என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property dispute"

    • வீட்டில் இருந்து சிவ்லால் எழுதிய தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது.
    • சிவ்லால் மற்றும் கவிதா தங்களது தொலைபேசிகளை அணைத்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளனர்.

     ராஜஸ்தானில் ஒரு குடும்பமே தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பார்மர் மாவட்டத்தை சிறந்த சிவ்லால் மேக்வால் (35), அவரது மனைவி கவிதா (32), இளைய மகன் ராமதேவ் (8), மூத்த மகன் ஆகிய 4 பேர் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். புதன்கிழமை அதிகாலையில் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    தற்கொலை செய்யும்முன்னர் கவிதா தனது இளைய மகன் ராமதேவ் (8)க்கு பெண்களின் உடையை அணிவித்து, அவனது தலையில் துப்பட்டாவை போர்த்தி, அவன் கண்களில் காஜல் மை பூசி, தனது தங்க நகைகளை அவனுக்கு அணிவித்து அழகு பார்த்துள்ளார்.

    வீட்டில் இருந்து சிவ்லால் எழுதிய தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் குடும்பத்தின் இந்த முடிவுக்கு காரணம் என்றும், அதில் சிவ்லாலின் இளைய சகோதரரும் ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    நிலம் மற்றும் வீட்டின் உரிமை தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்த சண்டைகளே தற்கொலைக்குக் காரணம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தனி வீடு கட்ட சிவ்லால் விரும்பியதாகவும், இதற்கு அவரது தாயும் சகோதரரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கவிதாவின் மாமா கூறியுள்ளார்.

    சம்பவத்தன்று குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வெளியே இருந்த நிலையில், சிவ்லால் மற்றும் கவிதா தங்களது தொலைபேசிகளை அணைத்துவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். காவல்துறை இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    • இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் அருகே உள்ள ஏ.பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர் தற்போது அேத கிராமத்தில் விவசாய தொழில் செய்து வருகிறார். இதற்கிடையே இவருக்கும், இவரது பெரியப்பா மகனுமாகிய மணிகண்டன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் தகராறு இருந்து வந்துள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை மாரிச்சாமிக்கும், மணிகண்டனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைப் பார்த்த அந்த ஊரைச்சேர்ந்த சிலர் அவர்களை சமாதானப்படுத்திவிட்டு சென்றனர். இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத மாரிச்சாமி வீட்டிற்குள் சென்று அங்கு வைத்திருந்த ஏர்கன் எனப்படும் துப்பாக்கியை எடுத்துவந்து கண்மூடித்தனமான வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டார்.

    இந்த சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த பலர் வீடுகளுக்குள் முடங்கினர். அப்போது அவரது நெருங்கிய உறவினரான உதயகுமார் (வயது 40) என்பவர் ஓடிவந்து மாரிச்சாமியை தடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பு மற்றும் முதுகு பகுதியில் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த பால்ரஸ் எனப்படும் சிறிய அளவிலான இரும்பு குண்டுகள் துளைத்தது. அவரது உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.

    அதேபோல் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த எதிர்வீட்டில் வசித்து வரும் கவியரசன் என்பவரது மகன் கிஷோர் (12) என்ற சிறுவனுக்கும் உடலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து பதறியடித்துக் கொண்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காயம் அடைந்த இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்ட மாரிச்சாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார்.
    • கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பட்டுக்கோட்டை:

    மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் சரண்யா (வயது 35). முன்னாள் மதுரை மாநகர பா.ஜ.க. துணை தலைவராக இருந்தார். இவரது கணவர் சண்முக சுந்தரம். இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரைவில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு எதிர்பாராத விதமாக சண்முகசுந்தரம் இறந்து விட்டார்.

    இதனால் மனமுடைந்த சரண்யா கணவனை இழந்த துக்கத்தில் இருந்துள்ளார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் 2-வது திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதிலும் பிரச்சனை ஏற்படவே சரண்யா 2-வது கணவரிடம் இருந்து பிரிந்தார்.

    பின்னர், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கழுகப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலன் (45) என்பவரை 3-வதாக சரண்யா திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து, பாலன், சரண்யா, சாமுவேல், சரவணன் ஆகியோர் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    அதே பகுதியில், பாலன் தனியார் டிராவல்ஸ் நிறுவனமும், சரண்யா ஜெராக்ஸ் கடையும் வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளனர். கடை, வீடு, குடும்பம் என அவர்கள் சந்தோஷமாக வாழ்வை கழித்து வந்துள்ளனர். தினமும் அவர்கள் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு அவரவர்கள் கடைக்கு வந்து வேலையை தொடங்குவர். பின்னர், இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வருவர்.

