என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி கைது"
- உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார்
- காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோவில் பகுதியில் வசித்து வந்த 36 வயது பெண்ணுக்கு 17 வயதில் மகள் இருக்கிறாள். இவர், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு அவர் படிப்பை நிறுத்தி விட்டார். கணவரை பிரிந்து வாழ்ந்த 36 வயது பெண், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26-ந்தேதி அந்த பெண் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பெண்ணின் தங்கையின் தகவலின் பேரில் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். ராமநகர் மாவட்டம் கக்கலிபுராவில் பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது தனது காதலன், நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்ததாக அந்த சிறுமி கூறினார். அதைத்தொடர்ந்து, காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
அவர்கள் 4 பேருக்கும் 18 வயதாகவில்லை என்பதும், அவர்களும் சிறுவர்கள் என்பதும், இதில் ஒரு சிறுவனுக்கு 13 வயது தான் ஆவதும் தெரிந்தது. இதையடுத்து 17 வயது சிறுமி, காதலன் உள்பட 5 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமி, தன்னுடன் படித்த வாலிபரை தான் காதலித்துள்ளார். தனது மகள், அந்த வாலிபரை காதலிப்பது நேத்ராவதிக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மகள், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை படுக்கை அறைக்கு இழுத்து சென்று, கழுத்தில் சேலையால் கட்டி உடலை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுமி உள்பட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
- கடந்த 2021-ம் ஆண்டு சிறுமியை, மளிகை கடை நடத்தி வந்த பெண்ணின் மகனான 25 வயது வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார்.
- பாலாத்கார வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்திருந்தனர்.
புதுடெல்லி:
டெல்லியில் பஜன்புரா பகுதியில் 50 வயது பெண் ஒருவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை அவரது கடைக்கு சென்ற 16 வயது சிறுமி ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் மளிகை கடை நடத்தி வந்த பெண்ணை சுட்டார். இதில் அந்த பெண் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே அந்த சிறுமி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை கமிஷனர் (வட கிழக்கு) சஞ்சய் குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயம் அடைந்த பெண்ணை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சிறுமியை கைது செய்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த 2021-ம் ஆண்டு இந்த சிறுமியை, மளிகை கடை நடத்தி வந்த பெண்ணின் மகனான 25 வயது வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். இந்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்தநிலையில் தான் சிறுமி, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் தாயை துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.
சிறுமியிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






