search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்து தகராறில் அக்காள் - மகளை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற முதியவர்
    X

    சொத்து தகராறில் அக்காள் - மகளை சுத்தியலால் அடித்து கொல்ல முயன்ற முதியவர்

    • முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார்.
    • படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி பிராடிஸ் ரோடு, பகுதியை சேர்ந்தவர் மங்கை லட்சுமி (வயது84). இவரது மகள் ராணி (61). மங்கைலட்சுமியின் தம்பி கூத்து என்ற குமரகுரு (72). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சொத்து தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமரகுரு அருகில் கிடந்த சுத்தியலால் மங்கைலட்சுமி, அவரது மகள் ராணி ஆகியோரை தலையில் பலமாக தாக்கி கொல்ல முயன்றார். இதில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் குமரகுரு தனது தலையை சுவற்றில் மோதி தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த குமரகுரு, மங்கை லட்சுமி, ராணி ஆகிய 3 பேருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×