    வழக்கம்போல், நேற்றும் கடையை பூட்டி விட்டு பாலன் மற்றும் அவரது மகன்கள் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். சரண்யா மட்டும் அவரது கடையை பூட்டிவிட்டு சுமார் 1 கி.மீ தூரம் உள்ள வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் சரண்யாவை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து சரண்யாவை சுற்றி வளைத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் சரண்யாவை கழுத்து மற்றும் தலையின் பின்பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் தலை துண்டிக்கப்பட்டு சரண்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீட்டிற்கு வராததால் அவரை தேடி பாலன் வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகில் ரத்த வெள்ளத்தில் சரண்யா பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்ட பாலன் அவரது உடலை பார்த்து கதறி துடித்துள்ளார்.

    பின்னர், இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், கொலை நடந்த இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு தடயங்கள் எதுவும் கிடைக்கின்றதா? என தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக கபிலன், குகன், பார்த்திபன் ஆகிய 3 பேர் மதுரை மாவட்ட கோர்ட்டில் இன்று மதியம் சரணடைந்தனர்.

    கொலையுண்ட சரண்யாவின் கணவர் பாலன் மகன் கபிலன் ஆவார். இவருக்கு சொத்துக்களை பிரித்து தர சரண்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கபிலனுக்கும், சரண்யாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட விரோதத்தில் சரண்யா கொலை செய்யப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
    • ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஓம் பிரகாஷ் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சொத்து பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஓம் பிரகாஷின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் 10 முறை கத்தியால் அவரது மனைவி பல்லவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஓம் பிரகாஷின் மனைவியையும் கொலை செய்ததற்கு உதவியாக இருந்ததாக அவரது மகளையும் கைது செய்தனர்.

    • இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர்
    • சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் குர்மீத் சிங்கிற்கு 103 வயது. 2018 ஆம் ஆண்டில் அவர் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை குருத்வாராவிற்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்தார்.

    இது அவரது மகன்களான கமல்ஜீத் மற்றும் ஹர்பிரீத் சிங்கிற்குப் பிடிக்கவில்லை. தந்தை குருத்வாராவிற்கு நிலத்தை நான் கொடுப்பதைத் தடுக்க விரும்பினர்.

    இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முதியவரின் மகன்கள் ஒரு தந்திரமான திட்டத்தை வகுத்தனர்.

    நிலம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர். முதியவர் தனது மகன்களை நம்பினார். நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.

    ஆனால் மகன்கள் கமலும் ஹர்ப்ரீத்தும் தொடர்ந்து நீதிமன்றத்திற்குச் சென்று வந்தனர். எனவே விசாரணைகளுக்கு ஆஜராகத் தவறியதற்காக குர்மீத்துக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர். அதன்படி முதியவர் கைது செய்யப்பட்டு கடந்த 18 மாதங்களாக சிறையில் இருந்துள்ளார்.

     

    இதற்கிடையே சிறைக்குச் சென்ற உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் குர்மீத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். அவருடைய கதையைக் கேட்டு அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

    குர்மீத்தை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்த முயற்சிகளை குர்மீத்தின் மகன்கள் முறியடிக்க முயன்றனர். ஜாமீன் கிடைக்காமல் இருக்க அவர்கள் நிறைய முயற்சி செய்தனர்.

    இருப்பினும், அந்த தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் பின்வாங்கவில்லை. பல மாத முயற்சிக்குப் பிறகு, குர்மீத்துக்கு ஜாமீன் கிடைத்தது.

    அவர் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இதன்மூலம் அவரது கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது மகன்கள் செய்த காரியத்தால் அவர் மிகவும் மனமுடைந்து போயுள்ளார். எந்தத் தந்தைக்கும் தன்னைப் போன்ற ஒரு நிலைமை வரக்கூடாது என்று அவர் கண்ணீர் மல்க கூறுகிறார். 

    • வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.
    • இதில் எதிர்பாராதவிதமாக சஞ்சீவி காந்தியின் கை நாகராஜின் மார்பு பகுதியில் தாக்கியதில் நாகராஜ் மயங்கி விழுந்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு சஞ்சீவி காந்தி (43), நாகராஜ் (38) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    மூத்த மகன் சஞ்சீவி காந்திக்கு செல்வி என்ற மனைவியும், சிவானி (7) என்ற மகளும் உள்ளனர், இவர் கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள சின்னகுளம் என்ற பகுதியில் குடியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார்.

    இளையமகன் நாகராஜ் என்பவருக்கு திருமணமாகி ஈஸ்வரி என்ற மனைவியும், பூவிசா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். நாகராஜ் பங்களாப்புதூர் அண்ணா நகரில் தந்தை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் சஞ்சீவி காந்தி மற்றும் நாகராஜ் இருவருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சஞ்சீவி காந்தி பங்களாப்புதூர் அண்ணா நகரில் உள்ள தந்தை வீட்டுக்கு வந்து சொத்தை பிரித்து தர வேண்டும் என கேட்டார்.

