனுக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜகுமாரன் கத்தியால் கொடிமலரை குத்தி கொலை செய்தார்.
பின்னர் யாரோ மர்மநபர் கொலை செய்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் ராஜகுமாரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தாயின் மருத்துவ சிகிச்சைக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை.
- காக்கிநாடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மாவட்டம், ஓய்.கோட்டப்பள்ளியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 60). இவருடைய மகள்கள் புஜ்ஜி, சுவாதி (28). சரஸ்வதியின் கணவர் நரசிம்ம ராவ் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.
இதனால் சரஸ்வதி கூலி வேலை செய்து தனது 2 மகள்களையும் நன்றாக படிக்க வைத்தார். சரஸ்வதியின் 2 மகள்களும் தாய் மீது அதிக பாசம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில் மூத்த மகள் புஜ்ஜுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். சரஸ்வதிக்கு திடீரென உடல் நலக்குறைவு மற்றும் மனநல பாதிப்பு ஏற்பட்டது.
தாயின் மருத்துவ சிகிச்சைக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை. தாய் உடல் நல குறைவால் அவதி அடைவதை கண்ட சுவாதி வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு மின்விசிறியில் சேலையை கட்டி தாயை தூக்கில் தொங்கவிட்டார்.
தாய் இறந்ததை உறுதி செய்த பிறகு சுவாதியும் தாயை தூக்கில் தொங்கவிட்ட புடவையில் மற்றொரு முந்தானையில் தூக்கிட்டு இறந்தார். 3 நாட்களுக்கு பிறகு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. காக்கிநாடா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.