    இதை தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் அண்ணன்- தம்பி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்கு வாதம் முற்றியதில் அண்ணன்- தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    இவர்களை அவர்களது பெற்றோர் தடுத்தனர். ஆனால் 2 பேரும் தொடர்ந்து தாக்கி கொண்டனர். இதில் எதிர்பாராதவிதமாக சஞ்சீவி காந்தியின் கை நாகராஜின் மார்பு பகுதியில் தாக்கியதில் நாகராஜ் மயங்கி விழுந்தார்.

    இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சு மூலம் நாக ராஜை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்த நாகராஜ்க்கு ஏற்கனவே இதய நோய் பாதிப்பு இருந்து சிகிச்சை பெற்று வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் பங்களா ப்புதூர் போலீசார் சஞ்சீவி காந்தி மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதை தொடர்ந்து சஞ்சீவி காந்தியை போலீ சார் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் படுத்து கிறார்கள்.

    • தகராறு முற்றிய நிலையில் தனபால் தனது நாட்டுத் துப்பாக்கியால் ராஜாக்கண்ணுவை சுட்டார்.
    • திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (45). இவரது உறவினர் கருப்பையா (46). இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அகஸ்தியர் புரம்-தென்மலை ரோட்டில் உள்ளது.

    இவர்களுக்கும் காரைக்குடியை சேர்ந்த தனபால் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி முன்விரோதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று தனபால் மற்றும் அவரது உறவினர்கள் சிறுமலைக்கு வந்து ராஜாக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    தகராறு முற்றிய நிலையில் தனபால் தனது நாட்டுத் துப்பாக்கியால் ராஜாக்கண்ணுவை சுட்டார். இதனை தடுக்க வந்த கருப்பையா மீதும் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் சுருண்டு விழுந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் ஒன்றுகூடவே தனபால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதனையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமலைக்கு விரைந்து வந்து காயமடைந்து உயிருக்கு போராடிய ராஜாக்கண்ணு, கருப்பையா ஆகிய 2 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் அதிக அளவு நாட்டுத்துப்பாக்கி பயன்பாட்டில் உள்ளது. போலீசார் மற்றும் வனத்துறையினர் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு அதனை கைப்பற்றினாலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கிகளை பலர் பதுக்கி வைத்துள்ளனர். எனவே இச்சம்பவத்திற்கு பிறகாவது துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்படவேண்டும். விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவர் முன்னாள் ராணுவவீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாயாரிடம் வீடு மற்றும் வங்கியில் உள்ள நகை பணத்தை சரிபாதியாக பிரித்து தர வேண்டுமென அவரது மகள்கள் வற்புறுத்தி வந்தனர்.
    • தாயார் மறுப்பு தெரிவித்ததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயாரை ஆஸ்பத்திரியில் தனியாக தவிக்க விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் ஆர்பி நகர் காலனி சேர்ந்தவர் கிஷ்டவ்வா (வயது 70). இவருக்கு சுடோ, ஏலா என 2 மகள்கள் உள்ளனர்.

    கிஷ்டவ்வாவுக்கு கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்களது மகள்கள் தாயாரை சிகிச்சைக்காக காமரெட்டி மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கிஷ்டவ்வாவுக்கு ஆர்.பி. நகரில் சொந்த வீடும், அங்குள்ள வங்கியில் ரூ. 1.70 லட்சம் பணம், நகைகள் உள்ளன. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தாயாரிடம் வீடு மற்றும் வங்கியில் உள்ள நகை பணத்தை சரிபாதியாக பிரித்து தர வேண்டுமென அவரது மகள்கள் வற்புறுத்தி வந்தனர்.

    இதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்ததால், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தாயாரை ஆஸ்பத்திரியில் தனியாக தவிக்க விட்டுவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிஷ்டவ்வா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மகள்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு மகள்கள் மற்றும் உறவினர்கள் வந்தனர். மகள்கள் இருவரும் தாயின் வீடு மற்றும் நகை, பணத்தை சரிபாதியாக பிரித்துக் கொடுத்தால் தான் பிணத்தை வாங்கி செல்வோம் என உறவினர்களிடம் தெரிவித்தனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து மகள்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் அவர்கள் வீடு, நகை, பணத்தில் மட்டும் குறியாக இருந்தனர். தொடர்ந்து தாயின் உடலை வாங்க மறுத்தனர். வேறு வழியின்றி அவரது தாயாரின் பிணத்தை பிணவறையில் வைத்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது.
    • இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாறியது. அப்போது நடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியராஜ் மீது தாக்குதல் நடத்தினார். இதில் தலை மற்றும் கழுத்தில் பாக்கியராஜ் பலத்த காயமடைந்தார்.

    மேலும், கத்தி வெட்டை தடுக்க முயற்சித்த போது பாக்கியராஜின் இரண்டு விரல்கள் துண்டானது. இதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாக்கியராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் தம்பி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள நடேசனை தேடி வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தில் இருந்து ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் குன்னத்தூர் கிராமத்தில் அசம்பாவதிங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா திருநாவலூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 40) இவருக்கு 4 தம்பிகள் உள்ளனர். இதில் இவருக்கும் இவரது கடைசி தம்பி பாக்கியராஜ் (29) என்பருக்கும் பாகப் பிரிவினை தொடர்பாக சிக்கல் இருந்து வந்தது.இந்நிலையில் இன்று காலை நடேசனுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே சொத்தின் எல்லைகள் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. இது சண்டையாக மாறியது. அப்போது நடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாக்கியராஜ் மீது தாக்குதல் நடத்தினார். இதில் தலை மற்றும் கழுத்தில் பாக்கியராஜ் பலத்த காயமடைந்தார். மேலும், கத்தி வெட்டை தடுக்க முயற்சித்த போது பாக்கியராஜின் இரண்டு விரல்கள் துண்டானது. இதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் பாக்கியராஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ஜகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் தம்பி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ள நடேசனை தேடி வருகின்றனர். மேலும், அவரது குடும்பத்தில் இருந்து ஒருவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு பணியில் போலீசார்

    இச்சம்பவத்தால் குன்னத்தூர் கிராமத்தில் அசம்பாவதிங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார்.
    • படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பிராடிஸ் ரோடு, பகுதியை சேர்ந்தவர் மங்கை லட்சுமி (வயது84). இவரது மகள் ராணி (61). மங்கைலட்சுமியின் தம்பி கூத்து என்ற குமரகுரு (72). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமரகுரு அருகில் கிடந்த சுத்தியலால் மங்கைலட்சுமி, அவரது மகள் ராணி ஆகியோரை தலையில் பலமாக தாக்கி கொல்ல முயன்றார். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
    • கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 73). இவருக்கு கடல்கனி என்ற மகனும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

    கடல்கனி கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். நேற்று முன்தினம் தனது தந்தையை பஸ்சில் நெல்லைக்கு அழைத்து வந்த கடல்கனி, வண்ணார்பேட்டை பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து தரதரவென இழுத்துச்சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு இடையே வைத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினார்.

    இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், பெற்ற மகனே தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடல்கனியை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அவர் கேரளாவில் வியாபாரம் செய்து வருவதால் அங்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல் சவுத்திரி தலைமையிலான போலீசார் அங்கு சென்று முகாமிட்டு கொலையாளியை தேடி வந்த நிலையில் நேற்று இரவு கொட்டாரக்கரையில் வைத்து கடல்கனியை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கூறியதாவது:-

    எனது தந்தையின் பெயரில் இருந்த ஒரு சொத்தை அவர் ஏற்கனவே விற்றுவிட்டார். தற்போது மற்றொரு சொத்தையும் விற்கப்போவதாக சொன்னார். இதனால் நான் ஆத்திரம் அடைந்தேன். அதே நேரத்தில் அவர் வயது முதிர்ச்சியால் நோய் வாய்ப்பட்டார். அவரை ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் அழைத்துச்சென்று வெறுப்படைந்துவிட்டேன். இதனால் மன விரக்தியில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து விட்டேன் என்றார். இதனை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை போலீசார் கைது செய்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியை அடுத்த செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி ராணி வயது (63), ஓய்வுபெற்ற சத்துணவு அமைப்பாளர். இவர்களது மகன் இளங்கோவன் (47). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவன் ரெயில் விபத்தில் சிக்கினார். அப்போது அவரது கால் துண்டானது. இதையடுத்து அவருக்கு மரத்திலான செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சரியாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் மது போதைக்கும் அடிமையானார். இதனால் அடிக்கடி குடிபோதையில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது தாய் ராணியின் பெயரில் உள்ள 1, 822 சதுர அடி காலி வீட்டு மனையை உறவினர் ஒருவருக்கு விற்று விடலாம் என இளங்கோவன், ராணியிடம் கூறினார். அப்போது ராணி கையெழுத்திட மாட்டேன் என கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளங்கோவன் தனது செயற்கை காலை கழற்றி, ராணியை சரமாரியாக தாக்கினார். இதில் ராணிக்கு தலை உள்பட பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் மண்டையில் பலமான அடி விழுந்ததால் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனால் அவர் மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து அவரை மீட்ட உறவினர்கள் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராணியை கொலை செய்த மகன் இளங்கோவனை கைது செய்தனர். சொத்து பிரச்சனையில் தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×